Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by tamilbiththan,

    .avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்

  2. சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5282440.stm

    • 14 replies
    • 3.8k views
  3. குறித்த தோல்புற்றுநோயிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நோயாளி புற்றுநோய்க்கு (Cancer) எதிரான பிறப்புரிமை அலகுச் சிகிச்சை (Gene therapy) வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிலையம் அறியத்தந்துள்ளது. இச் சிகிச்சை முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 பேரில் இரண்டு பேருக்கு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களின் பின் முற்றாக குறித்த நோயில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சிகிச்சை முறையானது ஜீன் திரபி (Gene therapy) முறையில் அமைந்திருந்தது. இதன்படி உடலில் உள்ள ஒருவகை நிர்ப்பீடனக் கலமான (immune cell) ரி செல்களினுள் (T cell) வைரஸ் ஜீன் காவிகளைப் பயன்படுத்தி (virus gene carring vector) றிசப்பற்றர் ஜீன் (receptor gene) புகுத்தப்பட்ட…

  4. Started by arun,

    wmv இல் உள்ள பாடலை ஐ 3gp or mp4 க்கு மாற்றுவது எப்படி

    • 6 replies
    • 3.4k views
  5. விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர…

  6. அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் கார ணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய் கிறார்கள். அதே விஷயத் தில் வேறு சிலர் நிதா னத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆëய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு முக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என…

  7. பாதுகாப்பாக வாழ சந்திரன் போங்க... இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:- பூமி கனலாக மாறும் நிலை சமீபத்தில் உருவாகி உள்ளது. அணு யுத்தம், விரோதி நாடுகள் வைரசை உண்டு பண்ணி தூவுதல், திடீரென பூமி மிகவும் வெப்பமாகி மனித இனங்களை அழித்தல், இன்னும் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் பூமியில் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பூமியை மட்டும் நம்பி இருந்தால் மனித இனம் அழிந்து விடும். மனிதன் தனது இனத்தை காப்பாற்ற இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு சென்று குடியேற பழகிக் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளில் அங்காரக கிரகத்திலும் மனிதன் வாழும் நிலை ஏற்படலாம். பூமியில் வாழ்வது ஆபத்தான விஷயம். சந்திரனில் வசிப்பது மிகவும் சாத்தியமான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார். …

    • 0 replies
    • 1.2k views
  8. பிறப்புரிமையியல் பரம்பரைத் தகவல்களை விலங்குகளில் காவுவது தாய் மற்றும் தந்தையில் இருந்து வரும் புணரிக்கலங்களில் உள்ள டி என் ஏ (DNA) என்பது யாவரும் அறிந்ததே..! தற்போது டி என் ஏ வகையினை ஒத்ததும் புரதத் தொகுப்பில் பங்கு வகிப்பதுமான ஆர் என் ஏயும் (RNA) எம் ஆர் என் ஏ (mRNA) வடிவில் பரம்பரை அலகுக்குரிய இயல்புகளை காவுவதாக ஓர் அரிய ஆர்ச்சரியத்துக்குரிய ஆய்வுத்தகவலை நேச்சர் (Nature)வெளியிட்டுள்ளது..! இது குறித்து ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்கள் கீழுள்ள முகவரியில் மேலதிக தகவலை ஆங்கிலத்தில் அறியலாம்..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5011826.stm மீண்டும் அவசியம் தேவை கருதின் சந்திக்கும் வரை செய்திகளுடன் குருவிகள்..!

  9. தயவுசெய்து யாராவது இதை தமிழில் மொழிபெயர்த்து தரமுடியுமா? Direct Callback You can choose to make your VoipCheap calls via your regular phone with the Direct Callback feature. Just enter your home or mobile phone number in the Direct Callback field of the application. You can now decide with each call if you want to place it via the application OR take your call on your regular phone. With the Direct Callback feature checked, the application will first dial your regular phone number. As soon as you have picked it up, a connection with the number you want to call will be made. The big advantage is that you can make your cheap VoipCheap calls on your nor…

    • 5 replies
    • 2.9k views
  10. 100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies) தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள். அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது. http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp

  11. இணையத்தில் எழுத்துவடிவிலான தகவலை விளம்பரத்தி அறிவிக்கும் RSS முறைபோல் ஒலிவடிவில் தகவல்களை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் முறை pocast. http://en.wikipedia.org/wiki/Podcast www.Podcast.net www.ipodder.org

  12. பொதுவாக கடைகளில் கிடைக்கக் கூடிய சாதாரண பொருட்களில் இருந்து ரேடியோவினால் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் மொடல் விமானங்களை வடிவமைப்பதற்குத் தேவயான வரை படங்களும்,ஆலோசனைகளும் இந்த இணயத்தளத்தில் உண்டு. நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம். S.P.A.D. is a concept of R/C plane construction that took off in the late 90's. It focuses on using inexpensive materials found at hardware stores and sign shops in conjuntion with simple construction methods to get you in the air quickly! Oh yeah, and the plans are FREE! http://www.spad.org/

    • 0 replies
    • 1.5k views
  13. கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின். ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன் நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்த…

    • 10 replies
    • 2.9k views
  14. இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோ…

    • 1 reply
    • 1.7k views
  15. வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: ஜெர்மனி சாதனை ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். அறிவியல் ஆய்வுகளைச…

    • 3 replies
    • 2.3k views
  16. ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள். சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு - கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ - வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ - வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் - நமது சென்னையை நாசமாக்க - வெளிப…

    • 3 replies
    • 2.1k views
  17. அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி. ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் ந…

  18. மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் -மதன் இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது! வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும். தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்! ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது! சுறாக்கள…

  19. பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்? சென்னை: பறவைக் காய்ச்சல் நோய் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் வீண் வதந்திகளை கேட்டு பீதி அடையாமல், நோய் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது. பறவைக் காய்ச்சல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு: * பறவைக் காய்ச்சல் என்பது என்ன? "ஏவியன் இன்புளூயன்சா' என்பது இதன் மருத்துவப் பெயர். எளிதில் பரவக் கூடிய இந்த தொற்றுநோய் பறவைகளின் சுவாச உறுப்புகள், வயிறு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதித்து ஒட்டுமொத்த செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை அதிகம் பாதிக்கக் கூடியது. இத்தாலியில் 1878ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது. * பறவைக…

  20. குக்கரில் பொங்காத பால் குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை. பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை. சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நி…

  21. உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள், நஞ்சாக்கம் என்பன பல்வேறு நோய்களும், இறப்புக்களும் ஏற்பட காரணமாக இருக்கிறன. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பக்ரீரியா, பங்கசு, (பூஞ்சணம்), அமீபா, அல்லது வைரசுக்களாக இருக்கலம். இவை மனிதரில் நேரடியாகவோ அல்லது நச்சு பொருட்களை சுரப்பதன் மூலமோ பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துகிறன. பெரும்பாலான உணவு பொருட்கள் இலகுவில் பழுதடையும் இயல்புடையதாகவும், நோயாக்கும் நுண்ணங்களின் மாசாக்கமும், அவற்றின் பெருக்கமும் உற்பத்தியாகும் இடம் முதல் உணவு உள்ளெடுக்கும் வரை நிகழவும், தொடர்ந்து பேணும் இயல்புடையதாகவும் இருக்கிறன. நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட நச்சு பொருட்கள் உணவு பரிகரிப்பின் போதோ/சமைக்கும் போதோ அழிக்கப்படாது மீந்து இருக்கலாம். உணவு பரிகரிப்பின் போது அழிக்க…

  22. இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் Kadapa மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் 1985 இல் கண்டறியப்பட்டதும் தற்போது Sri Lankamalleswara விலங்குகள் சரணாலயத்தில் மிக சிறிய எண்ணிக்கையில் (25) வாழுகின்றவையுமான இந்த அழகான பறவைகளை (Jerdon's courser (Rhinoptilus bitorquatus)) அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்..! குறித்த விலங்குகள் சரணாலயத்தினூடு நீர்ப்பாசனத்துக்கான கால்வாய் வெட்டப்பட இருப்பதால் இப்பறவைகளின் வாழிடம் அழிக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனா இப்பறவைகளும் உலகில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றன..! எனவே இந்தப் பறவைகளை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்..! தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ ப…

    • 9 replies
    • 2.4k views
  23. நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர். ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது. செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது. 30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாத…

    • 5 replies
    • 2.8k views
  24. Virgin Atlantic GlobalFlyer விமானம். Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer என்றும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..! தகவல் ஆதாரத்துக்கு http://kuruvikal.blogspot.com/ படம் - பிபிசி.கொம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.