Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்று நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி. இதனால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது- இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்று இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் கொஞ்சம் கூட அசையாது அதற்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்று. இந்தியாவில் அது பருவ நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.இந்நிலையில் அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும் கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல் விசேஷம் என்னவென்றால் இதில் இறக்கைகளே கிடையாது. இரண்டாவது விசேஷம் இது இயங்க வெறும் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய தென்றலே இதற்கு போதுமானது. …

    • 2 replies
    • 770 views
  2. ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை தமது கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்போவதாக ''சாப்'' எனப்படும் ஜேர்மனிய கணினி நிறுவனம் கூறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத திறமை இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூகத்தில் ஏனையவர்களுடன் ஊடாட்டம் செய்வதில், தொடர்புகளைக் கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும். ஆனால், மாறாக மிகச் சில துறைகளில், அல்லது விடயங்களில் மாத்திரம் அவர்கள் அளவுக்கு அதிகமான, அதீத திறமையைக் கொண்டு காணப்படுவார்கள். அதாவது இந்த ஆட்டிசம் குறைப்பாட்டையுடைய குழந்தைகள் ஏனையவர்களுடன் பேசமாட்டார்கள், ஏனையவர்கள…

  3. கடல் நீரில் இருந்து அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் யுரேனியத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், இம்முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது. கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரித்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். யுரேனியம் அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிய தாதுவான யுரேனியம் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. யுரேனியம் கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக கண்டறிந்த விஞ்ஞானிகள் அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில…

  4. துகளுக்குரிய கடவுள் பெயரால்..! இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது. சுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எ…

  5. சூரிய ஒளி ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க...

    • 0 replies
    • 450 views
  6. புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம். பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும். வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும். பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 66…

  7. Atom: Smallest representative of a particular element, which shows the properties of that element. There are 3 main sub atomic particles in the Atom, Electron, Proton and Neutron. Atom has a nucleus and the electron cloud around it. Neutrons and proton are at the nucleus. Nucleolus gives the mass to the atom and Electron give the shape to the atom. If we compare the size, if nucleus is a size of an orange then electron cloud will be equal to the size of a football stadium. Mass number: As name states mass number should represent the mass of the element. Electron is 1838 times lighter than Proton and Neutron. Hence, we can ignore the weight of an electron when…

  8. இங்கிலாந்தின் பாரிய நிறுவனங்களின் தொலைபேசி சேவைபிரிவினரால் வாடிக்கையாளரிடம் அதிக தொலைபேசி நிமிடங்கள் தந்திரமாக காத்திருக்க வைப்பதின்மூலம் வாடிக்கையாளருக்கு பணஇழப்பும் நேர விரயத்தை தவிர்பதிற்க்கு: ஓய்வு பெற்ற கணணி பொறியியளாளர் (Nigel Clarke) நிக்கெல் கிளார்க் என்பவர் pleasepress1.com என்ற வலையமைப்பை உருவாக்கியுள்ளார் இதன்மூலம் அதிக தொலைபேசி பண இழப்பையும் நேர விரயத்தினையும் தவிர்க்கலாம் எனஅறிவித்துள்ளார். Thanks http://www.bbc.co.uk/news/technology-22567656

  9. கனடாவில் அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும், இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும். 2011ஆம் ஆண்டில், 986 தட்டுகள் இதுபோல் தெரிந்துள்ளன. சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒண்டாரியோ மாகாணத்தில் 40 சதவிகிதமாகவும், மற்ற மாகாணங்களிலும், சஸ்கட்சவா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு தவிர, இது போன்ற ஒளித்தோற்றத்தையோ, பறக்கும் பொருட்களையோ மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர். முன்பிருந்ததைவிட, இப்போது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் து…

  10. xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில் இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை மனிதப் பரிணாமத்தின் அடுத்த நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம் மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உ…

  11. ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பிள்ளையார் வழிபாட்டில் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் முறை உள்ளது. இதற்கு வரலாறும் உள்ளது. அதேபோல் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr…

    • 0 replies
    • 668 views
  12. புதிர் அவிழும் கணங்கள் இளையா இது டேப்லெட் பிசிகளின் (Tablet PCs) காலம். ஆனால் 6000 வருடங்களுக்கு முன்னரே டேப்லெட்டுகள் முளைத்துவிட்டன. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? ஆனால் ஒரு வித்தியாசம். இன்று போல அவைகளில் விண்டோஸ் இல்லை. மைக்ரோ சில்லுகள் கிடையாது. தொடுதிரை இல்லை. ஈரமான களிமண் நெருப்பில் சுடப்பட்டு எளிதாகச் செய்யப்பட்டன (Clay Tablets). சோப்புக் கட்டியில் ஊக்கியை வைத்து கீறி ‘ராமன்’ என்று பெயர்பதிப்பது போல கூரிய எழுத்தாணியால் எழுத உதவிய களிமண் பலகை. இதில் படங்களை கிளிக்-கி ஃபேஸ்புக்கில் விட முடியாது. ஆனால் சிறுசிறு படங்கள் வரையலாம். வரலாறு எழுதலாம். கணக்குப் புதிர்களைக் கீறி வைத்து பின்வரும் சந்திதிகளில் உள்ள மிகச்சிறந்த கணித மேதைகளை தூங்கவிடாமல் செய்யலாம். பிளி…

  13. மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக் கலங்களாக உருவாவதற்காக மின்சாரத்தின் உதவியுடன் தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்தக் குருத்துக்கலங்கள் மனித உடலில்…

  14. சமீப ஆண்டுகளில் மிகப்பிரபலமான விண்வெளி வீரர் ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கழித்த பின்னர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், கமாண்டர் க்ரிஸ் ஹேட்பீல்ட் , அவர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளைவிட , சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதற்காகத்தான் அதிகம் பிரபலமாயிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின் பல்வேறு பகுதிகளின் மேல் பறந்தபோது, அவற்றைப் படமெடுத்து , தனது சமூக ஊடக தளத்தில் அவர் பிரசுரித்ததால், அவரது இந்த சமூக ஊடக தளத்தை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்பற்றினர். பின்னர் பூமிக்கு இறங்குமுன், அவர், டேவிட் பௌயீ இயற்றிய " ஸ்பேஸ் ஒட்டிட்டி" என்ற பிரபலமான பாடலை, புவியீர்ப்பு சக்தியற்ற நிலையி…

  15. கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோ…

  16. வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..! இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். எல்லாமே லைட்டிங் தான்: வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போ…

  17. Samsung claims 5G mobile data transmission breakthrough சாம்சங் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) 5-ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இப்போது டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளதால் மார்க்கெட்டுக்கு வந்துசேர சிறிது காலம் எடுக்கும் என்றாலும், வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தென்கொரிய நிறுவனம், 5-ஜி தொழில்நுட்பம் பற்றி குறிப்பிடுகையில், மிகப் பெரிய பைல்களை செல்போனில் இருந்து சில விநாடிகளில் அனுப்பலாம் என்கிறது. அதற்கு உதாரணமாக, ஒரு முழு HD திரைப்படத்தின் பைலை, உங்கள் செல்போனில் இருந்து, சில விநாடிகளில் அனுப்பி வைக்க முடியும். தற்போது பாவனையில் உள்ள மிக உயர்ந்த மொபைல் தொழில்நுட்பம், 4-ஜி, இன்னமும் உலகம் முழுதிலும் பாவனைக்கு முழும…

    • 1 reply
    • 1.1k views
  18. மதர்ஸ் டே, பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் பரிசு கொடுப்பது நல்லது. பெண்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள். இதன் மூலம் பரம திருப்தியும் நன்றிக்கடன் பட்டவர்களாகவும் ஆகிறார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கிறது. மாறாக ஆண்கள் மென்மையான உணர்வுகளை மறைக்க விரும்புவதால், அவர்கள் பரிசு பெறுவதை விரும்புவதில்லை, கடமைப்பட்டவர்களாக இருப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லை என்று டாட் காஷ்ட்ன் (ஜியார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்) தெரிவிக்கிறார். ஆண்களில் குறிப்பாக அறுவது வயது தாண்டியவர்கள் இன்னொரு ஆணிடமிருந்து பரிசு பெறுவதை விரும்புவதில்லை என்று எச்சரிக்கிறார். பெண்களுக்கு ஐஸ் வைக்கும் வழி இப்போது தெரிந்து விட்டதல்லவா. வெளுத்து வாங்குங்கள். - முனைவர் க.மணி Thanks…

  19. ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள் "நீ அந்த நடிகையின் படத்தத்தானே பார்த்திருக்கே, நான் தொட்டே பார்த்திருக்கேன் தெரியுமா''. அதெப்படி, கும்பகோணத்தில இருக்கிற கோபால், பாவுலிட் நடிகையைத் தொட்டிருக்க முடியும். அதற்குத்தான் வந்திருக்கிறது ஹேப்டோ கிராஃபி. லாஸேஞ்சலிஸில் இருக்கும் பேரக்குழந்தையின் விரலை லால்குடியிலிருந்தபடியே தாத்தா தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கலாம். நீங்கள் பார்த்ததை இன்னொருவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், பிரச்சனையில்லை மோபைல் கேமராவே போதும். படம் எடுத்து காட்டிவிடலாம். நீங்கள் தொட்டு அனுபவித்ததை இன்னொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள், இப்போது போட்டோ கிராஃபி போல ஹேப்டோகிராஃபி வந்திருக்கிறது. (படம். குச்சன்பெக்கர்.ஹேப்டோகிராஃ…

  20. மாணவர்க்கான குறிப்பு எடுப்பதற்கான சிறப்பான இலவச iPad app. இதை நான் பயன்படுத்துகின்றேன், ம்............. நல்லாய் தான் இருக்கு! https://itunes.apple.com/us/app/synopsee/id642087137?ls=1&mt=8

    • 0 replies
    • 591 views
  21. கோதுமை உற்பத்தி திறனை 30 வீதத்தினால் அதிகரிக்கக் கூடிய ஒரு புதிய வகை கோதுமை தாவரத்தை தாம் உருவாக்கியிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புராதன வகை கோதுமை தாவர வகை ஒன்றை நவீன ரக கோதுமையுடன் இணைத்ததன் மூலம் இந்த புதிய வகையான வினைத்திறன் மிக்க கோதுமை தாவர வகை உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகள் இந்தப் புதிய வகை தாவரம் தற்போதைய கோதுமை வகைகளை விட பலமானதாகவும், பெரியதாகவும், இருப்பதாக காட்டியுள்ளன என்று அதனை உருவாக்கிய கேம்பிரிஜ்ஜை தளமாகக் கொண்ட விவசாய தாவரவியலுக்காக தேசிய நிறுவனம் கூறியுள்ளது. விவசாயிகள் இதனைப் பயிரிடுவதற்கு அனுமதிப்பதற்கு முன்னதாக அது குறித்து 5 வருடங்கள் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் அது குறித்து ஒழுங்குபடுத்தும் …

  22. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இரண்டு விண்வெளி வீரர்கள் அவசரமாக விண்வெளியில் (ஸ்பேஸ்வாக்) இறங்கியுள்ளனர். சிறியளவான வெள்ளை நிற அமோனியா துண்டுகள் விண்வெளியில் தொடர்ச்சியாக மிதந்துவந்துகொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கடந்த வியாழன்று அவதானித்துள்ளார்கள். விண்வெளி கூடத்திற்கான சக்தியை குளிர்ப்படுத்தும் கட்டமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளமை இதன்போதே தெரியவந்துள்ளது. இப்படி திடீரென்று விண்வெளியில் இறங்கும் சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே நடக்கும். ஆனால் பயணமாகவுள்ள இந்த விண்வெளி வீரர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது என்று நாசா கூறியுள்ளது. http://www.bbc.co.uk/tamil/science/2013/05/130511_astronout.shtml

  23. நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மேலதிக இணைப்பான பீ கணனியின் இயங்குதளத்திலேயே கியூரியோசிட்டி இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன்போது ஏ கணனியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இயங்குதளம் மற்றும் தரவுகளை காப்பு பிரதி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கியூரியோச…

  24. கல்வியே இப்படி கடும் வாலடைலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை. இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும். ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான். நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும். சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும். இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும். ”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல. கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.