Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மனிதப்படுகொலைகளுக்கு இந்திய மத்திய அரசே பதிலளிக்கவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மனிதப்படுகொலைகளுக்கு இந்திய மத்திய அரசே பதிலளிக்கவேண்டும்

இலங்கையின் இறுதிக்கட்டப்போரின்போது இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியைத்தழுவும் என்ற கருத்துக்கணிப்பே இந்தியாவின் ஊடகங்களினது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் தோற்றால் இதனால் போரின் இறுதி விளைவில் புலிகள் முற்றாக அழிக்கப்படமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்ட காங்கிரஸ் தேர்தல் முடிவகள் வரமுன் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பியது. இருந்தும் நம்பிக்கை இன்மையால் தேர்தலிலும் எலக்ரொனிக் வாக்குசாவடிளில் குழறுபடிகள் செய்து கருத்துக்கணிப்புக்கு மாறான தேர்தல் முடிவுகள் வெளிவந்தது.

இதற்கிடையில் போரை எப்படியாவது மேமாதத்த்றிகுள் முடித்துவிடவேண்டும் என்ற நோக்கோடு தனது இராணுவத்தையும், படைக்கலங்களையும் கடல மார்க்கமாக அனுப்பி இந்திய இராணுவமும் புலிகளுக்கெதிராகச் சண்டையிட்டது. அத்துடன் கடலில் இருந்து பொஸ்பரஸ் குண்டுகளை ஏவியதும் இந்திய இராணுவம் தான் எனச் போர்முனையில் இருந்த மக்கள் அபிப்பிராயம். இந்தியாவே இக்கொடூரத்தாக்குதலுக்கு அழுத்தங்களையும், உயிர்கொல்லி ஆயுதங்களையும் வழங்கி மக்கள் அழிவதை இந்தியா தன்நாட்டில் நடக்கும் போரில் கூட கரிசனை செலுத்துவதில்லை. உலகத்தின் முதல் தரம் வாய்ந்த கொலைவெறி இராணுவம்.

அகிம்சை மூலம் காந்தி கண்ட சுதந்திர இந்தியா இன்று அகிம்சை என்றால் என்ன? என்று கேட்கும் அளவிற்கு வெட்கக்கேடான நாடு.

அகிம்சை வாதியான காந்தியின் குடும்பம் தான் காங்கிரஸ். இவர்கள் தான் இந்திய இராணுவத்தை அனுப்பி சீக்கியரின் பொற்கோவிலில் 3000க்கு மேலான சீக்கியர்களை அவர்களின் புனிதத்தலத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்றவர்கள். அதற்குரிய தண்டனையைத்தான் இந்திரா காந்தி அனுபவித்தார்.

இலங்கையில் ஒருதலைப்பட்சமான முடிவுடன் ஐபிகேஎவ் என்ற பெயருடன் இந்திய இராணுவம் நுழைந்து 10,000க்கு மேற்பட்ட தமிழிப்பெண்களின் கற்பைச்சூறையாடியது மட்டுமல்லாமல் எத்தனையோ தமிழர்களை நாசம் செய்தார்கள். அந்த பாவத்திற்குரிய தண்டனையை ராஜீவ் பெற்றுக்கொண்டார்.

அதன்பின் சோனியா செய்த பாவத்தின் சம்பளம் நிச்சயமாக அனுபவிப்பார்.

இங்கு இந்தியா பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்தியா அமெரிக்கப்பிரேரணையை வெளிப்படையாக ஆதரிக்காது. ஆனாலும் உள்முகமாக அமெரிக்காவிற்கு சீட்டுக்கொடுக்கலாம். சர்வதேச விசாரணைக்கமிஷன் வந்தால் இந்தியாவின் தலை நிச்சயமாக உருளும்.

பசியும் பட்டினியுடன் தண்ணீருக்கே வழியல்லாமல் வாடிய மக்கள்மேல் உலகம் கொடூர யுத்தம் புரிந்ததென்றால் வரலாற்றில் இதுதான்.

முதற்தடவையாக இருக்கும். யார் மன்னித்தாலும் உலகைப் படைத்தவன் மன்னிக்கமாட்டான். இறைவனின் தீர்ப்பு ஒன்று உண்டு.

தமிழரின் உயிரைக்காவு கொடுத்து இலங்கையை அடக்க நினைத்த இந்தியாவிற்கு, இப்போது இலங்கை தன் கையிலிருந்து முற்றாக நழுவிய தோல்வியை சமாளிக்க இலங்கையின் காலில் வழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைவிட இன்னும் வரும்

சுப்பிரமணிய சாமி அது இந்தியாவின் போர் என்றும் அதை இந்தியா, இலங்கையை கொண்டு நடாத்திவித்தாகவும் தான் கூறியிருந்தார்.

இந்தியாவில் காங்கிரசின் ஆட்சியால் உணவு பொருள்விலைவாசி ஏறிக்கொண்டுபோகிறது. இது சுப்பிரமணிய சாமிக்கு அரசியல் பேச இலகுவாகசெய்கிறது. கோழிமுட்டைத்தட்டுப்பாட்டால் அதை இப்போது யாரும் அழுகும் வரை விட்டுவைப்பது இல்லைப்போலிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னூறு அதிகாரிகள்,  இருபதாயிரம் துருப்புக்கள், இரண்டு போர் கப்பல்கள், மற்றும் ஐந்து பில்லியன் டாலர் கடன். 

சிறி லங்கன் ஜெனோசைட், ப்ரொடியூசர் இந்தியா, டைரக்டர் ராஜபக்சே குடும்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அலுவல் முடிஞ்சது அடுத்து கிந்தியன் பாகிஸ்தானின் பலுஸ்சிஸ்தானத்திற்கு அலுவல் பார்க்க கிளம்பிட்டான்.. மாலதீவில் அலுவல் நடந்து கொண்டு இருக்கு.. அவன் பாகிஸ்தான்காரன் கிந்தியாவுக்கு வரும்போதே.. கோலி குண்டு போல வெடி குண்டை உருட்டிக்கிட்டேதான் வருவான்.. இவன் பிஜெபி பிரியடில் லாகூர் எக்ஸ்பிரசில் குண்டு வைத்தான்.. அவன் கார்கில் என்று சொல்லி போட்டான்.இன்னும் சீனாக்காரன் டோங்கிலிய அனுப்பால் இருப்பதுதான் விந்தையினும் விந்தை.. இவனுங்க யாராவது எப்படியாவது அடிச்சுக்குங்க குண்டு வச்சுகுங்க.. சாவுங்க .. உலகத்தில் மக்கள் தொகை குறையட்டும் .. பூமி பாரம் குறையட்டும்.. நல்லது நடக்கட்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.