Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தை பிரபாகரன் இருப்பிடத்தை விசாரித்து தெரிந்து கொண்ட பின் குழந்தை பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்

Featured Replies

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே அவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொலை செய்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரியே தெரிவித்துள்ளதாக சேனல் 4 நிறுவனத்தின் கேலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்களம் என்ற பெயரிலான ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இலங்கையின் இனவெறிப் படுகொலையின் பயங்கர முகத்தை உலக சமுதாயத்திற்கு அம்பலப்படுத்தியவர். தற்போது 2வது ஆவணப்படமும் தயாராகியுள்ளது. இதில் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ நாளை வெளியாகிறது.

இந்த நிலையில் கொலை செய்வற்கு முன்பு பாலச்சந்திரனை கொடூரமான சூழலில் விசாரணை செய்து இலங்கைப் படையினர் பிரபாகரன் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டுள்ளதாக தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. இதனை மெக்காரே உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த வாக்குமூலம் எங்களிடம் மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. பாலச்சந்திரனைப் படுகொலை செய்வதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களைப் பெற்றுள்ளனர். பின்னரே கொன்றுள்ளனர்.

உண்மையில் ஐந்து பாதுகாவலர்களுடன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவத்திடம் சரணடையவே பிரபாகரன் அனுப்பியுள்ளார் ஆனால் பிரபாகரனின் மகனைப் பிடித்துக் கொண்டு முதலில் ஐந்து பாதுகாவலர்களையும் கொன்று விட்டனர். புpன்னர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டு பாலச்சந்திரனையும் படுகொலை செய்துள்ளனர். இது மிகப் பெரிய யுத்த விதி மீறலாகும்.

பாலச்சந்திரனின் உடலில் ஐந்து தோட்டாக்கள்; பாய்ந்த வடுக்கள் உள்ளன. ஆனால் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பான வெளிப்படையான அடையாளம் இல்லை. இருப்பினும் அந்த சிறுவன் இருந்த சூழ்நிலையைப் பாருங்கள். ஐந்து பாதுகாவலர்களை அந்த சிறுவன் கண் முன்பாக கொடூரமாக கொன்றுள்ளனர். பிரபாகரன் குறித்து விசாரித்துள்ளனர். நிச்சயம் சித்திரவதை நடந்திருக்காது என்று கூறுவதை நம்ப முடியவில்லை. அந்த சிறுவனின் கண்களைக் கட்டாமல், கையைக் கட்டாமல் நேரடியாக சுட்டு விட்டனர். அந்த சிறுவனுக்கு முன்பு துப்பாக்கியை நீட்டியபடியே ஒருவர் இருந்துள்ளார். இதுவே மிகப் பெரிய சித்திரவதைதான் எனத் தெரிவித்துள்ளார் மெக்காரே.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74792/language/ta-IN/article.aspx

ஒரு குற்றமுமே செய்யாத பன்னிரண்டு வயது சிறுவனை கொன்றது மூலம் சிங்களம் செய்த போர்க்குற்றம் அதன் இராணுவ அதிகாரி மூலம் சனல் நாலால் உலகிற்கு கூறப்பட்டுள்ளது.

தமிழ் சி என் என் னால் வெளியிடப்பட்ட வீடியோவை பார்க்கும் போது பிரபாகரன் என்ற தோற்றத்தையுடைய வித்துடல் சவிந்திர சில்வாவினால் கோடாரியால் தலையில் கொத்தப்பட்டு பின்னர் மூளைப்பகுதி முழுவதுமாக சேகரிக்க படுகின்றது.ஆனால் சவிந்திர சில்வாவினால் கொத்தப்பட்டதுக்கான ஆதாரம் இதுவரை வெளிவரவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.