Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு இழக்கிறதா..?

Featured Replies

தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு இழக்கிறதா..?

ku-1.jpg

ஜெனீவா போயிருக்கும் வன்னி எம்.பி கனகரத்தினமா ஈழத் தமிழினத்தின் குரல்…

தமிழர் கூட்டமைப்பை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நம்புவதாக தெரியவில்லை என்று சென்ற வாரம் எழுதியிருந்தோம்.

யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு சம்மந்தரை சந்தித்து கேட்டிருந்தனர். சுய நிர்ணய உரிமையை விடக்கூடாது என்று கூட்டமைப்பு மற்றவர்களை வலியுறுத்தினால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பை மற்றவர்கள் வலியுறுத்தினால் அது ஆபத்தானது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை யாழ். ஆயர் போடவில்லை.

நேற்று முன்தினம் சம்மந்தர் கூறும்போது, நான் ஜனாதபதியிடம் கூற வேண்டியதை கூறிவிட்டேன். நான் தனித்து எடுக்க வேண்டிய முடிவல்ல இது.. தமிழ் மக்களோடு சம்மந்தப்பட்ட விடயம் என்று கூறியிருந்தார்.

அப்போது சம்மந்தர் தமிழ் மக்களின் தலைவர் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டிக் கொண்டார்.

இப்போது..

எல்லாம் மாறிவிட்டது..

ku5.jpg

மகிந்த ராஜபக்ஷவிடம் போன சம்மந்தர் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு போகக் கூடாது என்ற அவருடைய கட்டளையை மௌனமாக ஏற்றுவிட்டு வந்திருக்கிறார் என்ற விடயம் அம்பலமாகியுள்ளது.

கூட்டமைப்பு ஜெனீவா போகாமல் விட்டதற்கு பிரதான காரணம், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட்டமைப்பினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமே என்று சுமந்திரனின் விளக்கம் பொருள் தருகிறது.

அரியநேந்திரன் கூட்மைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார், ஆனால் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டுள்ளார். இவருடைய எதிர்ப்பு போலியானது.

அதேபோல சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழகத்தில் இருந்து, இதில் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். இதுவரை இவர் போட்ட வீறாப்பெல்லாம் அத்தோடு சாயம் போய்விட்டது.

இவர்கள் இருவரும் சரியானவர்களாக இருந்திருந்தால் பதவி விலகியிருக்க வேண்டும். வெறும் வார்த்தைகளால் அலங்காரம் செய்துள்ளார்கள், அவ்வளவுதான்.

ku-2.jpg

சிங்கள அரசு கூட்டமைப்பினருக்கு தமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

நேற்று கூட்டமைப்பை குறை கூறுவது போல நாடகமாடிய பஷில் இன்று அவர்களை பாராட்டி, மகிந்த – சம்மந்தர் சந்திப்பில் நடந்த உண்மையை அம்பலமாக்கியுள்ளார்.

இப்படியான தருணத்தில் கூட்டமைப்பில் இருந்து பல்டியடித்த வன்னி எம்.பி சதாசிவம் கனகரத்தினம் சிறீலங்கா அரசுக்கு சார்பாக ஜெனீவாவில் பேச போய்ச் சேர்ந்துள்ளார்..

அவர்தான் கூட்டமைப்பை ஜெனீவாவில் பிரதிநிதித்துவப் படுத்தப்போகிறார். கூட்டமைப்பு ஜெனீவா போகாவிட்டால் கனகரத்தினத்தின் சதியை உடைக்க அங்கு யாருமே இருக்கப் போவதில்லை.

தமிழர் கூட்டமைப்பு எவ்வளவு பெரிய இராஜதந்திரத் தவறை விட்டுள்ளது என்பதை எடைபோட இதைவிட நல்ல உதாரணம் வேறென்ன வேண்டும்.

சிறீலங்காவும், இந்தியாவும் எவ்வளவு பெரிய இராஜதந்திர காய் நகர்த்தலை நகர்த்தியுள்ளன என்பதையும் இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.

தமிழர் கூட்டமைப்பு போனாலும், போகாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும்.. ஆகவே அவர்கள் புத்திசாலிகளாக நடந்துவிட்டார்கள் பலே கில்லாடிகள் என்று இனி சிலர் றீல் விட ஆரம்பிப்பார்கள்.

ஆனால்..

ku-3.jpg

இப்படியான நேரத்தில் தலைவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்…

சிம்பாப்பேயில் ஆட்சியை விட்டு இறங்க மறுக்கும் றொபேட் முகாபேக்கு எதிராக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தால் உயிராபத்து நேரும். ஆனால் அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் ஸவாங்கிரி உலகம் முழுவதும் வந்தார். சிம்பாப்பேக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சர்வதேச பிரேரணைக்கு ஆதரவு கொடுத்தார், நாடு திரும்பினார்.

உலகம் அவரையே எதிரணி தலைவராக தேர்வு செய்தது.

அன்று அவர் துணிந்து வெளியே வந்திருக்காவிட்டால் உலகம் அவரை றொபேட் முகாபேக்கு சமமான தலைவராக தேர்வு செய்திருக்காது. அங்குள்ள பிரச்சனையை இலகுவாக முடித்திருக்கவும் முடியாது.

அடுத்த உதாரணம் :

சேர்பிய தலைவர் மிலோசெவிச்சிற்கு எதிராக போர்க் குற்றம் சுமத்தப்பட்டபோது சேர்பிய சிறுபான்மை பொஸ்னிய தலைவர்கள் துணிந்து போராடினார்களே.. எப்படி..?

அதுபோல.. யாழ்ப்பாணத்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோடாமல்..

கூட்டமைப்பு ஜெனீவா வந்திருந்தால், தமிழ் மக்களின் தலைமை இயல்பாகவே அவர்களுடைய கரங்களுக்கு வந்திருக்கும். உலகம் தமிழ் மக்களை மதித்திருக்கும்.

பயந்து கிடக்கும் தமிழருக்கு உரிமை கொடுக்காமல் ஏமாற்றலாம் என்று மீண்டும் உலகம் முடிவு செய்ய மேடை போட்டுள்ளது, கூட்டமைப்பு.

சர்வதேச அரங்கில் கிடைக்கும் வாய்ப்புக்களை கோட்டைவிட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்து போலிக் கண்ணீர் வடிக்கும் தமிழ் தலைவர்களின் வரலாற்றை கூட்டமைப்பு தொடர் கதையாக்கியிருக்கிறது.

இன்றைய உலகப் போக்கில் கூட்டமைப்பு ஜெனீவா வந்து, பின் நாடு திரும்பினாலும் எதையும் செய்திருக்க முடியாது.. செய்திருந்தால் சிங்கள பேரினவாதத்திற்கு அது சாவு மணியாகியிருக்கும்…

இதைக்கூட சம்மந்தர் தலைமையிலான கூட்டமைப்பால் செய்ய முடியவில்லை..

மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கே போக அஞ்சும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஏன் தலைமை தாங்க வேண்டும்..?

டக்ளசுக்கும், கூட்டமைப்பிற்கும் இப்போது என்ன வேறுபாடு..?

இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு..

இப்படி நாம் எண்ணினாலும் இதற்குள் இன்னொரு உண்மையும் உண்டு, ஜெனீவா பிரேரணையை ஆதாரமாக வைத்து, தமிழருக்கு ஆப்பு வைத்திருக்கிறது சிங்களம்.

தமிழர்கள் தமக்குள் மோதி சிதறுவது சிங்களத்திற்கு பெரும் விருப்பமான செயல்.. அவர்கள் அதை கச்சிதமாக செய்துவிட்டார்கள்…

ku7.jpg

இப்போது கூட்டமைப்பே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது, அது நாடகமானாலும் மக்கள் மனதில் பிளவாகவே தெரியும்..

மேலும் முன்னர் மேடைக்கு மேடை வீர முழக்கமிட்ட அனைத்து தமிழ் பா.உக்களும் அடங்கிவிட்டார்கள், விலத்தப்பட்ட கஜேந்திரகுமார் போன்றவர்களும் அடக்கி வாசிக்கிறார்கள்…

அமெரிக்கா சுதந்திரம் எடுத்துத்தரும் நாங்கள் ஆட்சியில் குந்தலாம் என்ற கற்பனை எவ்வளவு அபத்தமானது.

என்ன செய்யலாம்…?

எதுவுமே செய்ய வேண்டியதில்லை..

எவ்வளவு பெரிய தவறை பாமரத்தனமாக நிகழ்த்திவிட்டோம் என்பதை தமிழினம் இனியாவது சிந்திக்க வேண்டும். தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

நல்லது இனித்தான் வரப்போகிறது..

ku-4.jpg

http://www.alaikal.com/news/?p=98190

இதை தான் மகிந்தா எதிர்பார்த்தார்.

கூட்டமைப்பி போனால் பிரச்சனை போகாவிட்டாலும் பிரச்சனை.

கூட்டமப்பின் நிலை டோக்கியோ மானாட்டுக்கு புலிகள் போறதில்லை என்ற நிலையில் இருந்து எடுத்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்

இதை தான் மகிந்தா எதிர்பார்த்தார்.

கூட்டமைப்பி போனால் பிரச்சனை போகாவிட்டாலும் பிரச்சனை.

கூட்டமப்பின் நிலை டோக்கியோ மானாட்டுக்கு புலிகள் போறதில்லை என்ற நிலையில் இருந்து எடுத்து இருக்கலாம்.

டோக்கியோவுக்கு ஒரு சம தரப்பு பங்காளிகளாக தமிழர் தரப்பு அழைக்கப்பட்டு இருந்தது.

ஜெனீவாவில் தமிழர் தரப்பு பார்வையாளர்களாக மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

டோக்கியோவுக்கு தமிழர் தரப்பு பல காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை, குறிப்பாக முன்னைய பேச்சு வார்த்தைகளில் இருந்து எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்ற காரணம் கூறப்பட்டது.

ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர் தரப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டுள்ளது. கூட்டமைப்பு பல சந்திப்புக்களை இது சம்பந்தமாக முன்னராகவே மேற்கொண்டது ( தென் ஆபிரிக்க , கனடா,அமேரிக்கா, பிரித்தானியா, இந்தியா ..)

டோக்கியோவுக்கு ஒரு சம தரப்பு பங்காளிகளாக தமிழர் தரப்பு அழைக்கப்பட்டு இருந்தது.

ஜெனீவாவில் தமிழர் தரப்பு பார்வையாளர்களாக மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

டோக்கியோவுக்கு தமிழர் தரப்பு பல காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை, குறிப்பாக முன்னைய பேச்சு வார்த்தைகளில் இருந்து எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்ற காரணம் கூறப்பட்டது.

ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர் தரப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டுள்ளது. கூட்டமைப்பு பல சந்திப்புக்களை இது சம்பந்தமாக முன்னராகவே மேற்கொண்டது ( தென் ஆபிரிக்க , கனடா,அமேரிக்கா, பிரித்தானியா, இந்தியா ..)

டோக்கியோவுக்கு புலிகள் 2 காரணத்துக்காக போகவில்லை.

1 தங்களை விட்டு விட்டு வசிங்டன் மாநாடு நடத்தியது( ஒப்பந்தத்தின் படி இருபக்கமும் அழைக்கபடவேண்டும்) ஆனால் புலிகளின் தடையை காரனம் காட்டி புலிகள் அழைக்கபடவில்லை.

2வது டோக்கியோவில் ஒரு உடன் பாட்டில் புலிகளை கையெழுத்து வைக்க அல்லது ஒரு வாக்குறுதியை வாங்க இருந்தார்கள் என்றும்( புலிகளின் மென்போக்கு அரசியல்வாதியான அண்டன் மூலம்)

நோர்வையில் அன்ரன் பாலசிங்கம் ஓம் என்றதை வன்னி சென்று மறுத்தது வேற....

நான் சொல்ல வந்தது அன்று புலிகள் டோக்கியோவுக்கு போனாலும் பிரச்சனை போகாவிட்டாலும் பிரச்சனை என்ற நிலையில் இருந்தார்கள். இறுதியில் போவதில்லை என்று முடிவுஎடுத்து இருந்துவிட்டார்கள்....

அதே போல தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் என்ன என்று கூட தெரியாது போய் இருந்து பார்வையாளராக இருப்பதை விட பேசாமல் கொழும்பில் இருக்கலாம்.

சரி போய் 2 மணித்தியாலம் பேச சம்ந்தருக்கு நேரம் ஒதுக்கி கொடுப்பார்களா? சமந்தர் தமிழ்மக்களை முட்டாள் என்று நினைத்து போகாமல் விட்டு விட்டு தேர்தலை சந்திக்கும் துணிவு இருந்தால் அவர் சந்திக்கட்டும்,,,,.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.