Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா?

Featured Replies

உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா?

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்கா, கனடா வில் உள்ளார்கள். 500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய

*குளிர்பானங்கள்

*பலதரப்பட்ட பிஸ்கட்ஸ்

*பலதரப்பட்ட ஜாம்

*பால்மாக்கள்

*டின் மீன்கள், நூடில்ஸ் உள்ளிட்ட வேறுபல பொருட்களும் இவ் 1,000,000 மக்களில், கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் உள்ளன, இவர்களில் பெரும்பான்மையான மக்கள் மாதம் ஒன்றிற்கு குறைந்தது $50 இக்கு சரி மேலே குறிப்பிட்ட பொருட்களை நுகர்வு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிறிலங்காவில் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் $150, 000,000 ($ 150 மில்லியன்) (250.000 குடும்பம் * $50 * 12 மாதங்கள்)

இது ஒரு சிறிய கணிப்பீடுதான், ஆனால் பல வழிகளில் எமது மக்கள் இலங்கை பொருட்களையும் / சேவைகளையும் $1000 மில்லியனுக்கு மேல் கொள்வனவு செய்கிறார்கள். தமிழ்நாட்டு எம் தொப்புள்கொடி உறவுகளே எமக்காக இலங்கை பொருட்களை புறக்கணிப்பு செய்யும் போது. நாம் மட்டும் எமது நாக்கு ருசிக்காக Nekto சோடா குடிப்பது சரியல்ல.

எமது மக்களுக்காக எவ்வளவோ தியாகிகள் அகிம்சைவழியில் போராடி, உண்ணாவிரதம் இருந்து போராடியும் விடியு இல்லை என்ற படியாலே ஆயுதம் எடுத்து போராடினார்கள். ஆனாலும் எமக்குள் ஒற்றுமை இல்லாமலும், துரோகிகளால் காட்டிகொடுத்ததாலும், பல சக்தி வாய்ந்த நாடுகள் இலங்கை அரசுடன் சேர்ந்தே எமது விடுதலை போராட்டத்தையும் முடக்கவும், பல ஆயிரம் மக்களையும் ரசாயனக் குண்டுகள் பாவித்தும் கொன்று ஒழித்தனர்.

எமக்கு பணம் வேண்டும் என்றால் நன்றாக வேலை செய்து உழைக்கிறோம்….

எமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும் என்றால், பல இடங்களில் கல்விக்கு அனுப்புகின்றோம்.

எமக்கு வீடு, கார், சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று இரவு பகலாக உளைகின்றோம்.

இவற்றைப்போலவே எமது பிரைச்சனை தீர வேண்டும் என்றால் நாமே தான் பல வழிகளிலும் போராடி அதை எடுக்க வேண்டும். கடந்த 2011 ஆண்டில் பல நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து, அவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் செய்து தமது தேவையை நிறைவேற்றினார்கள் (உதாரணமாக எகிப்து Egypt, துனிசியா Tunisia போன்ற நாடுகளில்).

எமது பிரச்சனைக்கு நாம் தான் போராட வேண்டும். மக்கள் ஒன்று பட்டு தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும், போராட்டங்களும், எமக்கு உள்ள பிரச்சனைகளையும், எமது மக்களுக்கு நடந்த அவலங்களையும் உலக்கு தெரியப்படுத்துவதன் முலமே எமக்கு விடிவு மற்றும் விடுதலை கிடைக்கும்.

இல்லையேல், வெளிநாடுகளில் எமது ஆயுட் காலத்தை தொலைத்து விட்டு, எமது கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டு, தொடர்ச்சியாக வாழுவோமே அனால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவருமே தொலைந்து போய்விடுவோம். தமிழன் என்ற ஒரு இனம் படிப்படியாக பல வழிகளிலும் அளிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்.

நாம் ஒன்றுதிரண்டு எமக்குள் கருது வேறுபாடுகள் இல்லாமல் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும், போராட்டங்களும் செய்வதன் மூலம் எமது பிரச்சனைகளை உலகுக்கு தெரியப்படுத்தலாம்.

தமிழ் மக்களை நேசிக்கும் உங்களில் ஒருவன்.

தமிழமகன்

சுவிஸ் தமிழ் சங்கம்

www.swisstamilsangam.blogspot.com

தமிழ் கடைகள் விற்பனை செய்யிறதே சிறிலங்கா பொருட்களைத்தான்.ஆனால் தற்போது புதிய சட்டமொன்று அமுலுக்கு வருகிறது

முழு ஆடைப்பால்மா மற்றும் மோல்டட் பானங்களை கனடாவில் தடை செய்யவிருக்கிறார்கள்.

கனடாவில் தமிழர்கள் விற்காவிட்டால் சிங்களவன் கடை திறந்து விற்பான்.ஆகவே வேண்டுபவர்கள் அதாவது பாவனையாளர்களாகிய நாம் திருந்தினால் தான் முடிவு வரும்

இந்த விடயத்தை அறிவுபூர்வமாகவும் வர்த்தக - பொருளாதார அடிப்படையிலும் அணுகவேண்டும்:

அ) தரவுகள் சேகரித்தல்

- என்னென்ன பொருட்கள் சிங்கள் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன?

- இவை ஒரு வருடத்திற்கு எவ்வளவு யூரோ / டாலர் பெறுமதி கொண்டவை?

- இதில் எவ்வளவு தமிழீழ பகுதிகளில் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது?

- எத்தனை கடைகளில் சில்லறையாக விற்கப்படுகின்றது?

ஆ) மாற்று வழிகளை ஆராய்தல் / பிரேரித்தல் / ஆதரவு சேர்த்தல்

- என்னென்ன பொருட்களை (மீன், மரக்கறி வகைகள்) மாற்று நாடுகளில் (தமிழ் நாடு உட்பட ) இருந்து இறக்குமதி செய்யலாம் என ஆராய்தல்

- என்னென்ன பொருட்களுக்கு மாற்று பொருட்களை (மலிபான், நெக்டோ) மலிவாகவும் தரமாகவும் விற்பனை செய்யலாம் என பட்டியல் இடல்

- சகல மொத்த சில்லறை வியாபாரிகளையும் இணைத்தல். அவர்களை இணைத்து அவர்களை பங்குதாரர்களாக்கி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தல்

- அந்த நிறுவனம் ஊடாக இறக்குமதி, சந்தைப்படுத்தலை செய்தல்

- மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல்

- மலிபான், நெக்டோ பொருட்களை விட புதிய மாற்று பொருட்களை அரைவிலையில் சில காலத்திற்கு விற்றல் போன்ற வியாபார தந்திரங்களை கையாளுதல்

- வரும் இலாபத்தில் மக்களுக்கு ( புலமைப்பரிசில் திட்டம், முதியோர் கவனிப்பு) , தாயக உறவுகளுக்கு சேவை செய்தல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.