அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது. உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது. கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலா…
-
- 1 reply
- 565 views
-
-
பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா? அருண் நரசிம்மன் வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் வி…
-
- 1 reply
- 1.6k views
-
-
பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி கிருஷ்ண பிரபு குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பியவை. அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய்கிரகத்தில் எலி... திடீர் பரபரப்பு! டோக்கியோ: செவ்வாய் கிரகத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்று வெளியிட்ட படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா... ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மூலம் 7 விண்கலங்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. இவை பல ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள், பல்வேறு தாதுக்கள் உள்ளதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளன. ஆனால் உயிரினங்கள் இருந்தது குறித்து எந்தத் தகவலும் அவற்றில் இல்லை. இந்த நிலையில், ஜப்பானைச் சேர…
-
- 6 replies
- 966 views
-
-
பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observat…
-
- 2 replies
- 564 views
-
-
ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம் பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch explorer ) வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது. இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது. 10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஈஸ்டர் தினத்தில் (1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி …
-
- 3 replies
- 1.9k views
-
-
இவ் உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை. அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே அணுவை வெற்றிகரமாக பிரித்ததுடன் அணுப் பெளதிகவியலின் தந்தையாக கருதப்படுகின்றார். இவரை இரண்டாம் நியூட்டன் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வர்ணித்திருந்தார். மேல் நாட்டவர்களுக்கு என்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’’ என அவ்வை திருக்குறள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளமையானது சங்ககாலத்திலும் அணு மற்றும் அறிவியல் தொடர்பில் மக்கள் அறிந்…
-
- 0 replies
- 670 views
-
-
சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் 'லிட்டில் ஐஸ் ஏஜ்' என்று சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோன தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத் துவங்கியுள்ளன. கனடாவின் வட துருவ நிலப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் அண்மையில் பனிப் படலங்கள் கரைந்த இடங்களில் இருந்துபல கலமாக செத்துக் கிடப்பதாகத் தெரிந்த சில பாசி வகைகளை எடுத்து வந்து பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆராய்ந்துகொண்டிருந்த நேரத்தில், அவை மீண்டும் உயிர்ப்பெற்று துளிர்த்தன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செத்த நிலையில் இருந்து உயிர்ப்பெரும் தாவரங்களின் இந்த வித்தையைப் அவதானிப்பது, ஆயிரக்கணக்கான வருடங்களில் ஒரு முறை நமது பூமி பனிப் பருவத்துக்குள் சென்று திரும்பும்போது, அதன் பாத…
-
- 0 replies
- 556 views
-
-
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான். இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்.... இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்…
-
- 6 replies
- 956 views
-
-
காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்று நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி. இதனால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது- இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்று இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் கொஞ்சம் கூட அசையாது அதற்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்று. இந்தியாவில் அது பருவ நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.இந்நிலையில் அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும் கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல் விசேஷம் என்னவென்றால் இதில் இறக்கைகளே கிடையாது. இரண்டாவது விசேஷம் இது இயங்க வெறும் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய தென்றலே இதற்கு போதுமானது. …
-
- 2 replies
- 775 views
-
-
-உதயம் (http://chemistrytutors.co.nz/)
-
- 3 replies
- 719 views
-
-
ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை தமது கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்போவதாக ''சாப்'' எனப்படும் ஜேர்மனிய கணினி நிறுவனம் கூறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத திறமை இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூகத்தில் ஏனையவர்களுடன் ஊடாட்டம் செய்வதில், தொடர்புகளைக் கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும். ஆனால், மாறாக மிகச் சில துறைகளில், அல்லது விடயங்களில் மாத்திரம் அவர்கள் அளவுக்கு அதிகமான, அதீத திறமையைக் கொண்டு காணப்படுவார்கள். அதாவது இந்த ஆட்டிசம் குறைப்பாட்டையுடைய குழந்தைகள் ஏனையவர்களுடன் பேசமாட்டார்கள், ஏனையவர்கள…
-
- 0 replies
- 466 views
-
-
கடல் நீரில் இருந்து அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் யுரேனியத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், இம்முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது. கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரித்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். யுரேனியம் அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிய தாதுவான யுரேனியம் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. யுரேனியம் கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக கண்டறிந்த விஞ்ஞானிகள் அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில…
-
- 0 replies
- 606 views
-
-
துகளுக்குரிய கடவுள் பெயரால்..! இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது. சுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எ…
-
- 1 reply
- 809 views
-
-
சூரிய ஒளி ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க...
-
- 0 replies
- 457 views
-
-
புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம். பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும். வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும். பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 66…
-
- 0 replies
- 609 views
-
-
Atom: Smallest representative of a particular element, which shows the properties of that element. There are 3 main sub atomic particles in the Atom, Electron, Proton and Neutron. Atom has a nucleus and the electron cloud around it. Neutrons and proton are at the nucleus. Nucleolus gives the mass to the atom and Electron give the shape to the atom. If we compare the size, if nucleus is a size of an orange then electron cloud will be equal to the size of a football stadium. Mass number: As name states mass number should represent the mass of the element. Electron is 1838 times lighter than Proton and Neutron. Hence, we can ignore the weight of an electron when…
-
- 4 replies
- 664 views
-
-
இங்கிலாந்தின் பாரிய நிறுவனங்களின் தொலைபேசி சேவைபிரிவினரால் வாடிக்கையாளரிடம் அதிக தொலைபேசி நிமிடங்கள் தந்திரமாக காத்திருக்க வைப்பதின்மூலம் வாடிக்கையாளருக்கு பணஇழப்பும் நேர விரயத்தை தவிர்பதிற்க்கு: ஓய்வு பெற்ற கணணி பொறியியளாளர் (Nigel Clarke) நிக்கெல் கிளார்க் என்பவர் pleasepress1.com என்ற வலையமைப்பை உருவாக்கியுள்ளார் இதன்மூலம் அதிக தொலைபேசி பண இழப்பையும் நேர விரயத்தினையும் தவிர்க்கலாம் எனஅறிவித்துள்ளார். Thanks http://www.bbc.co.uk/news/technology-22567656
-
- 0 replies
- 669 views
-
-
கனடாவில் அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும், இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும். 2011ஆம் ஆண்டில், 986 தட்டுகள் இதுபோல் தெரிந்துள்ளன. சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒண்டாரியோ மாகாணத்தில் 40 சதவிகிதமாகவும், மற்ற மாகாணங்களிலும், சஸ்கட்சவா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு தவிர, இது போன்ற ஒளித்தோற்றத்தையோ, பறக்கும் பொருட்களையோ மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர். முன்பிருந்ததைவிட, இப்போது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் து…
-
- 0 replies
- 428 views
-
-
xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில் இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை மனிதப் பரிணாமத்தின் அடுத்த நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம் மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உ…
-
- 3 replies
- 952 views
-
-
ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பிள்ளையார் வழிபாட்டில் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் முறை உள்ளது. இதற்கு வரலாறும் உள்ளது. அதேபோல் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr…
-
- 0 replies
- 672 views
-
-
புதிர் அவிழும் கணங்கள் இளையா இது டேப்லெட் பிசிகளின் (Tablet PCs) காலம். ஆனால் 6000 வருடங்களுக்கு முன்னரே டேப்லெட்டுகள் முளைத்துவிட்டன. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? ஆனால் ஒரு வித்தியாசம். இன்று போல அவைகளில் விண்டோஸ் இல்லை. மைக்ரோ சில்லுகள் கிடையாது. தொடுதிரை இல்லை. ஈரமான களிமண் நெருப்பில் சுடப்பட்டு எளிதாகச் செய்யப்பட்டன (Clay Tablets). சோப்புக் கட்டியில் ஊக்கியை வைத்து கீறி ‘ராமன்’ என்று பெயர்பதிப்பது போல கூரிய எழுத்தாணியால் எழுத உதவிய களிமண் பலகை. இதில் படங்களை கிளிக்-கி ஃபேஸ்புக்கில் விட முடியாது. ஆனால் சிறுசிறு படங்கள் வரையலாம். வரலாறு எழுதலாம். கணக்குப் புதிர்களைக் கீறி வைத்து பின்வரும் சந்திதிகளில் உள்ள மிகச்சிறந்த கணித மேதைகளை தூங்கவிடாமல் செய்யலாம். பிளி…
-
- 0 replies
- 2.6k views
-
-
மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக் கலங்களாக உருவாவதற்காக மின்சாரத்தின் உதவியுடன் தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்தக் குருத்துக்கலங்கள் மனித உடலில்…
-
- 7 replies
- 1.1k views
-
-
சமீப ஆண்டுகளில் மிகப்பிரபலமான விண்வெளி வீரர் ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கழித்த பின்னர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், கமாண்டர் க்ரிஸ் ஹேட்பீல்ட் , அவர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளைவிட , சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதற்காகத்தான் அதிகம் பிரபலமாயிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின் பல்வேறு பகுதிகளின் மேல் பறந்தபோது, அவற்றைப் படமெடுத்து , தனது சமூக ஊடக தளத்தில் அவர் பிரசுரித்ததால், அவரது இந்த சமூக ஊடக தளத்தை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்பற்றினர். பின்னர் பூமிக்கு இறங்குமுன், அவர், டேவிட் பௌயீ இயற்றிய " ஸ்பேஸ் ஒட்டிட்டி" என்ற பிரபலமான பாடலை, புவியீர்ப்பு சக்தியற்ற நிலையி…
-
- 0 replies
- 435 views
-
-
கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோ…
-
- 0 replies
- 924 views
-