Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

இலண்டன் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் வீரதீரம் நிறைந்த நிருபர் மேரிகொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டது

தெரிந்ததே. அதேசமயம் அங்கு காயமுற்ற அப்பத்திரிகையின் படப்பிடிப்பாளர் போல் கொன்றோய் [ Paul Conroy ]

தப்பி வந்துள்ளார். இலண்டன் மருத்துவமனையிலிருந்து அவர் வழங்கியநேர்காணலின் சிலபகுதிகள் கீழே தரப்படுகின்றன.

அவை முள்ளிவாய்க்கால் நினைவை நமக்குக் கொண்டுவருவது இயல்பானதே.

  • "அங்கு இராணுவஇலக்கு எதுவும் கிடையாது. அவை முற்றுமுழுதாகத் திட்டமிட்ட பொதுமக்கள் படுகொலையாகும்.

எறிகணைகள் அங்கு செலுத்தப்படுவதன் ஒரேயொருநோக்கம் அங்குள்ள மக்களையும் கட்டிடங்களையும் அழித்து

ஒழிப்பதே."

  • "கொம்ஸ் [Homs] பகுதி பேரழிவுக்குட்பட்டுள்ளது. குண்டுவீச்சின்பின்பான இடிபாடுகளின் மறைவில் சாவை எதிர்நோக்கி

அந்த மக்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்."

  • "இந்தப்போரின் அடுத்த கட்டம் கட்டாயம் நிகழும். ஆனால் அது தொலைக்காட்சியில் காட்டப்படமாட்டாது. இங்கு தாக்குதலை

முடித்ததும் அவர்கள் வேறுபகுதிகளுக்குள் முன்னேறிச்செல்வார்கள். அங்கு சாட்சிகள் இருக்கமாட்டார்கள். இந்தப் படப்பிடிப்புக்

கருவிகள் அங்கு இல்லாதபோது -- இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது -- அங்கு என்ன நடக்கிறது என்பது கடவுளுக்குத்தான்

தெரியும்! எந்தப்பேச்சுகளுக்கும் இப்போது காலம் கடந்துவிட்டது. பேசுவதற்கானகாலம் உண்மையாகவே முடிந்துவிட்டது.

இப்போது படுகொலைகளும், கொலைகளும் முழுவீச்சில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நாம் எப்படி இவற்றையெல்லாம்

பார்த்துக்கொண்டு வெறுமனே நின்றுகொண்டிருக்கமுடியும்? என எனக்குத் தெரியவில்லை. இது ஒரு போரல்ல. இது ஒரு

கூட்டுக்கொலை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடற்ற படுகொலைகள். "

  • " பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள், இளைஞர்கள், எல்லோரும் சாகப்போகிறார்கள். அப்படி அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டபின்பு

--- 10 ஆண்டுகளின் பின்பு --- அவர்கள் ஒரு விசாரணை நடத்தலாம். " எப்படி இது நடந்தது ?" என மக்கள் அப்போது கேட்கலாம்."

  • கொம்ஸ்பகுதி மக்கள் உங்கள் மூலமாக விடுக்கும் வேண்டுகோள் என்ன என்று கேட்டபோது அவர் கூறியது: " தயவுசெய்து இந்த

பூகோளஅரசியலை மறந்துவிடுங்கள்; கூட்டங்கள் நடத்துவதை மறந்துவிடுங்கள்; அவை எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். ஏதாவது

ஒன்றைச் செய்யுங்கள். அவர்கள் சொல்வார்கள் ' தயவுசெய்து உதவி செய்யுங்கள்' அவர்களுக்கு உதவிதான் தேவை! அது கூட்டங்கள்,

மகாநாடுகள் என்பவற்றிற்கு அப்பாற்பட்டவை. அவர்களுக்கு அங்கு ஏதாவது பயனுள்ளதாக நிகழவேண்டும்."

சிரியாவில் மக்கள் பெரும்துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள்,

அநீதிகள் நீக்கப்பட்டு அவர்கள் விடுதலை பெறவேண்டும்; நல்வாழ்வு பெறவேண்டும். ஆனால் இந்த மேலாதிக்கசக்திகளின் இரட்டைவேடம்,

போலித்தனங்கள் அதற்கு உதவப்போவதில்லை. 7500 பேர்வரை பலியான சிரியப்பிரச்சினைக்கு பெரியவெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.

ஒற்றுமையின்மை காரணமாகச் சர்வதேச சமூகம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாக ஐ.நா.செயலர் பாங்கீமூன் வேறு கண்டனம்

தெரிவிக்கிறார். ஆனால் முள்ளிவாய்க்காலில் 40,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழ்மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டதற்கு இவர்கள் என்ன

செய்தார்கள்? மூன்று ஆண்டுகள்வரை சென்றும் என்ன விசாரணை நடைபெற்றது?

http://www.bbc.co.uk/news/uk-17240610

http://www.guardian.co.uk/world/2012/mar/02/paul-conroy-homs-syria-massacre

Robert Fisk: The heroic myth and the uncomfortable truth of war reporting

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.