Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. காலம் காலமாக பரம்பரம்பரையாக வாழும் ஒருவனை அந்த இடத்தில இருந்து துரத்தும் உங்கள் எண்ணங்கள் அதைவிட வினோதமானது மட்டுமல்ல விசித்திரமானதும்
  3. இந்த AI காலத்திலும் எவ்வளவு கருத்து வரடசியில் இருக்கிறார்கள்? தலைப்பு சார்ந்து ஒரு கருத்தை பதிய ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை? இந்த யாழ்களத்தை இப்படி கேவலம் ஆக்கியதை தவிர இதனால் யாருக்கு என்ன லாபம்? சைகொலோஜி ரீதியாக இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்
  4. Today
  5. யாழில் மகளிர் கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம் 1995/04/13 இடமிருந்து... முதலாவது: கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி - அலுவல்சார் முதற் பெண் கரும்புலி, முதற் பெண் கடற்கரும்புலி, முதல் நீரடி நீச்சல் கரும்புலி, முதற் பெண் நீரடி நீச்சல் கரும்புலி. நடு மற்றும் கடைசி முறையே: கடற்கரும்புலிகளான லெப் கேணல் நளாயினி மற்றும் மேஜர் மங்கை - முதற் பெண் நீர்மேற் தாக்குதல் கடற்கரும்புலிகள். ============================
  6. கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நினைவாலயம் யாழ்:- 1/11/1994 ========================= திறப்பு விழாவில் 'புலிகளின் குரல்' பொறுப்பாளர் ஜவான் கலந்துகொண்டார்
  7. மேலே சொல்லப்பட்டுள்ள “மேற்கு” என்ற ஒற்றை பதமே காலாவதியான ஒண்டு. நமது அண்ணர் 2024 க்கு பின் அப்டேட் ஆகவில்லை போலுள்ளது. அண்மையில் வந்த அமெரிக்க பாதுகாப்பு மூலோபாய ஆவணம் - தற்போதைய ஐரோப்பாவை கடுமையாக சாடி ராஸ்யாவை அரவணைக்கிறது. ரஸ்யாவும் அதை வரவேற்கிறது. டிரம்ப் புட்டின் கைப்பாவை இதன் அடிப்படையில் இப்போ அமரிக்கா+ரஸ்யா சேர்ந்து உக்ரேனை விழுங்க முனைகிறனர். ஐரோப்பா தனித்து விடப்பட்டுள்ளது. யூகேயும் அதேதான். இதுதான் இப்போ உலக ஒழுங்கு. இன்னும் பழைய மேற்கு கிழக்கு பதங்களை பாவிப்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
  8. அடடா.. இப்படி ஒரு மகிழ்வான விடயம் நிகழ்ந்ததை கவனிக்காமல் விட்டு விட்டேன். தமிழ் சிறி (தாத்தாவுக்கும்)க்கும், மகள் யாழினிக்கும் (நல்ல அழகான பெயர்), பேத்தி சிவானிக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
  9. வாழ்த்துக்கு நன்றி ஏராளன். என் பெயரை பண்ணியமையால் தான் இந்த திரியே என் ஞாபகத்துக்கு வந்தது. நன்றி யாயினி. என் அம்மாவுக்கு 80 வயது. அனேகமான இரவுகளில் புட்டும் மாம்பழமும் சீனியும், அல்லது புட்டும் வாழைப்பழமும் சீனியும் தான் சாப்பிடுவார். இன்று வரைக்கும் நீரிழிவோ 'சுகர்' பிரச்சினையோ இல்லை. சேயும் தாயின் வழி 😄 நன்றி ரசோ நன்றி அண்ணா நன்றி சுவைப்பிரியன். விரைவில் உங்களை ஊரில் வந்து சந்திக்க விருப்பம். அடுத்த வருடம் பார்ப்பம்.
  10. சுமந்திரனுக்குக் கிடைக்கவிருக்கும் இந்த "ஆத்மீக" ஆதாயம் பற்றியும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்😎! ஒன்று மட்டும் புரிகிறது: பல "ஈழத்தமிழ் தேசியர்களின்" மெல்லிய மேல் பூச்சைச் சுரண்டி உண்மையான வர்ணத்தை வெளிக் கொண்டுவரும் வேலையைச் செய்யவாவது சுமந்திரன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்!
  11. சரியான நேர்வழிப் புரிதல். ஆனால், உக்ரைனை "நேட்டோ உறுப்பினருக்கு வழங்கும் பாதுகாப்புக்கு ஒத்த (Article 5-like) பாதுகாப்பு " தருவோம் என்று ஏமாற்றும் வேலையை ட்ரம்ப் செய்வார் என நினைக்கிறேன். எப்படி? Article 5/சரத்து 5: ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்கப் பட்டால் நேட்டோ பதில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி செய்கிறது. Article 4/சரத்து 4: அப்படியாக ஒரு உறுப்பு நாடு தக்கப் பட்டால் அது நேட்டோ பதில் வழங்க வேண்டிய தாக்குதலா என்று ஆலோசனை நடத்த வேண்டுமென்கிறது. ஹங்கேரி, துருக்கி ஆகிய இரு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் நேட்டோவில், உக்ரைனுக்காக சரத்து 5 இனை அமல் செய்ய ஆலோசனை செய்தால் என்ன பலன் இருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.
  12. அப்படியானால் செலன்ஸ்கி என்ற நவ நாசியை ஆட்சியில் இருந்து அகற்ற "விசேட நடவடிக்கை" என்று சொன்னது, அதை இங்கே புரின் புரியன் மார் தலை மேல் தூக்கித் திரிந்தது, எல்லாம் வெறும் புருடாவா😂?
  13. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
  14. இந்த. மனிதன். பகலில். ஒரு வேலையை. தேடி. எடுத்து. செய்திருக்கலாம். இரவில். வீட்டிலிருந்து. இருக்க. முடியும். விரும்பிய. எல்லாம். கிடைத்து. இருக்கும்
  15. நீரிழிவு நோய் வந்து விடும் என்றா அல்லது தலை பிளந்து விடுமென்றா என்றா அப்படி நினைக்கிறீர்கள்?
  16. ஏதோ அமெரிக்கன் பிளேன் தாங்கள் தாங்கள் தான் அரேஞ் பண்ணி அங்கை போக வைச்ச கணக்கிலை ஒரு கதை. இந்த அமெரிக்க கப்பல் வருகுது எண்டு புரளியை கிளப்பி தானே நம்பிக்கையை ஊட்டி மக்களை முள்ளிவாய்கால்ல இருந்து வெளியேற விடாமல் பலி கொடுத்தவயள்.
  17. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 65 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 65 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 2 புத்தரின் குலத்தைப் பற்றியது, இலங்கையில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகள் பற்றியது அல்ல. புத்தரின் உடனடி முன்னோர்களின் பெயர்கள் மற்றும் அவரது தந்தையின் சகோதரர்களின் பெயர்களும் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாயா அல்லது மகா மாயா [Maya] என்பவள் சித்தார்த்தாவின் [Siddhattha] தாய் என்றும், புத்தர் பிறந்த சில நாட்களில் மாயாதேவி இறந்து விட்டதால், வளர்ப்புத் தாயாக, பஜாபதி [மகாபிரஜாபதி கௌதமி /Mahāprajāpatī Gautamī / Mahāpajāpatī Gotamī or Pajapati] பராமரிப்பாளர் ஆனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா பத்தகச்சனை [யசோதரை / Yaśodharā or Yashodhara or Bhadrakātyāyani] மணந்தார், ராகுலன் [Rahula] அவர்களின் மகன், 2-24 இல் போதி சத்துவராகிய [Bodhisatta / அதாவது "அறிவொளிக்கான அல்லது ஞானத்துக்கான பாதையில் இருப்பவர்" - அடிப்படையில் மற்றவர்கள் அறிவொளியை அடைய உதவுவதற்காக தங்கள் சொந்த நிர்வாணத்தை தாமதப்படுத்துவதன் மூலம் புத்தராக மாற முயற்சிப்பவர்; இது பௌத்தத்தில் ஒரு முக்கிய கருத்தாகும்.] இளவரசர் சித்தார்த்தருடைய ராணி [மனைவி] பத்தகச்சனா; அவரது மகன் ராகுலா என குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், "The harvard oriental series volume 28 buddhist legends" என்ற புத்தகத்தில், பக்கம் 2 இல் சித்தார்த்தா தனது பத்தொன்பது வயதில் தனது உறவினரான யசோதராவை மணந்தார் என்று கூறுகிறது. வேறு சில ஆவணங்களின் படியும் யசோதரா என்பது சித்தார்த்தாவின் மனைவியின் பெயராகத் தெரிகிறது. என்றாலும், சித்தார்த்தாரின் மனைவியின் பெயர் பத்தகச்சனாவா அல்லது யசோதராவா என்பது முக்கியமல்ல. இருப்பினும், இந்த முரண்பாடுகள் நாளிதழிலில் உள்ள வேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகின்றன. கௌதம புத்தரின் சரியான பிறப்பு மற்றும் இறப்பு தேதிகள் நிச்சயமற்றவை, ஏனெனில் வெவ்வேறு புத்த மரபுகள் அவற்றை வித்தியாசமாக பதிவு செய்துள்ளன. அவைகளில் இரண்டு முக்கிய காலக்கெடு: [1] நீண்ட காலவரிசை ["long chronology"] / இலங்கை & தென்கிழக்கு ஆசியா: இது இலங்கை வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டது (சூளவம்சம் அல்லது சூலவம்சம் மற்றும் மகாவம்சம் போன்றவையை / as per the Culavamsa, the continuation of the Mahavamsa.). பேரரசர் அசோகரின் முடிசூட்டு விழாவுக்கு 298 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் பிறந்தார், அதற்கு 218 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார், மற்றும் கிமு 326 இல் அசோகர் அரசரானார் என்று இந்த நூல்கள் கூறுவதால், புத்தரின் தேதிகள்: பிறப்பு: கிமு 624 மரணம் (பரிநிர்வாணம் / parinirvana): கிமு 544 [பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்] [2] குறுகிய காலவரிசை ["short chronology"] / இந்திய மற்றும் திபெத்திய ஆதாரங்கள்: புத்தர் அசோகரின் முடிசூட்டுக்கு 180 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார், அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார், மற்றும் கிரேக்க பதிவுகளின் அடிப்படையில், அசோகரின் உண்மையான முடிசூட்டு விழா கிமு 268 இல் நடந்தது எனக் கணிக்கப்பட்டது. இதனால் புத்தரின் தேதிகள்: பிறப்பு: கிமு 448 இறப்பு: 368 கி.மு எதுவென்ன வென்றாலும், பொதுவாக, பாரம்பரியமாக, கி மு 544 ஐ எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே இலங்கை, மியான்மர் மற்றும் இந்தியாவில், புத்த சகாப்தத்தை (BE) ஆண்டு 1 அல்லது கிமு 544 என தேதியிடுகிறது. அதாவது பிந்தைய தேதியிலிருந்து புத்த சகாப்தத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதேவேளை, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸில், அதை ஆண்டு 0 அல்லது கிமு 543, எனக் கணக்கிடுகிறார்கள். எனவே, சுருக்கமாக, இலங்கை பாரம்பரியத்தின் படி: புத்தர் கிமு 624 இல் பிறந்தார். 35 வயதில் (கிமு 589) ஞானம் அடைந்தார். கிமு 544 இல் காலமானார். இது புத்த நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. Part: 65 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The chapter2 is about Buddha’s clan and not about any real historical events that took place in Lanka. The names of the Buddha's immediate forefathers and the names of his father’s brothers are also given in this chapter. Maya was the mother of Siddhattha and she died soon after the marriage and Pajapati became the caretaker mother. Siddhattha married Bhaddakaccana and Rahula was the son, 2-24 [24 The consort of the prince Siddhattha, the Bodhisatta, was Bhaddakaccana ; her son was Rahula.]. However The Reference "The harvard oriental series volume 28 buddhist legends" says on page 2 that Siddhattha married his cousin Yasodhara when he was nineteen years of age. Yasodhara seems to be the name of the wife of Siddhattha as per some other documents too. It is not very important whether the name of the wife of Siddhatta is Bhaddakaccana or Yasodhara. However, these anomalies are there to indicate the deficiencies in the chronicle. The dates of Gautama's birth and death are uncertain. Buddhist texts present two chronologies which have been used to date the lifetime of the Buddha. The "long chronology," from Sri Lankan chronicles, states that the Buddha was born 298 years before the coronation of Asoka, and died 218 years before his coronation. According to these chronicles Asoka was crowned in 326 BCE, which gives the dates of 624 and 544 BCE for the Buddha [as per the Culavamsa, the continuation of the Mahavamsa.] which are the accepted dates in Sri Lanka and South-East Asia. Indian sources, and their Chinese and Tibetan translations, contain a "short chronology," which place the Buddha's birth at 180 years before Asoka's coronation, and his death 100 years before Asoka's coronation. Following the Greek sources of Asoka's coronation, this dates the Buddha at 448 and 368 BCE. So, According to the traditional dating the Buddha was born in 624 BC, attained Awakening 35 years later in 589 BC and entered Parinibbāna in 544 BC. It is from the latter date that we take the Buddhist Era (Thailand, Cambodia and Laos date it as year 0 or BC 543, Sri Lanka, Myanmar and India as year 1 or BC 544). நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 66 தொடரும் / Will follow துளி/DROP: 1942 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 65 https://www.facebook.com/groups/978753388866632/posts/32853127131002510/?
  18. முன்னரே சொன்னதுதான். உங்கள் சிந்தனை தெளிவு பிரமிக்கத்தக்கது.
  19. எனக்கு பிடடு கட்டியாக உள்ளது என்று கொத்து விழாமல் இருந்தால் சரி.எதுக்கும் நன்றாக கொத்துவம்.
  20. எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும். மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது. சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும். நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா? எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும். அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம். 200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா? இல்லவே இல்லை. மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள். 1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான். இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும். ஆனால்…. “என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?” எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.
  21. என்ன. மாற்றம். எற்ப்பட்டு. உள்ளது. ? நோட்டோ. என்பது. மேற்கு. நாடுகளின் பாதுகப்பு. கூட்டமைப்பு. நோட்டோ. வில. இணையவில்லை. மேற்கு. நாடுகள். பாதுகப்ப. உத்தரவாதம். தரவேண்டும். என்றால். என்ன ? அதாவது. நோட்டோ. பாதுகப்பு. தரவேண்டும். என்பது. தான். உறுப்பு. நாடுகளுக்கு. மட்டும். தான். நோட்டோ. பாதுகப்பு. வழங்கும் ஆகவே. பாதுகப்பு. வேண்டுமென்றால். நோட்டோ. இல். அங்கம். வகிக்க. வேண்டும்
  22. உள்ளுருக்குள் நடக்கும் மீனவர்களின் ஒன்று கூடல்களுக்கு போய் அடிவாங்க முடியாத அடிமை அரசியல்வாதிகள் எஜமானர்களிடம் ஓடிசென்று ஒப்பாரி வைக்க போகினம் போல் உள்ளது . அந்த மீனவர்கள் சொல்வது போல் யாழில் வேலை வெட்டி இல்லாமல் ஏன் இந்திய தூதரகம் இருக்கு ? போதைபொருள் கடத்தலை ஒழுங்கு பண்ணி யாழ் இளையோர்களுக்கு வழங்கலை செய்யவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.