Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான தேசிய பொறிமுறை அவசியம்

Featured Replies

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான தேசிய பொறிமுறை அவசியம்: தயான் ஜயதிலக்க

பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக, மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கையால் முடிவுக்கு கொண்டுவர முடியுமா என கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2007 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த கலாநிதி தயான் ஜயதிலக்க தற்போது பிரான்ஸுக்கான இலங்கையின் தூதுவராகவும் யுனெஸ்கோவுக்கான நிரந்திர பிரதிநிதியாகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக வலிமையான, நம்பகமான, சுயாதீனமான, முழுமையாக இயங்கும் தேசிய பொறிமுறையொன்றின் மூலம் மாத்திரமே பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பழிவாங்கும் மனப்பாங்குடையவர் அல்லர் எனவும் அவர் ஒரு மனித உரிமை அடிப்படைவாதி எனவும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirr.../36683--i-.html

Edited by akootha

  • தொடங்கியவர்

'இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை' - மஹிந்த சமரசிங்க

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே உள்ளூர் வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் படிபினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரும் பிரேரணைகள் எதுவும் ஐநா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

கவுன்ஸிலில் இன்று மாலை உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் இலங்கை இதுவரை காட்டி வருகின்ற அர்ப்பணிப்பு உணர்வை கொண்டு பார்க்கும் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் கவுன்ஸிலும் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும், நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத்தொடங்க்விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டவை, மிகைப்படுத்திக் கூறப்பட்ட விடயம் என்று கூறிய அவர், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணிக்க இலங்கை உரிய பொரிமுறைகளை கையாள்வதாகவும் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும், அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும், அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கங்கு குறிப்பிட்டார்.

http://www.bbc.co.uk...amarainun.shtml

Edited by akootha

அமெரிக்கா இனி இலங்கை எந்த மாற்றத்தை கொண்டுவந்தாலும் பிரேரணையை கைவிடப்போவதில்லை என்று கூறியிருந்தது. அதற்கான காரணமாக இலங்கை இவ்வளவு காலமும் விட்ட டூப்புகளை ஆதரங்களுடன் பாட்டியல் போட்டு இலங்கையை நம்ப முடியாது என்று UNHRC கூட்டத்தில் காட்டவேண்டும். அப்போது இலங்கைக்கு ஆதரவளிக்க முயலும் நாடுகள்(சவுதி, கட்டார்) போன்ற நடுநிலைமை நாடுகள் மனம் மாறும். இராக்கிய தூதுவர் யாழ்ப்பணம் போனபோது, அங்கே இருந்த நிலைமையை பார்த்துவிட்டு, தாங்கள் கொடுக்கும் பணம் மக்களுக்கு வந்து சேர்கிறதா என்று கேட்டவர்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் பொறிமுறைகள் எதுவும் பயனற்றது.

பாராளுமன்றத்தில் சில தசாப்தங்களின் முன்னர் சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தமும், தமிழ் அரச மொழி என்பதும், மனித உரிமை சம்பந்தமான சட்டங்களும் இன்றுவரை நடமுறைப்படுத்தப்படாத வெறும் சட்டங்களாகவே உள்ளன. இதற்குமேல் சிங்கள அரச பயங்கரவாதிகளின் பொறிமுறைகளை நம்பவேண்டும் என தமிழ் மக்களிடம் யாரும் எதிர்பார்க்க முடியாது.

சிறந்த பொறிமுறையாக தனித் தமிழ் ஈழமே திகழும்!

  • தொடங்கியவர்

பொறிமுறையை அமைத்தால் மட்டுமே சர்வதேசம் சிங்களத்தை விடும் என்பது நம்பிக்கை தருவதாக உள்ளது.

சிங்களத்தின் நேர்மையான இராஜதந்திரிகளில் ஒருவர் தயான். உண்மை கசக்கும், அதனால் தனது ஐ.நா. நிரந்த பதவியை இழந்தவர். இம்முறை தனது தூதுவர் பதவியை இழக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.