Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள்

Featured Replies

போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள்

தற்போது நிலவிவரும் சமாதான சூழல் அற்றுப்போய் மீண்டும் போர் மூளலாம் என்பதே பலரதும் ஊகமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் தொடங்கும் பட்சத்தில் அது எவ்வாறானதாக அமையும் என்பது பற்றியும் புலிகளின் தாக்குதல் இலக்குகள், வியூகங்கள், அதன் உக்கிரத்தன்மை என்பன எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றியுமே இன்று பலரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புலிகளின் இராணுவ வல்லமையையும் தேசியத் தலைவரின் போரியல் தந்திரோபாயங்களையும், தாக்குதல் உத்திமுறைகளையும் அறிந்து கொள்ளகடந்த காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான போரியல் சரிதங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.

அந்த வகையில், தமிழீழ விடுதலைப்போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமர்களில் சிலவற்றை மீட்டுப் பார்த்தால்,

~1990-09-26 அன்று யாழ். கோட்டை இராணுவ முகாம் புலிகளால் வெற்றிகொள் ளப்பட்டமை,

~1990-11-23 அன்று மாங்குளம் படைமுகாம் தகர்த் தழிக்கப்பட்டமை,

~1991-07-10 அன்று ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாயக்கடல் வெளிச் சமரை மேற்கொண்டமை,

~1993-09-29 அன்று இராணுவத்தினரின் யாழ். தேவி படை நடவடிக்கையை முறியடித்த புலோப்பளை சமர்,

~1993-11-12அன்று பூநகரி கூட்டுப் படைத்தளம் தவளை நடவடிக்கை மூலம் தகர்த்தழிக்கப்பட்டமை,

~1995-07-14 அன்று யாழ். நகரை ஆக்கிரமிக்க திட்டமிட்டு முன்னேறிப் பாய்ந்த படைகளை புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறியடித்தமை,

~1996-07-18 அன்று ஓயாத அலைகள் -1 நடவடிக்கை மூலம் முல்லைப் படைத்தளத்தினைத் தாக்கி நிர்மூலமாக்கியமை,

~1997-05-13 அன்று படையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து சமரிட்டமை,

~1998-09-27 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தை ஓயாத அலைகள்- 02 நடவடிக்கை மூலம் மீட்டெடுத்தமை,

~1999-11-02 இல் ஆரம்பித்த ஓயாத அலைகள் - 03,

~2000-04-02 அன்று ஆனையிறவுப் படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டமை,

~2001-04-25, 26, 27 ஆகிய நாட்களில் இத்தாவில் பகுதியில் தீச்சுவலைப் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர் என்பன தமிழர் தேசத்தில் ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகளை திணறடித்த களங்களில் சில...

இந்தத் தாக்குதல்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகள் எவ்வாறு வெற்றி கண்டார்கள் என்பதையும் தாக்குதல் வியூகங்கள் எப்படிப்பட்டவை, அவர்களின் இராணுவ தந்திரோபாயங்கள் எவ்வாறானவை என்பன பற்றி உலகப் பிரசித்திபெற்ற இராணுவ ஆய்வாளர்கள் கூட இதுவரை ஆய்வு செய்து முடிவுக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர்.

1990 ஆம் ஆண்டு மாங்குளம் இராணுவ முகாமைத் தாக்கியழித்ததன் ஊடாக புலிகள் கெரில்லாப் போராளிகள் மட்டுமல்ல மரபுவழி இராணுவமாகவும் மாறிவருகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது. பின்னர் 1991 ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் நடத்திய ஆகாயக் கடல் வெளிச்சமரின் பின் இலங்கையின் இரண்டு இராணுவங்கள் இருக்கின்றன என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

தொடர்ந்து தமிழீழ வரலாற்றில் பாரிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய களங்களாகிய ஜெயசிக்குறு சமர்க்களமும் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஓயாத அலைகள் நடவடிக்கைகளும் ஆனையிறவுப் படைத்தள தகர்ப்பும் பலம்வாய்ந்த இராணுவங்களையும் எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் புலிகள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.