Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 12 Jan, 2026 | 09:34 PM (நெவில் அன்தனி) நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது. நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.) இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர். திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை. 226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை. இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது. ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது. இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார். ஐசிசியினால் பெயரிடப்பட்டுள்ள கவனிக்கத்த வீரர்களில் செத்மிக்க செனவிரட்னவும் ஒருவராவார். பத்து இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள செத்மிக்க 16 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/235873
  3. 'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்! Jan 12, 2026 - 11:05 PM 'டித்வா' புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். இன்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 'டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். "செயற்கைக்கோள் புகைப்படப் பகுப்பாய்வு மூலம் நாடு தழுவிய ரீதியில் மண்சரிவுகள் முழுமையாக வரைபடமாக்கப்பட்டதுடன், இதன் மூலம் மொத்த மண்சரிவு சம்பவங்களின் எண்ணிக்கை 4,800 இற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. 'டித்வா' புயல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி நாம் மண்சரிவுகளை வரைபடமாக்கினோம். அந்த வரைபடங்களின்படி, ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரப்படுத்தப்பட்ட மண்சரிவுகளின் எண்ணிக்கையை விடவும் பாரிய அளவிலான மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதை நாம் கண்டறிந்தோம். அந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகச் சுமார் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன." என்றார். கேள்வி: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் 1,241 இடங்களில் பாரிய மண்சரிவுகள் காணப்பட்டதாகக் கூறியிருந்தது. அதைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மண்சரிவுகள் குறித்து அவர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். இது நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியென்றால் இந்த 4,800 மண்சரிவுகளும் கொஸ்லந்த மண்சரிவைப் போன்ற பாரிய அளவிலானவையா? பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "இல்லை, இதில் சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெற்றுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் அவர்கள் தலையிட வேண்டிய இடங்களை மாத்திரம் அடையாளம் கண்டிருக்கலாம். ஆனால் எமது செயற்கைக்கோள் புகைப்படங்களில் காடுகளுக்குள் இடம்பெற்ற மண்சரிவுகள் கூடக் கணக்கிடப்படுகின்றன. அதனால்தான் எமது தரவுகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது." என்றார். கேள்வி: அப்படியென்றால் இது 'டித்வா' புயலின் பின்னர் ஏற்பட்ட மொத்த மண்சரிவுகளின் எண்ணிக்கையா? இது நாடு முழுவதிலுமானதா அல்லது மத்திய மலைநாடு தொடர்பானதா? பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "ஆம், இவை 'டித்வா' புயலுக்குப் பின்னர் ஏற்பட்டவை. அதிகமான மண்சரிவுகள் மத்திய மலைநாட்டிலேயே பதிவாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பாகும். சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் இதில் கவனத்தில் கொண்டுள்ளோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmkbg1gq503two29ng0lfmdfl
  4. அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை! Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 09:15 AM ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (12) இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது, "ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம். இதில் சுமார் 55,000 பேர் வாழ்கின்ற கிரீன்லாந்து ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்க வாய்ப்புள்ளது." "இது நடந்துவிட்டால் அவ்வளவுதான். அமெரிக்கக் கொடியில் புதிய நட்சத்திரங்கள் (புதிய மாகாணங்கள்) சேர்வதற்கு இடமிருக்காது," என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இது அவசியம் என்பது அவர் வாதம். கிரீன்லாந்து மீது தங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும், அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் விண்வெளி கண்காணிப்பு மையங்களை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ட்ரம்ப்பின் இந்த முயற்சிக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல' என அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வருவதால், புதிய கடல் வழித்தடங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வல்லரசு நாடுகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2022-ல் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போருக்குப் பின்னர் ஆர்க்டிக் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டு, அப்பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. https://www.virakesari.lk/article/235884
  5. அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் Jan 12, 2026 - 10:02 PM மகா சங்கத்தினரை இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்த அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மோசமான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வாறு தரம் தாழ்ந்த முறையில் அவமதித்ததில்லை என அவர் குறிப்பிட்டார். கண்டி, மடவல ஜனமங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். "நாட்டைச் சீரழிக்கும் வஞ்சகமான தந்திரோபாய நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுமானால், அவற்றுக்குச் சவால் விடும் உரிமை எமக்கு நிச்சயமாக உண்டு. அதற்காகவே வரலாற்றிலிருந்தே மகா சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர். அமைச்சர் லால் காந்த காட்டில் இருக்கும் ஒரு மிருகத்தைப் போன்று வெளியே வந்து, காட்டுமிராண்டித்தனமான, தரம் தாழ்ந்த மற்றும் இழிவானதொரு கூற்றை முன்வைத்துள்ளதை நாம் பார்த்தோம். தயவுசெய்து உங்களது கூற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அமைச்சருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில், அவ்வாறு செய்யாவிடில் இந்த நாடு எத்திசையை நோக்கிச் செல்லும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது. ஜனாதிபதி அவர்களே, இவரை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த நாடு இதைவிடப் பாரிய ஆபத்தை எதிர்கொள்ளும், அதை யாராலும் தடுக்க முடியாது என நாம் கூறுகிறோம். தயவுசெய்து நீங்கள் இந்த கலாசாரத்திற்குள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்நாட்டு மக்கள் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்." என்றார். https://adaderanatamil.lk/news/cmkbdsdwu03tvo29n4a349m2v
  6. இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 12 Jan, 2026 | 04:11 PM இந்தோனேசியாவில் க்ரொக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, க்ரொக் செயற்கை நுண்ணறிவு தளத்தை தடை செய்த முதல் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்துடன் இணைந்து க்ரொக் செயற்கை நுண்ணறிவு சேவை இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரொக், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற செயல்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது சட்டம், கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. க்ரொக் பலர் தவறாக பயன்படுத்துவதால் பெண்கள், சிறுவர்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி, இந்தோனேசிய அரசு க்ரொக் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/235847
  7. சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் Jan 13, 2026 - 10:02 AM சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 81 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkc3irs103u9o29nhf08zjby
  8. விமலுக்கு நன்றாகவே தெரியும், தான் உண்ணாவிரதமிருந்தால் எல்லாரும் சேர்ந்து தன்னை சாக விட்டுவிடுவார்கள் என்பது. அதனாலேயே சத்தியாக்கிரகமாக மாற்றியிருப்பார். அவர் என்ன போராட்டம் செய்தாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படப்போவதில்லை, இருந்து, எழும்பி, பின் களைத்து வராமலே போய்விடுவார். இவருக்கு இருப்பது வாய் மட்டுந்தான். திஸ்ஸ விகாரைக்கு மக்களை திரட்ட பிக்குகளையும் திரட்டிக்கொண்டு தெருவில நின்று ஊழையிட்டு விட்டு போய் படுத்தவர், இப்போ வந்து கருணாநிதி ஸ்ரைலில் கருப்பு கண்ணாடி, வந்த கணத்திலேயே படுத்துவிட்டார், தூக்கம் கலைய எழும்பிப்போவார். பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது இவரால்? அசிங்கமாக பேசுவது இவர்களுக்கு சர்வ சாதாரணம், பிறகு கல்வி திட்டம் பிழையாம் என்கிற குற்றச்சாட்டு. இவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை? ஒரு நாட்டின் பிரதமரை பகிரங்கமாக இழிவு படுத்துவதை வேடிக்கை பார்ப்பது தான் பொலிஸாரின் கடமையா? ஐ .நாவின் மனித உரிமையாளரை தான் கலியாணம் கட்டுகிறேன் என்று சொன்னார் மேவின், அது அவரின் கருத்து சுதந்திரமென்று விளக்கமளித்தார் மஹிந்தா. இதுதான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கருத்துச்சுதந்திரம். நாமல் பேரணி நடத்தினார் எதுவும் சாதிக்க முடியவில்லை. வந்தது இயற்கை சீற்றம். பயமுறுத்தல், இல்லாத விடயங்களை பரப்புதல், சேறடித்தல் வேலைகளை செய்கிறார். பூச்சாண்டி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவதுபோல், அமெரிக்கா இலங்கைக்குள் நுழையப்போகுதாம் என்று அனுராவுக்கு பயம் காட்டுகிறார். இவர் எதிர்கால ஜனாதிபதியாம். இவர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும்? இனவாதம் மதவாதம் பேசும் அரசியல் கலாச்சாரமே இந்த நாட்டில் இருக்கவேண்டும், அது இல்லாத, பேசாதவர் அரசியல் செய்யக்கூடாது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம். எப்போ இவர்களின் ஊழல், கொலை, கொள்ளை வெளிவருகிறதோ, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ உடனே நாட்டை குழப்பி, ஆட்சியை பிடித்து தம்மை புனிதர்களாக, சிங்கள, பௌத்த காவலர்களாக காட்டுவார்கள். இதில இன்னொரு பகிடி என்னவென்றால்; தேசிய மக்கள் சக்தி பாரியளவில் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியதால்தெய்வ கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியதாம், வஜிர அபேவர்த்தன சொல்கிறார். அப்போ, சுனாமி ஏன் வந்தது? எத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கொன்று குவிக்கும்போது தெய்வம் மகிழ்ச்சியடைந்ததோ? சரி, இவர்களது பொய்யால் அனர்த்தம் ஏற்பட்டதென்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் அல்லவா அனர்த்தம் நேரிடிருக்க வேண்டும்? பருவகால அனர்தத்திற்கும், தெய்வ கோபத்திற்கும் வேறுபாடு தெரியாத அமைச்சர். கல்வியறிவு இல்லை, திறமையில்லை நாட்டை நிர்வகிக்க. இனவாதம், மதவாதம் பேசி அரசியலை கைப்பற்றி கொள்ளையடிப்பது, கேள்வி கேட்போரை கொலை செய்வது, இவர்கள்தான் சிறந்த அரசியல்வாதிகள். நாட்டில் மக்களை சிந்திக்க விடுவதில்லை, உண்மையை தெரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை.
  9. Today
  10. தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர், தமிழர் பிரதேசங்களிலும் தனக்கு உயிரச்சுறுத்தல் எனக்கூறி அந்த மக்களை கொன்றொழித்த இராணுவத்தின் பாதுகாப்பு, அதற்கும் மேலதிகமாக போலீஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பெற்று வலம் வந்து, அந்த மக்களின் வாக்கோடு பாராளுமன்றம் சென்ற ஒரு உறுப்பினரை உலகில் வேறெங்காவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இவர் செய்கிற கோமாளித்தனம் அதுதான். அந்தமக்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லிக்கொண்டு, அந்த மக்களிடம் வாக்கு பெற்று, அந்த மக்களை கைகழுவி, தன் பதவி காப்பவர். அறிவுமில்லை, திறமையுமில்லை, மனச்சாட்சியுமில்லை. ஆனால் எல்லா வசதிகளும், பதவிகளும், தகுதிகளும் தான் அனுபவிக்க வேண்டுமென்கிற பேராசை மட்டுந்தான். அதற்காக அடம்பிடித்து எதுவேண்டுமானாலும் செய்வார்.
  11. கிந்தியாவுக்கு வளர்த்த புலி (கடாய்) மார்பில் பாய்ந்த (மார்பை புளந்த) கதை இது. எப்படி கிந்தியா தனது நீண்டகால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை நாசமாக்கியதோ அவ்வாறே தமது நீண்ட கால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பது தற்காலத்தில் பலரது மனநிலையாக உள்ளது. சோனியா கிழவிக்கு தன்னாலோ அல்லது தனது பிள்ளைகளாலோ கிந்தியாவின் பிரதமராக வரமுடியவில்லை என்பது கடைசிவரை நிறைவேறாத ஆசையாகவும், ஏமாற்றமாகவும் அமைகின்றது.
  12. மண்பானை செய்பவர்களுக்கு பிரச்சனை இல்லை பூ மர கன்றுகள் வீட்டில் வைப்பதற்கு மண்பானை வாங்குபவர்கள் வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள். இலங்கை செல்கின்ற போது மண் பானையில் சமைக்க வைத்து கூடுதலான பணம் கொடுத்து சாப்பிட்டு நண்பர்களுடன் படங்கள் எடுத்து முகநூலில் போடுவது எல்லாம் சமத்திய சடங்கு நடத்துவது மாதிரி ஒரு கூத்து. Cinnamon Grand ல் இரவு சாப்பாடு மண் பானையில் சமைத்து கொடுக்கும் பகுதி ஒன்று உள்ளது.
  13. Yesterday
  14. உண்ணாவிரதமில்லை சத்தியாகிரகமே. அதுவும் தொடர்ந்து செய்யமாட்டேன். நான் வீட்டுக்குப் போனால் வேறொரு கூட்டம் வந்து சத்தியாக்கிரகம் செய்வார்கள். கரிணி அமரசூரியாவுக்கு உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் லால்காந்தவுடன் சேர்ந்து கொள்.
  15. முதலீடு மாநாடு தேவை தான். அதேநேரம் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் தேவை. எனவே தண்டவாளம் மாதிரி சமாந்தரமாக போக வேண்டும். அரசாங்கம் தான் செய்ய வேண்டிய வேலைகளை தட்டிக் கழித்து தனக்கு தேவையான வேலைகளை மாத்திரம் தமிழர்களை வைத்து செய்ய முயற்சி செய்கிறது. பலாலி விமானநிலையம் ஏன் சர்வதேச விமானநிலையமாக்க முடியாது? காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய முன்வந்த போதும் தட்டிக் கழித்தது ஏன்?
  16. முன்னர் வீட்டுக்கு வீடு மண் பானையிலேயே பொங்கல் மட்டுமல்ல நாளாந்த வீட்டுத் தேவைகளுக்கு மண் பானை சட்டிகளையே பாவித்தார்கள். இதனால் பானை சட்டி செய்பவர்களுக்கும் பொருளாதாரமாக இருந்தது. இப்போது பானைசட்டி செய்பவர்களும் குறைந்து போனார்கள். அதன் பாவனையும் அருகிவிட்டது. இப்போது சட்டிபானை செய்பவர்களுக்காகவாவது மண்பானை பாவிக்க வேண்டும். கடைகளில் மண் சட்டிபானைகளில் சமையல் செய்தால் கூடுதலான பணம் கொடுத்து சாப்பிட்டு நண்பர்கள் வட்டத்திலும் படங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
  17. வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாத நிலையில் இப்படியான கவர்ச்சி விளம்பரங்கள் தேவையா என்ற கேள்வி உருவாகின்றது . அனுர அரசு வடக்கில் இன்னும் ஆழமாகக் கால் ஊன்ற வேண்டும் என்ற முனைப்பில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது அதில் இதுவும் ஒன்று
  18. வாடகைக்கு விடாத வரைக்கும் அந்த வீடுகள் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.... எங்கிருந்தும் கவனிக்கலாம் . ஆனால் வாடகைக்கு விட்ட பின்னர் அந்த வீட்டைக் கண்காணிக்க முடியாதல்லவா! ஒருவரின் தனிப்பட்ட விடையம் கண்காணிக்க முடியாதல்லவா!
  19. “தை மாதம்: தமிழர் வாழ்வின் பண்பாட்டு இதயம்” தை - தமிழ் நாட்காட்டியின் பத்தாவது மாதம், ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் - தமிழ் இதயங்களிலும் கலாச்சாரத்திலும் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு மாதம் என்பதை விட அதற்கும் மேலானது; இது அறுவடை, நன்றியுணர்வு, புத்துணர்வு மற்றும் சமூக, ஆன்மீக புதுப்பித்தலுக்கான பருவமாகவும் திகழ்கிறது. வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து, மார்கழியின் போது (டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. - இது சடங்கு குளியல், பிரார்த்தனை மற்றும் ஒருவரின் எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அமைதியான சிந்தனைக்கு ஏற்றவாறு காணப்படுகிறது. தை மாதத்தின் கலாச்சார முக்கியத்துவத்தின் மையத்தில் தைப் பொங்கல் உள்ளது — இது நன்றி சொல்லும் திருவிழா ஆகும். ‘பொங்கல்’ என்றால் பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். இது வாழ்க்கையின் செழிப்பையும், வளத்தையும் குறிக்கிறது. சோழர் காலத்தில் இதற்க்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். குடும்பங்கள் விடியற்காலையில் ஒன்றுகூடி பால், அரிசி, வெல்லம் கலந்து சமைத்து, அந்தப் பொங்கலை, சூரியனுக்குப் படைத்து, மாடு [காளை], நீர் மற்றும் மண்ணின் உதவிக்கு நன்றி செலுத்துகின்றனர். இந்த விழா சாராம்சத்தில் மதச்சார்பற்றது, விவசாயம் மற்றும் சமூக நல்வாழ்வில் வேரூன்றியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் குறைந்தபட்சம் சங்க காலம் (கிமு 500–கிபி 300) முதல் சோழர்கள், பல்லவர்கள் மற்றும் நவீன தமிழ் சமூகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. திருமணங்களைக் கொண்டாட குடும்பங்கள் போதுமான வளங்களைச் சேமித்து வைத்திருக்கும் அறுவடை மாதமான மார்கழியின் பின்னரே, தை மாதம் இருப்பதால், இயற்கையாகவே புதிய தொடக்கங்களுக்கும், திருமண நிகழ்வுகளுக்கும் சிறந்த காலமாக மாறியது. இதன் காரணமாகத் தான் தமிழர் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்லுகிறார்கள். எனவே, இதனால், இந்த பழமொழியை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இந்த சொற்றொடர் நம்பிக்கையை மட்டுமல்ல, இயற்கை, உழைப்பு மற்றும் மனித திட்டமிடலின் நடைமுறை சீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. காதல் பண்டிகைகள் மற்றும் இந்திர விழாவுடன் தொடர்புடைய சித்திரையைப் போலல்லாமல், தை - சமூக மற்றும் ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் புதிய தொடக்கங்களின் உண்மையான பருவமாக செயல்படுகிறது. விவசாயம், வானியல் மற்றும் சடங்கு ரீதியாக, தை - சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்துடன் மகர ராசியில் (Capricorn) இணைகிறது, இது நீண்ட, வெப்பமான நாட்களையும், புதிய தொடக்கங்களின் உளவியல் உணர்வையும் குறிக்கிறது. சங்க காலம் முதல் பக்தி யுகம் வரையிலான இலக்கியங்கள் தையை மீண்டும் மீண்டும் கொண்டாடுகின்றன - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, புறநானூறு மற்றும் பரிபாடல் வரை உள்ள சங்க பாடல்களில் - நிறைவான அறுவடை , சமூக கொண்டாட்டம், சடங்கு குளியல் மற்றும் பருவகால சுழற்சிகளின் அழகியல் இன்பத்தை [aesthetic enjoyment of seasonal cycles] வலியுறுத்துகின்றன. இந்த நூல்களில், ஆறுகள், குளங்கள் மற்றும் தூய்மை, சமூக தொடர்ச்சி மற்றும் மனித மற்றும் இயற்கை தாளங்களின் நல்லிணக்கத்தைக் [the harmony of human and natural rhythms] குறியீடாகக் காட்டும் பெண்களின் சடங்கு நடனங்கள் காணப்படுகின்றன. எனவே, தை மாதம் தமிழர்களுக்குப் பெரும் விருப்பமான, ஆன்மீக, சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட, காலமாகத் திகழ்கிறது. இவ்வாறு, தை மாதம் கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக ஒருங்கிணைப்பின் மாதமாகும். இது விவசாயிகளின் உழைப்பு, சூரிய ஒளி, பெண்களின் முகமைத்துவம் (சுயசெயல்பாட்டுத் திறன்), மற்றும் தமிழ் சமூகங்களின் கூட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது. சங்க காலம் முதல் நவீன காலம் வரை, தை மாதத்தின் சடங்குகள், கவிதைகள் மற்றும் பண்டிகைகள் தமிழர்களை அவர்களின் நிலம், வரலாறு மற்றும் சமூக விழுமியங்களுடன் இணைக்கின்றன. இந்த மாதம் சிந்தனை, நன்றியுணர்வு மற்றும் புதுப்பித்தலை ஊக்குவிக்கிறது, எனவே தை மாதம் அனைத்து தமிழ் மாதங்களிலும் மிகவும் போற்றத்தக்கதாக, சிறப்பானதாக அமைகிறது. "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே! ஊருக்கு பொங்கல் படைத்து பெருவிழா தந்தது தையே! முருகிற்கு அழகு சேர்த்து ஒருபூசம் தந்தது தையே! பெருமை பற்பல படைத்து அருமை மாதம் தையே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................................................................ Thai Month: The Cultural Heart of Tamil Life Thai — the tenth month of the Tamil calendar, spanning mid-January to mid-February — occupies a unique place in Tamil hearts and culture. It is more than a month; it is a season of harvest, gratitude, renewal, and social and spiritual renewal. Following the Northeast Monsoon, Tamil lands are full of rain-fed rivers and ponds during Maargazhi (mid-December to mid-January). The waters, muddy and cold, symbolize abundance yet caution; when Thai arrives, the waters settle, becoming clear and glass-like — perfect for ritual bathing, prayer, and quiet contemplation of one’s thoughts, intentions, and life. At the center of Thai’s cultural prominence lies Thai Pongal, a festival of thanksgiving to nature. ‘Pongal’ literally means “to boil over,” symbolizing abundance and prosperity. Families gather at dawn to cook rice with milk and jaggery, offering it to the Sun God, Sūrya, and honoring farm animals, water, and the land. The festival is secular in essence, rooted in agriculture and community well-being, and has been celebrated since at least the Sangam period (c. 500 BCE–300 CE), continuing through the Cholas, Pallavas, and modern Tamil society. Thai also marks a time for personal vows and renewal, where individuals commit to discipline, charity, and spiritual or practical resolutions. In villages, Thai strengthens social bonds: neighbors share Pongal, exchange harvest stories, and participate in communal prayers. Migrants around the world continue these rituals, reinforcing cultural memory and social continuity. Historically, Thai is linked with rituals for women’s prosperity and marital harmony. Ancient texts, especially Paripaadal, describe Paavai Nonbu and Thai Neeraadal, rituals observed by young unmarried women for good husbands, lasting love, and social prosperity. Women created symbolic figures on riverbanks, offered flowers, and bathed in the morning waters, accompanied by friends and mothers. This 2,000-year-old tradition exemplifies early South Indian women’s agency and ritual life, later immortalized in Aandaal’s Thiruppavai and Manickavaasakar’s Thiruvempaavai. Thai follows Maargazhi, the harvest month, when families have stored sufficient resources to celebrate weddings. This economic and ecological timing explains the adage: “Thai pirandhaal vazhi pirakkum” — “When Thai is born, paths open.” The phrase reflects not only hope but practical alignment of nature, labor, and human planning. Unlike Chithirai, associated with love festivals and Indra Vizha, Thai functioned as a true season of social and spiritual renewal and new beginnings. Agriculturally, astronomically, and ritually, Thai aligns with the sun’s northward journey into Makara Rasi (Capricorn), signaling longer, warmer days, and a psychological sense of new beginnings. Literature from the Sangam period to the Bhakti age repeatedly celebrates Thai — from Kurunthokai and Natrinai to Kalithokai, Purananuru, and Paripaadal — emphasizing harvest abundance, community celebration, ritual bathing, and aesthetic enjoyment of seasonal cycles. In these texts, rivers, ponds, and women’s ritual dances symbolize purity, social continuity, and the harmony of human and natural rhythms. Thai is thus a month of cultural, ecological, and spiritual convergence. It celebrates the farmer’s labor, the sun’s light, women’s agency, and the collective joy of Tamil communities. Rituals, poetry, and festivals of Thai, from Sangam to modern times, connect Tamils to their land, history, and social values. The month encourages reflection, gratitude, and renewal, making it the most cherished of all Tamil months. After ascetic rites in rushing streams, It is Thai that joins two lives as one. Offering Pongal to every home, It is Thai that grants a festival of abundance. Adorning Murugan with sacred beauty, It is Thai that gives the holy Thaipusam. Bestowing honour in countless ways, Thai stands — a month of rare and noble grace. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1989 [“தை மாதம்: தமிழர் வாழ்வின் பண்பாட்டு இதயம்” https://www.facebook.com/groups/978753388866632/posts/33252230694425483/?
  20. காற்றுப் பை விரிவடைந்தமைக்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை. இத்தகைய வாகனங்களை நம்பி எப்படிப் பயணம் செய்கிறார்கள்?
  21. உணவுப் பாத்திரத்தில் இருக்கும் அலுமினியம் அமில உணவுகளைச் (தேசிக்காய்ப் புளி, மரப்புளி) சமைக்கும் போது சிறிது உணவுடன் சேரலாம். இதை leeching என்பார்கள். ஆனால், அப்படி உணவுடன் சேரும் அலுமினியம் உடலில் இருந்து அகற்றப் படும் அளவுக்கு மிகவும் குறைவான அளவு தான். இந்த அலுமினியத்தால் மூளை, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இன்னொரு விடயம், அலுமினியம் மண்ணிலும், தண்ணீரிலும் கூட இயற்கையாக இருக்கும் ஒரு உலோகம். மண்பானையில் இருந்து அலுமினியம் உணவுக்குள் கசியாதா? யாராவது இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? மற்றபடி, மண்பானையில் சமைப்பதும் தண்ணீர் பரிமாறுவதும் தனிப் பட்ட விருப்பங்கள்.
  22. ஊருக்கு போய் சொகுசு வீட்டை கட்டியபின் வெளி நாட்டில் இருந்து zoom மூலமும், CCTV மூலமும் சதா கண்காணித்து கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு இது பற்றி அறிய முடியாதா?
  23. நல்லதொரு முயற்சி. இந்த முனைப்பு வெற்றியளிக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.