stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல் Jan 26, 2026 - 03:32 PM இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற 'மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கமைய முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ் மேலும் தெரிவித்தார். சில வேளைகளில் வயது முதிர்வின் போது ஏற்படும் சில மனநோய் அறிகுறிகள் குறித்து மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க சமூகம் தூண்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு சாதாரண நிலைமையாகக் காண்பித்து வருவதாகவும் குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ், மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற நோய் அறிகுறிகளைப் புறக்கணிக்க முதியவர்கள் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறாக முதியோர் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக உடல் ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார். தேசிய மனநல காப்பகத்தில் 1999 ஆம் ஆண்டு முதியவர்களுக்கென விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளதாகவும், அண்மையில் 'தீகாயு' எனும் பெயரில் பகல்நேர சிகிச்சை நிலையம் ஒன்று உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkv00oqv04f6o29n7kk417qm
-
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை!
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை! 26 Jan, 2026 | 02:57 PM வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலர்களை எட்டியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237041
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
WTCC (உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு) முன்னர் சுவிசில் ஆவணமோசடி, கடன் பெற்றுக்கொடுத்தது போன்ற வழக்கின் பின்னர் திவாலாகியது. கடந்த வருடத்திலிருந்து மீண்டும் அதே பெயருடன் புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. அந்த நிர்வாகத்தில் அண்ணனும் ஒருவர். இண்டையத்தளத்தில் வெளிப்படையாகவே உள்ள பதிவு தான். WTCCஇன் வளர்ப்பே போலி துவாரகா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அரசியல் என்னவென்று எனக்கு புரியவில்லை. இவரை எப்படி சுவிஸ் அரசாங்கமும், பத்திரிகைகளும் இது பற்றி கேள்வி எழுப்பாமல் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை.
- Today
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy
-
நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம்
26 Jan, 2026 | 06:11 PM நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகர சபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், “Pick Me” நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சுற்றுலாப்பயணிகளும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம். மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர். அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
சீன வாகனங்களும் ஐரோப்பிய சந்தையைப் பிடித்து விட்டதாக சொல்கிறார்களே? கனடாவுக்கும் வந்து இறங்கப் போகுது. எல்லை தாண்ட ரம் விடுவாரா தெரியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பில் நடக்கும் போட்டிக்கு ரிக்கட் விற்று முடிந்துவிட்டது.😂
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
Deadly cold settles in: At least 11 people have died in the coldest temperatures of the winter. Over 250 million people are under cold alerts for frigid temps that will linger for days, raising fears for those without shelter or power. • Crippling blow: More than 800,000 customers are still without power after damaging ice knocked it out. Here’s what to do if you’re without power. • No travel, no school: Sunday was the worst day for flight cancellations since the pandemic. Over 19,000 flights have been canceled during this storm. Schools in major cities have canceled classes or moved to remote learning for Monday. • Over a foot of snow: A staggering 31 inches of snow fell during the storm and 17 states have seen snow pile up a foot or higher. See all our maps and charts of the storm here. https://www.cnn.com/weather/live-news/winter-storm-forecast-snow-ice-01-25-26-climate
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தினை இழந்தால், அது தமிழர்களிற்கு மேலும் நெருக்கடியாகிவிடும், ஆனால் தமிழ்க்கட்சிகள் சிறு சிறு கட்சியாக சிதறுண்டிருந்தால் பலமான ஒரு பிரதிநிதித்துவத்தினை எட்ட முடியாது, சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாகக்கூடாது, அது மிகவும் ஆபத்தானது, தமிழர்களும், முஸ்லீம்களும் தமது உரிமைகளை பெறுவதற்கு தமக்குள் ஒருமித்த பெரும் சக்தியாக இருத்தல் வேண்டும் (தமிழர்களுக்கு தமிழ்தேசிய கூட்டணி, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் போல). புலிகள் இருந்த காலத்தில் தமிழ் தேசியம் ஒரு சாத்தியமான விடயமாக இருந்தது, ஆனால் தற்போது வட கிழக்கு இணைப்பினையே ஒரு பிரிவினை வாதமாக பார்க்கிறார்கள், 13 இனை இந்திய தலையீட்டின் பகுதியாக பார்க்கிறார்கள். தற்போதய ஒற்றை ஆட்சி இலங்கைக்குள் அரசு விரும்பியதை செய்யும் நிலையில் உள்ளது. இவற்றை மீறி ஒரு அதிகார பரவலாக்கமே சாத்தியமா என தெரியவில்லை. தற்போதுள்ள இலங்கை அரசியல் சட்டத்தில் 1காணி, சட்டம், நிதி போன்ற அதிகாரமற்ற நிலையே காணப்படுகிறது. இந்த விடயங்களை அடைவதே எட்டாக்கொம்பாக உள்ளது, கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை என்பது நினைத்தே பார்க்க முடியவில்லை.
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
பெரிய மீனுள்ள சமுத்திரத்தில் சின்ன மீனும் இருக்கின்றது அது போலத்தான்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
நிபந்தனையின்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு
உந்தக்கருத்தை டக்கிளஸ் ஏற்கெனவே சொல்லிவிட்டார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தற்போதைய தரவரிசையில் உகண்டா 21 ஆம் இடத்தில் இருக்கிறது. முதல் 20 இடங்களில் 19 அணிகள் இம்முறை உலக கிண்ண போட்டி விளையாடவுள்ளது. மற்றைய அணி வங்காளதேசம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் விளையாடவிட்டால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கொழும்பில் நடைபெறவுள்ள ஆரம்ப சுற்று போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக விளையாடும் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெறுமா அல்லது (இந்தியாவுக்கு சார்பான?) ஐசிசி போட்டியை இந்தியாவில் நடாத்துமா?
-
கருத்து படங்கள்
- 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
பராசக்தி படம் ஹிந்தி திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எடுக்கபட்டதால் அதை பயன்படுத்த பாஜக நினைத்து இவர்களை பொங்கல் கொண்டாட அழைத்திருக்கலாம். மிரட்டியும் அழைத்திருக்கலாம். ஆனால் அநுரகுமார திசாநாயக்கவுடன் பொங்கல் கொண்டாடி செல்பி எடுக்க முண்டி அடித்தவர்களை விட அவர்கள் மேல்- யாழில் இந்திய குடியரசு தினம்!
யாழில் இந்திய குடியரசு தினம்! இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. https://athavannews.com/2026/1461533- பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!
பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2026/1461553- இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா! இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார். இந்த முக்கியமான நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை நீண்டிருக்கும் கர்தவ்ய பாதை, விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகால பாரம்பரியம், நாட்டின் முன்னோடியில்லாத வளர்ச்சி முன்னேற்றம், வலுவான இராணுவ வலிமை, துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பு குடிமக்களின் தீவிர பங்கேற்பு ஆகியவற்றின் அசாதாரண கலவையைக் கொண்டிருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு வருகை தருவதோடு இது தொடங்கும்அங்கு அவர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். அதன் பிறகு, பிரதமர் மற்றும் பிற பிரமுகர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்ய பாதையில் உள்ள மரியாதை மேடைக்குச் செல்வார்கள். https://athavannews.com/2026/1461463- Anura.jpg
- பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid ! பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலையை தவிர்க்கலாம் என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், கூட்டம் அதிகமான இடங்களை தவிர்த்தல் (சமூக இடைவெளி) போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் வைத்தியசாலைகள் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. Athavan Newsபிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிற- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கருத்தாளர்களுக்கு கருத்துகளால் பதில் கூற முடியாது எப்போதும் இனவாத வக்கிரத்தை கொட்டும் கேவலமான மனிதர்கள் பாடமெடுக்கும் நிலையில் நான் இல்லை. அரசியல் அறிவில் பூச்சியமான, வெறும் தனிமனித தாக்குதல் தான் அரசியல் என்று புரிந்து வைத்திருக்கும் யாழ்கள காமடிபீஸுக்கும் சேர்தது தான் கூறுகிறேன். 😂- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஓம் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையாகும் கார் Dacia என்று தெரிந்து கொண்டேன் பலர் ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையாகும் நட்சத்தரம் யேர்மன் வோல்ஸ் வாகன் Golf என்று தான் நினைத்து கொண்டிருக்கின்றனர்- இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
ஒரு டாட் பால் கூட விடாமல் சாதனை ரன் குவித்த அபிஷேக் அதிரடிக்கு கடைபிடித்த 'புது டெக்னிக்' பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 154 என்ற இலக்கை சேஸ் செய்கிறது இந்தியா. முதல் பந்திலேயே விக்கெட் போகிறது. ஆனால், எந்த இடத்திலும் தங்கள் அதிரடியைக் குறைக்காமல், நியூசிலாந்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் விளையாடி பத்தே ஓவர்களில் இலக்கை எட்டியது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என ஏற்கெனவே வென்றுவிட்டது இந்தியா. இது, தொடர்ச்சியாக இந்தியா பெற்றுள்ள 11வது டி20 தொடர் வெற்றி. தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை இதன்மூலம் சமன் செய்திருக்கிறது இந்திய அணி. 10 ஓவர்களுக்குள் சேஸ் செய்யப்பட்ட இரண்டாவது பெரிய இலக்கு இதுதான். இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரும் நேற்றைய ஆட்டத்தில்தான் வந்தது. இந்தியாவின் இந்த சாதனை சேஸின் முக்கிய அங்கமாக இருந்தவர் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா. 20 பந்துகளில் 340 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்கள் எடுத்தார் அபிஷேக். அவரும் தன் பங்குக்கு சில தனிநபர் சாதனைகளைப் படைத்தார். 14 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இந்தியர் ஒருவரின் இரண்டாவது அதிவேக டி20 அரைசதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டிகளில் 9 முறை 25 பந்துகளுக்கும் குறைவாகவே அவர் அரை சதம் கடந்துள்ளார். இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் - அவர் அடித்திருப்பதே மொத்தம் பத்து 50+ ஸ்கோர்கள் தான். அதில் 9 முறை 25 பந்துகளுக்குள்ளாகவே அவர் அரைசதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். முதல் பந்திலேயே சிக்ஸர் கௌஹாத்தியில் நடந்த இந்தப் போட்டியில், தன்னுடைய அதிரடியை முதல் பந்தில் இருந்தே தொடங்கிவிட்டார் அபிஷேக். இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்திக்க தயாரானார் அபிஷேக். பந்து வீசத் தயாராக இருந்தது ஜேக்கப் டஃபி. இரண்டாவது போட்டியில் அபிஷேக் ஷர்மாவை 'கோல்டன் டக்' ஆக்கி வெளியேற்றியவர் அவர். ஆனால், சற்றும் யோசிக்காமல் முதல் பந்திலேயே இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்தார் அபிஷேக். அபிஷேக் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக ஆடிவரும் அணுகுமுறையைப் பார்க்கும்போது, அவர் முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடுவதாகத்தான் வல்லுநர்கள் பலருமே பேசுவார்கள். நேற்று அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தபோது, அந்த வாதத்துக்கு அது வலுசேர்ப்பது போலத்தான் இருந்தது. ஆனால், அப்படியான எண்ணத்தோடு களம் காண்பதில்லை என்கிறார் அபிஷேக். இந்தப் போட்டி முடிந்ததும் பேசிய அபிஷேக் ஷர்மா, "முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆடுவதில்லை. களத்தில் இருக்கும்போது என் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி செய்கிறேன். அந்த நேரத்தில், என்னை முதல் பந்திலேயே விக்கெட் எடுக்கவேண்டும் என்றால் பௌலர் என்ன யோசித்து, எப்படிப் போடுவார் என்று நான் கணிக்கிட்டு, அதற்கு ஏற்ப ஆடுகிறேன்" என்றார் அவர். டஃபியின் பந்தில் அவர் அந்த சிக்ஸர் அடித்தது அப்படித்தான் இருந்தது. கடந்த போட்டியில், அவரது கால்காப்பை நோக்கி வந்த பந்தை நின்றுகொண்டே அடித்து ஸ்கொயர் லெக் திசையில் கேட்சானார் அபிஷேக். ஆனால், இம்முறை அவர் சில அடிகள் இறங்கி வரவே, அவர் கைகளை பலமாகச் சுழற்றுவதற்கான ஒரு வெளி கிடைத்துவிட்டது. அதனால், பந்து பவுண்டரி எல்லையையும் கடந்துவிட்டது. அதுவும் அந்தப் பந்து 88 மீட்டர் சென்று விழுந்தது. பட மூலாதாரம்,Getty Images அபிஷேக் கடைபிடிக்கும் புது டெக்னிக் அபிஷேக்கின் அதிரடி ஆரம்பம் முதலே பார்த்து வருவது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் தற்போது அந்த பந்துகளை அடிக்கும் முறை கவனம் பெற்றிருக்கிறது. அந்த முதல் பந்தைப் போலவே, பல பந்துகளுக்கு அவர் தனக்கான வெளியை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட்டில் 'making room' என்பார்கள். பேட்டை சுழற்றுவதற்கு ஒரு வெளியை ஏற்படுத்த பேட்டர்கள் நகர்வார்கள். அதை தற்போது அபிஷேக் அதிகமாகவே செய்கிறார். நேற்றைய போட்டியில் பல பந்துகளை அவர் அப்படித்தான் ஆடினார். தனக்கான வெளியை உருவாக்கிக் கொண்டு, ஸ்டம்ப் லைனில் வந்து பந்துகளையுமே கூட அவர் ஆஃப் சைடில் கவர், எக்ஸ்டிரா கவர், மிட் ஆன் திசைகளில் பவுண்டரிகள் அடித்தார். இந்த விஷயம் அபிஷேக் தன்னுடைய ஆட்டத்தில் சமீபத்தில் கொண்டுவந்திருக்கும் 'அப்கிரேட்' என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு, இத்தகைய பந்துகளில் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று அவர் அவுட் ஆகியிருக்கிறார். அது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால், தற்போது அவர் நன்கு தனக்கான வெளியை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல் தன் விக்கெட்டையும் பாதுகாத்துக்கொள்கிறார். கைல் ஜேமீசன் வீசிய மூன்றாவது ஓவரில் அதை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. மிடில் ஸ்டம்ப் லைனில், யார்க்கர் லென்த்தில் வந்த பந்தை, நன்கு லெக் சைட் விலகிச் சென்று ஃபுல் டாஸாக வாங்கி, கவர் திசையில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே லோ ஃபுல் டாஸாக வந்தது. அதை, இன்னும் லெக் திசையில் விலகிச் சென்று பாயின்ட் திசையில் சிக்ஸர் அடித்தார். பொதுவாக பேட்டர்கள் லெக் சைடில் அடிக்கக் கூடிய பந்துகளை அநாயசமாக ஆஃப் சைடில் அடித்துக்கொண்டிருந்தார் அபிஷேக். அவருடைய இந்த ஆட்டமுறை குறித்து கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷா போக்ளே, "முன்பு அபிஷேக் ஷர்மாவுக்கு உடலுக்கு சற்று வெளியே பவுன்சராக வீசினால் கொஞ்சம் தடுமாறுவார் என்று அனலிடிக்ஸ் கூறியது. ஆனால், அவர் இப்போது ஆடும் விதத்தில், நகர்ந்து வந்து அந்தப் பந்துகளையும் பவுண்டரிகள் ஆக்குகிறாரே... இதற்கு மேல் பௌலர்கள் அவருக்கு எப்படிப் பந்துவீசுவது" என்றார். நியூசிலாந்து பௌலர்கள் அப்படியான பௌன்சர்களை முயற்சி செய்தும் கூட பலன் கிடைக்கவில்லை. அவை சற்று லைனில் பிசக, அவற்றையும் சற்று ஆஃப் சைட் நகர்ந்து லெக் சைடில் சிக்ஸர்கள் ஆக்கினார் அபிஷேக். பட மூலாதாரம்,Getty Images ஒரு டாட் பால் கூட இல்லை அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸில் இன்னொரு சிறப்பான விஷயம், அவர் சந்தித்த 20 பந்துகளில் ஒரு டாட் பால் கூட இல்லை. ஒவ்வொரு பந்திலுமே அவர் ரன் எடுத்தார். மொத்தம் 7 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்தார் அவர். 6 ஒற்றை ரன், 2 இரட்டை ரன் அபிஷேக் ஷர்மாவின் 20 பந்துகளில் எடுக்கப்பட்ட ரன்கள் முறையே 6 1 4 2 4 6 4 2 6 1 4 1 4 6 1 4 6 4 1 1 எனும் வகையில் இருந்தது. அவருடைய அணுகுமுறையும், அவருடைய ஷாட் தேர்வும் ஒவ்வொரு பந்திலுமே அவருக்கு ரன்களை எடுத்துக் கொடுத்தது. குறிப்பாக, முதல் 18 பந்துகளில் அவர் தொடர்ந்து இரண்டு பந்துகளில் பவுண்டரி அடிக்காமல் விடவில்லை. அதாவது, ஒரு பந்தில் ஒற்றை அல்லது இரட்டை ரன் வந்தால், அடுத்த பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது. அவருடைய கடைசி இரண்டு பந்துகள் மட்டுமே தொடர்ச்சியாக பவுண்டரி வராத இரு பந்துகள். அந்த அளவுக்கு பவுண்டரிகளும், சிக்ஸர்களாகவும் விளாசினார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள் படி, ஆண்கள் டி20ஐ கிரிக்கெட்டில் டாட் பால்களே ஆடாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸில் தான். இதற்கு முன் அந்த சாதனை கனடாவின் ஹர்ஷ் தாகெர் (18 பந்துகளில் 53* ரன்கள்) வசம் இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wxq7lxyxlo- நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு Jan 26, 2026 - 11:07 AM சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் தமக்கு இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் இங்கு தெரிவித்தார். வைத்தியத் தொழிலை விசேட சேவைப் பிரிவாகக் கருதி நிபுணத்துவ வைத்தியர்கள், தர வைத்தியர்கள் மற்றும் நிர்வாகத் துறையிலுள்ள வைத்தியர்களை இனங்கண்டு அவர்களுக்கு விசேட சம்பளக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்ததாகவும், அது பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டு ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். டெட் கொடுப்பனவை இற்றைப்படுத்தல், மேலதிக கடமைக் கொடுப்பனவை நிரந்தரக் கொடுப்பனவாக மாற்றி அதனை சம்பளத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் திறைசேரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதற்கும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். இரண்டு நாட்கள் இடம்பெற்ற அடையாள பணிப்புறக்கணிப்புக்கும் உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், தமது சங்கம் இவ்வாறு 05 வழிமுறைகளின் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அவசர நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், தமது சங்கம் நோயாளர்களின் உயிரை ஆபத்தில் வீழ்த்தாது எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார். குறித்த வழிமுறைகள் பின்வருமாறு 01. கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை (பரிந்துரைச் சீட்டு) வழங்காமை. 02. வைத்தியசாலை அமைப்பிற்குள் இல்லாத ஆய்வுகூட பரிசோதனைகளை, வெளி ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் செய்துகொள்வதற்காக துண்டுச் சீட்டுகள் அல்லது பரிந்துரைகளை வழங்காமை. 03. தற்போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை வழங்க முடியாவிடின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படாதவிடத்து, வைத்தியசாலை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை. 04. சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமை. 05. ஏதேனும் ஒரு வைத்தியசாலையில், கிளினிக்கில் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளியை பரிசோதிக்கும் போது வைத்தியருக்கு உதவியாக, உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்காவிடின் வைத்தியர்கள் அந்த இடங்களில் கடமையிலிருந்து விலகுதல். https://adaderanatamil.lk/news/cmkuqkoi404emo29nhwk6zav4 - 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.