24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி தீர்க்கப்படும்” – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 10:45 AM மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் எனவும் “நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்க்கப்படும்” எனவும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படுகின்றன. இந்த மோதல் காரணமாக உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கடல் வழிப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் அபாயம் குறித்து சர்வதேச வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஈரானின் புதிய தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் கடந்த நாள் முதல் தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானின் மிக முக்கியமான தீவு நகரமாக விளங்கும் கார்க் தீவு மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், கார்க் தீவில் உள்ள முக்கியமான இராணுவ இலக்குகள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை திட்டமிட்டு அழிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், யாரேனும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதைத் தடுக்க முயன்றால், இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், உலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு சக்திவாய்ந்த மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், தாங்கள் குறிவைக்கும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்கி அழிப்போம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்க்கப்படும்” என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை மேலும் மோசமடையும் அபாயம் நிலவுகிறது. ஈரானின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் சுமார் 90 சதவீதம் கார்க் தீவு பகுதியிலிருந்தே நடைபெறுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/240927
-
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!
ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து புறப்பட்டது Mar 13, 2026 - 11:29 PM இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து இன்று (13) இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானதுடன், அதில் சுமார் 180 பேர் இருந்தமை கண்டறியப்பட்டது. பின்னர் இதிலிருந்து மீட்கப்பட்ட 35 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணை மூலம் சர்வதேச கடற்பரப்பில் வைத்து குறித்த ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmp7akps000f356p5y6enni0
-
நான் ரசித்த விளம்பரம் .
- Today
- இரசித்த.... புகைப்படங்கள்.
- போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
இது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் அல்ல. இந்த நிலையில்.... புட்டினும் ரஷ்ய மக்களும் அமைதியாக தூங்கி ஒவ்வொரு நாட்களையும் இரசித்து வாழ்கின்றார்கள்.தாம் உண்டு.தம் வேலை உண்டு. உக்ரேன் மீதான சின்னஞ்சிறு சேட்டைகள் உண்டு.😎 பட்டுப்பாதையின் குறுக்கே வந்தவர்கள் அவஸ்தை படுகின்றார்கள். ஈரான் போர் வேண்டாம் என்றாலும் போர் நிற்காது.😁 அனைவருக்கும் ஒரு அரோகரா🙏- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அமெரிக்காவிட்டையும்,ஐரோப்பாவிட்டையும் இல்லாத காசே? 11 பில்லியன் அவங்கள் பின்னேரம் கோப்பி,தேத்தண்ணி குடிக்க செலவழிக்கிற காசு. 😎 அவங்களை அசைக்கேலாது கண்டியளோ....- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
ஐம்பது வருடத்திற்கும் மேலாக அதுதானே நடக்கின்றது.சிங்களம் இந்தியாவை நோக்கி காறித்துப்பும் போது...... நம்ம ரமில் பொலிற்ரிக்கஸ் கூலிங்கிளாஸ் போட்டுக்கொள்வார்கள்.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அத்திவாரத்தை விட்டுச்செல்லும் மனநிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்தும் பயனில்லை. இப்படியான நடவடிக்கைகள் தமிழினத்திற்கு புதிதும் அல்ல. இலங்கை தமிழ் அரசியலிலும் இராசதுரை மற்றும் ஊர்காவல்துறையார் நல்ல உதாரணங்கள். அதே போல் கருணா,பிள்ளையான் போன்றோரின் நடவடிக்கைகளும் தகும். காளியம்மாள் தலைவர் படம் தாங்கிய புத்தகத்தை அதிமுக காரியாலத்திற்கு எடுத்துச்செல்லாமல் தவிர்த்திருக்கலாம். கொள்கை இல்லாதவர்களுக்கு தலைவர் படம் அரசியல் வியாபாரப்பொருள் அல்ல.- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
தாங்கி கொள்வார்கள் சிறிலங்கா காறி துப்பினாலும்- Yesterday
- மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
வாழ்த்துக்கள். எனது தந்தையாரின் கல்லூரி. நேர்மையானவராய் இருப்பார் என நம்புகிறேன்.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜை பாஜக கூட்டணியில் சேர்கிறார்…அதனால்தான் இன்று இதயதெய்வம் திரிஷா அண்ணியார் டெல்லி கிளம்பினார் என பரபரக்கிறது சென்னை. “பாசிச பாஜக கொள்கை எதிரி”… இத கேட்டு சில்லறயெல்லாம் சிதற விட்டேன் என்று நினைக்கத்தான் 😂- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
பிஸ்கெட் போட்டவரை எந்நாளும் மறக்காது😂. சந்தித்து விட்டு, பத்திரிகையாளர் முன் வாசலில் நிற்பதால் பின் கதவால் தப்பி ஓடினவர். சீமானின் முதல் பெரிய வியாபாரம் ஜெக்கு #இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிரச்சாரம் செய்ததுதான். அதை ஏற்பாடு செய்தவர் சசி.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
இவா ஊழல் மோசடி வழக்கில் வெளியே வந்த போது சீமான் அன்பாக சென்று சந்தித்தவர்😂- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆறு பேர கூட்டிப்போனால் 72 கன்னி இலவசம்.- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
மேற்கின் கதை முடிந்தது. எல்லாரும் பெட்டி படுக்கையோடு ஈரான், ரஸ்யா பக்கம் போங்கோ😂. #வெளிக்கிடடி விளாடிவாஸ்டொக்குக்கு😂- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அமெரிக்கா / மேற்றுகின் ஆயுத உற்த்தி / கொள்வனவு மற்றும் அதன் செலவு / பொருளாதார model ஐயே புதைகுழியாக மாற்ற்றும் வியூகத்தை இரான் பாவிக்கிறது.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
பயிற்சியாளரை போலவே அதிகமாய் கூறப்படும் விலைக்கு விற்கப்படும் போதே பயிற்சியின் சீத்துவம் புரிகிறது😂 என்னது தென்ந்தோப்பு சின்னமா? கங்கை அமரன் வீட்டை ஆட்டயப்போட்டது போல் அடுத்த முறை யாரின் தோப்போ😂- சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய இந்த எடப்பாடி பழனிசாமி முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எள்று ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். Daily Thanthiபுதிய கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்தார் சசிகலாமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயல- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
கட்சியில் ஏற்கெனவே உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி முக்கிய பதவிகளை இவர்கள் பெறும் போதே பயிற்சியின் பெறுமதி தெரிகிறது அல்லவா.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
- வீதியோரம்.
வீதியோரம். மலர் .......... 6. மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின் முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும் தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது. அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள். — என்னடி என்ன ஆச்சு . — என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில் அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு ட்ரக்குகளில் வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய் டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள். சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. — என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க ….. — போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு என்று அவள் சொல்ல ….. — என்ன சொல்கிறாய் நீ ….. — உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் ….. அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6. மலர் .......... 🌼 6.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
கொ.ப.செ : கொள்கைகளை பறக்கவிடும் செயலாளர்.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!- மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
நீதிபதி சதீஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர், என்னை விட இரு ஆண்டுகள் இளையவர் என நினைக்கிறேன். பெயரைத் தவறாக எழுதியிருக்கிறார்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.