Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நிலவோடு மோதியது சிறிய கோள் - தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் தெரிவிப்பு! [Tuesday, 2014-02-25 20:52:42] நிலவை சிறு கோள் ஒன்று தாக்கிய சுவாரஸ்யமான சம்பவத்தை தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தொலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் எட்டு நிம…

  2. வியாழன் கிரகம் பரிவாரங்களுடன் பூமிக்கு அருகே வருகிறது! - பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம். [sunday, 2014-02-23 19:50:30] சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இது இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்கும். பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும். இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. …

    • 3 replies
    • 705 views
  3. ((இதில் வரும் சில விடயங்கள் சினிமாவுக்காக இலகு பன்னி மொழிமாற்றம் செய்ய இலகுவாகவும் மூல சாரங்களை அசைப்பது போலும் எழுதபட்டுள்ளது கருந்துளைகளை பற்றி ஆங்கிலத்தில் படிப்போர் தயவு செய்து நேரடியாக கட்டுரையாளரை நோக்கி கேள்வி எழுப்புதல் நன்று படித்ததில் பிடித்துள்ளது எனவே இங்கு இனைக்கின்றேன் நன்றி.)) காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்பட…

  4. உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து இந்திய மருத்துவர் ஹேமந்த் சாதனை ! [saturday, 2014-02-22 11:52:31] உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது, “சோமா” என்ற புதிய ரசாயன கலவையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து டா…

  5. கூகுள் நிறுவனமானது பயன்பாட்டாளரை சூழவுள்ளவற்றின் முப்பரிமாண வடைபடங்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்களையும் வன்பொருள்களையும் கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. அந்த கையடக்கத் தொலைபேசியிலுள்ள உணர்கருவிகள் ஒவ்வொரு செக்கனிலும் அதிருக்கும் நிலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் 250,000 க்கு மேற்பட்ட முப்பரிமாண அளவீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தங்கோ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கையடக்கத் தொலைபேசி விருத்தி செய்யப்பட்டுள்ளது. http://www.akkinikkunchu.com/2014/02/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A…

  6. ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன் செய்து விடுவதால் இதன் விற்பனை தினந்தோறும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இப்போது வாசனையை பரப்புகிற ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மு…

  7. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்? நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! குடலிலிருந்து மூளைக்கு குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா? மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது …

  8. இதைக் கண்டு ஆஹா என்ன அழகு என்று கணித வல்லுநர்கள் சொல்வதற்கு நரம்பியல் காரணம் உண்டு அற்புதமான கலைப் படைப்புகளையும் இசையையும் நுகரும்போது ஒருவருக்கு மூளையில் ஏற்படும் அழகுணர்ச்சி, கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும் எழுத்துக்களையும் காணும்போதுகூட கணித வல்லுநர்களுக்கு ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. லண்டனின் யுனிவர்சிட்டி காலேஜ்ஜில் கணித வல்லுநர்களை மூளை ஸ்கேன் செய்த நேரத்தில், அவர்களிடம் விதவிதமான கணித சூத்திரங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறிப்பிட்ட சில சூத்திரங்களை அவர்கள் கண்ட நேரத்தில், அவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு அவர்களது மூளையில் கலை ரசனைக்குரிய மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டன. மனதில் ஏற்படும் அழகுணர்ச்சிக்கு நியூரோ பயாலஜி…

  9. புற்று நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய கருத்து இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும் பகுதி பயம் மற்றும் பீதியால் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது. புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக…

  10. கூகிள் மற்றும் நாசா இணைந்து எதிர்கால செயற்கை நுண்ணறிவை உருவாக்க தொடங்குகிறது Feb 13, 2014 Paranthaman அறிவியல் செய்திகள் 0 கூகிள் மற்றும் நாசா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து துளிம கணினிகளைப் (quantum computers) பயன்படுத்தி எதிர்கால செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவை ஒரு ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆய்வு மையம் (Ames Research Centre) என்னும் இடத்தில் புதிதாக ஒரு துளிம எதிர்கால நுண்ணறிவு பயிற்சிக்கூடம் (Quantum Artificial Intelligence Lab) ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள். டி-அலை கட்டகங்களிலிருந்து (D-Wave Systems) தற்போது துளிம கணினியை முதல் நோக்கமாக கொண்டு அந்த ஆய்வகம…

  11. மின்னணு சாதனங்களில் பெரும் சிக்கல் என்னவென்றால் அது அதன் மின்தேக்கி பழுதடைவது ஆகும். ஒரு சில ஆண்டுகளில், மின்னணு சாதனங்களின் மின்தேக்கியானது அதன் மின் தேக்க திறனை இழந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலான பயனர்கள் இன்னல் படுகிறார்கள் .சுடான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வண்ணம் ஒரு புதிய வகை மின்தேக்கியைக் கண்டறிந்துள்ளனர். அதுவே, தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் இலித்தியம் அயனி மின்தேக்கி. இந்தக் கண்டுபிடிப்பால் மின்சார தானுந்துகளின் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கலாம் என உலகில் பல அறிஞர்கள் நம்புகின்றனர். பொதுவாக, மின்தேக்கிகளின் மின்வாயினில் நாட்கள் ஆக ஆக சிறு வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே மின்தேக்கி பழுதடைந்து நீண்டநாட்…

  12. ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவிகளின், சமிக்ஞை கிடைக்கிறதா என்று தேடுவது ஏலியன்ஸ்-தேடலில்-அலைவரிசைகள்-Arecibo-Observatory மற்றும் அவர்களுக்கு நாம் இன்னார் என்று செய்திச்சமிக்ஞை அனுப்புவது செட்டி (SETI) எனும் நம் ஏலியன்ஸ் தேடலில் நேரடி வகை (மறைமுக ஏலியன்ஸ் தேடல் உள்ளது; பிறகு பார்ப்போம்). இத்தேடல் பற்றி கேள்விப்பட்டதும் மனதில் எழும் ஒரு ஆதார சந்தேகம்: அப்படியென்றால் நம் ரேடியோ டீவி நிகழ்சிகளை ஏலியன்ஸ் கேட்டுவிடும் சாத்தியம் உள்ளதா? சொற்பமே என்று ஏற்கனவே வேறு கட்டுரையினூடே சுருக்கமாக பதிலளித்துள்ளோம். ஏன் எப்படி என்று ஒரு கடி ஜோக் மற்றும் சமன்பாட்டுடன் விரிவாக விளக்குவோம். ரேடியோ அலைகளை 1950களில் இருந்து ’வளி’க்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். மார்ஸ் அட்டா…

  13. கடந்த வாரம் கூகள் நிறுவனம் ஒரு சிறிய நிறுவனத்தை ​​3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது தகவல் தொழில்நுட்பத் ​ ​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட வைத்த ஒரு வர்த்தகம். ஆம், வீட்டினுள் இருக்கும் தட்பவெட்ப நிலை போன்றவற்றை அறிவிக்கும் இரண்டு அங்குல விட்டமே இருக்கும் ஒரு சாதனத்தை தயாரிக்கும் நெஸ்ட் (Nest) என்ற நிறுவனத்தை மிக மிக அதிக விலை கொடுத்து ரொக்கமாகக் (திருடா திருடா படத்தில் வரும் லாரியை நினைவில் கொள்ளவும்) ​ ​ கொடுத்து வாங்கியது. TechTamil Karthi வீட்டில் தீப்பிடித்தால் எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும் இந்த…

    • 2 replies
    • 1k views
  14. இங்கிலாந்தின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள நோர்போல்க் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித பாதத்தடங்கள் குறைந்தது 800,000 முதல் 1,000,000 ஆண்டுகள் பழைமையானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பாதத்தடங்கள் கடந்த வருடம் லண்டன் இயற்கை வரலாற்று நூதனசாலை மற்றும் குயீன் மேரி கல்லூரி;ய ஆகிவற்றின் குழுவொன்றினால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. குறித்த பாதத்தடங்கள் இத்தனை வருடங்களா அழிவடையாமல் மணல் படைகளிடையே பாதுகாப்பாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய பின்னர் ஆபிரிக்க பகுதிகளிலேயே வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் குறைந்தது 800,000 ஆண்டுகள் பழைமையானது என நம்பப்படும் இந்த பாதத்தடங்கள் எவ்வாறு ஐரோப்பிய பிரதேசத்தில் காணப்படுகிறது என…

  15. செவ்வாயில் நீர்ம வடிவில் தண்ணீர்! – நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு. [Wednesday, 2014-02-12 18:39:24] செவ்வாய் கிரகத்தின் நீர்ம வடிவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை நாசா கண்டறிந்துள்ளது. செவ்வாய் சுற்றுப்பாதையில் நாசா செலுத்தியுள்ள தகவல் சேகரிப்பு ஆய்வுக் கலம் மற்றும் ஒடிஸி ஆய்வுக்கலம் இரண்டும் இதுதொடர்பான தகவல்களைச் சேகரித்து அனுப்பியுள்ளன. கருமையான விரல் வடிவ தழும்புகளை இந்த விண்வெளி ஆய்வுக்கலங்கள் படம்பிடித்து அனுப்பியுள்ளன. சில செவ்வாய் சரிவுப் பகுதிகளில் வெப்பநிலை உயரும்போது இவை காணக் கிடைக்கின்றன. மேலும் பருவகால மாறுபாடுகளின் போது அங்குள்ள இரும்புத்தாதுகளிலும் மாற்றம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.ஆர்எஸ்எல் எனப்படும் இவ்வாறான தொடர்சரிவுப் பகுதிகள் 13 இடங்களி…

  16. கையடக்கத் தொலைபேசிகளை விரித்து டப்லட் கணினிகளாக மாற்றவும், பாரிய தொலைக்காட்சி திரைகளை மடித்து எடுத்துச் செல்லவும் உதவுக் கூடிய கோல்டன் மெஷ் என்ற புதிய மூலப்பொருளை அமெரிக்க ஆய்வாளர்கள் விருத்தி செய்துள்ளனர். இலத்திரனியல் திரைகளை மடிக்க உதவும் முதலாவது தொழில்நுட்பமாக இது விளங்குகிறது. தம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலப்பொருள் உடலினுள் பொருத்தப்படும் மருத்துவ ரீதியான செயற்கை உறுப்புக்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அமெரிக்கா {ஹஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெகிழ்ச்சித்தன்மையுடைய திரைகளை விருத்தி செய்துள்ள போதிலும் புதிய தொழில் நுட்பமானது கணினி மற்றும் தொலைக்காட்சி திரைகளை முழுமையாக மடிக்கவும் சுற்றவும் வழிவகை செய்கிறது. http://www.vir…

  17. நியூட்ரினோ ஆய்வால் நில நடுக்கம் வருமா? என்.ராமதுரை அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், சீனா என பல நாடுகளில் நியூட்ரினோ என்னும் அதிசயத் துகள் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. இத்துறையில் பின் தங்கிவிடக் கூடாது என்ற அளவில் இந்தியாவிலும் நியூட்ரினோ பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நோக்கில் தான் தேனி மாவட்டத்தில் ரூ 1400 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டு வருகிறது. இது 2015 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை மிகவும் நுண்ணியவை. எதையும் துளைத்துச் செல்லக்கூடியவை. நீங்கள் சூரியனை நோக்கி உள்ளங்கையை விரித்தால் உங்…

  18. யு.கே டெலிகிராஃப்ல மனித பரிணாமம் சார்ந்த ஒரு கட்டுரை வாசிச்சேன். படிக்கும் பொழுது எனக்குள் தோன்றிய சில எண்ணங்களை இதுக்கு முன்பே இங்கே பேசி கேள்விகளாக முன் வைத்து கேள்விகளுக்கு பல இடங்களில் பதில்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த படத்துடன் கூடிய டெலிகிராஃப் கட்டுரை சில கூர்ந்த அவதானத்தை பக்கம் பக்கமாக வைத்து எளிதாக பலருக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என்பதால் இதோ மீண்டும் பரிணாம அக்கப்போர் . அந்த கட்டுரைக்கான சுட்டி- The evolution of man. http://www.telegraph.co.uk/science/10623993/The-evolution-of-man.html ************ மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நம…

  19. இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உடற்பயிற்ச்சியைப்போலவே செக்ஸ் அல்லது உடலுறவும் இருதயத்துக்கு உகந்ததுதானாம். ஆனால், உடற்பயிற்ச்சியை தொடர்ச்சியாக செய்யாமல் போனால் எப்படி உடலுக்கு பயனெதுவும் இருக்காதோ அதேப்போல, உடலுறவும் தொடர்ச்சியாக இல்லாமல் போனால், இருதயத்துக்கு பயனெதுவும் இருக்காதாம்! அதனால், வாரம் இருமுறை உடலுறவில் ஈடுபடுவதால், இருதயத்துக்கு பலனுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்! “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்….. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” அப்படீன்னு நம்ம புரட்சிக்கவி பாரதியார் சொல்லியிருக்காருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்! இது தவிர இன்னும் பல இலக்கியவாதிகள், தமிழறிஞர்கள் இப்படி எல்லாருமே அச்சப்படக…

  20. பிரம்ம முகூர்த்தம் அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைக றைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பை யும், உற்சாகத்தையும் கொ டுக்கின்றன. கண்கள் ஆரோ க்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண் ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தஅதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், …

    • 80 replies
    • 168.2k views
  21. ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருட்கள் பல இன்று எம்மிடையே தாக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. காரணம் எமது தேவைக்கேட்ப நாமே அதில் மாற்றம் செய்து பயனர்களுக்கு தேவையானதை பயனர்களே மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதே. இதே வசதி எமது பயனப்பாட்டிலுள்ள வாகனங்களிலும் அமைந்திருந்தால் எவ்வளவு இலகுவாக இருக்கும்? நாம் சிந்தித்துக்கொண்டே இருக்கையில் இத்தாலி நிறுவனமொன்று 'ஓப்பன் ஸோர்ஸ் வெஹிகிள்' (திறந்த மூல வாகனங்கள்) எனும் விடயத்தை அறிமுகப்படுத்திவிட்டது. இனி உங்களுடைய காரை உங்களுக்கு விரும்பிய வடிவில் வீட்டிலேயே உருவாக்கவும் உங்கள் எண்ணம் போல் வடிவமைக்கவும் முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த பிரமிப்பான விடயத்தை இத்தாலியிலுள்ள நிறுவனமொன்று நிஜமாக்கியுள்ளது. தற்போது வீட்டில் நாம் பயன…

  22. இலங்கையில் உள்ளவர்கள் இலவசமாக இன்ரநெட் பாவிப்பதற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தி அதற்கான விபரங்களைப் பார்க்கலாம். English http://www.google.com/intl/en/mobile/landing/freezone/ தமிழ் http://www.google.co.in/intl/ta/mobile/landing/freezone/ DIALOG மூலம் பாவிக்கலாம் என்பதை காட்டியுள்ளார்கள்.

  23. அமெரிக்காவின் புதிய (ரோபோட்) போர்வீரர்கள் : ச.ச.முத்து டேர்மினேற்றர் திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில்(1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும்,எரியும் தீச்சுவாலைக்குள் வீழ்த்தினாலும் மீண்டும் அந்த உருவம் எழுந்து இயந்திரமனிதனாக,மனிதனாக மாறி எதிரிகளை வேட்டையாடும்.ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் இந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ரைற்றானிக்,அவ்தார் படங்களை எடுத்த ஜேம்ஸ்கமரூனின் அருமையான ஒரு பாத்திரப்படைப்புஅது. இதைப்போலவே, புதிய ரோபோ போர்வீரர்களை களங்களில் இறக்கும் ஒரு திட்டத்தை பென்ரகன் கொண்டிருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருக…

  24. நான் இத்தனை ஆண்டுகளாக Canon Dslr படக்கருவி தான் பாவித்துள்ளேன். கிட்டத்தட்ட 3 படக்கருவிகள் 2 வருடங்களில் பாவித்துள்ளேன். சென்ற வருடம் கடைசியாகப் பாவித்ததும் களவு போய்விட்டது. சதாரண படக்கருவிகளை விட தான் என் முழு ஈடுபாடும் ஆகும். Nikon, Canon, Sony பற்றி உங்களுக்குத் தெரிந்த விடயங்களை இங்கே பகிருங்கள்.

  25. என் மூளையின் மீள் வடிவமைப்பு..! By Todd Sampson அண்மையில் கனேடிய தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வியந்த நிகழ்ச்சி இது. கனடாவில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ராட் சாம்ப்சன் தனது மூளையை வீரியப்படுத்தும் மூன்று மாத முயற்சியில் இறங்குகிறார். இதற்காக அவர் நியூரோ விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் பயிற்சிகளும், பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுமே இந்நிகழ்ச்சியின் மூலக்கரு. உதாரணத்திற்கு, பார்வையாலேயே ஒரு ரிமோட் கன்ட்ரோல் உலங்கு வானூர்தியை பறக்க வைக்க முடியுமா? முடியும் என்கிறது நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள். கண்டதும் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை இங்கே இணைப்பதற்குக் காரணம் ஒன்றேதான். நாமெல்லாம் எங்கள் மூளைகளை சில சாதாரண பயிற்சிகளின்மூலம் செம்மைப்படுத்தி மேம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.