Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. உங்களின்ர பொறுமையை சோதித்த தருணங்கள் தாயகத்தில் ஏற்பட்டது உண்டா ரெல் மீ கிளியர்லி,,,
  3. ஆரத்தி எடுப்பது தமிழரின் கலாச்சாரம், ஆனால் காலை தொட்டுக்கும்பிடுவது நம் பண்பாட்டில் அப்படி வழக்கில் இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அழைத்து வந்தவர்களோ தெரியாது.
  4. குளிக்க போன குமரி பொண்ணு.. படம்: சக்கரம் (1968) இசை:சுப்பையா நாயுடு பாடியோர்: TMS & சுசீலா வரிகள்:வாலி டிஸ்கி: அந்த காலத்து கிளுகிளுப்பான பாடல் போல கிடக்கு
  5. Today
  6. அன்னம்மாள் பள்ளிகூட 3ம் ஆண்டு விளையாட்டு போட்டி, நொண்டிநாய் ஓட்டத்தில் முதலாம் இடத்தை வென்ற சிவானந்தன் - மரியாதை நிமித்தம் அதை கோஷானிடம் கொடுக்குமாறும் இல்லையேல் நடப்பதே வேறு எனவும் எச்சரிக்கப்படுகிறார்.
  7. நடுத்தெருவில் வைத்து அண்டர்வேரும் உருவப்படும் (#கிரீன்லாந்து) 😂. பிகு தம்பர் மூலம் அமரிக்கா தலைமையிலான மேற்கு கூட்டணியை உடைக்கும் புட்டினின் அதிவேக பந்து வீச்சுக்கு முதல் விக்கெட் கனடா. அடுத்தது ஜேர்மனி… அதற்கு முதல் இலண்டனில் சீனாவின் சூப்பர் எம்பசி அமைக்க அனுமதி கிடைக்கும். அமெரிக்கர்கள் தம்பரை 2ம் முறை தேர்வு செய்ய முன் இதை யோசித்திருக்க வேண்டும். அட்லீஸ்ட் வரும் மிட் டேர்ம் எலக்சனிலாவது தம்பருக்கு கால் கட்டு போட வேண்டும். இல்லையேல் கூடாரம் காலியாவது தடுக்க முடியாது.
  8. முற்றிலும் உண்மை. நீதிக்கட்சி (Justice party) மூலமாகப் புகைய ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு அண்ணாவின் திமுகவினால் கொழுந்து விட்டு எரிந்தது என்பதே வரலாறு. தமிழக அரசியலில் அதுவே திருப்பு முனையானது. தமிழ்நாட்டில் மக்களின் தன்னெழுச்சியான பெரிய போராட்டம் என்பது சமீபத்தில் நான் அறிந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம். அடுத்து, சில இடதுசாரிகளின் (CPI, CPI(M) அல்ல) வழிகாட்டுதலில் மக்கள் போராடியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு. இவை இப்போது என் நினைவில் வருபவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட இயக்கங்களின் முதன்மையை எடுத்துக் காட்ட பராசக்தி படக்குழுவினருக்கு மனமுண்டா என்பது தெரியாது. அப்படிச் செய்திருந்தால் பிரச்சாரப் படம் என்று சொல்லி, படம் தணிக்கைக் குழுவைத் தாண்டாமல் நின்றிருக்க வாய்ப்பு அதிகம். இன்றைக்கு இந்திய ஜனநாயகம் அவ்வளவுதான். ஆனாலும் அண்ணாவை அவர்களால் முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. எது எப்படியாயினும் தெரிந்தோ தெரியாமலோ, பராசக்தி பெரும்பான்மையான இளையோரிடத்தில் மொழியுணர்வைப் பற்ற வைத்துள்ளது வரவேற்கத் தகுந்த ஒன்று.
  9. Yesterday
  10. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 91 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை தமிழ் காவியமான மணிமேகலையில் துசிதா சொர்க்கத்துக்கு இணையான ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. ‘அறவணர்த் தொழுத காதை’, அத்தியாயம் 12 இல் 71 முதல் 81 வரையிலான வசனங்கள் பார்க்கவும். "சக்கர வாளத்துத் தேவர் எல்லாம் தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில் பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம் உளம்மலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்" [சக்கரவாளக் கோட்டம் என்பது தேவர்கள் அனைவரும் கூடும் இடம். துடிதல் உலகம் என்பது உயிர்கள் வாழும் உலகம். சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உயிர் உலகில் மேம்பட்டு விளங்குபவன் திருவடிகளை வணங்கி வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கதிரவன் தோன்றினான் என்னும்படி, ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டளவில் பேரறிவாளன் (புத்தன்) தோன்றுவான். அதன் பிறகு, பெரிய குளமாகிய ஏரியிலிருந்து சிறு மதகின் வழியே நீர் பாய்வது போல அறநெறி உயிர்களின் உள்ளத்தில் பாயும் - உயிர்த்தலைவன் கூறினான் என்கிறது.] பௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். இதை அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல் / இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. இங்கு காமதாது [Kāmadhātu ] என்ற காம உலகம் ஒன்றையும் காண்கிறோம். இங்கு காமதாதுவின் உலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அப்படியான உணர்ச்சி ஆசைகளின் உலகம் என்று கூறப்படும் ஆறு சொர்க்கங்களில் ஒன்றாக, புத்த மத அண்டவியலில் ஒரு உயர்ந்த தேவலோகமாக துசிதா சொர்க்கம் (Tusita Heaven) இருக்கிறது. எனவே இது காமதாதுவில் உள்ள ஆறு சொர்க்கலோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாவம்சம் போன்ற புத்த மத வரலாற்று நூல்களில், துசிதா சொர்க்கம் மிக முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அடுத்த புத்தராக வரப்போகும் ஒருவர் இந்த சொர்க்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாவம்சத்தில், பல பௌத்த பிரமுகர்கள் மற்றும் போதிசத்துவர்களின் இறப்புக்குப் பிறகு துசிதா சொர்க்கத்தில் பிறந்து, பின்னர் சரியான காலம் வரும் பொழுது அவர்கள் தங்கள் இறுதிப் பிறவிக்காக ஞானோதயம் பெற்றவர்களாக மனித உலகிற்கு இறங்குகிறார்கள் அல்லது மனிதர்களுக்குள் வந்து புத்தராகும் கதைகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தின் ஐந்து பெரிய காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புத்த மதம் சார்ந்தது. இதை எழுதியவர் சிதலைச்சாத்தனார். இந்த காப்பியத்தில் பௌத்த தத்துவங்கள், மறுபிறவி கொள்கைகள், கர்ம வாதம் போன்றவை விளக்கப்படுகின்றன. மணிமேகலையில் நேரடியாக துசிதா சொர்க்கம் பற்றிய குறிப்பிடுதல் இல்லையென்றாலும், பௌத்த மத அண்டவியல் தொடர்பான பல கருதுகளுக்கும் மறுபிறவிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மணிமேகலை கதாபாத்திரம் புத்த மத ஆசாரியர்களின் போதனைகளைப் பெறுவதும், முக்தி (நிர்வாணம்) அடைவதற்கான வழிகளை அறிதலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுருக்கமாக மகாவம்சம் வருங் கால புத்தரின் [Maitreya (Sanskrit) or Metteyya (Pali) is the future Buddha,] பிறப்பை துசிதா சொர்க்கத்துடன் இணைக்கிறது. அதேவேளை மணிமேகலை புத்த மதம் சார்ந்த மறுபிறவிக் கொள்கையை விவரிக்கிறது, ஆனால் துசிதா சொர்க்கத்தை நேரடியாக குறிப்பிடவில்லை. Part: 91 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 It was surprising to see reference to Tusita Heaven in the Tamil epic Mannimeghalai. Refer ‘ARAVANAR WORSHIPPED KAATHAI’, Chapter 12, verses 71 to 75, of the Epic Mannimeghalai. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 92 தொடரும் / Will follow துளி/DROP: 1998 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 https://www.facebook.com/groups/978753388866632/posts/33320521544263064/?
  11. அந்த நாட்டின் தலைவர்கள் உயிர் தப்பலாம் ...அல்லது அமெரிக்காவுக்கு விருந்தினராக பாம்பரையாக வாழலாம் ... சதாம் ஹுசைன்,கடாபி,பின்லாடன்,மதுரா ,இடிஅமீன் போன்றவர்களின் நிலை ஏற்படாது .... அசாத் (சிரியா) தனது சொந்த முயற்சினால் தப்பி பிழைத்தார்
  12. கனடாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஒரு பேச்சு வேறு ☹️
  13. அப்ப அமெரிக்காவை, நேட்டோ நாடுகளை நம்பினால்...?
  14. அனுராவின் காலில் எல்லாம் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.அவரும் ஒரு சாதரண மனிதர் தானே ஏன் இவ்வளவு கோமாளித்தனம் செய்கிறார்கள்...ஆலாத்தி, பூச்செண்டு, காலில் தொட்டுக் கும்பிடுதல் கடவுளே..
  15. சீனாவை நம்பினால் நடுதெருவில் கைவிடப்படுவார்
  16. அநுரகுமார திசாநாயக்கவை பார்க்க யாழ்பாண தமிழர்கள் முண்டியடித்து நடந்து கொண்டவிதம் காணொளியில் காட்டினார்கள் டூ மச் இல்லை திறி மச் அவமானம். தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை பர்க்க முண்டியடிக்கிறார்களே லூசு கூட்டம் என்று நினைத்தால் இங்கே நிலைமை மோசம் ☹️
  17. 🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨 🚨 தடுபாயில் பதுங்கியிருந்த பாரிய குற்றவாளிகள் மூவர் அதிரடியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்! 🚨 written by admin January 16, 2026 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பெண் (மேலனி டி சில்வா), தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் மைத்துனி எனவும், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பொறுப்பதிகாரியும், W15 ஹோட்டல் மீதான சட்டவிரோதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருமான பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சிலம் டி சில்வாவின் மனைவி ஆவார். இவர் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கணக்கு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை முறையாகச் செயல்படுத்தப்படாமைக்கு, இவரின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த நபர்களிடம் CID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு வாரண்ட் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த, இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் அரசாங்க நிதி மோசடி செய்த பெண் ஒருவர் இன்று (2026 ஜனவரி 16) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏனைய இருவரின் விபரங்கள். கந்தானையைச் சேர்ந்த 30 வயது நபர்: இவர் 2025 ஜூலை 3ஆம் திகதி வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர். எல்பிட்டியவைச் சேர்ந்த 52 வயது நபர்: உஸ்மங்கொட பகுதியை மையமாகக் கொண்டு இயங்கிய பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். இலங்கை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க, துபாய் மற்றும் அபுதாபி பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தனர். சர்வதேச நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களைக் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் மூவரில் பெண் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆண் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக களனி மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்பலனாய்வு பணியகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரால் இதுவரை 95 சிவப்பு வாரண்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் பயனாக 2024 இல் 10 பேரும், 2025 இல் 11 பேரும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLanka #PoliceNews #CrimeUpdate #Interpol #RedNotice #DubaiArrest #CID #Justice #PublicSafety #SriLankaPolice #LKA #BreakingNewsSriLanka #CrimeInvestigation#SriLanka #BreakingNews #CrimeInvestigation #CID #DubaiArrest #JusticeForSriLanka #LegalSystem #PoliceUpdate #SriLankaPolice #LegalNews #SriLankaPolitics #MelanieDeSilva #CurrentAffairsSL #LKA https://globaltamilnews.net/2026/226655/
  18. 🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! written by admin January 16, 2026 கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவுடனான கனடாவின் கூட்டாண்மை “புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) நம்மைச் சிறப்பாகத் தயார்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குச் செல்லும் முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதியை 50% அதிகரிக்கக் கனடா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கனடா சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வர்த்தக வரிகளைக் குறைக்கவும், பதிலுக்குச் சீனா கனடிய விவசாயப் பொருட்கள் (Canola) மீதான வரிகளைக் குறைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன. “உலகம் பிரிவினையாலும் குழப்பத்தாலும் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில், கனடாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும்” என்கிறார் பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் (Tariffs) கனடா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க, இந்தச் சீனப் பயணம் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. #Canada #China #Mark Carney #NewWorldOrder #GlobalPolitics #TradeNews #CanadaChinaRelation #BreakingNews #TamilNews #கனடா #சீனா #மார்க் கார்னி #உலகஅரசியல் Global Tamil News🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! - Global Tami...கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு…
  19. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி (Justice Brian Cummings KC) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும், 4 வெட்டுக் காயங்களும் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” மதியபரணம் அங்கு சென்றதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். 💢" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஒரு குடும்ப நிகழ்வுக்குத் தன்னை அழைக்காததால் ஏற்பட்ட கடும் கோபமே இந்த கொலைக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. தாக்குதலுக்கு முன்பே மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டவர் என்பதும், தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தடையை அவர் மீறியிருந்ததும் விசாரணையில் உறுதியானது. 💔" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்தத் தாக்குதலின் போது 18 வயதான மூத்த மகள் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தையே உலுக்கியது: “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” ⚖️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிமலராஜா மதியபரணத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் விடுதலைக்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். #UnitedKingdom #Liverpool #CrimeNews #JusticeForNilani #TamilNews #UKCourt #DomesticViolence #BreakingNews #LiverpoolCrime #SrilankanTamilNews https://globaltamilnews.net/2026/226663/
  20. நான் படம் பார்ப்பது மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் முற்காலத்தில் பெரிய அளவில் நடைபெற்றது அதன் பின்பு அண்ணா தலைமையில் திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தது என்பதை பலர் சொல்லவும் வாசிப்பு மூலமும் அறிந்ததால் பராசக்தி படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து. தியோட்டரில் பார்த்தேன் தோற்கடிக்கபட்ட காங்கிரஸ் மீண்டு எழ முடியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கின்றனர் 👍
  21. யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! written by admin January 16, 2026 யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் மாண்புமிகு ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/226630/
  22. பெண் நிர்வாணபடத்தை ஆண் பகிர்ந்தாலோ, அல்லது ஆண் நிர்வாணபடத்தை பெண் பகிர்ந்தாலோ பெயர் அடிவாங்க போவது பெண்ணோடதுதான். ஒன்று இவவின் அந்த படத்தைதான் அவன் வாட்சப்பில் போட்டவனாம் என்று பேசும், அல்லது இவவுக்குத்தான் அந்த படத்தை அவன் அனுப்பினவனாம் என்று பேசும். கத்திமீது அப்பிள் விழுந்தாலும் அப்பிள்மீது கத்தி விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான் என்ற நிலையில் இன்றுவரை இருக்கிறது யாழ் மண்ணின் பெண் உரிமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.