Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்கள் எல்லோரும் தொடர்ந்து ஈழமக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறோம் - தமிழக வலைப்பதிவாளர் கே.ஆர்.பி.செந்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம்.. இந்தியா... தமிழர்கள்...

இலங்கையில் நடந்த இன அழிப்பின்போது தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பை வகித்த கருணாநிதி அப்போது நடந்த அத்தனை போராட்டங்களையும் ஒடுக்கி காங்கிரஸ் தலைமைக்கு தன் விசுவாசத்தையும், புலிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தன் நடுவிரலை உயர்த்திக் காட்டினார். போர் குற்றம் தொடர்பாக அப்போது ராஜபக்‌ஷேவிற்கு உதவிய அத்தனை நாடுகளையும், குறிப்பாக இந்தியாவையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும். முக்கால் மணி நேர உண்ணாவிரதத்தால் ஈழ மக்களை கருணாநிதி காப்பாற்றி விட்டதாக அப்போது உடண்பிறப்புகள் தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டியது இன்னொரு காலக்கொடுமை. அதே துரோகி இப்போது அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இந்த ஆள் அப்போதும் அப்படித்தான் வீடியோகளை பார்த்துவிட்டு சொன்னார். இப்போதும் அப்படித்தான் சொல்கிறார். இருந்தாலும் கூடங்குளம் விவகாரத்தில் இவர் வெளிப்படையாக தன் கருத்தை சொல்லியதுபொல் சும்மாவாச்சும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க சொல்வதற்காக நன்றி சொல்லி வைப்போம்.

இந்தியாவை பொருத்தவரை இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிக்கிறது. வடக்கே ஒடிஷா, மணிப்பூர் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இதேபோல் இந்தியாவின் நிலமையும் கேள்வி கேட்கப்படும் என்பதாலும் சோனியாவின் பழிவாங்கும் வெறி இன்னும் அடங்காததால் ராஜபக்‌ஷே அரசுக்கு ஆதரவு தரும் முடிவிலும் மாற்றம் இருக்காது. சோனியாவின் புதல்வன், புதல்வி, மருமகன், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட அனைவரும் தொண்டை கிழிய கத்தியும் எந்த பலனலிக்காத வட இந்திய தேர்தல் தோல்வியாலும். இனி அடுத்த மத்திய அரசை காங்கிரசால் கைப்பற்றமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்ததாலும் மலையாளிகள் தீர்மானிக்கும் காங்கிரஸ் அரசு தமிழனுக்கு கொள்ளிவைக்கத்தான் ஆசைப்படும்.

தமிழக காங்கிரஸ்காரன் எல்லாம் தன் அன்னை சோனியா பாதம் தொட்டு வணங்கிவிட்டுத்தான் பேட்டியே கொடுப்பார்கள் போல. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்கானலுக்கு வரும் அத்தனை காங்கிரஸ்காரனும் இலங்கையில் எல்லோரும் மிக மகிழ்சியாக வாழ்வதாக வாய்கூசாமல் சவடால் அடிக்கின்றனர். இன்னமும் உம்மன் சாண்டி புதிய அணை கட்டியே தீருவேன் என முல்லை பெரியாறு விசயத்தில் கூவிக்கொண்டிருக்கும்போதும் கூடங்குளம் திறக்க தனக்கு ஆகவே ஆகாத பி.ஜே.பி காரன் கூட இணைந்து போராட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறவர்கள். ஈழப் பிரச்சினையில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க சொல்லி ஒரு பயலும் வாயை திறக்கவில்லை. தன் இனம் பற்றியும் இந்திய தேசம் பற்றியும் எந்த அக்கறையும் இல்லாமல் இத்தாலியை பூர்விகமாக கொண்ட ஒரு பெண்மணியை தலைவியாக ஏற்றுக்கொண்டவர்களிடம் நாம் மனித நேயத்தை எதிர்பார்க்கக் கூடாதுதான்.

அடுத்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பு கூட இல்லாத பி.ஜெ.பி இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசை அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவைக்க தமிழக பி.ஜே.பி காரர்கள் இன்னும் மவுனம் காப்பது வெட்கக்கேடு. இல.கனேசன். எச். ராசாவெல்லாம் எங்கண்ணே இருக்கீங்க??

ஜெயலலிதாவை பொருத்தவரை இம்முறை பதவிக்கு வந்தது முதல் ஈழப் பிரச்சினையில் தமிழர்களின் நலன் சார்ந்தே செயல்படுவது தமிழர்கள் அனைவருக்கும் ஆறுதலான விசயம். தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக அவர் இருப்பதும். கூடங்குளம் விவகாரத்தில் மக்களின் போராட்டத்தை மதித்து இவ்வளவு காலமும் பொறுமையாக இருப்பதும் பாரட்டக்கூடிய விசயம். தமிழகம் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூடங்குளம் விவாகரத்தில் மக்களின் போரட்டத்தை தடுக்காமல் இருப்பதும். இந்த விசயத்தில் அவசரப்படாமல் யோசிப்பதும் அவரின் பக்குவத்தை காட்டுகிறது. கச்சத்தீவு விவகாரம் முதல், இலங்கைக்கான பொருளாதாரத் தடை, அகதி முகாம்களுக்கு அதிக சலுகை என தமிழக மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறார்.

எதிர்கட்சியாக இருக்கும் விஜயகாந்த் “கேப்டன் பிரபாகரன்” என்ற படத்தின் மூலம் தன்னை கேப்டன் என்று அழைக்கும்படி சொன்ன அவர். ஈழம் மலரும்வரை தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என அறிவித்த அவர். தன் மகனுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்த அவர். காங்கிரஸ் மீது கொண்ட தனிப்பட்ட பாசத்தால் எப்போதும் பெயருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு தன் தமிழ் பாசத்தை காட்டிக்கொள்வதோடு கடமையை முடித்துக்கொள்கிறார். மக்கள் இப்போதாவது இவரை புரிந்துகொண்டால் தமிழும், தமிழகமும் தப்பிக்கும்.

ஊடகங்களை பொருத்தவரை “புதிய தலைமுறை” தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. “தினத் தந்தியும், விகடனும்” தவிர மற்ற பத்திரிக்கைகள் இந்த விசயத்தில் தொடர்ந்து மோசமாகவே நடந்துகொள்கின்றன. தமிழக மக்கள் எல்லோரும் தொடர்ந்து ஈழமக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் சில சுயநல அரசியல்வாதிகளைப் போல இலங்கையில் இருக்கும் சிலரும், புலம்பெயர்ந்த சிலரும் தொடர்ந்து த்மிழக இன உணவாளர்களை கேலி பேசுவதும் வருத்தமாக இருக்கிறது.

எது எப்படியோ விடுதலைப்புலிகளை காட்டி தமிழ் மக்களை புறக்கணித்த உலகம். விடுதலைப்புலிகள் இல்லாமல் ஆன பிறகும் தன் அரசியல் நிலைப்பாட்டை நடுநிலமையோடு எடுக்கும் என்று நம்புவோம். தொடர்ந்து முன்னெடுப்புகளையும், கவன ஈர்ப்புகளையும், போராட்டங்களையும் நடத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்..

”தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!!”

http://krpsenthil.blogspot.com.au/2012/03/blog-post_10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.