Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில் தமிழர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் ஐ.நா வின் மனித உரிமை மாநாடு மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ளது யாவரும் அறிந்ததே. இம் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சில வல்லரசு நாடுகள் முனைப்புக்காட்டி வருகிறது.

இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்தி தமது காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிரித்தானியவில் உள்ள சில முன்னணி தமிழ் அமைப்புகள் குறிப்பிட்ட சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் உள்ளனர். இதன் ஒரு அங்கமாக ஜெனீவாவில் மாநாடு நடைபெறும் போது ஐ.நா மன்றத்துக்கு முன்னால் தமிழர்கள் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதனை முறியடிக்க, இலங்கை அரசானது பல வழிகளில் முனைப்புக்காட்டி வருகிறது. தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பிரித்தானியவில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் கம்சா இத்தாலியில் இருந்தும், மற்றும் லண்டனில் இருந்தும் பேரூந்துகளை ஒழுங்குசெய்யவுள்ளார் என அறியப்படுகிறது. இப் பேரூந்துகளில் சிங்களவர்களை ஏற்றி ஜெனீவாவுக்கு கொண்டுசென்று அங்கே நடக்கவிருக்கும் தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டங்களை, குழப்பி அதனை முறியடிக்க கம்ஸா திட்டம் தீட்டியுள்ளாராம். பிரித்தானியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கு மேல் தமிழர்கள் வாழ்கிறார்கள். மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் சில ஆயிரம் சிங்களவர்களே ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் வசித்து வருகின்றனர். இவர்களை ஒன்று திரட்டி தமிழர்களின் போராட்டத்தை முடக்க தற்போது திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிங்களவர்களின் ஒற்றுமையானது, தமிழர்களின் ஜெனிவாப் போராட்டத்தை குலைக்க பயன்படும் என கம்ஸா கணக்குப் போட்டுள்ளார். லட்சக்கணக்கில் தமிழர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து என்ன பயன் ? சில நூறு சிங்களவர்கள் திரண்டு வந்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் அவர்களைக் காட்டிலும் பன்மடங்காச் சென்று எமது பலத்தைக் காட்டுவோமா ? இல்லை எமக்கு என்ன என்று சொல்லிவிட்டு வீட்டில் இருப்போமா ? பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து அனைத்துத் தமிழர்களும் திரண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். தமிழ் அமைப்புகளுக்கு பலம்சேர்க்கும் நடவடிக்கையில் தமிழர்கள் ஈடுபடவேண்டும். இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நாடுகளை நாம் ஊக்குவிக்கவேண்டும். எனவே மார்ச் மாதம் நடக்கவுள்ள ஜெனீவா ஆர்ப்பாட்டத்துக்கு தம்மாலான அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டு வரவேண்டும். எமது பலம் என்னவென்பதனை உலகறியச் செய்யவேண்டும்.

இதுவரை காலமும் ஈழத்தில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த இலங்கை அரசு, தற்போது நேரடியாகவே புலம்பெயர் தமிழர்களோடு விளையாட ஆரம்பித்துவிட்டது. இருக்கும் சில நூறு சிங்களவர்களை வைத்து தமிழர் போராட்டங்களை குழப்ப நினைக்கும் இலங்கை அரசுக்கு ஜெனிவா ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக அமையவேண்டும்... செய்வார்களா தமிழர்கள் ?niithitheedi.jpg

http://www.eeladhesa...ndex.php?option

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிகளை ஏற்றி வருவார்.  படித்த சிங்களவனுக்கு ஸ்ரீ லங்கா ஜெனோசைட் பற்றி நன்றாக தெரியும்.

மற்றும் கடந்த காலத்தில் வெறும் சில ஸ்ரீ லங்கா கூலிகள் வந்து போட்டோ பிடித்து மிரட்டுவது மட்டுமே செய்தார்கள்.

உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம்

ஜெனீவா ஐ.நா முன்றிலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஏட்டிக்கு போட்டியாக ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றினை தகவற்துறை அமைச்சகம் 21-02-2012 செவ்வாய்கிழமை விடுத்துள்ளது.

தாயக மக்களை இராணுவ அடக்குமுறைக்குள் வைத்துள்ள சிங்கள பேரினவாத அரச, புலம்பெயர் தமிழர்களின் மனவலிமையையும், மக்கள் போராட்டங்களையும் சிதைக்க நினைக்கின்றது குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கை, இத்தகைய செய்திகள் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறு வேண்டியுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில், ஜெனீவா ஐ.நா முன்றலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், பெப்ரவரி 27ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஏட்டிக்கு போட்டியாக, சிங்களவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபகின்றனர் என வெளிவந்துள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என்பதனை அறியத்தருகின்றோம்.

ஐ.நா மனித உரிமைச் சபை தொடங்குகின்ற பெப்ரவரி 27ம் நாள் திங்கட்கிழமை, தமிழர்களின் மக்கள் போராட்டத்துக்கு மட்டுமே சுவிஸ் காவல்துறை அனுமதியளித்துள்ள நிலையில், இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள், மக்களை குழப்பும் தீயசக்திகளின் சதி நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் இத்தகைய மக்கள் போராட்டங்கள் தன் மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு வலுவூட்டுகின்றன எனும் அச்சநிலையில், சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முனைந்து வருகின்றமை குறித்து மக்களை விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம்.

தாயக மக்களை இராணுவ அடக்குமுறைக்குள் வைத்துள்ள சிங்கள பேரினவாத அரச, புலம்பெயர் தமிழர்களின் மனவலிமையையும், மக்கள் போராட்டங்களையும் சிதைக்க நினைக்கின்றது.

இந்நிலையில், எதிர்வரும் 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு, ஒன்றுபட்ட சக்தியாக, தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் இனவழிப்பு உண்மை முகத்தை அம்பலப்படுத்த, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்த உறுதியெடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது என்னங்கோ சிங்களவர்கள் எங்கிளிற்கு எதிராக??? 100 பேர் வந்தா அதில 75 தமிழங்கள் இருப்பாங்கள்! சிங்களவன் இதில சம்மந்தப்படுகிறது குறைவு. அப்படியே வந்தாலும் அங்க அடி வாங்கிட்டு தான் போவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.