Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓரே வரிசையில்....

Featured Replies

திட்டமிட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொள்ளும் மகிந்தா

ராவய பத்திரிகையின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

pix1(28).jpg

pix2(29).jpg

http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36734-2012-02-28-16-58-16.html

தமிழர் நிலை அன்றிலிருந்து இன்றுவரை ஏமாற்றமா? தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தந்தை செல்வா கூறியது இதுதானா? சம்பந்தருக்கு ஏதாவது பெரிய எலும்புத் துண்டு போடப்படதா?

pix2(29).jpg

ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள். சம்பந்தர் தமிழனாக இருந்தும் கும்பிட வில்லை. இத்தனை வருடங்கள் அவர்களுடன் பாராளுமன்றம் போயும் சேர்ந்து நடக்காமல் தள்ளித்தான் நிற்கிறார்.

  • தொடங்கியவர்

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது இன்றியமையாதது

சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக எதிர்க்கட்சியின் ஆதரவுடன் தற்காலிகமான அல்லது நிரந்தரமான தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சில பௌத்த தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி, சர்வதேச நெருக்கடி ஆகியவற்றை ஒரே நேரத்தில் எதிர்கொள்வது கடினம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள தேரர்கள், இந்த நிலையில் நாட்டு மக்களிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது இன்றியமையாதது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுநடத்துவதற்கு மத்தியஸ்தம் வகிக்க முடியும் எனவும் குறித்த தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தேசிய அரசாங்கம் ஒன்று தேவை என்று மக்கள் கருத்தொற்றுமை ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்து சிந்திக்கத் தயார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

உடனடியாக பொதுத் தேர்தல்

உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு மகிந்த ராஜபக்‌ஷவிற்கு அவரது ஆலோசர்கள் சிலர், ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.அடுத்த சில வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமையானது கடும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணங்களைக் கட்டாயமாக இரத்துச் செய்ய நேரிடும். எனவே, உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தி எதிர்கால அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வது முக்கியம் என அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் அழுத்தங்களைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் ”தேசப்பற்று” என்ற கருத்தொற்றுமையை முன்னிலைப்படுத்தி பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது சிறந்தது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் மூலம் வெற்றிப்பெற்று, அந்த வெற்றியை கொண்டு, சர்வதேசம் என்ன கூறினாலும் நாட்டு மக்கள் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர் என சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும். அத்துடன் ஜனாதிபதிக்கு சார்பானவர்களைத் தவிர ஏனையவர்களை அமைச்சு மற்றும் நாடாளுமன்ற பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படும் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு ஜனாதிபதி சாதகமாக பதில் எதனையும் வழங்கவில்லை.

தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிப்பெற்றாலும் தற்போது, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தைப் பயன்படுத்தி, அரசியல் அமைப்பில் ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஜனாதிபதியின் எதிர்கால அரசியலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்க்கு நீதி கிடைக்கும்விடையத்தில், தமிழர் விரோத தேசமாம் இந்தியா, தமிழர்க்கு விரோதமாகவே செயற்படும். தற்போது ஐ நா மனிதவுரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்போகின்ற கவனவீர்ப்புத் தீர்மானம், சிங்களத்தினால் கண்துடைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு எனும் காமாசோமா அறிக்கையை அமூல்படுத்த சிங்களத்துக்கு நெருக்கடி கொடுக்கவே. சிங்களம் தற்போது செய்துகொண்டிருக்கும் நடவடிக்கைகள் ஆணைக்குழு அறிக்கையைப் பிரபலப்படுத்தி சர்வதேசமட்டத்தில் அதை ஏற்றுக்கொள்ளச்செய்து அதன்பின்பு அதிலிருந்து சிலவிடயங்களை வடிகட்டி வெறும்சக்கையை எம்மிடம் மென்றுதின்னத்தரும். ஆக சிங்களம் மாட்டன் மாட்டன் என்று நடித்து தனது இறுதி இலக்கை அடைந்துவிடும். அதுபோக இந்தவிடையத்தில் இந்தியா இரண்டு காயடிக்க முயற்சிக்கின்றது அதாவது தமிழர்க்கான அரசியல் தலைமையையும் இல்லாதொழிக்க முயல்கின்றது கூத்தமைப்புக்கு தவறான வழிகாட்டல்களைக் கொடுத்து தமிழர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி முழுவதும் தமது சொல்லுக்கு ஆடும் கைப்பொம்மைகளை (இப்போதும் கூத்தமைப்பில் அனேகர் அவர்களது கைப்பொம்மைகளே) ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் ஆடவிடுவதே இறுதி நோக்கம். என்ன சொன்னாலும் கூத்தமைப்பின் இந்த மாய்மாலங்களை முழுவதுமாக முறியடிக்கும் சக்தி ஒருசில புலம்பெயர் தமிழர்களிலேயே எதிர் காலத்தில் தங்கி நிற்கும். அதுக்காக நா க தா அன்றேல் னொடியவன் அகியோரைக் கூறுவதாகக் கருதவேண்டாம். எமக்கான தலைவனை, காலம் எப்படிக் காட்டிநின்றதோ அதுபோல் எமக்கான அரசியல் போராளிகளையும் காலமே காட்டிநிற்கும். அது இன்றாகவுமிருக்கலாம் இன்னும் பதிண்வருடம் கடந்தாகிலும் இருக்கலாம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல இன்னுமொன்றின் தொடக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.