Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும்

Featured Replies

சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும்: டி.எம்.ஜயரட்ண வீராப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும் என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவிருப்பதை எதிர்த்து கம்பளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

"அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சியை தோற்கடிக்க அனைவரும் வீதியில் இறங்க வேண்டும். இறையாண்மை மிக்க சுதந்திரமான ஒரு நாடு என்ற வகையில் உள்ள சிறிலங்காவின் உள்நாட்டுவிவகாரங்களில் தலையிட்டு சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

உயிருக்கு முதலாக தாய்நாட்டைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நாட்டு மக்களுக்கு முக்கியமானதாகும். நாட்டின் விடுதலைக்காக இன, மத, குல மற்றும் கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைவது முக்கியமானதாகும். தாய் நாட்டின் விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கின்றேன்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்படுமானால் அது இந்தநாட்டு மக்களின் சடலங்களின் மீதுதான் நடைபெறும். 30 வருடகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக இவ்வாறான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதானது நாம் பெற்றுக்கொண்ட வெற்றியை மீண்டும் பின்நோக்கி நகர்த்துவதற்காக மட்டுமேயாகும்.அத்துடன் இப்போது ஒற்றுமையாக வாழும் பல்வேறு இனத்தவர்களிடையே குரோதத்தை ஏற்படுத்துவதும் இந்த சக்திகளின் நோக்கமாகும்.

இந்தத் தருணத்தில் நாட்டை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாடுகளின் சதியைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். இதற்காக இந்த தேசிய நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அனைருக்கும் உள்ளது" எனவும் பிரதமர் ஜயரட்ண தனது உரையில் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=8e792202-383b-4385-8573-bf153fe4431f

என்ன நடந்தாலும் சடலமாகப் போறது தமிழர்தான். அப்படியென்றால், ஒட்டுமொத்த இலங்கையும் தமிழனுக்குத்தான் சொந்தமானது என்கின்ற உண்மையை நம்ம பிரதம்ர் தெரியாத்தனமாச் சொல்லிப்போட்டார். :rolleyes:

வந்தேறி குடிகளாய் ஈழம் நுழைந்த கட்டாக்காலிகளின் வாரிசுகள் இந்த நாசமாய்ப் போன சிங்களம், இன்று எம்மைத் துரத்தி கள்ளக்குடியேறிகளாகவும், அகதிகளாகவும் ஆக்கியிருக்கு. :(

என்ன செய்யப் போகின்றோம் நாம்? :rolleyes: :(

தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழமே உகந்த ஒரே தீர்வு என்பதை சிங்கள அரச பயங்கரவாதிகள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர்.

தேசிய அரசாங்கம் பற்றிப் பேச்சுக்கள் அடிபடத்தொடங்குகின்றன. ரணில் மகிந்தவுடன் நின்று படமெடுத்து போட்டிருக்கிறார். ஜெயரத்தினா வெள்ளைவான் ஒன்றை வாங்கினால் ரணிலால் உபத்திரவம் அதிகம் வராது.

Edited by மல்லையூரான்

அப்படியே போட்டுத் தள்ள வேண்டியதுதான்.(தாய் நாட்டின் விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கின்றேன்.)

பிரதமர் டி.எம்.ஜயரட்ண

  • கருத்துக்கள உறவுகள்

.

நாட்டின் விடுதலைக்காக இன, மத, குல மற்றும் கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைவது முக்கியமானதாகும்

உங்களுக்கு தேவை இல்லை என்றால் இனம் மதம் பார்த்து அடிப்பியள்

தேவை என்றால் இனம் மதம் பார்க்காமல் ஒண்ணிக்கி இருக்க வேண்டும் என்பியள்......கொமடி பண்ணியே அரசியல் நடத்துறீயள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.