Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கு நேர்ந்த அவலம்

Featured Replies

அரசுக்கு நேர்ந்த அவலம்

ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது.

அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடையும் வரை ஊடகவியலாளர்களுக்கு வெளியிடுவதில்லை என்ற தீர்மானம் இந்த அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தீர்மானத்தை முதலில் மீறியதே இலங்கை அரசுத்தரப்புத்தான். பேச்சுகளில் கலந்துகொள்ள ஜெனீவா வந்திருந்த இருதரப்புப் பிரதிநிதிகள் குழுவும் ஊடகவியலாளர்கள் நெருங்கமுடியாதவாறு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள சாட்டோ டி பொய்ஸி அரண்மனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரசுத் தரப்பு பிரதிநிதிகள் குழுவில் ஒருவரான அமைச்சர் ரோஹித போகொல்லாகம மட்டும், பேச்சு நடைபெறும் புதன்கிழமை தினத் துக்கு முதல்நாள் மாலை அந்த அரண்மனையிலிருந்து பிய்த்துக் கொண்டு ஜெனீவா நகருக்கு வந்தார். திடீரென ஊடகவியலாள ரைக் கூட்டி ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தினார்.

அப்போது, யுத்த நிறுத்த உடன்பாட்டை திருத்தியமைத்தல் பற்றியே அடுத்த நாள் ஆரம்பமாகும் பேச்சுகளின்போது கலந்துரையாடப்படும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டை திட்டவட்டமாகப் பகிரங்கப்படுத்திப் பிரகடனப்படுத்தவும் அவர் தவறவில்லை.

செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற பொது உடன்பாட்டை அரசுத்தரப்பு மீறிய நிலையில் பேச்சுகள் புதனன்று தொடங்கின. அந்தத் தவறுக்கான விளைவை அரசுத் தரப்பு பேச்சின் ஆரம்பக் கட்டத்திலேயே வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியதாயிற்ற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.