All Activity
- Past hour
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஆமா…இந்த எட்டு கோடி உலக தமிழினத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் இலக்கியம் படைக்கிறார்😂. இவருக்கு மட்டும்தான் எது இலக்கியம், எது குப்பை என பிரித்தறியும் ஆற்றல் உள்ளது😂. இவர்தான் தமிழ் இலக்கியத்தை காப்பாத்த வேணும் - இந்தியாவிற்கு எடுத்து சொல்ல வேண்டும். போய்யா அந்த பக்கம் எரிச்சல் பிடிச்ச மனுஷா. புளித்த மாவுக்கு தோசை சுடும் அடிதட்டு பெண்ணோடு மல்லுகட்டிய gutter dweller , தமிழனுக்கு பாடம் எடுக்க வந்துட்டார்😂.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும் - ஈரான் 18 Mar, 2026 | 04:42 PM ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (18) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானும் அந்த தகவலை உறுதிப்படுத்தியது. அத்துடன் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான பசிஜ் படைத் தலைவர் கோலம்ரேசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதில் கடுங்கோபத்தை வெளிப்படுத்திய அந்நாடு, இஸ்ரேலின் தாக்குதலில் அலி லாரிஜானியும் கொல்லப்பட்டதில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதோடு, தீவிரமாக தனது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி கூறுகையில், “அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரானின் பதில் எதிரிகளுக்கு தீர்க்கமானதாகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த உயரிய தியாகியின் ரத்தத்துக்கும் பிற மதிப்புக்குரிய தியாகிகளின் ரத்தத்துக்கும் பழிவாங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு இராணுவ தளபதியான அலி அப்துல்லாஹி, “ஆயுதப்படைகளின் பதில் நடவடிக்கை எதிரியின் செயற்பாடுகளையம் கற்பனையையும் விடப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காத்திருக்கவேண்டும். எதிரி சரணடையும் வரை இந்தப் பாதை தொடரும்” என்றார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஈரான் அரசு என்பது நன்கு நிறுவப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தாக்குதல்களில் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும் எங்களது அரசியல் அமைப்பை சீர்குலைக்க முடியாது. நாட்டின் ஆட்சி முறை தனிநபர்களை சார்ந்திருக்காமல், வலுவான நிறுவனங்களை சார்ந்தே இயங்குகிறது...” என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரான் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/241305
-
நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்!
நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்! 18 Mar, 2026 | 11:02 AM நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (16) மைதுகுரியில் உள்ள தபால் நிலையமொன்றுக்கு அருகில் முதலில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலின் பின்னர் மக்கள் அப்பகுதியிலிருந்து வெவ்வேறு திசைக்கு பாதுகாப்பு தேடி ஓடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர் சந்தைப் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. அதனையடுத்து, மைதுகுரி பல்கலைக்கழக வைத்தியசாலை நுழைவாயில் பகுதியிலும் தொடர்ந்து கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மைதுகுரியில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு “போகோ ஹரம்” என்ற பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தற்போது மைதுகுரி நகரம் முழுவதும் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் போகோ ஹரம் என்ற பயங்கர அமைப்பினை ஒடுக்க முன்னதாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241263
-
-
இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு
இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு Mar 18, 2026 - 12:28 PM அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvow92m0009356pvjk8amp3
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
ஒற்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்! Mar 18, 2026 - 11:47 AM நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvnfi470007356po4jicnh0
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
போலி அறச்சீற்றம் By ஆர். அபிலாஷ் March 15, 2026 ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள விழைகிறார். சாகித்ய அகாடெமி, ஞான பீடம் ஆகியவற்றில் தீர்மானிக்கும் சக்தியாக தானே இருக்க வேண்டும் எனச் சொல்வதிலும், இவற்றைவிட உயர்ந்த விருதை அளிக்கும் அதிகாரம் மிக்கவர் தாம் எனக் காட்டிக் கொள்வதிலும் அவருக்கு ஒரு சந்தோஷம். ஆனால் இதில் என்ன பெருமை உள்ளது? குருமூர்த்திக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? அதிகாரத்தை அதிகாரத்தால் வெல்ல வேண்டும் என்பதே கீழ்மையான பார்வை. இது ஒரு எழுத்தாளரின் வேலை அல்ல. இதனாலே ஜெயமோகனின் அறச்சீற்றம் போலியானது என நினைக்கிறேன். ஒருவர் தான் நம்புகிற ஒன்றுக்காகவோ அதற்கு எதிராகவோ லாபி செய்யும்போது அவர் அந்த ஜனநாயகமான கட்டமைப்பை சிதைக்கிறார். வைரமுத்து வாங்கிவிடக் கூடாது தங்கமுத்து வாங்க வேண்டும், அதற்காக நான் காய் நகர்த்துவேன் என முயல்வதே ஜனநாயக விரோதமான நடவடிக்கைதான். ஏனென்றால் அதன் பிறகு அப்படைப்பாளியே ஒரு தனிநபரின் முயற்சிகளின், ஆளுமையின் செல்வாக்கினால் மதிப்புறுகிறவர் ஆகிறார்; அவர் தன்மதிப்பை இழக்கிறார். ஒருவர் லாபி செய்து ஒன்றைப் பெறுவதைவிட அதை வாங்கித் தருவதைத் தகுதியாக மற்றொருவர் கருதுவது இன்னும் ஆபத்தானது. தனியார் விருதோ அரசு விருதோ ஒரு படைப்பு தன் தகுதியால், தேர்வுக்குழுவின் மதிப்பீட்டால் வெல்ல வேண்டும். அதற்கான இடைஞ்சலற்ற, நியாயமான நடைமுறையை உருவாக்கவே முயல வேண்டும். நம் அதிகார விளையாட்டுக்கு, உட்கட்சி மோதலுக்கு அதை இரையாக்கப் பார்க்கக் கூடாது. https://www.writerabilash.in/2026/03/blog-post_71.html
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணோடு பார்க்கும் மோகம் ....... முத்துராமன் & மஞ்சுளா..........! 😍
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இதென்ன பைபிள் கொடுத்தா இந்திரன், பைபிள் கொடுக்காட்டில் சந்திரன் எண்டு ஒரே தில்லு முல்லா கிடக்கு. இஸ்லாம், கிறிஸ்தவத்தில் சில பிரிவுகள் மதம் பரப்புவதை ஒரு கடமையாக சொல்லிறன. இந்த பணிப்பாளர் இப்படி ஒருவராக இருக்கலாம். ஆனால்… அரச கல்விகொள்கைக்கு அப்பால் அதிகாரிகள் விருப்பபடி எல்லாம் பள்ளிகளில் புத்தகம் வினியோகிக்க முடியாது. அப்படி நடந்தாலும் அதை பெற்றோர், பாதுகவலர் சங்கத்தினர் கேட்பார்கள். யார் இந்த் பெயர் தெரியாத இரெண்டு சங்கி மங்கிகள்? ஆட்களும் அவையின்ற பல்லும்😂. பைபிளை கொழுத்துவோம் என்ற சொற்பாவனை, சிவசேனா என்ற பெயர், இவர்களின் நோக்கம் என்ன என்பதை காட்டி நிற்கிறது. இந்த செய்தி உண்மையாக இருக்குமா ? இது இரெண்டு சங்கி மங்கியள் ஊடக வெளிச்சம் தேடி செய்யும் விடயமாகவே தெரிகிறது. அவரவர் சமய நூல்களை தவிர வேறு ஏதும் வினியோகம் ஆவதில்லை. லைபிரரியில் ஒண்டை வைக்கலாம் - ஆர்வம் உள்ளோர் தேடி வாசிக்க.
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
அமெரிக்க தேர்தல் நேரம் ட்றம்ப் ஏன் ஆட்சிக்கு வரக் கூடாது என்று சக உறுப்பினர்கள் எழுதியதையெல்லாம் புறம் தள்ளி, ட்றம்ப் ஆட்சிக்கு வந்தால் உலகிற்கே நல்லது சமாதானம் ஏற்படும் என்றெல்லாம் வாதாடியவர் நீங்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதத்திற்குள் உலகமே அவஸ்தைப்படுகிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
- Today
- மீண்டும் எழுதப்படுமா எம்ஜிஆர் வரலாறு?
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
2026 வளருமா, வளராதா? (வளர்வது எல்லாமும் நல்லது அல்ல புற்றுநோய் கட்டியும் வளரும்).
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .....! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே ஆண் : குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது அது கனிந்து இசையானது குயில் மகளின் குரலானது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது இனிக்கும் தேனே எனக்கு தானே......! --- பூவே இளைய பூவே ---- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ரஸ்ய வங்கி வட்டி வீதம் சென்ற வருடம் 22 வீதம் வரை உயர்ந்தது. வங்குறோத்தான நாடுகளிலேயே இந்த அளவு வட்டி வீதம் சாத்தியமாகும். முதலீடுகளை அதிகரிப்பதற்காக சிரமப்பட்டு இந்த வருடம் 16-17 வீதத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கான விலையைப் பணவீக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இந்த ஹெலிகப்ரர்கள் 60-70 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பாவனையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டவை.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
உந்த ஹெலி பறக்கிற படமொன்றையும் காணேல்லை ....... எல்லாம் கராஜ்சுக்குள்ளும் லொறியிலும்தான் நிக்குது . ......! 😀- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? அது இந்திய இலங்கை விசுவாசிகளை மகிழ்விப்பதற்காக சொல்லபட்ட தமிழ்யுரியுப் செய்தியாக தான் இருக்கும்- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரினால் அங்கே ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கடுமையாக ஒடுக்கபடுகின்றார்கள் மக்களை ஒருங்கிணைக்கும் எதிர்கட்சி தலைவர்கள் மாடியில் இருந்து தள்ளி விடப்படுவார்கள் அல்லது தேநீரில் விசம்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
காணவில்லை. வளருமா.? வருமா. ? தமிழ்நாட்டில். எவன். முதல்வரால். தான். என்ன. ? நல்ல. ஆட்சி. சட்டத்தின். ஆட்சி. அமையாது. ஊழலை. அளிப்பது. ரொம்ப. கடினம்.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இலங்கை நோக்கி வரும் அமெரிக்கா வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள்! 18 Mar, 2026 | 11:57 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட TH-57 Sea Ranger ரக 10 ஹெலிக்கொப்டர்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஹெலிக்கொப்டர்கள், கடந்த 15ஆம் திகதி அலபாமா மாநிலத்தில் உள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவ பதிப்பாகிய இந்த ஹெலிக்கொப்டர்கள், இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் Bell 206 ரக விமானங்களுடன் இவை இணைவதன் மூலம் விமானப்படையின் செயல்திறன் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய ஹெலிக்கொப்டர்கள் மூலம் மேம்பட்ட விமானி பயிற்சி நடவடிக்கைகள், பேரிடர் கால அவசர மீட்புப் பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பொது பயன்பாட்டு சேவைகள் எனப் பல முக்கிய துறைகளில் திறன்கள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த ஹெலிக்கொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த அன்பளிப்பு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை விமானப்படையின் உயர்மட்ட குழுவொன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து, இந்த ஹெலிக்கொப்டர்களை நேரில் பார்வையிட்டு, கப்பல் மூலம் அனுப்பும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்த பெறுமதிமிக்க உதவிக்காக இலங்கை அரசு அமெரிக்காவிற்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளதாகவும் தூதுவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241269- இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!
எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன Mar 18, 2026 - 10:19 AM திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டுக்குள் எரிவாயு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், தற்போதுள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். "எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. அவற்றில் சில சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு களஞ்சியசாலைகளில் உள்ளன. ஏனையவை மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. நாம் மேலும் ஒரு எரிவாயு கப்பலை ஓடர் செய்துள்ளோம். அதன்படி நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் கிடைக்கவுள்ளது. எனவே, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படாது. அடுத்ததாக ஏப்ரல் 21-23 காலப்பகுதியில் எரிவாயு வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் அடுத்த கப்பலை அவர்கள் எமக்கு வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம். எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு," என அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmvk9a2i0001356paqurd7xc- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் வருகிறது. மாறாக கூட்டணிவைத்த கட்சிகள் தேய்ந்து கொண்டு வருகின்றன.காலம் பதில் சொல்லும்.- ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: ஈராக்கின் இணக்கப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியது 18 Mar, 2026 | 10:36 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இன்று புதன்கிழமை (18) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெண்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 67 சதவீதத்தால் (0.65%) வீழ்ச்சியடைந்து 102.75 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (17) இதன் விலை 3 சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், இன்று இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1.18 டொலர்களால் (1.23%) வீழ்ச்சியடைந்து 95.03 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. துருக்கியின் செய்ஹான் துறைமுகத்தினூடாக மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கும் குர்திஷ் அதிகாரிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241256 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.