Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ராஜாங்க அமைச்சின் காரியாலத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்-2

Featured Replies

  • தொடங்கியவர்

அமெரிக்க ராஜாங்க அமைச்சின் முன்னாலான கவனஈர்ப்பு போராட்டம் இன்று வெற்றிகரமாக நான்காவது நாளாகத்தொடர்ந்தது.

முன்றலில் முகாமிட்டிருந்த ஈரானிய விடுதலை வேட்கையாளிகள் கூடாரத்தை கழற்றியதுடன் தங்கள் கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தையும் ரத்துச் செய்திருந்தார்கள். இதனால் அமைச்சின் கவனம் முற்றுமுழுதாக ஈழத்தமிழரின்பால் விழுந்திருந்தது.

பங்கு பற்றியோருக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரம் மற்றைய மாநிலத்தவர்களை உங்கள் பக்க ஒழுங்கமைபாளருடன் தொடர்பு கொண்டு கவனஈர்ப்பில் பங்கு பற்றி சிறப்பிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

3வது நாளின் படத்தொகுப்புக்கள்.

photo.JPG

photo1.JPG

MD-DC%2520Day%25203%25202-28-2012%2520State%2520Dept%25202.jpg

MD-DC%2520Day%25203%25202-28-2012%2520State%2520Dept.jpg

Edited by மல்லையூரான்

நாடுகடந்த அரசு தன் கடமையை( பாவத்தை கழூகிறது() செய்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாஷிங்டன் இராஜாங்கத்திணைக்களத்துக்கு முன்னாலான தமிழ் அமைப்புக்களின் ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் முடிவுறுகிறது

இனவாத யுத்தத்தின்போது மே 2009இல் சிறி லங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாகவும் வகை கூறு முகமாகவும் கடந்த மாதம் 24ம் திகதி தொட்டு இம்மாதம் 2ம் திகதி வரையில் ஈழத்தமிழர், தமிழ் நாட்டுத்தமிழர் அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்கத் தமிழ் அமைப்புக்கள் வாஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் பதாகைகளைத் தாங்கியவாறே தினம் தோறும் திரண்டு நின்று அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி வந்துள்ளனர். தினம் தோறும் ஏதாவது ஒரு மாநிலத்தினர் ஏற்பாடுகளுக்கான பொறுப்புக்களை மேற்கொண்டு பனிப்பெய்கை, மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாது தமது நாளாந்தக்கடமைகளைத் துறந்து, தமிழினத்துக்கான தம் கடமைகளைச் சரிவரச் செய்ய முயன்றுள்ளனர்.

அவர்கள் எதிர்பார்த்தவாறே ராஜாங்கத்திணைக்களமும் ஆர்ப்பாட்டத்தை உற்றுக்க்கவனித்தே வந்துள்ளது. முதல் நாளன்றே திணைக்கள அலுவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அனுதாபத்துடன் அணுகிநின்று அவர்களின் வாய்மொழிச்செய்திகளையும் பதாகைச் செய்திகளையும் பதிந்துகொண்டு சென்றுள்ளனர். இறுதி நாளாகிய வெள்ளியன்று (02-மார்ச்சு-2012) ஆர்ப்பாட்டம் முடிவுக்குவர இருப்பதைத்தெரிந்து கொண்ட தெற்காசியப்பிராந்தியத்துக்கான உதவிச்செயலாளர் உரொபேர்ட் பிளேக் அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோருடன் அளவளாவி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றிஅவர்களுக்கு விளக்குமாறு தனது உதவியாளர் ஒருவரை அனுப்பிவைத்துள்ளார். பிளேக் அவர்களின் செய்தியைத் தாங்கிவந்த உதவியாளர், பங்குபற்றியோர்களால் ராஜங்கத்திணைக்களச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அம்மையாருக்கெனத் தயாரித்துவைக்கப்பட்டிருந்த மனுவையும் கேட்டுப்பெற்றுகொண்டதுடன் தமிழ்மக்கள் விடயத்தில் அமெரிக்கா உறுதியுடன் செயற்படுமெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறுதி நாள் பெருவெற்றியோடு வீடுதிரும்பியது பங்குபற்றியோர் அனைவருக்கும் பெருமகிழ்வாக அமைந்ததுடன், பட்டசிரமங்களையும் முற்றாக மறக்கச் செய்துவிட்டது எனலாம் -

செய்தித்தொகுப்பு - நாடு கடந்த தமிழீழஅரசு - நாதம் ஊடகச்சேவை

http://naathamnews.com/?p=3975

இறுதி நாளின் போது எடுக்கப்பட்ட படங்களைப் பார்ப்பதற்கு,

share.shutterfly.com/action/welcome?sid=0EYs3LJy2bMVElc

-சுபா சுந்தரலிங்கம்

  • தொடங்கியவர்

தெற்காசியப்பிராந்தியத்துக்கான உதவிச்செயலாளர் உரொபேர்ட் பிளேக் அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோருடன் அளவளாவி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றிஅவர்களுக்கு விளக்குமாறு தனது உதவியாளர் ஒருவரை அனுப்பிவைத்துள்ளார். பிளேக் அவர்களின் செய்தியைத் தாங்கிவந்த உதவியாளர், பங்குபற்றியோர்களால் ராஜங்கத்திணைக்களச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அம்மையாருக்கெனத் தயாரித்துவைக்கப்பட்டிருந்த மனுவையும் கேட்டுப்பெற்றுகொண்டதுடன் தமிழ்மக்கள் விடயத்தில் அமெரிக்கா உறுதியுடன் செயற்படுமெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

-சுபா சுந்தரலிங்கம்

சந்தோசமான செய்தி. ரொபேட் பிளேக் மட்டத்தில் தமிழருக்கு ஒரு நண்பர் கிடைத்தால் நிச்சயமாக இனி அவர்கள் தங்கள் துயர்களைத்துடைக்க அமெரிக்கா முன் வரும் என நம்பலாம்.

Edited by மல்லையூரான்

இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்திய நாடு கடந்த அரசிற்கு நன்றிகள்.

அமெரிக்காவின் வரவு செலவில் இராணுவ செலவை குறைக்க தேவை உள்ளது. அதேவேளை இராஜங்க திணைக்களத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முக்கியத்துவம் கொடுக்கின்றது, காரணம் குறைந்த செலவில் இலாபம் அடையலாம்.

அந்தவகையில் ஆசியாவில் தமிழர்களை விட நல்ல நண்பர்கள் அமெரிக்காவுக்கு கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசு தன் கடமையை( பாவத்தை கழூகிறது() செய்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஓ, யாழில் பாவ நட்ட கணக்கு பார்க்கின்ற ஆள் நீங்கள் தானோ? . :huh: :huh: நா.க.அ என்ன பாவம் உங்களுக்கு செய்தது??

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன் இராஜாங்கத்திணைக்களத்துக்கு முன்னாலான தமிழ் அமைப்புக்களின் ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் முடிவுறுகிறது

இனவாத யுத்தத்தின்போது மே 2009இல் சிறி லங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாகவும் வகை கூறு முகமாகவும் கடந்த மாதம் 24ம் திகதி தொட்டு இம்மாதம் 2ம் திகதி வரையில் ஈழத்தமிழர், தமிழ் நாட்டுத்தமிழர் அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்கத் தமிழ் அமைப்புக்கள் வாஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் பதாகைகளைத் தாங்கியவாறே தினம் தோறும் திரண்டு நின்று அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி வந்துள்ளனர். தினம் தோறும் ஏதாவது ஒரு மாநிலத்தினர் ஏற்பாடுகளுக்கான பொறுப்புக்களை மேற்கொண்டு பனிப்பெய்கை, மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாது தமது நாளாந்தக்கடமைகளைத் துறந்து, தமிழினத்துக்கான தம் கடமைகளைச் சரிவரச் செய்ய முயன்றுள்ளனர்.

அவர்கள் எதிர்பார்த்தவாறே ராஜாங்கத்திணைக்களமும் ஆர்ப்பாட்டத்தை உற்றுக்க்கவனித்தே வந்துள்ளது. முதல் நாளன்றே திணைக்கள அலுவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அனுதாபத்துடன் அணுகிநின்று அவர்களின் வாய்மொழிச்செய்திகளையும் பதாகைச் செய்திகளையும் பதிந்துகொண்டு சென்றுள்ளனர். இறுதி நாளாகிய வெள்ளியன்று (02-மார்ச்சு-2012) ஆர்ப்பாட்டம் முடிவுக்குவர இருப்பதைத்தெரிந்து கொண்ட தெற்காசியப்பிராந்தியத்துக்கான உதவிச்செயலாளர் உரொபேர்ட் பிளேக் அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோருடன் அளவளாவி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றிஅவர்களுக்கு விளக்குமாறு தனது உதவியாளர் ஒருவரை அனுப்பிவைத்துள்ளார். பிளேக் அவர்களின் செய்தியைத் தாங்கிவந்த உதவியாளர், பங்குபற்றியோர்களால் ராஜங்கத்திணைக்களச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அம்மையாருக்கெனத் தயாரித்துவைக்கப்பட்டிருந்த மனுவையும் கேட்டுப்பெற்றுகொண்டதுடன் தமிழ்மக்கள் விடயத்தில் அமெரிக்கா உறுதியுடன் செயற்படுமெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறுதி நாள் பெருவெற்றியோடு வீடுதிரும்பியது பங்குபற்றியோர் அனைவருக்கும் பெருமகிழ்வாக அமைந்ததுடன், பட்டசிரமங்களையும் முற்றாக மறக்கச் செய்துவிட்டது எனலாம் -

செய்தித்தொகுப்பு - நாடு கடந்த தமிழீழஅரசு - நாதம் ஊடகச்சேவை

http://naathamnews.com/?p=3975

இறுதி நாளின் போது எடுக்கப்பட்ட படங்களைப் பார்ப்பதற்கு,

share.shutterfly.com/action/welcome?sid=0EYs3LJy2bMVElc

-சுபா சுந்தரலிங்கம்

உற்சாகமளிக்கும் செய்தி!

ஆனால் அடிபட்டு, அடிபட்டு, நெளிந்து போன எம்மால், இதை நம்பக் கூடப் பயமாக இருக்கின்றது!

காலத்திற்கே விட்டு விடுவோம்!

அதுவே பதில் கூறட்டும்! நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.