Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி ஆரம்பம் Jan 11, 2026 - 06:20 PM டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியில் இருந்து, இந்த முதற்கட்டப் புனரமைப்புப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு ரயில் மார்க்கம் மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை என மூன்று கட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk9qetq303s6o29n4jq9gfrd
  3. கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்! Published By: Digital Desk 1 12 Jan, 2026 | 11:06 AM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235812
  4. சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார். 13 நிமிடங்களுக்கு முன்னர் "விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது." ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது. இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வதோதரா ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். வதோதரா ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி 25 ரன்களைக் கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், சச்சினை விஞ்சி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்களையும், சங்ககாரா 666 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டனர். ஆனால், விராட் கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களில் 28 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த கோலி, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசினார். மூன்றாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'தொடர் நாயகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 54வது சதத்தை அடிக்கத் தவறவிட்டார், அவர் 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பான சாதனையைப் படைத்த விராட் கோலி, இது குறித்து கூறுகையில், "எனது ஒட்டுமொத்தப் பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது ஒரு கனவு நனவானது போல உள்ளது. எனது திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். இருப்பினும், இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், நான் தற்போது எந்த சாதனைகளைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது," என்று தெரிவித்தார். கில் மற்றும் ஸ்ரேயாஸ் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரைத் தவறவிட்ட பிறகு, கேப்டன் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றிகரமாகத் திரும்பினார். 301 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 29 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அதன் பிறகு, கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 107 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த பிறகு சுப்மன் கில்லால் தனது இன்னிங்ஸை நீண்ட நேரம் தொடர முடியவில்லை, அவர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லைத் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார். அணியின் துணை கேப்டனான ஐயர் 49 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது. கோலி ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 234 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வெறும் எட்டு ரன்கள் இடைவெளியில் இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "விராட் கோலி இப்போது பேட்டிங் செய்யும் விதம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் விராட் கோலி அதை மிக எளிதாக மாற்றிக்காட்டினார்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05kk0gwdwo
  5. Today
  6. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆசனங்கள் வன்னி மாவட்டம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைபையும் கைப்பற்றியுள்ளனர். தற்போது கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. நாடும் அநுரவோடு ஊர் எங்களோடு என்று தேர்தல் காலங்களில் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஊரும் அநுரவோடு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. Tamilwinமுல்லைத்தீவையும் விட்டு வைக்காமல் தமிழர் பகுதிக்குள் ஆழமா...ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி ம...
  7. அமெரிக்க கப்பல் வருகிறது என்ற கருத்து 2009 மாசி மாதம் நான் அறிந்தது. அப்போது நான் இரணப்பாலையில் இருந்தேன். அதன் திட்டம் என்னவென்றால், தலைவரையும் கட்டளையாளர்களையும் ஒரு கப்பலில் ஏற்றிச்செல்வது என்றும் போராளிகளையும் இன்ன பிற முக்கியமானவர்களையும் திருமலையில் அமெரிக்க பாதுகாப்பில் வைப்பது என்றும் அதன் மூலம் ஏதோ செய்வது என்றும் தான் தகவல் பரவியது. அதனால், கடலுக்குள் அமெரிக்க கப்பல்கள் வந்தால் என்னவிலை கொடுத்தும் அவற்றை எதிர்கொள்ள கடற்புலிகளை தயாராகுமாறு தலைமையிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.. எனினும் அவ்வாறு அமெரிக்க கப்பல்கள் ஏதும் இறுதிவரை வரவில்லை!
  8. அமெரிக்க ராணுவம் ஈரானில் இறங்க தயாராகிறது. பூட்டினுக்கு இன்னொரு விருந்தாளி கிடைக்கப் போகிறார்.
  9. ஓரினச் சேர்க்கை முற்போக்கான சிந்தனை என்று இடது கையால சாகப்பிடுகின்றவர்களோ அல்லது வலது கையால் சாப்பிடுகின்றவர்களோ அப்படி ஒருபோதும் வாதிடவும் இல்லை அப்படி சொல்லவும் இல்லை . பத்திரிகையாளர்- அ.நிக்ஸன் அடிச்சுவிடுகிறார். சிவன் ஆண் கடவுளுக்கும் விஷ்ணு ஆண் கடவுளுக்கும் பிறந்த ஐயப்பன் கடவுள் காலத்தில் இருந்தே உலகில் இருந்து வருகின்ற உண்மையை தான்... அப்படியானவர்கள் மனிதர்களிடமும் இருக்கின்றார்கள் சக மனிதனாக அவர்கள் உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும் என்றே சொல்கின்றார்கள்
  10. Yesterday
  11. இவ்வளவு காலமும் இனவாத சிங்களத்திற்கு சார்பாக இயங்கிய மனிதனின் இன்னொரு முகமூடி உடைக்கப்பட்ட தருணம்.
  12. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை சோனியா உயிருடன் இருந்தும் பிரயோசனமில்லை.இறந்தும் பிரயோசனமில்லை. சோனியாவை திட்டியும் பிரயோசனமில்லை...திட்டாமல் விட்டாலும் பிரயோசனமில்லை. ஈழத்தில் சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ இனக்கலவரங்கள்,இன அழிப்புகளை கடந்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த அடிப்படையில்..... பாதிக்கப்பட்டவன் திட்டுவதும் பாதிக்கப்படாதவன் நியாயம் பேசுவதும் உலக வழக்கம்.
  13. *வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும் *ஆங்கில பாடநூல் தவறுக்காக பிரதமர் ஹரிணிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய திணிப்பு மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு பாடநூல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே! *இடதுசாரி நாடுகளில் புலிகளை அமெரிக்க கைக் கூலி என்று பொய்ப் பிரச்சாரம் செய்த தயான் ஜயதிலக. *சுயநிர்ணய உரிமையை மறுத்து ”ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்” என்று மட்டுப்படுத்தும் இடதுசாரிகள்... -- --- ----- வகுப்பு ஆறுக்குரிய கல்விச் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட சில தவறுகளுக்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோசம் எழுப்புகின்றனர். ஆக, இது பலவீனமாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நாடகம் என்பது கண்கூடு. அதாவது, மாணவர்களின் எதிர்கால நலன் நோக்கில், இந்த எதிர்க்கட்சிகள் செயற்படவில்லை. மாறாக அடுத்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் கொண்டவை என்பது பகிரங்கமானது. ஆனால், கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரிகள், சில கம்யூனிசிட்டுகள் ஹரிணிக்கு ஆதரவாக பேசுவது தான் இங்கே வேடிக்கை. குறிப்பிட்ட சில தமிழ் இடதுசாரிகளும் இதில் அடங்குகின்றனர். குறிப்பாக, ஆங்கில பாடநூலில் அச்சிடப்பட்டுள்ள, இயற்கைக்கு மாறான LGBTO எனப்படு்ம் ஓரினச் சேர்க்கை முறையை முற்போக்கான சிந்தனை என்றும் சில இடதுசாரிகள் வாதிடுகின்றன. அத்துடன், வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தமைக்கு எதிராகவும் இந்த இடதுசாரிகள் சில தமிழ் இடதுசாரி இயக்கங்களுடன் சேரந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனால், இந்த குறிப்பிட்ட இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் வாதிகள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனர்? குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சில சம்பவங்கள் பின்வருமாறு- (1) தமிழ்மொழி, சைவ சமயம் ஆகிய இரண்டு பாடநூல்களையும் தவிர, ஏனைய அனைத்துப் பாடநூல்களும் சிங்கள மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் சிங்கள மொழிச் சொல்லாதிக்கங்கள் பாடநூலில் காணப்படுகின்றன. பாடநூல் தயாரிப்பு பற்றிய சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு பாடநூல்கள் மொழியெர்க்க முடியாது என வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் பல கூட்டங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார். (2) வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல். அதுவும் தையிட்டடி விகாரை தொடர்பாக பல எதிர்ப்பு போராட்டங்கள் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (3) 2019 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூலில் முற்று முழுதாக பௌத்த சமய வரலாறுகளும் யாழ்ப்பாண இராஜ்ஜியம் உள்ளிட்ட தமிழ் மன்னர் வரலாறுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. (4) 1978 ஆம் ஆண்டில் இருந்து அதாது ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களும் புதிய மகாவம்சமாக தொகுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழர்கள் இலங்கையில் வந்தேறு குடிகள் என்றும், பௌத்த சமயம் பற்றிய திரிபுபடுத்தல்களும், வடக்கு கிழக்கு பௌத்த பிரதேசம் எனவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. (5) தற்போது நடைமுறையில் உள்ள வரலாற்று பாடநூலுக்குரிய ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கை நூலில், 1978 இல் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப் பகுதி, அதாவது போர் நடைபெற்ற கால சம்பவங்கள் மகாவம்சம் என மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது. (6) தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், சீனா, கொரியா போன்ற நாடுகளின் கப்பல்களை புலிகள் கடலில் மூழ்கடித்ததால் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்றும் கற்பனையில் பொய்யான வரலாறுகள் புதிய மகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ளன. ((7) கொழும்பை மையப்படுத்திய அரச தொல்லியல் திணைக்கள பிரதான இணையத் தளத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆவணச் சின்னங்கள் இல்லை. அத்துடன் இலங்கைத்தீவு பற்றிய சிங்கள மயப்பட்ட வரலாறுகள் அத்தனையும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மாத்திரமே உண்டு. இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வருகிற அநீதிகள் பற்றிய பல ஆதாரங்கள் உண்டு. ஆனால், இவை பற்றியெல்லாம் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் - சிங்கள இடதுசாரிகள் பேசுவதில்லை. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வீரர்களாக தங்களை காண்பிப்பர். சிங்களவர்கள், ஈழத்தமிழர், முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கத்தால் இழைக்கப்பட்டு வரும் அநீதி என்ற பொதுச் சொல்லாடலில், இந்த இடதுசாரிகள், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை மழுங்கடித்து வருகின்றனர். ஆனால் சிங்கள இடதுசாரிகள், இடதுசாரி சோசலிச கொள்கையுடைய தென் அமெரிக்க, நாடுகளுக்குச் சென்று, இலங்கைத்தீவு ஒரு சோசலிச நாடு என்றும், விடுதலைப் புலிகள் அமெரிக்க சிஐஏயின் கைக் கூலிகள் எனவும் பிரச்சாரம் செய்து, அந்த அரசுகளை இலங்கைக்குச் சாதகமாக மடைமாற்றியிருந்தன. வெனிசுலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் (Hugo Chávez) விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு, இடதுசாரித் தன்மை கொண்ட, இலங்கை இராஜதந்திரியான தயான் ஜயதிலக பிரதான காரணமாவார். அமெரிக்க இடதுசாரியான வழக்கறிஞர் ஈவா கொலிங்கர் (Eva Golinger) விடுதலைப் புலிகளை அமெரிக்க கைக் சூலி என்று விமர்சனம் செய்து வெனிசுலா, கியூபா போன்ற நாடுகளை புலிகளின் அரசியல் விடுதலை போராட்டத்திற்கு எதிராக திசை திருப்பினார். அதற்கு தயான் ஜயதிலக கியூபாவில் இலங்கைக்கான தூதுவராக இருந்த தமரா குணரெட்னம் ஆகியோர் காரணமாக இருந்தனர். ஆனால், 1997 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருந்தது. செய்திருந்தது. ஆனால், அமெரிக்கா தனது லாப நோக்கில் புலிகளை தடை செய்தது என்ற பிரச்சாரங்களை இவர்கள் முன்னெடுத்து, தென் அமெரிக்க இடதுசாரி கொள்கை கொண்ட நாடுகளை புலிகளுக்கு எதிராகத் திருப்பினர். வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் 2013 ஆம் ஆண்டு மே மாதம், 58 வயதில் உயிரிழந்ததும், நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஆனால் ஹகோ சாவேஸ், தமிழர்களுக்கு எதிராக கையாண்டு வந்த அதே உத்தியை தான், மதுரோவும் கையாண்டார். இப் பின்புலம் தெரியாத காரண காரியத்தாலேயே, ஈழத்தமிழர்கள் பலர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு எதிரான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்றனர். ஆகவே, தயான் ஜயதிலக போன்ற இராஜதந்திரிகள் இடதுசாரித் தன்மை கொண்ட நாடுகளில் இலங்கையை, சோசலிச நாடாகவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ கொள்கை மற்றும் கலப்புமுறை பொருளாதார தன்மை கொண்ட நாடு என்ற முறையிலும் கற்பிதம் செய்து புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் இப் பிராச்சாரம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தமிழ் இடதுசாரிகளுக்கும் நன்கு புரியும். தங்களை தூய இடதுசாரிகளாக காண்பித்துக் கொண்டும், ”அநீதி”, ”ஒடுக்குமுறை” ஆகியவற்க்கு மாத்திரம் எதிரான போராட்டகளை நடத்தி, அதன் ஊடாக சிங்கள இடதுசாரிகள் எவ்வளவு நுட்பமாகத் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் தரத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதையும், தமிழ் இடதுசாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் யதார்த்த அரசியல் பற்றி பேசுவோம் என்று வாதிடும் தமிழர்கள் மூடி மறைக்கின்றனர். இந்த இடதுசாரிகளின் நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகள் பற்றி தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை, முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் பல உயிர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாத்தது. ஆனால் கவலை வெளியிட்டது. அத்துடன் ஏதோ ஒரு மனட்சாட்சியின் பிரகாரம், ஐநா பாதுகாப்புச் சபையை கூட்ட முற்பட்டபோது, அமெரிக்க - இந்திய அரசுகள் அதனைத் தடுத்தன. இது பற்றியெல்லாம் கண்டித்து, கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. (அமரர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் செந்திவேல் ஆகியோரை மையப்படுத்திய இடதுசாரிகள் பலமாகக் கண்டித்தார்கள். சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்) அதேவேளை, 2009 இல் போர் முடிவடைந்து, 2010 இல் ஐநா நியமித்த நிபுணர்குழு, முள்ளிவாய்காலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐநாவும் சர்வதேசமும் தடுக்கத் தவறியதாக அறிக்கையில், சுட்டிக்காட்டியிருந்தது. அதேபோன்று, காசாவில் இஸ்ரேல் படுகொலைகளை செய்தபோதும், ஐநா அமைதிகாத்தது. நிவாரண உதவிகளை மாத்திரம் அனுப்பியது. கவலை வெளியிட்டது. ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலை ஐநா பலமாக கண்டித்திருந்தது. இப் பின்னணியில் தான்-- வெனின்சுலா நாட்டின் ஜனாதிபதியை அமெரிக்கா , சர்வதசச் சட்டங்கள் - நியமங்களுக்கு மாறாக கைது செய்து, தமது நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியமை, ஏனைய சிறிய நாடுகளுக்குப் பாரிய அச்சுறுததல் என்று உரக்கக் கூற வேண்டும். அத்துடன், இது அரசு அற்ற ஏனைய தேசிய இனங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒடுக்குமுறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இலங்கை - இஸ்ரேல் போன்ற அரசுகள், தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசிய இனங்களை மேலும் ஒடுக்கவும், ’ஐநா விதிகள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை மீறி, தமது அரசு என்ற கட்டமைக்குள் அந்த தேசிய இனங்களை மேலும் அடக்கி ஆளவும் அமெரிக்கச் செயற்பாடு வழிவகுத்துள்ளது. உதாரணமாக -- 2012 ஆம் ஆண்டில் இருந்து, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. 2024 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவுகளையும் இஸ்ரேல் அரசு அமல்படுத்த விரும்பவில்லை. மாறாக காசா மீது தொடர்ந்து இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்துகிறது. ஆகவே, இலங்கை - இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மேலும் ஒரு துணிச்சலை அமெரிக்கச் செயற்பாடு கொடுத்துள்ளது. ஆகவே, இடதுசாரிகள் காசா, வெனிசுலா போன்ற வெளிநாடுகளில் நடக்கும் இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது போன்று. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை 1920 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வரும் அநீதிகளுக்கு எதிராகவும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் குரல் எழுப்ப வேண்டும். அதற்கு தமிழ் இடதுசாரிகள்- கம்யூனிஸ்ட்வாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0S9YX23yRiTie8nJocaEhSyuDPbvraEZb4Nh6QHvVdEre9f92aowoeot6QXtDQ2iAl&id=1457391262
  14. இதுமட்டும் இல்லை என நினைக்கிறேன். கொழும்பு-பொல்கஹாவல-பதுளை மார்கம் மெயின் லைன் எனப்படும். பொல்கஹாவல-காங்கேசந்துறை நோர்தெர்ன் லைன். மதவாச்சி-தலைமன்னார் - மன்னார் லைன். இரெண்டு லைனும் திருத்த வேலை நடக்குது ணெந் நினைக்கிறேன். புயலுக்கு முன் தினமும் 4(5? ) ரெயின் ஓடிய நிலையில் இப்போ 2 தான் ஓடுது?
  15. அமேரிக்கா வெனிசுவேலாவை முழுதாக அனுபவிக்க நினைக்கின்றது சுமந்திரன் தமிழரசுக் கட்சியை முழுதாக அனுபவிக்க நினைக்கின்றார் இடையில் மதுரோவும் ஸ்ரீதரனும் சிக்கிக் கொண்டார்கள் இந்த நான்கு பிரிவிலும் யார் சிறந்த கொள்ளைக்காரன் என்பது தான் இன்றைய போட்டி மக்கள் நிலை படு மோசம்
  16. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் முக்கி அங்கம் வகித்திருந்த தமிழரசுக்கட்சி 2009 போர் முடிந்து இரத்தம் காயுமுன்னர். அந்தப் போரினை நடத்திய பிரதான இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோரியிருந்தது. இந்த முடிவுகளை சம்பந்தரும் சுமத்திரனுமே எடுத்திருந்தனர். இதனை விமர்சித அனந்தி,ரவிகரன் போன்றவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினர். பின்னர் ரணிலின் அரசாங்கத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கினார்கள்.வரவுவெசவுதிட்டம்,ரணில்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தார்கள்.இதற்கெல்லாம் யார்நடவடிக்கை எடுப்பது. கட்சியைக் கோரட்டிலே கொண்டுபோய் நிறுத்தி தலைவர் செயலாளர் இல்லாமல்கட்சியை தன்பிடியில்வைத்துக்கொண்டு சுமத்திரன் செய்யும் நாட்டாண்மை தமிழ்மக்களால் சீரணிக்க முடியாததது. பல கட்சி உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளில் பயணிக்கிறார்கள்.கட்சித்தலைவர் மாவை க்கு அறிவிக்காமல் கடந்த முறை கலையரசனைத் தன்னிச்சையாக தேசியப்பட்டியல் எம்பி ஆக்கியது. கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயல்தானே.அதற்கு கட்சி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வில்லை. இனி சிறிதரன் விடயத்திற்கு வருவோம். சிறிதரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அதனை மக்கள் பார்த்துக்கொள்ளட்டும்.மக்களே அவரைத் தெரிவு செய்துள்ளார்கள். அவர்களே தணடைனையைக் கொடுக்கட்டும்.பதவி இல்லாத காரணத்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தச் சொல்லிக் கேட்கிறார். இதனை அவர் ரணில் அரசுக்கு நிபந்தனை இன்றி ஆதரவு வழங்கிய போதே கேட்டிருக்கலாம்.
  17. தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வாறான கெடுபிடிகள் ஏற்படுத்துவது சுமந்திரனின் வழக்கம். அகம்பாவம் கொண்ட சுமந்திரன் ஒரு தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சி, கூட்டுக்கட்சிகளை விட்டு தனியாக போட்டியிடுமென்று தன்னிச்சையாக அறிவித்தார், அடுத்து ரவிராஜின் மனைவியை ஓரங்கட்ட கிளம்பி ஒரு கோமாளியையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க வழியமைத்தார், இப்போ சிறிதரனில் பலகட்சிகள் பயத்தில் இருக்கின்றன. சிறிதரனை, சிறி நேசனை கட்சியிலிருந்து விலக்கிவிட்டால் அந்த வாக்குகள் தமக்குச்சேரும் என கனவு கண்டு, மக்கள் வேறொரு கட்சியை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறார்கள். இவரது கடைசி முயற்சி இது மட்டுமல்ல பொறாமையும் பயமும் கூட. தமக்கு பதவி வேண்டுமென்றால் இல்லாத பதவிகளையும் ஏற்படுத்தி அனுபவிப்பார்கள், மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் இல்லாத குற்றச்சாட்டுக்களும் சேறடிப்புகளும் செய்வார்கள். அங்காலை ஒருவர் ஜனாதிபதி கனவில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறிபிடித்து ஆடுகிறார், இங்காலை இவர் முதலமைச்சர் கனவில். பதவி கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்த இவர், பதவியை குறிவைத்து மற்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுகிறார் என்பதே உண்மை. சிறிதரனைதெரிந்தெடுக்கும் மக்கள், அவர் எந்தக்கட்சியில் தேர்தலில் நின்றாலும் தெரிந்தெடுப்பார்கள். இவர்கள் நினைப்பதுபோன்று தமிழரசுக்கட்சி என்பதாலேயே மக்கள் அவரை தெரிந்தெடுப்பது என்பது பொய் என்பதை, சாவகச்சேரியில் மக்கள் நிரூபித்து விட்டார்கள். கட்சியை இல்லாமற்செய்வதே இப்படியான கறையான்கள்தான். மக்கள் தங்களுக்கு சேவை செய்பவர்களைத்தான் தேர்தெடுப்பார்கள், சும்மா இருப்பவர்களையல்ல. நமது கட்சியைத்தான் மக்கள் தெரிந்தெடுப்பார்கள் என கட்சியின் பெயரை குத்தகைக்கு எடுத்துவிட்டு சும்மா இருந்துவிட்டு வாக்குசேகரித்த காலம் மலையேறி பல கட்சிகளை உள் இழுத்து விட்டிருக்கிறார்கள். பின் மக்களை குறை கூறுவது. தாமும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.
  18. சோனியா காந்தி அம்மையார் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கு கூறும் இடத்தில் உள்ளவர் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து செய்த இனப்படுகொலைக்குச் சாட்சியும் அவரே. அவர் விரவிவில் குணமடைந்து வெளி வந்து ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு மன்னிப்பினைக் கோர வேண்டும் என்று இறைவனைக் கேட்டுக் கொள்கின்றேன்
  19. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 87 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 87 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 22 இன் 33 முதல் 40 வரையிலான கீழே பதியப்பட்ட வசனங்களை ஒருக்கா பார்க்கவும்: " என்ன மகிழ்ச்சி இருக்கிறது ? எங்களுக்கோ குழந்தை கிடையாது. எனவே எங்கள் சந்தோஷம் சாரமில்லாதது" என்றாள் விகார தேவி. அசாதாரண சக்திகள் ஆறும் படைத்த தேரர், தமது ஞான திருஷ்டியில் அவளுக்குக் குழந்தை உண்டாகும் என்பதைக் கண்டார். ராணி என அழைத்து, நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைச் சென்று பார் என்றார். அவள் அவ்வாறே அங்கே சென்றாள். மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருந்த அவரிடம் ராணி சொன்னாள்: " என்னுடைய மகனுகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வீராக. அது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளிக்கும்." என்றாள். துறவி அவ்வாறு சொல்லாமல் இருப்பதைக் கண்ட அவள், இதற்காக ஏராளமான மலர்களைக் காணிக்கையாகச் செலுத்தி மீண்டும் வேண்டினாள். இப்போதும் அவர் விருப்பமில்லாமல் இருக்கவே, சரியான வழியை அறிந்த அவள் அவருடைய சார்பில் பிக்குகள் சங்கத்துக்கு மருந்துகளையும், உடைகளையும் வழங்கிவிட்டு மீண்டும் வேண்டினாள். பிறகு தான், அவர் அரச குடும்பத்தில் மறு பிறவி எடுக்க விரும்புவதாகக் கூறினார். பிறகு மனமகிழ்வுடன் அவள் விடை பெற்றுக் கொண்டு தேரில் ஏறிச் சென்று விட்டாள். அதன் பிறகு துறவி இறந்து விட்டார். ராணி சென்று கொண்டிருக்கும் போதே அவளுடைய கருவில் புதிய பிறவியெடுத்தார். இதை அவள் கண்டதும் நின்றாள். அரசனுக்கு இச்செய்தியை அனுப்பி விட்டு, அவனுடன் திரும்பி வந்தாள். இந்தக் குழந்தை தான் துட்டகாமினி. அதனால், அவர் விகாரதேவியின் கணவரான காகவண்ண தீசனின் உயிரியல் மகன் அல்ல. எனவே, அரியணைக்கு வாரிசும் அல்ல. துட்டகாமினி சமீபத்தில் இறந்த தேரரின் ஒரு அவதாரம் மட்டுமே. இது, சட்ட பூர்வ தந்தைக்கு பிறக்காத, முறைகேடான மகனாக துட்டகாமினி இங்கு காணப்படுகிறார். எனவே துட்டகாமினி ஒரு [அரச உரிமையை] அபகரிப்பாளர் என்ற நிலைக்கு வருகிறார். அதாவது அரியணைக்கு சட்டப்பூர்வ இளவரசர் அல்ல. அவர் பன்னிரண்டு வயதாக இருந்த போதே, தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக தமிழர்களுடன் சண்டையிட எண்ணினார். இது அவருக்கு துட்ட (கெட்ட) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது என்பது வரலாறு. பன்னிரண்டு வயது சிறுவன் எப்படி அந்த முடிவுக்கு வந்திருக்க முடியும்? இரத்தக் கறை படிந்த வாளிலிருந்து இரத்தக் கறை படிந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற வக்கிரமான ஆசை கொண்ட அவரது தாயார்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். துட்டகாமினி பத்து "அதிமானுட போர்வீரர்களை" [super human warriors] நியமித்தார். அவர்களில் முதலாவதானவன், நந்தி மித்ரன் [Nandhimithra, also known as Nandhimitta], மன்னன் எல்லாளனின் தளபதியான மித்ரனின் [Mitta] மருமகன் ஆகும். அவனுக்கு பத்து யானைகளின் பலம் இருந்தது. அப்படியே, மனித வலிமை கொண்ட மற்ற ஒன்பது பேரும் உள்ளனர். இந்த கற்பனைக் கதைகளுக்குள் மேலும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவை நிதானமான வரலாற்று கதைகள் அல்ல. பத்து யானைகளின் பலம் கொண்ட ஒரு மனிதன் என்பது எவராலும் நம்பமுடியாத ஒன்று. அப்படியானவர்களில் பத்து பேர் என்பது முழுக்க முழுக்க அபத்தமான பொய். அதிகாரம் 23 – 8 முதல் 9 வரையிலான பகுதிகள், தூபிகளை அவமதிக்கும் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்றன. பத்து யானைகளுடைய பலம் நந்தி மித்ரனுக்கு இருந்தது. அவன் வளர்ந்ததும் நகரத்திற்குள் சென்று தனது மாமாவுக்கு சேவை செய்தான். அந்த நேரத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை தமிழர் நாசப்படுத்தி வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது. ஆனால், அதிகாரம் 21 - 21 முதல் 26 வரை தெளிவாக எல்லாளனின் ஆட்சியின் நடுநிலையை, மற்றும் தூபிக்கும் வழங்கும் மதிப்பை விரிவாகக் கூறுகிறது. மும்மணிகளிலும் உயர்ந்ததான ஒன்றின் குற்ற மற்ற பெருமையை அறியாத போதிலும், மரபுகளைக் காப்பவனான அரசன், ஒருமுறை புத்த சங்கத்தினரை அழைப்பதற்காக சேதிய பர்வதத்துக்கு [Cetiya-mountain] தேரில் சென்று கொண்டிருந்தான். அப்போது தேரின் நுகத்தடி [yoke / இரு மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டப்படும் மரத்தாலான, நீளமான கட்டை. இதை ஏர் ஓட்டும்போதும், வண்டி இழுக்கும் போதும் மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டுவார்கள்.] ஒரு தூபத்தின் மீது மோதிச் சற்று பெயர்த்து விட்டது. 'தங்களால் தூபம் காயம்பட்டு விட்டது" என்று மந்திரிகள் அரசனிடம் கூறினர். இது அறியாமல் நேர்ந்ததாயினும், அரசன் தேரில் இருந்து குதித்துத் தரையில் படுத்துக்கொண்டு இதன் சக்கரத்தால், என்னுடைய தலையையும் துண்டித்து விடுங்கள்’ என்றார். "மற்றவர்க்குத் தீங்கிழைப்பதை எங்கள் குரு நாதர் அனுமதிப்பது இல்லை. இடிந்த பகுதியைக் கட்டிக் கொடுத்து (பிக்குகளுடன்) சமாதானம் செய்து கொள்ளுங்கள்' என்றனர் அவர்கள். இடிந்துபோன பதினைந்து கற்களைப் புதிதாக அமைப்பதற்காக அரசன் பதினையாயிரம் கஹப்பணம் [kahapanas, கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பண்டைய இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால, துளையிடப்பட்ட செப்பு நாணயம் இதுவாகும்] செலவிட்டான். அதன் மதிப்பு சுமார் அரை கிரீடம் ஆகும். அதாவது, மன்னன் எல்லாளன் ஒரு நாள் தற்செயலாக ஒரு தூபிக்கு சேதம் விளைவித்தாலும், அமைச்சர்கள் இதை மன்னனிடம் சுட்டிக் காட்டியபோது, அவர் தன்னைத் தரையில் கிடத்தி, தனது தலையைத் துண்டிக்கச் சொன்னார் என 21 ஆம் அத்தியாயம் எல்லாளனை விவரிக்கிறது. இவ்வாறு சிறந்த இயல்புகளைக் கொண்ட ஒரு மன்னன், தமிழர்களை தூபி மற்றும் பிற புனித கட்டமைப்புகளை சேதப்படுத்த அனுமதிப்பாரா? எல்லாளனின் உன்னத கதாபாத்திரங்களின் கதை அந்தக் கால மக்களிடையே ஒரு புராணக்கதையாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் மகாநாமா 21 ஆம் அத்தியாயத்தை மறந்துவிட்டு, தமிழருக்கு எதிராக இந்த வசைபாடலைக் பாடுகிறார் அல்லது ஒரு வெறித்தனமான யாரோ ஒரு தேரர், 100 - 150 பின்னர் நகலெடுக்கும் பொழுது அதைச் செருகி இருக்கலாம்? இதன் விளைவுகளை தீவின் மூலை முடுக்கிலும் அல்லது எங்கும் உள்ள தமிழர்கள் இன்னும் உணர்கிறார்கள். பத்து யானைகளை விட அதிக பலம் கொண்ட மனிதர்கள் என்பது தேரர் மகாநாமாவின் பெரும் கற்பனைகள். எனவே, அவர்கள் எந்த விமர்சனத்திற்கும் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை! Part: 87 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Verses 33 to 40 of chapter 22: Viharadevi said; what is our happiness here, since we have no children? Lo, our happiness is therefore barren. The Thera, who, being gifted with six (super normal) powers, foresaw that she would have, said: ‘Seek out the sick samanera, O queen’. She went thence said to the samanera, who was near unto death: ‘Utter the wish to become my son; for that would be great happiness to us’. And when she perceived that he would not the keen witted woman commanded, to this end, great and beautiful offerings of flowers, and renewed her pleading. When he was yet unwilling, she, knowing the right means, gave to the brotherhood for his sake all manner of medicines and garments and again pleaded with him. Then he did desire (rebirth for himself in) king’s family, and she caused the place to be richly adorned, and taking her leave she mounted the car and went her way. Hereupon the samanera passed away, and he returned to a new life in the womb of the queen while she was yet upon her journey, 22 - 39. This child was Duttha Gamani. He was not the biological son of Kakkavannatissa, the husband of Viharadevi and not the heir to the throne. Duttha Gamni is only an incarnation of the Thera who has just died. This is the legitimacy to the throne of the illegitimate son, Duttha Gamni. Duttha Gamni is therefore a usurper, and not a legitimate prince to the throne. Even when he was twelve years old, he intended to fight Damilas against the will of his father. This earned him the epithet Duttha (bad).How could a twelve-year boy have come to that decision. His mother who had the perverted desire to drink the blood stained water from the blooded sword must have had been the cause. Duttha Gamni recruited ten super human warriors. First, one of them, Nandhimitta, is the nephew of Mitta, a general of the king Elara. He had the strength of ten elephants. There are other nine persons of super human strength. No need to go further into these fantasy tales as they would not make sober history. A man having the strength of ten elephants is untrustworthy and ten of them are ridiculous lies. Nandhamitta’s story is in conflict with the chapter 21. 23 – 8 to 9 speaks of Damilas desecrating the Thupas. Refer to 21 - 15 to 26. The King at that time was Elara, and he, one day accidentally caused damage to a Thupa. When the ministers pointed this to the king, he flung himself to the ground and asked his own head to be severed. This is how Elara is described in the chapter 21. Would a king of these excellent characters allow Damila’s to do damage to Thupas and other sacred structures? The story of Elara’s noble characters must have been a legend among the people of that time. Mahanama forgot the chapter 21 and invented this diatribe against the Damilas or a fanatical copyist inserted it later. The repercussions of this are still being felt by the Tamils nook and corner of the island. Men with strengths greater than ten elephants are the nefarious imaginations of the Thera Mahanama, and do not merit any criticism. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 88 தொடரும் / Will follow துளி/DROP: 1987 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 87] https://www.facebook.com/groups/978753388866632/posts/33238732342441985/?
  20. சிங்கள மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேரர் சொல்லாமல் விட்ட சொல் ''சிங்கள'' ஏனென்றால் அவரது சிங்கள விசுவாசமும் சுவாசமும் ஒன்று. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. நான் அறிந்தவரையில் இவரது எடுபிடிகளும் கோடீஸ்வரர்களாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..யாழ் கச்சேரிக்கு ஏதாவது அலுவல் செய்யப் போனால் அங்கு லட்சக்கணக்கில் கேட்கிறார்களாகம்.அதுவும் பெண்கள்.ஆகவே சிறிதரன் மற்றும் இன்னும் சிலரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதே சிறந்தது.
  22. வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 03:26 PM வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுவேலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுவேலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் வீதிகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும். வெனிசுவேலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில், வெனிசுவேலாவில் அமெரிக்கர்களை சிறை பிடித்தல், சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்தல், பயங்கரவாதம், கடத்தல், உள்ளூர் சட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்துதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்பட அமெரிக்கர்களுக்கு கடுமையான ஆபத்துகள் உள்ளன. அதனால், வெனிசுவேலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று உச்சபட்ச அளவிலான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. எனினும், வெனிசுலா வெளியுறவு மந்திரி யுவான் கில், வெனிசுலா முழு அளவில் அமைதியாகவும் மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/235758
  23. சிறீதரன் சாதாரண ஆளாய் வந்து இப்போது கோடீஸ்வரர் ஆகீட்டாராம். சாதாரண ஆளாய் உள்ள இன்னொரு புதியவருக்கு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை வழங்குவது வரவேற்கத்தக்கது தானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.