Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நிலாவில் மனிதன் கால் தடம் பதித்ததில் இருந்தே அதில் மனிதன் வாழ முடியுமா என்ற சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வரும் 2015ஆம் ஆண்டு வாக்கில், நிலாவில் நூக்கல் மற்றும் துளசி செடிகளை வளர்த்து, மனிதன் நிலாவில் வாழ முடியுமா, தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளில் நிலாவுக்குச் சென்று அங்கு தரைப் பகுதியில் 5 முதல் 10 நாட்களுக்குள் வேகமாக வளரும் செடிகளான துளசி, நூக்கல் விதைகளை மண்ணில் புதைத்து எடுத்துச் சென்று, அதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து பரிசோதிக்க உள்ளனர். இந்த விதைகளை சுற்றி கேமராக்கள், உணர்வறியும் கருவிகள், செடியின் தன…

  2. மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் நீங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்க முடியும் என்பார்கள். ஒரே நாளில் குபேரனாக ஆகவிடலாம் என்று வலை வீசுவார்கள். எம்எல்எம்-ல் சேருங்கள் என்று பலரும் உங்களுக்கு ஆசை காட்டி இருப்பார்கள். அசந்தால் ஆளை விழுங்கிவிடுவார்கள். உங்களுக்கும் சபலம் தட்டத்தான் செய்யும். என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்று முயன்றுதான் பார்ப்போமே என்று நினைப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக இருக்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் கணக்கும் தெரியுமானால் இந்தக்கற்பனைக் கோட்டைக் கனவில் இருந்து தப்பித்து விடலாம். ஏமாற்றுவதையே தொழிலாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள் இந்த வழியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒதுங்கி இருப்பது எப்படி என்பதை…

  3. விண்வெளியில் குடிப்பதற்கான பீர் (Beer) தயார்! விண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. விண்வெளியில் 2016ம் ஆண்டுக்குள் ஓட்டல் அமைப்பதாகவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் குடிப்பதற்கான பீரை ஆஸ்திரேலியாவின் 4 பைன்ஸ் ப்ரூயிங் கம்பெனியும் அமெரிக்காவின் சாபர் அஸ்ட்ரானமிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. …

    • 0 replies
    • 858 views
  4. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம். ஏதோ ஒரு சூழ்நிலையையோ, பொருளையோ கண்டு பயப்படுவதற்குப் பெயர் ஃபோபியா. போபியாக்களில் பல வகை உண்டு. அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் வலம் வரும் போபியாவாக மாறிவருகிறது ரிங்டோன் போபியா என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம். “நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்க…

  5. 50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜான்வி மூலே பதவி,பிபிசி மராத்தி 29 ஜனவரி 2023, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DAN BARTLETT VIA NASA வானில் ஒரு புதிய விருந்தாளி பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பச்சை நிற வால் நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்குகிறது. இதற்கு முன்பு இந்த வால் நட்சத்திரம் வருவதற்…

  6. புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு புவிக்கு இரண்டு சந்திரன்கள் இருந்துள்ளன, அவை இரண்டும் சுமார் 4.6 மில்லியாட் வருடங்களுக்கு முன்னர் மோதியதில் சிறிய சந்திரன் உடைந்து துண்டாக வீசப்பட்டுள்ளது. தற்போது பாதி உடைந்த நிலையில் காணப்படும் சந்திரனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதய சந்திரனின் பின்புறமாக இந்தத் துண்டு காணப்படுகிறது. இந்த இரண்டு சந்திரன்களும் பல மில்லியாட் வருடங்களாக புவியை சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். ஒரு செக்கனுக்கு மூன்று கி.மீ வேகத்தில் இவை மோதியுள்ளன. உடைந்த சந்திரனில் சுமார் 3 கி.மீ உயரமான மலை இருக்கிறது. http://www.alaikal.com/news/?p=78118

    • 1 reply
    • 856 views
  7. பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அ…

    • 0 replies
    • 855 views
  8. அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன. சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்... கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..! இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்…

  9. நாளை புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் [ செவ்வாய்க்கிழமை, 21 யூலை 2009, 08:29.55 AM GMT +05:30 ] சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் பூமியின் சில பகுதிகளில் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிழல் காரணமாக பகலிலேயே இருள் உண்டாகும். நாளை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இலங்கையில் காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக இருக்கும். அப்போது சூரியனின் 40 வீதத்தை சந்திரன் மறைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். இதுவே இந்த 21 நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும். அதிகாலை 05.28 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், காலை 10 மணி …

    • 0 replies
    • 855 views
  10. நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம் பட மூலாதாரம்,DEARMOON ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும…

  11. Started by சுவைப்பிரியன்,

    வணக்கம்.நோக்கியா6500 இல் smile பாவிக்கலாமா என்பதை யாராவது அறித்தாருங்கள் நன்றி.

  12. 2015ல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்: லாஸ்வேகாஸ் கண்காட்சி 45 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வாண்டில் சந்தைக்கு புதிதாக வரவுள்ள தொழில்நுட்பக் கருவிகளுக்கான கண்காட்சி ஒன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்துள்ளது. தானாக ஓடும் கார்கள், பறக்கும் டுரோன்கள், நாயின் உடல் இயக்கங்களை அளக்கும் மானிகள் - இப்படிப் பலவற்றை முன்னணி எலக்டிரானிக் நிறுவனங்கள் லாஸ்வேகாஸில் காட்சிப்படுத்தியிருந்தன. இந்த அதிநவீன கருவிகள் நமது வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப் பார்வையிடுங்கள் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150106_technologies

    • 0 replies
    • 855 views
  13. நமது பால்வெளி அண்டத்திற்கு (Milky way galaxy) உள்ளே உள்ள வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து நமது பூமியில் உயிர் வாழ்க்கைக்கான கட்டமைப்புக்கள் வந்திருக்கலாம் என புதிய ஆதாரத்தின் மூலம் ஊகிக்கப் படுகின்றது. நியூயோர்க்கின் கோர்னெல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நமது அண்டத்தின் நட்சத்திரக் கட்டமைப்புக்களுக்கு இடையே புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றும் பகுதியில் உயிர் வாழ்க்கைக்கான மூலாதாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது நமது பூமியில் இருந்து 27 000 ஒளி வருடங்கள் தொலைவில் பால் வெளி அண்டத்தின் மத்தியில் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் மூலக்கூறுகளான ஐசோப்ரொப்பைல் சையனைட்டு என்ற சிக்கலான மூலகம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான மூலக் கூறுகள் பூமிக்கு இத…

  14. அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய வரவுகள்! காலம் மாற, மாற அறிவியல் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அந்த வரிசையில் புதியதாக வந்துள்ள சில கண்டுபிடிப்புகளை இங்கே பார்க்கலாம்... பயோ ஸ்டாம்ப்: மருத்துவத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக தற்போது புதிதாக வந்துள்ள ஒரு கருவி பயோ ஸ்டாம்ப். இக்கருவியை ஸ்டாம்ப் போல நமது உடலில் ஒட்டிக்கொண்டால் நம் உடல்நிலையைப் பற்றி இக்கருவி திரையில் காண்பிக்கும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், மூளை தொடர்பான நோய்களுக்கு எளிய முறையில் மருத்துவம் பார்க்க இக்கருவி உதவும். E-Fan வானூர்தி: பெட்ரோலில் ஓடிக்கொண்டிருந்த கார், டூவீலர்கள் தற்போது மின்சாரத்திலும் ஓட…

  15. வீரகேசரி நாளேடு - பூமியின் உப கோளான சந்திரனின் மேற்பரப்பின் உள்ளடக்கத்தில் தற்போது நீரில்லை என்பதற்கான ஆதாரங்கள் அண்மைய ஆய்வொன்றின் மூலம் தமக்குக் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனில் ஆரம்ப காலத்தில் நீர் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் இவ்விஞ்ஞானிகள், வெப்ப விளைவுகள் காரணமாக அந்நீர் தற்போது ஆவியாகியிருக்கலாம் என தாம் நம்புவதாகக் கூறுகின்றனர். பிறவுண் பல்கலைக்கழகம், கர்னேஜி விஞ்ஞான நிறுவகம், கேஸ் வெஸ்ட்டர்ன் றிஸேர்வ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டாம் நிலை அயன் திணிவு அலை நீள அளவுத்திட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட இப்பரிசோதனையின் முடிவுகள் "நேச்சர்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. 3 பில்லி…

  16. "காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலைய…

  17. கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை _ கவின் / வீரகேசரி இணையம் 10/5/2011 1:57:30 PM இவ்வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியாகக் கருதப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 4எஸ் (I phone 4S) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கையடக்கத் தொலைபேசி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டமைக்கு 2 முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம். சுமார் 1 வருடத்திற்கும் அதிகமான இடைவெளியின் பின்னர் வெளியாகும் ஐ போன் அதன் கையடக்கத்தொலைபேசியென்பதுடன், ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகிய பின்னர் டிம் குக் அப்பதவியை ஏற்றவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியென்பதுமாகும். எனினும் இவ் எதிர்பார்ப்புகள் இரண்டும் …

  18. பட மூலாதாரம்,ESA/HUBBLE/DIGITIZED SKY SURVEY/NICK RISINGER 8 ஏப்ரல் 2023, 05:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே மிகப் பெரிய ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். டர்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அதி பிரம்மாண்ட கருந்துளையை, ஈர்ப்புவிசை லென்சிங் என்ற நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய முனைவர் ஜேம்ஸ் நைட்டிங்கேல், “இந்தக் கருந்துளை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ளவே” சிரமப்பட்டதாகவும் அதன் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளவே சிரமப்படும் அளவு…

  19. டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம் : உலகம் அழியப்போகிறதா? உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது. பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல்…

  20. சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை! அடைகாத்தலுக்குப் பிறகு சேவல் பிறப்பதைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட முட்டைகள், உலகில் முதன்முறையாக ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் விற்பனைக்கு வந்துள்ளது. "செலெஃக்ட்" செயல்முறை மூலம் பறவையின் பாலினத்தை முன்பே தீர்மானிக்க முடியும் என்றும், சேவல்கள் பிறப்பதைத் தவிர்க்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனியிலுள்ள விஞ்ஞானிகள். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4 முதல் 6 மில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. சேவல்களினால் எந்தவிதப் பொருளாதார லாபமும் இல்லை என்ற காரணத்தால், இவ்வாறு நிகழ்கிறது. அதனால், சேவல் பிறப்பதைத் தவிர்க்க ஜெர்மனி விஞ்ஞானிகள் புதிய செயல்முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். செலெஃக்ட் என்ற முறைய…

  21. தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மனிதர்கள் (தமிழர்கள், திராவிடர்கள், இந்தியர்கள், ஆசியர்கள். உலக மாந்தர்கள்..) – மூதாதையர் வாழ்ந்த குடியம் குகைகளுக்கு (Kudiyam Caves) கல்விப் பயணம், அறிவு சுடர் நடுவம் சார்பில் திட்டமிட்டோம். இணையத்தை தட்டினால் போக வர 14 கி.மீ காட்டு ஒற்றையடி மலைபாதை நடைபயணம் என்று காட்டியது பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆஸ்த்துமா நோய், கால் ஊனம்.. நடக்கமுடியுமா..? கேள்விகள் வந்து வந்து எச்சரித்தது. இதையும் மீறி இந்த மலைக்குகைக்கு போக வேண்டுமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா ..சரணம் அப்ப்பப்பா… என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்…

    • 0 replies
    • 849 views
  22. லாபம் தரும் 'மல்சிங் ஷீட்!' தண்ணீர் குறைபாடு மற்றும் கழை செடிகளால் ஏற்படும் பூச்சி தாக்குதலை தடுக்க, 'மல்சிங் ஷீட்' விரித்து விவசாயம் செய்து, அதிக லாபம் ஈட்டி வரும் தஞ்சை விவசாயி, தமிழரசன்: நான், தஞ்சாவூர் மாவட்டம், தளவாப்பாளையத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் தண்ணீர் குறைவாக கிடைப்ப தால், விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற, மல்சிங் ஷீட் முறையை பயன்படுத்த ஆரம்பித்தேன். மக்கும் தன்மையுடைய, வைக்கோல் உட்பட பல பொருட் கள் மூலம் தயாரிக்கப்படும் விரிப்பை தான், 'மல்சிங் ஷீட்' என்கிறோம்.மல்சிங் ஷீட் முறை யில் நடவு செய்வதற்கு முன், ஏக்கருக்கு, 10 டன் மாடு மற்றும் ஆட்டு சாணத்தை அடித்து, வயலை நான்கு முறை நன்கு உழுது விட வேண…

    • 0 replies
    • 849 views
  23. 99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி தோன்றுகிறது. மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. நியூயார்க்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவது…

  24. அலெக்சாண்டர் க்ளோத்ஸ் கலிலியோ - ஐசக் நியூட்டன் அற்புத உலகில் ஆலிஸ் என்ற நாவலில் முயலின் வளைக்குள் விழுந்து பூமிக்குள் செல்வாள் ஆலிஸ். “ இப்படியே போய் பூமியின் மறுபுறத்தில் வெளிவந்துவிடுவேனா?” என வியந்துபோவாள். கலிலியோ உட்பட பல விஞ்ஞானிகள் பூமியின் ஊடே துளை போட்டு அதில் ஒரு கல்லை நழுவ விட்டால் என்ன ஆகும் என வியந்துள்ளனர். பூமியில் துளை சாதாரணமாக 100 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டுவோம். அதையே 12 ஆயிரம் கி.மீ. ஆழத்துக்குக் வெட்டினால் என்ன ஆகும்? அந்தத் துளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் உண்மையில் பூமியைத் துளைத்து மறு பக்கம் வருவது போல கிணறு வெட்ட முடியாது. பூமிக்குள் இருக்கும் மிகு அதிக அழுத்தம், மிக அதிக வெப்பம் ஆகியவற்றைச் சமாளித்து …

    • 0 replies
    • 849 views
  25. சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம். இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.