Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?

Featured Replies

ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?

jenivatalks80wz.jpg

அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் அமுல்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் முதல் சுற்றை விடுதலைப் புலிகள் வென்றனர்.

நோர்வே அனுசரணையாளர்களால் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சொல் குறித்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் வாதாடிய பின்னர் இறுதியில் அரசாங்கம் விட்டுக் கொடுத்ததுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சட்ட பூர்வ தன்மையையும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வன்னிக்கு இன்னுமொரு வெற்றியை கையளித்தது.

அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு பெருமளவு பிரதிநிதிகள், ஆலேசகர்கள், விசுவாசமான ஊடகவியலாளர்கள், மேலும் அரசாங்க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்களுடன் கலந்து கொண்ட போதிலும் இறுதி வரை (பட்டன்) புலிகளின் பிடியிலேயே இருந்தது.

தந்திரோபாயம்

அரசாங்கத்தின் தந்திரோபாயம் வெளிப்படையானது பழையது -அரசாங்கம் பலதரப்பட்ட அணுகு முறையை கையாண்டது. மாநாட்டு அறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை, கடும் போக்கு குழுக்கள் மூலமும் அவதானமாக திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஊடகங்கள் ஊடாக பக்கச் சார்பான செய்திகள் மூலமும் அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தது.

எனினும், விடுதலைப் புலிகள் நன்கு பழுத்த அனுபவமுள்ளவர்கள். இதன் காரணமாக கடும் போக்காளர்களின் குழப்பமான முயற்சிகள் வெற்றி பெறவில்லை ஆகக் குறைந்த அளவில் முதல் சுற்றிலாவது.

கூட்டறிக்கை

இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் நோர்வே அனுசரணையாளர்கள் கூட்டறிக்கையை தயாரிக்க தொடங்கினர். இதனை பின்னர் இரு தரப்பிடமும் அவர்களது சம்மதத்திற்காக கையளித்தனர்.

அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் உடனடியாக நேரடி தொலைத் தொடர்பு வசதிகள் ஊடாக அலரிமாளிகையை தொடர்பு கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். கூட்டறிக்கையின் ஆரம்ப பந்திகள் மிக சாதாரணமானவையாகத் தோன்றின.

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் 22-23 பெப்ரவரி 2006 யுத்த நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

எனினும், இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக இருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கடும் அதிருப்தியடைந்தார். தனது அங்கீகாரத்தை வழங்க மறுத்தார். உடன்படிக்கை என்ற சொல் குறித்தே மகிந்த குழப்பமடைந்தார்.

2002 உடன்படிக்கையை குறிப்பிடும் உடன்படிக்கை எனும் சொல்லை ஏற்றுக் கொண்டால் அவர் இயல்பாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதே ஜனாதிபதியினதும் ஜே.வி.பி.யினதும் சிந்தனை.

மேலும், அந்த அறிக்கையின் மூன்றாவது பந்தியே ஜனாதிபதியால் அதிகம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்பட்டது. மூன்றாவது பந்தியில் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள உறுதி பூண்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது யுத்த நிறுத்த உடன்படிக்கை வெறுமனே அரசியலமைப்புக்கு எதிரானது மேலும் தேசிய இறைமையை விட்டுக் கொடுக்கின்றது என்ற அவரின் வாதத்திற்கும் முடிவு கட்டுகின்றது.

ராஜபக்ஷ யுத்த நிறுத்தம் என்ற சொல்லை உடன்படிக்கையுடன் சேர்க்காமல் பயன்படுத்த விரும்பினார். உடன்படிக்கை என்பது குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை குறிப்பிடும் என்பது அவரது கருத்து. உடன்படிக்கை என்ற சொல் கூட்டறிக்கையில் இடம் பிடிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு சொல் கொழும்பில் ராஜபக்ஷவிற்கும் ஜெனீவாவில் அவரது பிரதிநிதிகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை மேசையிலும் இது குறித்து ஆராயப்பட்டது.

அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இரண்டு காரணத்திற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவதாக குறிப்பிட்டார், முதலாவது அது அரசியலமைப்பிற்கு எதிரானது அடுத்தது அதனை அப்போது தகுதி வாய்ந்த அதிகாரியாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திடவில்லை.

நோர்வே இந்த சமயத்தில் தலையிட்டு உடன்படிக்கை சட்டபூர்வமானது எனவும், அவ்வேளை அரசாங்கத்தின் தலைவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ அந்தஸ்தின் அடிப்படையில் கைச்சாத்திட்டார் எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும் 2004 ஏப்பிரலில் மீண்டும் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் இதனை இரத்து செய்ததையும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார். இது அரசாங்கம் அதனை அங்கீகரித்ததற்கு சமனானது என அரச பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ராஜபக்ஷ உடன்படிக்கையை இரத்து செய்யாத பட்சத்தில் அவர் அதன் நியாய தன்மையை ஏற்றுக் கொண்டதாக அமையும் என்பதே தெளிவான பாதிப்பு தற்போது கூட்டறிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் அவர் அதனை செய்துள்ளார்.

எனினும், மூன்று மணித்தியாலங்களாக இது குறித்து ஆராய்ந்த பின்னர் ராஜபக்ஷ விட்டுக் கொடுத்தார். அவரது பிரதிநிதிகளுக்கு கூட்டறிக்கையை ஏற்றுக் கொள்ள அனுமதியளித்தார்.

விடுதலைப் புலிகளும் நோர்வேயும் விட்டுக் கொடுக்க மறுத்ததை தொடர்ந்தே ராஜபக்ஷ இதனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் அறிக்கையில் உடன்படிக்கை என்ற சொல் இடம்பெறாவிட்டால் தாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள போவதில்லையெனவும் மேலும் பேசுவதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

பாலசிங்கம் ஒரு அடியில் அரசாங்கத்தை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்கச் செய்துள்ளார்.

அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளுக்காக தம்மை தீவிரமாகவும் கவனமாகவும் தயார்படுத்தியிருந்த போதிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தோற்கடித்துள்ளார். உயர்மட்ட ஹவாட் பேச்சுவார்த்தை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் சர்வதேச நிபுணர்கள் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வர் மற்றும் மோதல் தவிர்ப்பு குறித்து விரிவுரைகளையும் நடத்தியுள்ளனர்.

மேலும் அரச தரப்பு பிரதிநிதிகள் சமாதானம் தொடர்பாக சர்வதேச சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், கூட்டறிக்கை, இருதரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்தும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களின் கரிசனைகள் குறித்தும் ஆராய்ந்ததாக தெரிவிக்கின்றது.

அதில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடிக்கவும் மேலும் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் தீர்ப்பை ஏற்கவும் இணங்கியது குறித்த பந்தியும் உள்ளது. விடுதலைப் புலிகள் இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தை தாக்குவதை நிறுத்தவும் இணங்கியுள்ளனர்.

இந்த அறிக்கை சிறுவர்களை படையணியில் சேர்ப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பல விடயங்கள் பற்றி தெரிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதக் குழுக்கள்

சுவாரஸ்யமான விதத்தில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரை தவிர வேறு எந்த ஆயுத குழுவும் ஆயுதங்களுடன் நடமாடுவதையோ அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அனுமதிக்காது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கம் துணைப் படையினர் குறித்து யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்

  • தொடங்கியவர்

ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?

(நேற்றைய தொடர்ச்சி)

உத்தியோகபூர்வ ஆவணத்தின் படி பிரதிநிதிகள் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் ஜனாதிபதி மகிந்தவின் நம்பிக்கைக்குரிய வாஸ் குணவர்த்தனவும் வந்து சேர்ந்தார். ஜனாதிபதியிடமிருந்து கொண்டு வந்திருந்த கடிதத்தின் அடிப்படையில் அவர் தூதுக் குழுவினரின் ஆசனத்தில் அமர்ந்தார். எனினும், அவரது பெயர் பட்டியிலில் இடம்பெறவில்லை.

எனினும், இதற்கு முன்னர் பிரதி நிதிகள் தொடர்பாக பிரச்சினையொன்று உருவானது. அரசாங்க குழுவில் முக்கிய ஆசனங்களில் ஏழு பேரும் அவர்களுக்கு உதவியாக வேறு ஏழு பேரும் இதனை விட, உதவி உத்தியோகஸ்தர்கள், ஆலோசகர்கள் என பலர் இடம்பெற்றிருந்தனர்.விடுதலைப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.