stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா
2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா 05 Mar, 2026 | 05:13 PM வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய கொள்கை சமிக்ஞைகளை வெளியிடத் தயாராக உள்ளது. குறிப்பாக 2026 முதல் 2030 வரையிலான புதிய ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்துக்கான வழிகாட்டி வரைபடம் இந்த அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, வளர்ச்சியின் வேகத்தை மட்டும் அல்லாது அதன் தரத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2035ஆம் ஆண்டிற்குள் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட நவீனமயமான நாடாக மாறும் இலக்கை அடைவதற்கான முக்கிய கட்டமாக 15ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலப்பகுதி கருதப்படுகிறது. சீனாவின் ஆட்சிமுறையில் ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டபோதிலும், நாடு தொடர்ந்து வளர்ச்சி இலக்குகளை அடைந்து சீன நவீனமயமாக்கல் பயணத்தில் நிலையான முன்னேற்றத்தை சாதித்துள்ளது. வரவிருக்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் உயர்மட்ட அரசியல் ஆலோசனை அமைப்பின் கூட்டங்களில், உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் கொள்கைகள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது, அறிவியல்-தொழில்நுட்ப புதுமைகளை மேம்படுத்துவது, பொருளாதார சீர்திருத்தங்களை ஆழப்படுத்துவது மற்றும் உயர்தர திறந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். சீன பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இறுதி நுகர்வு செலவினங்கள் 52 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து சதவீதம் அதிகமாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் வருமானத்தை உயர்த்துதல், சேவை துறையின் நுகர்வை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் முதலீட்டு செலவினங்களை அதிகரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. உட்கட்டமைப்பு வளர்ச்சியுடனும் மனித வள முதலீட்டுடனும் இணைந்த இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வசந்தகால பண்டிகை நிகழ்ச்சியில் மனித வடிவ ரோபோக்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான எதிர்காலத்துக்கான சீனாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதாக மதிப்பிடப்படுகிறது. அறிவியல்-தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தேசிய சந்தை அமைப்பை உருவாக்குதல், மூலதன சந்தை முதலீடு மற்றும் நிதியமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முக்கியமான 300க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்கு முன் கார்பன் டையாக்சைட் வெளியீட்டை உச்ச கட்டத்துக்கு கொண்டு வந்து பின்னர் குறைப்பதற்கான இலக்குடன், சீனா பசுமை ஆற்றல் மாற்றத்தையும் வேகப்படுத்த உள்ளது. சாமார்ட் மின்வலையமைப்பு, ஹைட்ரஜன் ஆற்றல் மற்றும் பசுமை எரிபொருள் தொழில்துறைகளை மேம்படுத்தும் முயற்சிகளும் இதில் அடங்கும். உலகளாவிய சவால்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி முன்னேற்றத்தை அடையும் கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026–2030 ஐந்தாண்டுத் திட்டத்தின் வழிகாட்டி ஆவணம் சீனாவின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் முன்னுரிமைகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா
-
சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி
சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய் விமானம் (கோப்புப் படம்) இந்திய விமானப் படையின் சுகோய் (Sukhoi) விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்திய விமானப் படையின் கூற்றுப்படி, Su-30 MKI விமானம் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து அந்த விமானம் புறப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இரவு 7:42 மணியளவில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பட மூலாதாரம்,@IAF_MCC/X இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ், பிளைட் லெப்டினன்ட் பூர்வேஷ் துர்காகர் ஆகிய இருவரும் மரணமடைந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுகோய் போர் விமானம் இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி
- Today
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ? இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இங்கு எனது கருத்தில் இனம் மதம் எங்கு வந்தது? சீமான் என்ற மூன்றாந்தர அரசியல்வாதியுடன் சேர்ந்து அடுத்தவன் நாடுவரை எல்லை தாண்டிச் சென்று நீங்கள் தூவும் இனதுவேசம் என்ற விசம் கண்டிக்கத்ததல்லவோ!
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் திரிசா - விஜய் ஜோடியாக கலந்து கொண்டனர் - செய்தி எங்க தல க்கு தில்ல பாத்தியா..?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவசரத்திற்கு கறிகாய் இல்லையா ..? இதோ ..
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
படம் : இன்ஸ்பெக்டர் மனைவி ( 1973) பாடியோர் : ஜெயசந்திரன் & சுசீலா இசை : சங்கர் - கணேஷ்
-
பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
முழு ஆவணம்:
-
AI-Image generated by Nane Chozhan based on the actual polearm.jpg
-
AI-Generated Image of a Polearm by Nane Chozhan.png
-
AI enhanced Polearm image - original is given above. Image generated by Nane Chozhan based on the actual polearm.jpg
-
said to be 600 years old - In the western part of the mango grove located behind the school in Agraharam village, near Krishnagiri - show off one sided sword.jpg
-
vellore museum.jpg
-
Tamils polearm.jpg
-
Tamils pole arm hand drawn sketch (alcoholic pen)
-
மாதனூர- படைக்கலன் = வாள் & தண்டம்.jpg
-
இளவம்பாடி நடுகல் கல்வெட்டு.jpg
-
poovaalai sivan kovil, pennaakaram vattam, tharmapuri - kipi 1335.jpg
-
Polearms- meelpaadi, vellore.jpg
-
chandrapuram (2).jpg
-
செஞ்சி வட்டத்தில் உள்ள மேல் ஒலக்கூரின் வடக்க சாலை.
-
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கோட்டைப்பாடி கிராமத்தில் கோட்டை மேட்டுக்கருகிலுள்ள பெரிய கண்மாய் கரையில் பகவதி அம்மன் கோயிலுக்குக்கருகில் நடப்பட்டுள்ள தனிக்கல். ad 10-11 cent - Copy
-
ஊர் வேப்பநத்தம், வட்டம் அரூர், மாவட்டம் தருமபுரி - Copy.jpg
-
நாகை நல்லூர் வணிகக் கல்வெட்டு - 10th centuary.jpg
-
kothandam type bow - வடஆர்க்காடு அம்பேத்கார் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வங்கட்டூர்.jpg
-
info not available.jpg
-
விழுப்புரம் மாவட்டம்| found: இராமசாமி படையாச்சியார்,.jpg
-
வடசிறுவளூர் பல்லவர் நடுகல்.jpg
-
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்.. படம் : சொந்தம் (1973 ) இசை :MSV பாடியவர் : ஜானகி வரிகள் :கண்ணதாசன்- ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
ஒரே பாலினத்தில் உருவான ஐயப்பன் கடவுளை இலங்கையில் இருந்து கும்பட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதையும் இலங்கை அரசு தடைசெய்ய வேண்டும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை தான் விஜயலட்சுமியே நீதிமன்றம் ஏறி நீதி கேட்டுள்ளார் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி living together வாழ்ந்து விட்டு ஏமாற்றுவது என்பது எல்லோரும் செய்யும் மோசடி அல்ல.அதுவும் அந்த மோசடியை செய்தது முஸ்லின் மதத்தின் கடைசி இறைதுதர் முகமது போன்று தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை தமிழ் இனத்தின் அடையாளம் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். அவர் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தாலும் அது தவறில்லை என்ற நிலை.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...- ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
சிக்கலான சமாச்சாரம் போல் உள்ளது.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தாமாக ஏறவில்லை. அடுத்தவர் ஏற்றி விட்டுள்ளார்கள்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீதி நியாயத்தை விட பலம் வலிமையானது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். நன்றி.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ரஷ்யாவும் இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தன் எரிசக்திகளை விற்க தடை என ஆணித்தரமாக கூறிவிட்டது. மயான காண்ட கூத்து ஆரம்பமாகுகின்றது என நினைக்கின்றேன்.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்த விதிக்கு பெற்றோல் மட்டும் விதிவிலக்கெல்லோ அண்ணை?- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்லும் மூட நம்பிக்கை திருமணங்களை நீதிமன்றம் என வரும்போது சட்ட பூர்வமாக ஏற்பதில்லை. 😎 இந்த கோசான் ஏன் தான் இன்னும் ஆலமரத்துக்கு கீழ இருக்கிற பஞ்சாயத்து கல்லில குந்தியிருக்கிறார் எண்டு எனக்கு விளங்கேல்லை. 🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது இந்தியாவின் நான்காவது இறுதிப் போட்டி. நியுசிலாந்தின் இரண்டாவது. இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மூன்று முறை இறுதிப் போட்டிக்குப் போயிருக்கினம்.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
விலை ஏறின பொருள் என்றும் என்றும் விலை குறைந்த வரலாறே இல்லை. நேற்றில் இருந்து… முதல் முறையாக ஒரு லீற்றர் பெற்றோல் 2 ஐரோவை தாண்டியது.- Yesterday
- சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
எம்டன், எம்டன் மகன் என்ற பெயரே ஆழ்கடலில் நின்று விட்டு, இலங்கை, தென்னிந்திய நகர்களை புயல் போல் உள்ளே வந்து தாக்கி, பின் ஓடி விடும் ஜப்பானிய கப்பலின் பெயர்தானாம். ஆனால் மீன் பிடி படகை எல்லாம் குறிவைக்க மாட்டார்கள். மல்டி டே டிரோலர்கள் கூட வளைகுடா வரை போவதில்லை என நினைக்கிறேன்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர். ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே. இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார். உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள். நாமே அறியோம் 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மீண்டும், மீண்டும் உன்னிப்பாக கவனிக்க - இந்தியாவில் கோவிலில் நெருப்பை சுற்றி வந்து, மாலை மாத்துவது சட்டபூர்வ திருமணம். இலங்கையில் தாலி கட்டுவதும் அப்படியே. விரும்பினால் ரிஜிஸ்தர் பண்ணி கொள்ளலாம். இல்லாமலும் விடலாம். கள்ள காதல்களை பற்றி கதைக்கும் போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதது. - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.