Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா: ஏன் இந்த பயம்? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் இன்று (27) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரில், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோரும் யோசனை தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கவே அறிவித்துள்ளது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசாங்கத்திடமே அறிவித்தது. ஹிலரி கிளின்டன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அனுப்பி கடிதம் மூலம் அமெரிக்கா இதனை அறிவித்திருந்தது.

இதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் மரியோ ஒடாரோ மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரண்டாவது முறையாக அறிவித்தனர்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த சந்தர்ப்பத்தில், விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியோ, சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெலய உறுமயவோ, அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டங்களையோ, உண்ணாவிரதங்களையோ மேற்கொள்ளவில்லை. அதேபோல் நாய்களுக்கு ஏற்படும் விசர் நோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊடகவியலாளர்கள் கூட அமெரிக்க ராஜதந்திரிகளின் பின்னால் குரைத்து (பொய்யாக) கொண்டு கடித்து குதற துரத்தவில்லை. எனினும் அரசாங்கம் அமெரிக்காவின் யோசனையை தோற்கடிக்கும் நோக்கில், பாரிய பிரசாரம் மற்றும் அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்தது. 52 பேர் கொண்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஜெனிவா வரவுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த குழுவில் வேறு நாடுகளில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை போன்ற அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் அமெரிக்காவின் யோசனைக்கு ராஜபக்ஷ அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சி இவ்வாறு பதற்றமடைந்துள்ளது என்பதை உணர்ந்துக்கொள்ளவது கடினமானது. அமெரிக்காவின் யோசனையானது ஒரு அறிவிப்பை போன்றது என்பதே இதற்கான காரணமாகும். இந்த யோசனையானது இலங்கை அரசாங்கத்திற்கு எந்த கடப்பாடுகளை ஏற்படுத்தாத ஒன்று. வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்காவின் யோசனையானது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் யோசனையாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை மனித உரிமை பேரவை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமெரிக்காவின் யோசனையில் கோரிக்கை விடுக்கப்பட மாட்டாது. அத்துடன் அந்த யோசனையில் போர் குற்றங்கள் தொடர்பிலோ, சர்வதேச விசாரணை குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது மாத்திமல்ல, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சம்பந்தமாகவே எதுவும் காணப்படவில்லை.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கையில் எந்த ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டப்பட்டிருக்கும்?. அந்த அறிக்கையில் கூறப்ப்டுள்ள சட்டத்தின் நிர்வாக ஸ்தாபிக்க வேண்டும் என பரிந்துரையை எவரும் கண்டிக்கவில்லை. இலங்கையின் அரசியல் மற்றும் சிவில் சமுகங்கள் அனைத்து அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறே கோரிக்கை விடுத்தன. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்முன்வைக்க யோசனையிலும் இதுவே கோரப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டங்களை முன்வைக்குமாறும் அதனடிப்படையில் சர்வதேச மனித உரிமை மீறல்களை உடனடியாகவும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் விசாரணை நடத்துமாறும் அதற்கு தேவையான உதவியை மனித உரிமை பேரவை வழங்க வேண்டும் எனவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மிகவும் காரணங்களை சுட்டிக்காட்டும் சிறிய மற்றும் விபரமான தர்க்கங்களுடன் விமர்சனங்களை முன்வைத்தது, தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கையில் முற்றாக தவறான தோற்றப்பட்டை முன்வைத்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அத்துடன் இலங்கை ஆயுதப்படையினர் மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆணைக்குழுவின் அறிக்கை மூடிமறைத்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இவ்வாறான நிலைமையின் கீழ், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் நோக்கில் யோசனை ஒன்றை கொண்டு வரவு புலம்பெயர் தமிழ் மக்கள் அல்லது தமிழ் அரசியல் சக்திகளின் தேவைக்காகவே என வாதிடுவது, வாதமாக அமையாது. புலம்பெயர் தமிழர்கள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அவ்வளவு அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய தளமானது தமிழ் நெட் இணையத்தளமாகும். அமெரிக்கா, இந்தியா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு நடைமுறைகளை தோற்டிக்க வேண்டும் என அந்த இணையத்தளம் கூறுகிறது.

உண்மையில், இந்த யோசனை மூலம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்து வரும் அமைப்புகளை தற்காலிகமாகவேனும் பின்நோக்கி தள்ளும். தற்போது அணித்திரண்டுள்ள சக்திகளுக்கு அமைய அவ்வாறான விசாரணைகள் நடைபெறவேண்டுமாயின் அது சர்வதேச மட்டத்தில் அல்ல தேசிய மட்டத்தில் ஏற்படும் இணக்கத்தின் அடிப்படையில் மாத்திரமே நடைபெறும். ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் தற்போது காணப்படும் நிலைமையில், அப்படியான யோசனை ஒன்றை நிறைவேற்ற வாய்ப்பில்லை.

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக எப்படியான விசாரணை நடத்தப்பட்டாலும், அந்த விசாரணை அது பக்கசார்பற்றது மாத்திரமல்லது இலங்கை மக்கள் மத்தியில், நம்பிக்கையை வென்றெடுக்கும் விசாரணையாக இருப்பது மிகவும் முக்கியமானது.

இலங்கையில் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பாக அரசியல் அர்ப்பணிப்பு தற்போது அரசாங்கத்திற்கு இருக்குமானால், யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அதனுடன் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அவ்வாறின்றி, நாட்டின் தலைவரான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கொண்டு வரப்படும் யோசனையை எதிர்ப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் எதனை வெளிப்படுத்துகிறது?.

இரண்டு விடயங்கள்:

இதில் முதலாது( பல அரசியல் விமர்சகர்கள் ஆரம்பம் முதல சுட்டிக்காட்டியுள்ளனர்) நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் செயற்படுத்த அரசாஙகத்திற்கு விருப்பமில்லை அல்லது இயலாமை ஆகும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், யுத்ததிற்கு பின்னரான இராணுவமயப்படுத்தல், குடும்ப அரசியல் திட்டங்கள் அனைத்து இல்லாமல் போய்விடும். இதனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கீழடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, வடக்கில் இராணுவமயப்படுத்த நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை ஆணைக்குழு முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்கனவே ராஜபக்ஷ அரசாங்கம் குப்பைக் கூடையில் எறிந்து விட்டது. வடக்கில் எந்த இராணுவயமப்படுத்தலும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளதன் மூலம் இது புலப்பட்டுள்ளது. மற்றுமொரு பரிந்துரை இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட வேண்டும் என்பதாகும். சுதந்திரத்தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாட இடமளிக்காததன் மூலம் ஜனாதிபதியே அந்த பரிந்துரையை குப்பையில் எறிந்து விட்டார் என இன்னுமொரு உதாரணமாகும்.

யுத்ததில் பாதிப்புக்குள்ளான அனைவரையும் நினைவுகூறும் நாள் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரையை மீறிய ஜனாதிபதி சுதந்திரத்தினத்தில் உயிரிழந்த பொதுமக்களை மறந்து விட்டு, போரில் பலியான படையினரை நினைவு கூர்ந்தார். அது மாத்திரமல்ல சுயாதீன காவற்துறை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை கேலிகுரியதாக்கிய ஜனாதிபதி, தமது பிரதிநிதிகளை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமித்தார்.

கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் சுட்டிக்காட்டியிருந்த போல, கைதுப்பாக்கி ஒன்றை ஏந்தியவாறு 1983 ஆம் ஆண்டு தமிழர் விரோத ஜூலை படுகொலைக்கு காரணமாக இருந்தார் என குற்றம்சுமத்தப்பட்ட பிக்கு ஒருவரும் தற்போது, காவற்துறை ஆணைக்குழுவின் ஆணையாளராவார். மேலும் செனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ சம்பந்தமாகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதற்கு பதிலாக ராஜபக்ஷ நிர்வாகத்தினர் இராணுவ விசாரணை ஒன்றை ஆரம்பித்தனர். இது போதாதென்று, ஆணைக்குழுவின் அறிக்கையில் துணை ராணுவத்தினரை வழிநடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட ஜெனிவா பிரதிநிதிகள் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுவர்களை படையில் சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அம்பாறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும், விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான இனியபாரதிக்கு தேசப்பற்றாளர் என்ற பட்டத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ வழங்கினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு பதிலாக, அடையாளம் தெரியாத சடலங்கள் அங்கங்ககே மீட்கப்படுவதுடன், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் மக்கள் கூட்டங்கள் மீதும், கருத்துச் சுதந்திரம் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறன.

இதடினப்படையில் பார்க்கும் போது, இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கோரும் யோசனை நிறைவேற்றப்படுவது தமக்கு ஏற்படும் மரண ஆபத்து என ராஜபக்ஷ நிர்வாகம் தீர்மானித்துள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வது சிரமமான காரியமல்ல. உலகத்திற்கு தண்டோர போட்டு, தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அரச தலைவர் ஒருவர் அஞ்ச நேர்ந்த யுகம் ஒன்றும் இன்னும் இருக்கின்றதா?.

இந்த அச்சத்தின் அடிப்படையிலேயே இரண்டாவது காரணம் எழுகிறது. சர்வதேச மட்டத்தில் மனித உரிமை மீறல் தொடர்பில் தோல்வியை சந்திப்பது தாங்கிக்கொள்ள முடியாத அனர்த்தம் என்ற உணர்வாகும்.( அதன் மறுபக்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியேனும் மக்களின் எதிர்ப்பை அடக்குவதாகும்).

சுருக்கமாக சொன்னால்: நாட்டின் ஜனநாயகம், மக்களின் மனித உரிமைகளை விட, அதிகாரத்தில் இருப்பது அவசியமாகி போனால், ஜனநாயகம், மனித உரிமை குறித்து பேசுவது மரண பொறியாகவே தெரியும். அப்போது, அடக்குமுறையை தவிர வேறு வழிமுறைகள் இல்லை. அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ்வர்.

ஜெனிவா: ஏன் இந்த பயம்? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய:-

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.