24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
2. கடன்கார கடவுள்கள் ------------------------------------ பணம் கொட்டும் தெய்வம் என்றால் திருப்பதியே உடனேயே நினைவில் வரும். அங்கு நாங்கள் தலைமுடியையும் கொடுத்து, காணிக்கையாக திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமாக அள்ளியும் கொடுக்கின்றோம். மனிதர்கள் தான் கடவுளுக்கு கொடுக்கின்றார்கள், அதை வேறு மனிதர்களே எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இந்தியாவில் மொழிவாரியான மாநிலங்கள் உருவாகும் போது, சென்னையை தமிழ்நாடும், திருப்பதியை ஆந்திராவும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லுகின்றார்கள். சரியான முடிவை தமிழர்கள் அன்று எடுத்திருக்கின்றார்கள். சினிமா மோகம் அவ்வளவாக தமிழர்களை அன்று ஆட்டிப் படைக்கவில்லை போல. ஒரு காலத்தில் கொழும்பில் இருந்த மயூராபதி அம்மன் கோவிலில் வேண்டப்பட்ட ஒருவரே பொறுப்பில் இருந்தார். அங்கு அப்பொழுது போயிருக்கின்றேன். அவரே மிகவும் வசதியானவர். அந்தக் கோவிலும் வசதியாகவே இருந்தது. இந்தியர்களும், ஈழத் தமிழர்களும் பெருமளவில் புலம் பெயர்ந்ததால் உலகெங்கும் கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல செல்வாக்காக இருந்தன அல்லது அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். 'வட அமெரிக்காவில் முதன் முதலாக பஞ்சமுக ஆஞ்சநேயர்...............' என்று கூட ஒரு விளம்பரத்துடன் ஒரு கோவில் இங்கே எனக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தின் பின்னேயே ஆஞ்சநேயருக்கு ஐந்து முகங்கள் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவருக்கு தனியாக கோவில் இருப்பது கூட அப்பொழுது தான் தெரியவந்தது. பின்னர் இலங்கையிலும் ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டேன். மனைவியின் மார்க்கம் பெரும்பாலும் முழுமுதற் கடவுள்களைச் சுற்றியே இருந்தபடியால், இப்படியான பல கோவில்களின் உள்ளே செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் இங்கு கணிசமான அளவில் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கின்றார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாகவே பழகி வருகின்றார்கள். படிப்பு,வசதி, அதனால் அவர்கள் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்து போன்ற காரணங்கள் இங்கு குழுக்கள் உருவாகுகின்றன என்று நினைக்கின்றேன். நாங்கள் இலங்கை தமிழர் ஆரம்பித்த கோவிலுக்கு போகாதது இங்கிருக்கும் பலருக்கு ஒரு விசயமாக இருக்கவில்லை. பலருக்கு என்னைத் தெரிந்திருக்கவே வழியில்லை. ஆனால் நாங்கள் பழகிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அது ஒரு பேசுபொருள் ஆகியது. நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்தால் பொதுவாகவே எங்களிடம் பேசுவதற்கு புதிது புதிதாக விடயங்கள் இருப்பதில்லை. கூட்டத்தில் பலரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழில் பற்றிப் பேசிக் கொள்வார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அந்தக் கதைகள் திரும்ப திரும்ப வரும். இப்படி ஒரு திசையில் மட்டுமே பேச்சுகள் இருக்கும். நடுவில் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து மாட்டுப்பட்டு விட்டால், அடுத்த தடவை அவர் நிச்சயம் வரமாட்டார். எங்கள் ஆட்களின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு. எல்லா விடயங்களிலும் இதே குற்றச்சாட்டு உண்டு. ஆரம்பிக்கப்படும் முயற்சிகளின் அடிப்படை நோக்கத்திலேயே சந்தேகம் வந்தால், எப்படி அவற்றை ஆதரிக்கமுடியும்? முயற்சிகள் மிகவும் பழமையானவையும், தேய்ந்து போனவையாகவும் இருந்தாலும் ஆதரவு என்று மற்றவர்களும் போய் நிற்க முடியாதுதானே. ஒருவர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றார் என்றால், இன்று அதை எப்படி ஆதரிக்கமுடியும். இல்லை, இங்கிருந்து ஆரம்பித்து, மேலே போகலாம் என்று காரணம் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் மீண்டும் மீண்டும் இங்கேயே ஆரம்பித்தால், இங்கேயே நின்று கொள்ளவே சாத்தியங்கள் உள்ளன. அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கின்றன. நாங்கள் அங்கே அதிகமாக போகா விட்டாலும், அந்தக் கோவில் விளம்பரமாகவே நடந்தது. நல்ல நாட்கள், பெரு நாட்கள் என்று கொண்டாடப்பட்டன. சிலரின் வாழ்வில் அது ஒரு அங்கம் ஆகியது என்று தான் சொல்லவேண்டும். கலை வளர்க்கின்றோம், கலாச்சாரத்தை கடத்துகின்றோம் என்றும் நல்ல பக்க விளைவுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். பின்னர் திடீரென ஒரு நாள், அந்தக் கோவில் பெரும் கடனில் மூழ்கியிருக்கின்றது என்றார்கள். திருப்பதி, மயூராபதி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது இலாபம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே என் எண்ணமாக இருந்தது. கடன் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. கடவுளே கடனில் இருப்பார் என்பது நான் நினைத்திருக்காத ஒன்று. அவர் மீது இவர், இவர் மீது அவர் என்று குற்றச்சாட்டுகள் பொதுவெளியிலும் வைக்கப்பட்டது. சிலர் பிரிந்து போய் இன்னொரு கோவிலை ஆரம்பித்தனர். இந்தக் கோவிலும் சில நாட்கள் இயங்கி, இறுதியில் மூடப்பட்டது என்று நினைக்கின்றேன். ஐயர் இங்கிருந்து அங்கு போனார் அல்லது வேறு எங்கோ போனார் என்று ஞாபகம். அங்கே இருந்த கடவுளின் விக்கிரகங்கள் என்ன ஆயின என்று நான் யாரையும் கேட்கவில்லை. இரண்டாவது தடவை மின்னல் தாக்குவது போல இன்னொரு சம்பவம் நடந்தது. ஊரில் உள்ள கோவில் ஒன்றின் திறப்புகளை வங்கி எடுத்துச் சென்று விட்டதாக ஒரு தகவல் சொன்னார்கள். ஒரு மண்டபம் கட்ட வங்கியில் கடன் எடுத்திருந்ததகவும், அதை திருப்பிச் செலுத்தாததால் வங்கி இப்படிச் செய்தது என்றும் சொன்னார்கள். ஊரையே காக்கும் தெய்வம் என்று தான் ஊரில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படியுமா நடக்கும் என்று ஆச்சரியமும், அதைவிட அதிக வருத்தமும் ஏற்பட்டது. சிவனே என்று அவர்களின் பாட்டுக்கு இருக்கின்ற கடவுள்களை மனிதர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல. பின்னர் இன்னும் பல இதே போன்ற கோவில் கதைகள் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா இப்படி உலகெங்கும் இருந்து வந்தன. தமிழ்ப் படங்கள் சில வெற்றிப் படங்களாகவும், பலதும் தோல்விப் படங்களாகவும் ஆவது போல, கோவில்களும் வெற்றி தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், அதே திரைக்கதைகளுடன், அதே உற்சாகத்துடன் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றார்கள், சினிமாக்களையும் கோவில்களையும். பொதுவாகவே மனிதர்களுக்கு மறதி அதிகம் என்பதாலும், எதையும் பின்னிருந்து முன்னாக ஒரு காலக் கோட்டில் இணைத்துப் பார்க்கும் பொறுமை இருப்பதில்லை என்பதாலும், இதுவரையிலும் இல்லாத புது முயற்சிகளாகவே இவை எப்போதும் பார்க்கப்படுகின்றன. (தொடரும்.................)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களின் வசதிப்படி போட்டியை நடாத்துங்கள். நான் நினைக்கிறேன், ஈஸ்டர் 4 நாட்கள் விடுமுறையுடன் சேர்த்து நீங்கள் எங்கேயோ குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்கிறீர்கள் போல 🤔
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
கள்ளு குடிப்பது தமிழர்களது உணவு உரிமை என்று முழக்கமிட்ட சீமானா குடிப்பவர்கள் வாக்கு வேண்டாம் என்று சொன்னார் 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இனி வரும் காலங்களில் அடுப்பு,நெருப்பு இல்லாத சமையல்களே அன்றாட வாழ்க்கைக்கு வரும் போல் இருக்கின்றது. செய்முறை இணைப்பிற்கு நன்றி புரட்சியர்👈👍
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அண்ணன் சொன்னது டாஸ்மார்க் சரக்கு அடிபவர்களுக்கு மட்டுமே. அண்ணன் வெளிநாட்டு றெமி மார்ரின், ஜொனி வோக்கர் அடிப்பவராச்சே. ஆகவே வாக்களிக்கலாம்.
-
டான்பாஸிலிருந்து உக்ரைன் வெளியேறினால் பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் – ஜெலென்ஸ்கி
செலன்ஸ்கியின்ர பில்டப் வேற லெவல் 😜
- Today
-
புதிய பாதுகாப்பு வங்கியில் சேருமாறு ஜி7 நாடுகளை கனடா வலியுறுத்தும் என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் தன் எதிரியாக கருதும் ரஷ்யாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி போர் அனர்த்தங்களை தவிர்க்க வேண்டும்.இதற்குள் மூன்றாம் தரப்பு மூக்கை நுழைக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.முக்கியமாக ஜேர்மனி , போலந்து,இங்கிலாந்து. உக்ரேன் போர் விட்டுக்கொடுப்புகளுடன் முடிவிற்கு வந்தால் உக்ரேனுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் நல்லதே. அத்துடன் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இது பொருளாதார ரீதியாக அனைத்து நாடுகளுக்கும் பெரும் பயனை தரும்.
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
நான் பார்த்த அளவில் நுளம்பெண்ணை அடிக்கக்கூட இந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை.
-
வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்னது......இவ்வளவு தூரம் மினைக்கெட்டு வந்தும் உங்களை சந்திக்கவில்லையா? வன்மையான கண்டனங்கள்.🤣 அமெரிக்காவுடன் சுங்கவரி முறுகல் தொடங்கியதும் முதலில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சென்று பல வர்த்தக ஒப்பத்தங்களை செய்ய தொடங்கிய பயணம் ஆசிய நாடுகள் அரபுநாடுகள் சீனா ஊடாக அவுஸ்ரேலியாவில் விரதம் முடித்திருக்கிறார்கள்😂.இதில் கொடுமை என்னவென்றால் அமெரிக்காவை மீறி எதையும் செய்ய மாட்டார்கள். அமெரிக்கா எந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை போடுகின்றதோ அதை ஐரோப்பிய ஒன்றியமும் சின்ன அண்ணன் பெரீய பிரித்தானியாவும் கடைப்பிடிப்பார்கள்.😄 கண்டது கிண்டது எல்லாத்துக்கும் பொருளாதார போட்டு பழகின கூட்டம் இப்ப மாட்டுப்பட்டு இருப்பது ஈரானிடம். செம காமெடி இல்ல😁
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இல்லை. அவசரத்தில் குத்து போட மறந்து விட்டேன்😂. பிழைதான். #குத்துங்க எசமான் குத்துங்க😂 நேற்றும், இன்றும், நாளையும்… அதை ஐ நா என அழைத்தால் என்ன… நைனா என அழைத்தால் என்ன… இப்படி ஒரு அமைப்புக்கு என்றும் ஒரு அதிகாரமும் இருக்க போவதில்லை.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
Donald J. Trump @realDonaldTrump As per Iranian Government request, please let this statement serve to represent that I am pausing the period of Energy Plant destruction by 10 Days to Monday, April 6, 2026, at 8 P.M., Eastern Time. Talks are ongoing and, despite erroneous statements to the contrary by the Fake News Media, and others, they are going very well. Thank you for your attention to this matter! President DONALD J. TRUMP மேலும் 10 நாள்களுக்கு எரிபொருள் நிலை மீதான (ஈரானின்) தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப், அமெரிக்க சந்தை முடிவில் அறிவித்துள்ளார்.(Short squees?)
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
நீங்களும் கூகிள் மொழி மாற்றி பயன்படுத்துவது போல உள்ளது.🤣 உ . மா . யு என ஏழுதலாமே ?
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இந்தச் சபையின் தலைவர் ஒரு அதிகாரமில்லாத தலைவர். இந்தச் சபையால் ஒரு பிரயோசனமும் இல்லை.எந்தப் போரையும் இவர்களால் நிறுத்த முடியாது.
-
புதிய பாதுகாப்பு வங்கியில் சேருமாறு ஜி7 நாடுகளை கனடா வலியுறுத்தும் என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தவிர்ந்த மேற்கு நாடுகள் உக்கிரேனிய இராணுவ தொழினுட்பத்தில் கொண்டுள்ள நம்பிகையினையும், பல் துருவ உலக ஒழுங்கில் ஐரோப்பிய அமைப்பினுடன் கை கோர்க்கும் நாடுகளின் உக்கிரேன் முதன்மைத்துவம் மையப்படுத்தப்படுகிறது. அண்மையில் அவுஸ்ரேலியாவிற்கு கனடிய பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தலைவரின் வருகையும் அதன் பின்னணியில் தங்குதடையற்ற வர்த்தகம் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
நன்றி சோதரி சுமேரியரே! உங்கள் மகிழ்ச்சி என்னையும் பற்றிக்கொண்டது. உங்கள் தந்தை மதிப்புக்குரிய நாகலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் உங்களைச் சந்தித்த பின்பு இப்போதுதான் தொடர்புக்கான பாதையை எமது யாழ்களம் வகுத்துத் தந்துள்ளது. களத்திற்கு நன்றிசெலுத்தி உங்களது பதிவையும் பார்த்தேன் தமிழ் அப்படியே இளமை மாறாது துள்ளி விளையாடுகிறது. உறவுகளும் வாசகர்களும் மகிழ உங்கள் உடல்நலமும் பாதுகாத்துத் தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.🙌
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவசரத்துக்கு செய்யக்கூடிய சாம்பார் ..........! 😂
-
புதிய பாதுகாப்பு வங்கியில் சேருமாறு ஜி7 நாடுகளை கனடா வலியுறுத்தும் என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாரஸ் ஏவுகணைகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை - ஜெர்மனியின் மெர்ஸ். போர்க்களத்தில் கீவ் அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, உக்ரைனுக்கு நீண்ட தூரம் செல்லக்கூடிய டாரஸ் கிரூஸ் ஏவுகணைகளை வழங்க வேண்டிய அவசியம் இனி இல்லை என ஜெர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கருதுகிறார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு மெர்ஸ் ஜெர்மன் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இதேபோன்ற கோரிக்கைகள் கீவிலிருந்தும் வந்தன, ஆனால் பெர்லின் ஏவுகணைகளை வழங்க மறுத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையில், உக்ரைன் நீண்ட தூர ஆயுதங்களைத் தானே உற்பத்தி செய்வதால், உக்ரைனியப் படைகளுக்கு டாரஸ் ஏவுகணைகளை வழங்குவதில் இப்போது எந்தப் பயனும் இல்லை என்று மெர்ஸ் கூறினார். "ஜெர்மனி வழங்கக்கூடிய ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கையிலான டாரஸ் குரூஸ் ஏவுகணைகளை விட உக்ரைனின் நீண்ட தூர ஆயுதங்கள் மிகவும் செயல்திறன் மிக்கவை" என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பு கீவ்விற்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு விடுத்த தனது அழைப்புகளையும் அவர் தெளிவுபடுத்தினார். அந்த நேரத்தில், உக்ரேனியர்களிடம் ஒப்படைக்கக்கூடிய அளவிற்கு, ஜெர்மன் ஆயுதப் படைகளிடம் (புண்டஸ்வேர்) போதுமான செயல்பாட்டு நிலையில் டாரஸ் ஏவுகணைகள் இருப்பதாகத் தான் கருதியதாக மெர்ஸ் கூறினார். https://www.pravda.com.ua/eng/news/2026/03/25/8027157/
-
டான்பாஸிலிருந்து உக்ரைன் வெளியேறினால் பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் – ஜெலென்ஸ்கி
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஜெலென்ஸ்கி கூறினார். டான்பாஸிலிருந்து உக்ரைன் வெளியேற ஒப்புக்கொண்டால் மட்டுமே, பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆவணத்தை இறுதி செய்ய அமெரிக்கத் தரப்பு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். "உக்ரைன் டான்பாஸிலிருந்து வெளியேறத் தயாரானவுடன், இந்த உத்தரவாதங்களை உயர் மட்டத்தில் இறுதி செய்ய அமெரிக்கர்கள் தயாராக உள்ளனர்," என்று கூறிய ஜெலென்ஸ்கி, அத்தகைய நடவடிக்கை உக்ரைன் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்றும் எச்சரித்தார். அமெரிக்கா ஈரானுடனான தனது சொந்த மோதலில் கவனம் செலுத்துவதால், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் டிரம்ப் உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கிறார் என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார் . கிழக்குப் பகுதியிலிருந்து உக்ரேனியப் படைகளைத் திரும்பப் பெறக் கோரும் ரஷ்யா, பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் ஆர்வத்தை இழந்து இறுதியில் விலகிச் சென்றுவிடும் என்று அவர் கூறினார். https://www.pravda.com.ua/eng/news/2026/03/25/8027207/
-
புதிய பாதுகாப்பு வங்கியில் சேருமாறு ஜி7 நாடுகளை கனடா வலியுறுத்தும் என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை அமைச்சர் ஆனந்த் அறிவித்தார். மார்ச் 26 2026 - ஒட்டாவா ஒன்ராறியோ - குளோபல் அஃபயர்ஸ் கனடா ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஓரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ஆனந்த் அவர்கள் சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (இரஷ்யா) ஒழுங்குமுறைகளின் கீழ் கனடா கூடுதல் தடைகளை விதிப்பதாக இன்று அறிவித்தார் . ரஷ்யாவின் பொருளாதாரத் தடை தவிர்ப்பை எதிர்கொள்வதற்கான நமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கனடா இரஷ்யாவின் மறைமுகக் கப்பற்படையைச் சேர்ந்த மேலும் 100 கப்பல்களைத் தனது பொருளாதாரத் தடைப் பட்டியலில் சேர்க்கிறது. உக்ரைனுக்கு எதிரான தனது போருக்கு நிதியளிக்க இரஷ்யா தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயையே சார்ந்துள்ளது. இதற்காக 'நிழல் கப்பற்படை' என்று அழைக்கப்படும் கப்பல்கள் மற்றும் துணை அமைப்புகளின் வலையமைப்பைப் பயன்படுத்திஇ கச்சா எண்ணெய் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களையும் சரக்குகளையும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அது கொண்டு செல்கிறது. இந்த வலையமைப்பில் பெரும்பாலும் எண்ணெய் டேங்கர்களே அடங்கும். இந்தத் தடைகள்இ சாமானிய மக்களுக்குத் தேவையற்ற பாதிப்புகளைத் தவிர்த்து இரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்கும் திறனைக் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. https://www.canada.ca/en/global-affairs/news/2026/03/minister-anand-announces-additional-sanctions-against-russia.html
-
புதிய பாதுகாப்பு வங்கியில் சேருமாறு ஜி7 நாடுகளை கனடா வலியுறுத்தும் என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூலதனத்தைப் பெறுவதில் சிரமப்படும் சிறு மற்றும் நடுத்தர பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அத்தியாவசிய நிதியுதவி வழங்கும் ஒரு முன்னெடுப்பில் இணையுமாறு ஜி7 நாடுகளை வலியுறுத்தி, ஒரு புதிய பாதுகாப்பு வங்கிக்கான தனது திட்டங்களை கனடா முன்வைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ஈரான் மற்றும் உக்ரைனில் நடக்கும் போர்கள், பொருளாதார நிச்சயமற்ற நிலை, மற்றும் கணிக்க முடியாத அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மீதான அதிகரித்து வரும் கலக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில், உலகின் முன்னணி மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மார்ச் 26-27 தேதிகளில் பிரான்சில் சந்திக்கின்றனர். நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பிரதமர் மார்க் கார்னியின் முயற்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு மற்றும் மீள்திறன் வங்கி (DSRB) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்பை ஒட்டாவா சமீபத்திய மாதங்களாக முன்னெடுத்து வருகிறது. இந்த பலதரப்பு நிதி நிறுவனத்திற்கான சாசனத்தை நிறுவுவதற்காக கனடா மாண்ட்ரீலில் கூட்டங்களை நடத்தி வருகிறது. "கிடைக்கக்கூடிய மூலதனம், பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். மேலும், அதிகமான நாடுகள் இதில் இணைய வேண்டும் என கனடா உறுதியாக வலியுறுத்துகிறது. அத்தகைய ஒரு வாதத்தை நான் இங்கு ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முன்வைக்க உள்ளேன்," என்று அந்தக் கூட்டத்தில் ஆனந்த் ராய்ட்டர்ஸிடம் கூறினார். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதியுதவி DSRB-யின் தலைமையகம் அங்கு அமைய வேண்டும் என்று மாண்ட்ரீல் வலியுறுத்தி வருகிறது, ஆனால் அது, நாடுகளை மீண்டும் ஆயுதமயமாக்குவதற்கு அதிக தனியார் நிதியைச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல போட்டி முயற்சிகளில் ஒன்றாகும். முக்கிய ஐரோப்பிய நாடுகள் கனடாவின் முன்முயற்சியை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. டிசம்பரில், ஒரு புதிய பலதரப்பு பாதுகாப்பு வங்கி அமைக்கும் யோசனையை ஜெர்மனி நிராகரித்தது . மேலும் இந்த வாரத் தொடக்கத்தில், பாதுகாப்பு உபகரணங்களுக்காக அதிக தனியார் நிதியைத் திரட்டுவதற்கு, நெதர்லாந்து மற்றும் பின்லாந்துடன் இணைந்து ஒரு தனித் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக பிரிட்டன் அறிவித்தது. ஆயுதங்கள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களுக்கான தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான மூலதனம் தற்போது பல பாதுகாப்பு நிறுவனங்களிடம் இல்லை என்றும், அவை சிறிய அல்லது நடுத்தர நிறுவனங்கள் என்றும் ஆனந்த் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 150 பில்லியன் யூரோ (173 பில்லியன் டாலர்) SAFE கடன் திட்டம் போன்ற பிற முன்னெடுப்புகளில் அது அவசியமாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார். "இந்த வங்கி, குறிப்பாக இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மூலதனத்தைத் திரட்டும் ஒரு அமைப்பாகச் செயல்படப் போகிறது," என்று அவர் கூறினார். புதிய வங்கியின் சாசனம் நிறைவடைந்தவுடன், மூலதனத்தின் அளவு மற்றும் அந்த மூலதனம் விநியோகிக்கப்படும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என ஆனந்த் தெரிவித்தார். "வசந்த காலம் முழுவதும் பேச்சுவார்த்தைகள் தொடரும், எனவே முன்வர விரும்பும் கூடுதல் நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் மாண்ட்ரீலில் எங்களுடன் சேருமாறு அவர்களை நான் ஊக்குவிக்கிறேன்," என்று கூறிய அவர், ஆர்வம் காட்டிய நாடுகளை அடையாளம் காட்ட மறுத்துவிட்டார். உக்ரைனிடமிருந்து பாதுகாப்புத் துறை கற்றுக்கொண்ட பாடங்கள் 2022-ல் உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டதாக ஆனந்த் கூறினார் . "ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையும், இராணுவ உபகரணங்களின் கொள்முதல் மற்றும் விநியோகத்தை விரைவாக அதிகரிக்க வேண்டிய தேவையும் இருப்பதை நாங்கள் கண்டோம். அதைத்தான் பாதுகாப்பு வங்கி கவனிக்கப் போகிறது," என்று அவர் கூறினார். கனடா, உக்ரைனுக்கு 25.5 பில்லியன் கனடிய டாலர்கள் (18.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியுதவி வழங்கியுள்ளது. அடுத்த குளிர்காலத்திற்கு முன்னதாக மின்சார உற்பத்தி நிலையங்களை ஏற்பாடு செய்வது உட்பட, தனியார் மற்றும் பொதுத் துறையிலிருந்து கனடா கூடுதல் ஆதரவை வழங்கும் என்று ஆனந்த் கூறினார். ரஷ்யா மீதான தடைகள் மற்றும் இராணுவ, பொருளாதார உதவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஜி7 அமைப்பு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவது இன்றியமையாதது என்று அவர் கூறினார். கீவ் ஒரு மோசமான ஒப்பந்தத்திற்குத் தள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்துக் கேட்கப்பட்டபோது, "உக்ரைனின் புவியியல் எல்லைகளையும், அதன் பிரதேசம் தொடர்பான முடிவுகளையும் எடுக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு, இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை," என்று அவர் கூறினார். https://www.reuters.com/world/canada-lobby-g7-nations-take-part-new-defence-bank-foreign-minister-says-2026-03-26/
-
ஈரான் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதால், ஏப்ரல் மாதத்திற்குள் ஐரோப்பா எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என ஷெல் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதால், ஏப்ரல் மாதத்திற்குள் ஐரோப்பா எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என ஷெல் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்படாவிட்டால், டீசல் மற்றும் பெட்ரோல் மீது அழுத்தம் ஏற்படும் என வேல் சவான் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், அடுத்த மாதமே ஐரோப்பா எரிசக்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர், ஆசிய நாடுகளில் ஏற்கனவே எரிசக்தி பங்கீட்டிற்கு வழிவகுத்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கங்களுக்கு உதவுவதற்காக, தங்கள் நிறுவனம் அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வெள்ளை மாளிகை ஈரான் தலைவர்களுக்கு 15 அம்ச சமாதானத் திட்டத்தை அனுப்பியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, வாரத்தின் தொடக்கத்தில் சுமார் 114 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, புதன்கிழமையன்று மீண்டும் ஒரு பீப்பாய் சுமார் 100 டாலராகச் சரிந்தது. இருப்பினும், முக்கியமான ஹோர்முஸ் வழித்தடம் வழியாக வளைகுடாப் பகுதியிலிருந்து உலகளாவிய வாங்குபவர்களுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கப்படாவிட்டால் , சில வாரங்களுக்குள் ஐரோப்பா புதைபடிவ எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று வேல் சவான் கூறுகிறார். டெக்சாஸில் நடந்த எண்ணெய் தொழில்துறை மாநாட்டில் ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறினார்: “தெற்காசியாதான் முதலில் அதன் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. அது தென்கிழக்கு ஆசியா, வடகிழக்கு ஆசியாவுக்குப் பரவி, ஏப்ரல் மாதம் நெருங்க நெருங்க ஐரோப்பாவிலும் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.” தற்போது நான்காவது வாரத்தில் இருக்கும் இந்த நெருக்கடி , மோதல் தொடங்கியதிலிருந்து விலை இருமடங்காக உயர்ந்துள்ள ஜெட் எரிபொருள் விநியோகத்தை ஏற்கனவே பாதித்துள்ளது என்றும், அடுத்து டீசல் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடைகால வாகனப் பயணப் பருவம் தொடங்குவதால் பெட்ரோலின் விநியோகமும் நெருக்கடிக்கு உள்ளாகலாம் என்றும் சவான் கூறினார். இந்தக் கடுமையான எச்சரிக்கையை ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் கேத்தரினா ரீச் எதிரொலித்தார். மோதல் தொடர்ந்தால், ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் எரிசக்தி விநியோகப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று அவர் அதே தொழில்துறை மாநாட்டில் தெரிவித்திருந்தார். அணுசக்தியை படிப்படியாகக் கைவிடும் ஜெர்மனியின் முடிவு ஒரு மாபெரும் தவறு என்றும், வெளிநாடுகளிலிருந்து அதி குளிரூட்டப்பட்ட டேங்கர்கள் மூலம் அதிக அளவில் எரிவாயு இறக்குமதி செய்வது தீர்வின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார். ஒரு பேரல் எண்ணெய் விலை 150 டாலரை எட்டினால், ஐரோப்பாவின் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் , நீண்டகால உலகப் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என அமெரிக்க நிதி நிறுவனமான பிளாக்ராக்கின் தலைவர் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்த பேட்டியில், உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனத்தை வழிநடத்தும் லாரி ஃபிங்க், ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து, எண்ணெய் விலைகளும் உயர்வாகவே நீடித்தால், அது உலகப் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறினார். மோதலின் முழு அளவையும் விளைவையும் தீர்மானிப்பதற்கு இது மிக முன்கூட்டிய நேரமாக இருந்தாலும், ஃபிங்க் இரண்டு சாத்தியக்கூறுகளைக் கோடிட்டுக் காட்டினார்: ஒன்று, மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு ஏற்பட்டால், எண்ணெய் விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளான ஒரு பீப்பாய்க்கு சுமார் 70 டாலர் என்ற நிலைக்குத் திரும்பும்; மற்றொன்று, அந்த மோதல் விலைகளை வரலாறு காணாத உச்சத்திற்குக் கொண்டு செல்லும். https://www.theguardian.com/business/2026/mar/25/europe-could-face-iran-war-fuel-rationing-by-april-warns-shell-boss
-
நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட்
சீமான் நிறுத்தியுள்ள ஆறு பிராமண வேட்பாளரின் தொகுதியை பார்த்தாலே அவர் சாதி பார்த்து தொகுதி கொடுப்பது அப்பட்டமாக தெரிகிறது… சீமான்வாழ்…எதுக்கு மயிலாப்பூர்ல அருண் அம்பிய நிறுத்தறேழ்ன்னு நேக்கு தெரியாதுன்னு நெச்சுடேளா😂
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இத்தனை நாளும் அப்படியே கையுக்க வச்சிருந்தனியளாக்கும்😂 பிகு ஒவ்வொரு தடவை உலக யுத்தம் வரும் போதும் அதற்கு முன்பிருந்த சர்வதேச அமைப்புகள் இவ்வாறு பிரயோசனம் அற்ற நிலையை, அதன் பலமான உறுப்பு நாடுகள் அதை மதியாமல் நடப்பதால் அடைந்துள்ளன. 1 ம் உமாயு க்கு முன் ஹேக் கொன்பிரசன்ஸ் 2ம் உமாயு க்கு முன் லீக் ஒவ் நேசன்ஸ் இப்போ அதே வரிசையில் யூ என்?
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!
அப்பாவி கோயிந்தன்: ஏன் சகல பின்னையும் 📌🧷📍நீங்க வாங்கிடுவீங்களா தம்பர்?
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
யாழில் அண்ணனுக்கு ஆலவட்டம் பிடிப்பவர் பலரும், தமிழ் நாட்டில் அவர்களுக்கு வாக்குரிமை இருந்தாலும் …. அவர்கள் வோட்டு அண்ணனுக்கு வேண்டாமாம்😂 பிகு அண்ணனே அண்ணனுக்கு வாக்கு போட முடியாது😂