Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டீசல் 31; பெற்றோல் 12 , மண்ணெண்ணை 35 ரூபாவினால் கூடும்

Featured Replies

டீசல் 31 ரூபாவினால் அதிகரிப்பு; பெற்றோல் 12 , மண்ணெண்ணை 35 ரூபாவினால் கூடும்

பெற்றோல் விலை லீற்றருக்கு 12 ரூபாவினாலும் டீசல் விலை லீற்றருக்கு 31 ரூபாவினாலும் மண்ணெண்ணை விலை லீற்றருக்கு 35 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விலை அதிகரிப்பையடுத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சி.பிசி.) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோல் விலை 149 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 167 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல் வீலை 115 ரூபாவாகவும், மண்ணெண்ணை விலை லீற்றருக்கு 106 ரூபாவாகவும் இருக்கும்.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை லீற்றருக்கு 12 ரூபாவினாலும் டீசல் விலையை லீற்றருக்கு 31 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/வணிகம்/35825--31-12-35-.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து இலட்சம் வானர படையை வைத்திருந்தால் இது தான் பிரச்சினை!

புலி இறந்த பின்னும் வாலை விடமுடியாமல் தவிக்கிறார்கள். 

  • தொடங்கியவர்

ஈரான் விவகாரம் இன்னும் சூடு பிடிக்க உலகச்சந்தையில் மசகின் விலை கூடும். ஆனால், இலங்கை கடுமையாக பாதிக்கப்படலாம். கையில் உள்ள அமெரிக்க டாலரும் கரைந்துவிடலாம் ரூபாயின் பெறுமதியை தூக்கிப்பிடிக்க நினைத்தால்.

மகிந்தர் பாகிஸ்தானில் உள்ளபோது இந்த அதிகரிப்பு அறிவிக்கப்படுகின்றது. மக்களின் பொறுமை சோதிக்கப்படுகின்றது, அவர்கள் வீதிக்கு இறங்கும் காலம் அண்மிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் விவகாரம் இன்னும் சூடு பிடிக்க உலகச்சந்தையில் மசகின் விலை கூடும். ஆனால், இலங்கை கடுமையாக பாதிக்கப்படலாம். கையில் உள்ள அமெரிக்க டாலரும் கரைந்துவிடலாம் ரூபாயின் பெறுமதியை தூக்கிப்பிடிக்க நினைத்தால்.

மகிந்தர் பாகிஸ்தானில் உள்ளபோது இந்த அதிகரிப்பு அறிவிக்கப்படுகின்றது. மக்களின் பொறுமை சோதிக்கப்படுகின்றது, அவர்கள் வீதிக்கு இறங்கும் காலம் அண்மிக்கின்றது.

அகூதா, பிள்ளையார் சுழி போட்டாச்சென்று சொல்லுறீங்கள்!!! :D

  • தொடங்கியவர்

சிங்களத்தை அதன் அதி கூடிய ஆடை ஏற்றுமதியை கொண்ட அமெரிக்கா அதை நிறுத்துவதால் இலகுவாக அடிபணியவைக்கலாம். ஆனால் அது ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பாதிப்பதுடன் மகிந்த கூட்டத்தை மக்களை வெறுக்கவைக்காது.

ஆனால், உள்ளூரிலேயே மெல்ல மெல்ல அதிகரிக்கும் மக்களின் வெறுப்பு, அதனால் ஏற்படும் கலவரங்கள், சில வேளைகளில் ஆட்சி மாற்றம்..அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மேற்குலகம் சொல்லிவிடலாம் :rolleyes:

  • தொடங்கியவர்

அரசாங்கம் தோட்டத்தொழிலாளர், மத்திய தர மக்கள் மீது விலைவாசி அணுகுண்டை வீசியுள்ளது: மனோ

மண்ணெண்ணெய் விலையை 50 விகிதத்தாலும் டீசல் விலையை 37 விகிதத்தாலும் பெற்ரோல் விலையை 9 விகிதத்தாலும் உயர்த்தி தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள், சிறு வர்த்தகர்கள், மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட மத்தியத்தர மக்கள் மீது அரசாங்கம் விலைவாசி அணுகுண்டை வீசியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எரிபொருள் விலையுயர்வு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக சந்தையில் விலை கூடினால், உள்நாட்டில் விலை கூட்ட முடியாது. அப்படி கூடுவதனால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு? என எதிர்கட்சியில் இருந்து கேள்வி கேட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட வீரர்கள் இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

அந்த அட்டைக் கத்தி வீரர்கள் இன்று எங்கே? அதேபோல் தோட்ட தொழிலாளர்களுக்கு விமோசனம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இந்த அரசாங்கத்தில் அடைக்கலம் பெற்றுள்ள மலையகத்து மாவீரர்கள் இன்று எங்கே?

எரிபொருள் விலை ஏற்றம் என்பது சங்கிலி தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். இதன்மூலம் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் உயர போகிறது.

வரலாற்றில் ஒரு போதும் இல்லாத அளவில் எரிபொருள் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் மத்தியதர மற்றும் தோட்ட மக்கள் தலைகளில் விலைவாசி அணுகுண்டை எந்தவித தயவுதாட்சண்யமும் இல்லாமல் வீசியுள்ளது.

பாண் சாப்பிட முடியாவிட்டால் கேக் சாப்பிடும் படி தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கம் சொல்லுகிறதா? ஏற்கனவே வறுமையில் துயருறும் தோட்ட தொழிலாளி இனிமேல் புல்லையும் கல்லையும் தான் சாப்பிட வேண்டுமா?

மண்ணெண்ணெய்க்கு பதில் தண்ணீரை ஊற்றி அடுப்பை பற்ற வைக்கும்படி தோட்ட துறையை சார்ந்த பெண்களுக்கு இந்த அரசாங்கம் சொல்லுகிறதா? அல்லது அரசாங்கத்தில் அடைக்கலம் புகுந்துள்ள மலையகத்து மாவீரர்கள் சொல்லுகிறார்களா?

டீசல் விலை ஏற்றம் காரணமாக பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும் வாகன கட்டணம் உயர போகிறது. மத்திய தர மக்கள் இனி தங்கள் பிள்ளைகளை நடந்து சென்று பாடசாலைகளில் விட்டுவிட்டு வேலைத்தளங்களுக்கு போக வேண்டும்.

பஸ் கட்டணம் உயர போகிறது. இதனால் இனிமேல் தொழில்களுக்கு செல்லும் உழைக்கும் மக்கள் சைக்கிளில் தான் செல்ல வேண்டும்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவும் அரசு நிர்வாகத்திற்கு உள்ளே நடைபெறும் ஊழல், வீண் விரயம்மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவை காரணமாகவும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலைமை ஒரு ஆரம்பம் தான். அடுத்த சில வாரங்களில் இன்னும் பல சுமைகளை இந்த அரசாங்கத்தின் தவறான ஆட்சி மக்கள் தலைகளில் சுமத்த இருக்கின்றது என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.

வெகு விரைவில் சமையல் எரிவாயு விலையும் உயர போகிறது. அது மத்திய தர குடும்ப தலைவிகளின் தலையில் இன்னொரு இடியாய் விழ போகிறது.

அதேபோல் விரைவில் இலங்கை நாணயம் மீண்டும் மதிப்பிறக்கம் செய்யப்பட போகிறது. அதன்போது இறக்குமதி பொருட்கள் அனைத்தும் மீண்டும் விலை ஏறும்.

http://www.tamilmirr...2-10-53-05.html

  • தொடங்கியவர்

'பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்'

பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த வாரம் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து பேக்கரியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35863-2012-02-12-12-05-28.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா,  நல்ல அலசல்,  ஸ்ரீ லங்கா உள்ளுக்குள்ளால் உக்குவதே மேல்.  

அரசியல் கறையாங்களும் குடும்பம் குடும்பமா புற்று கட்ட  தொடங்கிவிட்டன!

  • தொடங்கியவர்

தனியார் பஸ் பணி பகிஷ்கரிப்பு முடிவு; குறைந்தபட்ச கட்டணமாக 9 ரூபா

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடாளாவிய ரீதியில் மேற்கொண்டு வந்த பணி பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிணங் பஸ் கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதுடன் ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபா அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35915-2012-02-13-13-04-12.html

  • தொடங்கியவர்

மாட்டு வண்டியில் மாகாண சபை உறுப்பினர்கள்

6(643).jpg

  • தொடங்கியவர்

எரிபொருள் எகிறிய விலையால் எரிச்தது இதயம் அணைந்தது அடுப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-14 10:05:46| யாழ்ப்பாணம்]

வன்னிப் போரில் வெடித்த குண்டுகள், தாக்கிய டாங்கிகள், சுற்றிய போர் விமானங்கள், வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இவற்றுக் கெல்லாம் நிதி எங்கிருந்தது? இப்படி சிங்கள மக்கள் கேட்டிருப்பார்களாயின், எரிபொருட்களின் விலை இந்த மாதிரி எகிறியிருக்காது. இது தவிர 2009ஆம் ஆண்டு ஏ9 பாதை திறக் கப்பட்டதன் பின்னர் பல இலட்சக்கணக்கான தென் பகுதி மக்களை வட பகுதிக்கு அனுப்பிபார்... அரச வெற்றியைப் பார்... என்ற காட்டாப்புக் கெல்லாம் ஏன்தான் நிதியைக் கொட்டி தள்ளுகிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதிகள் முணு முணுத்து இருந்தால் கூட 30 ரூபாய் கடந்து எரிபொருளுக்கு விலையேறும் மிகப் பெரும் அநியாயம் நடந்திருக்காது.

என்ன செய்வது! நானே ராஜா! நானே மந்திரி! நான் இட்டதே சட்டம். ஆகையால் யார் பற்றியும் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. எரிபொருளுக்கு 30 ரூபாய் என்ன 300 ரூபாயைக் கூட்டினாலும் எவரும் கேட்க முடியாது- கேட்கவும் கூடாது. இப்படியான நிலை இலங்கையில் ஏற்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்காக கொட்டிய கோடிகளின் இழப்பை ஈடாக்குவது என்பது இப்படித்தான் சாத்தியமாகும். இதுதான் நடக்கும்.

நான் சுகபோகமாக இருக்கின்றேன் என்பதற்காக எல்லா மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பிருந்தால் அன்றி இப் படியாக எரிபொருளின் விலையை ஏற்ற எவரும் துணியமாட்டார். எரிபொருள் என்பது அதிஅத்தியாவசியப் பொருள். அதனுடைய விலையேற்றம் என்பது அடுப்படி தொடக்கம் ஆகாய விமானம் வரை எங்கும் எதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிலும் அத்தியாவசியப் பொருளான எரிபொருளின் விலை ஏறியவுடன் அதன் வழியாக போக்குவரத்துச் செலவு, வாழ்க்கைச் செலவு என எல்லாமும் ஏறிக் கொள்ள ஏழை மக்களும் நடுத்தர வருமானம் உடையவர்களும் அதனால் பெரும் பாதிப்பை அனுபவிப்பர். நாளாந்தம் மண்ணெண்ணெய் விளக்கெரித்து சீவியம் நடத்துவோர், பஸ் ஏறிப் பயணம் செய்வோர், அன்றாடம் கூலி வேலை செய்து சீவனோபாயம் போக்குவோர் இவர்களின் நிலைமை எப்படியயன்று ஒரு கணம் சிந்தித்திருந்தால் இப்படியயாரு விலையேற்றத்தை எரிபொருளுக்கு செய்திருக்க மாட்டார்கள். என்ன செய்வது! சர்வாதிகாரப் போக்கில் நாடு நகரத் தொடங்கி விட்டது.

மக்களை வதைத்து -மிதித்து சிங்கள பெளத்தத்தைக் காப்பாற்று வோம் என்கின்ற கோ­ம் வானை முட்டிவிட்டது. அதில் நான், நீ, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று எந்தப் பேதமும் கிடையாது. எல்லோருமாக வதைபடுவோம். மிதிபடுவோம். மீட்சி இன்றி உயிர் விடுவோம். ஆனால், இனப்பிரச்சினையைத் தீர்த்து இலங்கையை இந்திரலோகமாக மாற்றுவோம் என்று மருந்துக்கும் நினையோம். ஓ ! எனதருமை இலங்கை மக்களே! இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் போரை நடத்திய வின்ஸ்டன் சர்ச்சில் தோற்றுப் போனார் என்ற செய்திக்குள் அர்த்தங்கள் இருப்பதாக நீங்கள் எண்ணியிருந்தால்...வேண்டாம் வீண் வம்பு.

ஏறிய எரிபொருளின் விலையால் ஏழைகளின் இதயங்கள் எரிகின்றன.ஆனால் அவர்களின் வீட்டு அடுப்போ அணைந்து போயிற்று. இறைவா நீயே! இரட்சித்து அருள்க.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27138

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை ஈரான் வழங்கும்

iran-sri-lanka-president.jpgஇலங்கைக்கு நியாயமான விலையில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகம் செய்ய முடியுமென இலங்கைக்கான ஈரானிய தூதுவர் டாக்டர் ரானி நாபீ தெரிவித்துள்ளார்.

அமைதியான நோக்கங்களுக்காகவே ஈரான் அணுத் தொழில் நுட்பத்தைபயன்படுத்தி வருவகிறது. செய்மதி ஒன்றை விண்ணுக்கு ஏவிய முதலாவது முஸ்லிம் நாடு ஈரான் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஈரான் அடைந்து வரும் வளர்ச்சியை அமெரிக்காவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே போலியான குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா சுமத்திவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும்ந நாடுகள் மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், நட்பு நாடான இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது எனவும், தொடர்ச்சியாக ஈரான் எரிபொருள் விநியோகம் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்த போதிலும் சில வழிகளைப் பயன்படுத்தி எரிபொருள் இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதன் மூலம் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • தொடங்கியவர்

மின்சாரப் பட்டியலுக்கு மேலதிக எரிபொருள் கட்டணம் (surcharge) அறவீடு

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் எரிபொருளுக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்படுகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி வீடுகளுக்கான மின் பாவனையில் 1 - 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 - 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் வீடுகளில் மேலதிக எரிபொருள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, கைத்தொழில் துறைக்கு 15 சதவீத மேலதிக கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகளுக்கான ஆணைக்குழு கூறியுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36037-2012-02-15-10-20-15.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.