Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு - கூட்டமைப்பு பேச்சில் மூன்றாம் தரப்பாக இந்தியா செயற்பட வேண்டும்: யாழ். ஆயர்

Featured Replies

அரசு - கூட்டமைப்பு பேச்சில் மூன்றாம் தரப்பாக இந்தியா செயற்பட வேண்டும்: யாழ். ஆயர்

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக இந்தியா செயற்பட வேண்டும் என யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கலந்துகொண்டார்.

இதன்போதே யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் இந்த வேண்டுகோள் அடங்கிய மகஜரொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தார். இந்த மகஜரின் பிரதியொன்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசானது தமிழ் சிறுபான்மையினருக்கு பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அடைவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்;சினைகளுக்கு தீர்வு காண இது ஒரு வழி என இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு வரவேற்றிருக்கிறது.

ஆனால், இலங்கை அரசானது பேச்சுக்களின் வழி மாகாண சபைகள் இயங்குவதற்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதில் எள்ளவும் விட்டுக்கொடுக்கவில்லை.

30 ஆண்டுக hல உள்நாட்டு யுத்;தத்தின் பின்னரும் பெரும்பான்மையை கொண்ட இலங்கை அரசு மத்தியில் இருந்து தமது அதிகாரங்களை வழங்க தாயாராக இல்லை.

எனவே இலங்கை அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் வழி இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றிற்கு வழி செய்யும் படி இந்திய அரசை வினையமாக வேண்டுகிறோம். இல்லாவிடின் இப்பேச்சுக்கள் நீண்டுகொண்டு போவதோடு இலங்கை அரசானது புதிய வழிகளை தேடி அரசியல் பிரச்சினைக்கு தீர்வினை காணும் எண்ணத்தை பின் தள்ளிக்கொண்டே போகும்.

எனவே இந்திய அரசானது புவியியல் நோக்கங்களையும் தாண்டி உண்மையாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய அரசு மத்தியஸ்தம் வகிப்பதை இலங்கை அரசு எதிர்க்க போவதில்லை. இந்திய சமாதான உடன்படிக்கைக்கு முன்பு இந்திய அரசு இது போன்ற மத்தியஸ்த பணியை ஆற்றிய போதும் தமிழ் தலைவர்கள் இந்திய சமாதான ஒப்பந்தத்தின் தன்மைகளை உணராமலும் தமக்குள் கெட்டித்தனமாக ஒன்றிணைந்து செயல்ப்படாமலும் தூக்கி எறிந்துவிட்டனர்.

எனவே, இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் எமது வேண்டுகோளை பரிசீலித்து எமது உதவிக்கு வரும்படி அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம். போரினால் தாக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற மக்கள் மேல் தாங்கள் காட்டும் மனிதாபிமான கரிசனைக்;கு நன்றி தெரிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டள்ளது.

km2(1).jpg

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/34555-2012-01-18-16-36-12.html

  • கருத்துக்கள உறவுகள்

எனவே இந்திய அரசானது புவியியல் நோக்கங்களையும் தாண்டி உண்மையாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய அரசு மத்தியஸ்தம் வகிப்பதை இலங்கை அரசு எதிர்க்க போவதில்லை. இந்திய சமாதான உடன்படிக்கைக்கு முன்பு இந்திய அரசு இது போன்ற மத்தியஸ்த பணியை ஆற்றிய போதும் தமிழ் தலைவர்கள் இந்திய சமாதான ஒப்பந்தத்தின் தன்மைகளை உணராமலும் தமக்குள் கெட்டித்தனமாக ஒன்றிணைந்து செயல்ப்படாமலும் தூக்கி எறிந்துவிட்டனர்.

ஒருவன் கொலைகாரன் மற்றவன் சூழ்ச்சிக்காரன் இருவரிடமிருந்தும் எப்படி தமிழர்களுக்கான நல்ல தீர்வை பெற்று கொள்வது ?

அய்யா........ சவுந்தரநாயம் நீங்கள் மறைமுகமாக குறிப்பிடுவது புலிகளை என நான் நினைக்கின்றேன்.

அதுசரி நீங்கள் எப்போது சாமியார் வேலையை விட்டுவிட்டு அரசியல்வாதியாக மாறினீர்கள் ? அரசியல் அது சாக்கடை அதுக்குள் போனால் ஒரே நாத்தம்.

உங்களுக்கு இது தேவையா ???? நீங்கள் மதம் போதிப்பதோடு இருப்பதே உங்களுக்கு நல்லது .

ஆயர் இப்படிச்சொல்வது அப்பவாவாது இந்திய குளப்பகாரர் பேச்சு வார்த்தைகளைக் குளப்ப மாட்டார்கள் என்று நினைப்பதால். இலங்கை இந்தியாவை அமெரிக்க அதிகாரிகள வரவிருந்த நேரத்தில் சேர்த்து அழைத்ததே அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை இந்தியாவை வைத்து மூடி மறைத்து விடலாம் என்பதினாலே. பீரிஸ்சிடம் 270 மில்லியன் அமெரிக்க டொலர களை கிருஸ்ணாகொடுத்து பேச்சு வார்த்த்களை குழப்பும் திட்டத்துனேயே இலங்கை வந்தவர். இவரிடமிருந்தி இவ்வளவு தொகை பணத்தை பெற்றுக்கொண்ட இலங்கை இனி ஒரு வருடத்திற்கு பேச்சு வார்த்தைகளுக்கு திரும்ப மாட்டாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் ஆயர் வத்திகான் ஈடுபடோணும் என்டு சொல்லே அது வரைக்கும் சந்தோஷப்பட்டுக்கிங்கப்பா..

கிருஷ்ணாவைப் பார்த்ததும் ஆயருக்கு மறை கழன்றுவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.