Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்

Featured Replies

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்

மாசிலான்

அன்புக்குரிய தென்தமிழீழ மக்களுக்கு!

எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த ஜெனிவாப் பேச்சுவாரத்தை குறிப்பிட்ட திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஏப்ரல் திங்களில் 19,20,21 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை ஜெனிவா நகரிலேயே தொடர்வதெனவும் தீர்மானித்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களிடம் பல பயிற்சி வகுப்புக்குளில் கலந்துவிட்டு ஜெனிவாவுக்குச் சென்றனர். சிறிலங்காவின் அரசுக் குழுவினர் ஆனால் இப்பயிற்சி எல்லாம்; எவ்வளவுதூரம் அவர்களுக்குப் பயன்பட்டதோ தெரியவில்லை.

ஜெனிவா நகரில் நடந்த பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 22ம்ஆம் நாள் கையெழுத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுவான முறை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேடையே இதுவென எரிக்சொல்கைம் கூறி இப் பேச்சுவார்த்தை தொடக்கிவைத்தார்.

ஆனால் சிறிலங்காவின் அரசுக் குழுவினர்; யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்தங்களை செய்யும் நோக்கத்துடனேயே ஜெனிவாவிற்கு சென்றிருந்தனர்;;. இதற்காக அவர்கள் கூறிய காரணம் யுத்த நிறுத்த உடன்படிக்கை சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு முரணானது சிறிலங்காவின் இறையான்மைக்கும் பங்கம் விளைப்பது எனவே புதிய முயற்சி எடுக்கவேண்டும் என்பதாகும்..

இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டவைகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்காக தொடர்ந்து பேசுவது எனவும் அதற்காக அடுத்த பேச்சுவார்த்தையையும் ஜரோப்பா கண்டத்தில் ஜெனிவா நகரிலேயே நடத்துவதென முடிவற்கு வந்துள்ளனர். இது அரசுத் தரப்பில் ஏற்பட்ட முன்னேற்றகரமான மாற்றமாகும.;

பேச்சுவார்த்தை சூனியப் பிரதேசத்தில் என்றார்கள் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்றனர். அதன்பின் ஆசியா கண்டத்திற்கு வெளியே நடத்துவதில்லை என்று விடாப்பிடியாக இருந்தர்hகள். பின் ஜெனிவா என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை காரசாரமாக நடந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும் இறுக்கமான சூழலிலேயே பேச்சுக்கள் நடைபெற்றனர் என்று தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முடிவு துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்துவதாகும். பேச்சுவார்த்தை மேசையில் சிறிலங்கா தரப்பினரோ துணை ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்துவதில் பலத்த சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கூறினர்.

அதேநேரம் இராணுவப் பேச்சாளர் துணை இராணுவக் குழுக்கள் இராணுவக் கட்டுப்பட்டுப் பகுதியில் இல்லையென்றார். ஆனால் விடுதலைப் புலிகள் அங்கு முன்வைத்த சான்றுகள் துணை ஆயுதக் குழுக்கள் என்ன பெயர்களுடன் எங்கு எங்கு இருந்து இயங்குகின்றனர் என்பதை அரசுத் தரப்பினரால் மறுக்கமுடியாது இருந்தது.

பலத்த வாதங்களின் பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமிழ் துணை ஆயுதக் குழுங்களை இயங்க அனுமதிக்க மாட்டோம் என சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று எரிக்சொல்கைம் வெளியிட்ட கூட்டறிக்கையில்;; தெரிவித்துள்ளனர். இது ஒரு முன்னேற்ற கரமான முடிவாக இருந்தாலும் இதனை முழுமனதுடன் அரசு நடைமுறைப்படுத்துமா? என்று மக்களின்; மனங்களில் கேள்வி எழுவது இயற்கையே. ஏனனில் சிறிலங்காவின் நம்பகத் தன்மையை தமிழ்மக்கள் நன்கறிவர்.;;.

ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்த போது கூடத்தென் தமிழீழத்தில் பேச்சுக் குழுக்கள் தமிழீன ஆதரவாரள்களைக் கொன்று கொண்டுயிருந்தன. எனவேதான் தமிழ்மக்கள் சிறிலங்;கா அரசை நம்புவதற்கு தயாராகயில்லை என்று கூறுகிறார்கள். இதைத்தான் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனிவா பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கான உறுதி மொழியை அரசு நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கடந்த காலத்தில் அரசுத்தரப்பு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றது ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இப்போது அரசுத் தரப்பு கொடுத்திருக்கும் உறுதிமொழியைக் கூட முழுமையாக நம்புவார்கள் என்று எதிர்;;பார்க்கமுடியாது என்று மக்களின் எண்ண அலைகளை பற்றி மிகச்சரியாகக் கூறியுள்ளார்.

யுத்த நிறுத்த உடன்டிக்கையை கூறப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நடைமுறைப்படுத்த தவறியமையே சமாதானம் கேள்விக்குறியாக மாறுவதற்கு காரணமாகும். சிங்கள் ஆட்சியாளர்கள் யாராயிருந்தாலும் அவர்களின் நிலைப்பாடு இதுதான் இதற்கு புதிய ஆடசித்தலைவர் மகிந்த ராஜபக்ச விதிவிலக்காக இருக்கமாட்டார்.

இதுவரை இருந்த சிங்கள ஆட்சியாளரிகளின் பார்க்க தானே சிங்கள பௌத்தத்தின் உண்மையான காவலன் எனகாட்டுவதில் அதிக அக்கறைகொண்டவர் மகிந்த ராஜபக்ச. எனவே ஜெனிவாவில் ஏற்பட்ட துணை ஆயுதக் குழுங்கள் பற்றிய தீமானதத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஒட்டுப்படைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற யுத்த நிறுத்த விதியை செவ்வனே நிறைவேற்றப் போவதாக அரசுத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. அவ்வாறெனின் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களும் களையப்பட வேண்டுமென்று ஜே.வி.பி குரல் கொடுத்துள்ளது. அத்துடன் மகிந்த சிந்தனை மூலம் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை நீக்கவேண்டும் என்று ஜே.வி.பி மகிந்த ராஜபக்சாவிடம் கோரிக்கை விடுத்தள்ளது.

நோர்வேயின் நடுநிலைப் பணியைக்; கேவலப்படுத்திச் சிங்கள மக்களிடம் உள்ளுராட்சித் தேர்தலில் தனது வாக்குவங்கிளை அதிகரிக்க ஜே.வி.பி முயற்சிக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் ஜே.வி.பி, ஹெல உறுமயவுடன் கூட்டு இல்லாத நிலையில் மகிந்தரின் அடுத்த நகர்வு எப்படியிருக்கும் என்று கூறமுடியாதுள்ளது அதேநேரம் சந்திரிகாவும் தனது கட்சி அதிகாரத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்;.

எனவே இனவாதத்தை வைத்து வாக்குகiளாப் பெறலாமா? அல்லது சமாதானக் குரலைக் வைத்து வாக்குகளைப் பெறலாமா?? என்று தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு மகிந்த ராஜபக்ச தள்ளபப்பட்டுள்ளார். மகிந்தவின் சிந்தனை என்று தூக்கிப்படிப்பாரானால் ஜெனிவாவில் எட்டப்பட்ட முடிவை அவரால் நிறைவேற்ற முடியாமல் போகும்;. ஜெனிவாவில் எட்டப்பட்டவாறு உறுதியாக போர்நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவும், தொடர்ந்து ஜரோப்பாவிலேயே பேச்சுவார்த்தைக்குச் செய்வதாக உறுதி பூணுவராக இருந்தால் மகிந்தவின் சிந்தனைகளைத் தூக்கி எறிய வேண்டும் எதைச் செய்வார் மகிந்தர்?

எவர் எதைச் செய்தாலும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாகவும் உறுதியாக இருப்போம். விடுதலை ஒன்றே எம்விடிவிற்குவழி.

அன்புடன்

மாசிலான்.

http://www.battieelanatham.com/weeklymatte...06/maselan.html

நன்றி வினித் நன் இதை மட்டகளப்பு ஈழநாதம் பகுதியில் வாசிதேன் இருந்தாலும் நன்றி.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.