செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
6 அடி நீளமான முதலையை தொடர்ந்தும் வீட்டில் வைத்து வளர்ப்பதற்குப் போராடும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது செல்லப்பிராணியாக வளர்த்து வரும் முதலையொன்றை தொடர்ந்தும் தனது வீட்டில் வைத்துக்கொள்வதற்காக போராடி வருகிறார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த மேரி தோர்ன் எனும் இப்பெண், இம் முதலையை 11 வருடங்களுக்குமுன் வளர்க்க ஆரம்பித்தார். ரம்போ என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய செல்லப்பிராணிகளைப் போல் அந்த முதலையுடனும் மேரி தோர்ன் கொஞ்சிக் குலாவி வந்தார். தற்போது 15 வருட வயதான இந்த முதலை 6 அடி நீளமானதாக வளர்ந்துள்ளது. இதனால், இம் முதலையை மேரி தோர்னின் வீட்டில் வளர்ப்பதற்க…
-
- 6 replies
- 286 views
-
-
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார். இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது... நான் இது வரை உயிருடன் இருந்தது…
-
- 8 replies
- 762 views
-
-
இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். உலகில் ஒன்றேயொன்றுள்ள அரியவகை மனிதக் குரங்கு; பல மாதங்கள் கழித்துத் தென்பட்ட அதிசயம்! இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். போர்னியாவில் உள்ள மழைக் காடுகளில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் விடபட்டது ‘அல்பா' என்னும் அல்பினோ மனிதக்குரங்கு. மனிதர்களுக்குத் தெரிந்து இந்த வகை குரங்கில் இது ஒன்றுதான் தற்போது உலகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட அரிய உயிரினம் தற்போது மீண்டும் கண்ணில் பட்டுள்ளது. இது பலரை …
-
- 0 replies
- 416 views
-
-
பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும். இந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை.>>>ட்ர்ட்டி பிக்சர்ஸ் வித்யாபாலன்
-
- 5 replies
- 1.2k views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தெருவில் பைக்கில் சென்ற வாலிபரைத் திரும்பிப் பார்த்த 15 வயது இளம்பெண்ணை அவரது பெற்றோரே ஆசிட் ஊற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகம்மது ஜாபர். அவரது மனைவி ஜாஹீன். இவர்களது 15 வயது மகள் கடந்த 29ம் தேதி அன்று தெருவில் பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த ஜாபர் மகளைக் கண்டித்துள்ளார். அதற்கு அவர், நான் வேண்டும் என்றே அந்த பையனை பார்க்கவில்லை. மீண்டும் அப்படி பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் மகள் ஒரு வாலிபனைப் பார்த்துவிட்டதால் ஆத்திரமடைந்த ஜாபர் பெற்ற பாசம் இன்றி அவர் மீது ஆசிடை ஊற்றியுள்ளார். இதில் அவர் உடல் வெந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போ…
-
- 1 reply
- 923 views
-
-
குவைத் நாட்டைச் சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் ஒரே திருமண மேடையில் நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார். இவர் ஏற்கணவே திருமணமான நிலையில் சில மாதங்கள் சென்ற பின்னர் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாகவே அவரைப் பழிவாங்கும் முயற்சியில் நான்கு பேரை திருமணம் செய்துள்ளார் இந்த பணக்கார வாலிபர். சமூகவலைத்தளங்கள் முதல் ஏனைய இணையத்தளங்கள் வரை ட்ரெண்ட் ஆகி வரும் இச்செய்தியில் “அதுதான் எண்ணெய் வளத்தின் பலம் (Power of Oil) எனக் கொசுறுக் கடி கடித்து வருகின்றனர் http://www.manithan.com/
-
- 10 replies
- 675 views
- 1 follower
-
-
பீட்றோ எனச் செல்லப் பெயரிடப்பட்ட ஆண் தண்டி எனப் பெயரிடப்பட்ட பெண் பென்குவின்களிற்கு திசெம்பரில் பொரித்த (பிறந்த) குஞ்சு, ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மேலதிக எட்டு ஆபிரிக்க பென்குவின் குஞ்சுகளோடு சேர்ந்து ரொறன்ரோ விலங்குச்சாலையில் உள்ள பென்குவின் கூட்டத்தோடு இணைந்துள்ளது. இந்தப் பென்குவின் குஞ்சுகள் பெப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கும் பென்குவின் காட்சியில் இருக்கும். ஆண் இன பென்குவின்களான பெட்றோ அதன் நண்பரான பட்டியினோடு கொண்ட நட்பு அட ஓரினக் காதலா என்பது பற்றியும் அவற்றின் நெருக்கம் பற்றிய குறிப்பு 2011இல் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாயிற்று! அதன்பிறகு ஒருவாரு இந்த இரண்டு ஆண் நண்பர்களும் பிரிக்கப்பட்டு அவை பெண் துணையோடு இணைக்கப்பெற்றன. ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்த ஆபிரிக…
-
- 0 replies
- 302 views
-
-
டுபாயில் நடைபெறும் முப்பரிமாண ஓவியத் திருவிழா! August 11, 2020 டுபாயில் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் பிராண்ட் டுபாய் (Brand Dubai) (அரச ஊடகத்துறையிலுள்ள பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவியத் திருவிழாவொன்று நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக டுபாயிலுள்ள முக்கிய வீதிகளில், முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களால் வரையப்படுவதாகவும் தற்போது சிட்டி வாக் பகுதியில் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவானது இம் மாத இறுதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/…
-
- 0 replies
- 504 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா என்ற செய்தியறிந்து அவரை மீட்பராக வழிபட்ட இந்தியர் மரணம்.! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து அவரை ஒரு மீட்பராகப் போற்றி சிலை அமைத்து வழிபட்டுவந்த இந்தியா் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். . தெகுங்காலாவைச் சோ்ந்த 30 வயதான புஸ்ஸ கிருஷ்ணா என்ற இந்த விசுவாசி டரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாக அவரது கிராம மக்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்ப் தனது கனவில் தோன்றியதில் இருந்து அவா் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறிய கிரு…
-
- 0 replies
- 316 views
-
-
வியட்நாமின் தலைநகர் ஹனாயின் வீதிகளிலிருந்து, குள்ளமான, தொந்தியும் தொப்பையும் உள்ள , வசைச்சொற்களை உபயோகப்படுத்தும் போக்குவரத்து போலிசார் அப்புறப்படுத்தப்படுவர். இந்த நடவடிக்கை, நாட்டின் போக்குவரத்து போலிசார் குறித்து நிலவும் கருத்துருவாக்கத்தை (இமேஜ்) மேம்படுத்த எடுக்கப்படும் புதிய ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் கடமைகளில் இருக்கும் போலிசாருக்கு என்ன எடை அல்லது உயரம் இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் கூறவில்லை. ஆனால் இவர்கள் 'கண்காணாத இடத்திற்கு' இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று மட்டும் கூறினர். சமீபத்தில் உலக வங்கியுடன் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வியட்நாமியர்கள், தங்களது போக்குவரத்து போலிசாரே நாட்டில் மிகவும் ஊழல் நிறைந்…
-
- 0 replies
- 370 views
-
-
50 வருட சேவை... 3,55,000 வாடிக்கையாளர்கள்... 70 வயதில் ஓய்வு பெற்ற விபச்சார இரட்டையர்கள்! ஆம்ஸ்டர்டாம்: கடந்த 50 வருடமாக, அதாவது தங்களது 20 வயது முதல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரட்டையர் சகோதரிகள், தங்களது 70வது வயதில் விபச்சாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர்கள். இருவரும் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பது மலைக்க வைக்கும் தகவலாக உள்ளது. இவர்களின் பெயர் லூயிஸ் போக்கன் மற்றும் மார்ட்டின் போக்கன். இருவரும் ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில்மிகவும் பிரபலமானவர்கள். விஐபி விபச்சாரப் பெண்களாகவலம் வந்தவர்கள் ஆவர். இப்போது உடல் நிலை மற்றும் வாடிக்க…
-
- 6 replies
- 785 views
-
-
கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்) Book Day Admin7 months agoA KumaresanCorona strugglecorona viruscoronavirusThiruvalluvarno comment216 views Spread the love வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன. [எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு இந்தக் குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து புதிய விளக்கங்களோ…
-
- 0 replies
- 470 views
-
-
பறக்கும் விமானத்தில் பணிப்பெண் பாலியல் உறவு ; வெளியான வீடியோ ; நடந்தது என்ன… Weiterempfehlen ஜேர்மனியில் இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமொன்றில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ பதிவு அவ்விமான சேவை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பணிப்பெண் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் காட்சியை அவ்விமானத்தின் விமானியொருவார் தனது கையடக்கத்தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தமது சக விமானிகளுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற விமான சேவை நிறுவனம் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கு கடு…
-
- 0 replies
- 437 views
-
-
உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்! [ பிரசுரித்த திகதி : 2010-04-12 11:27:49 AM GMT ] கடந்த 2009 ஒக்ரோபர் 11-ம் திகதி 254 இலங்கை தமிழ் அகதிகளை உள்ளடக்கிய கப்பல் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றூட் அவர்களின் பணிப்பின் பேரில் இந்தோனேசிய கடற்படையினரால் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு முன்னதாக இடை நிறுத்தப்பட்டது. கப்பல் இடை நிறுத்தப்பட்ட வேளை அவுஸ்திரேலியா ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடாகையால் நாம் அவுஸ்திற்ரேலியாவிற்கே செல்வோமென கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோமென அடம்பிடித்தோம். அந்த வேளையில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரியென இந்தோனேசிய கடற்படையால் அறிமுகப்படுத…
-
- 1 reply
- 549 views
-
-
2வது மனைவியின் 1வது பிள்ளை: 62 வயதில் கலக்கும் ‘மிஸ்டர் பீன்’! ‘மிஸ்டர் பீன்’ என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், தனது இரண்டாவது மனைவியின் மூலம்! ரோவன் அட்கின்சன் தனது இரண்டாவது மனைவியுடன்! 62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனேத்ரா சாஸ்திரி என்ற ஒப்பனைக் கலைஞரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லில்லி, பெஞ்சமின் என்று ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். ரோவன் அட்கின்சன் தனது மகள் லில்லி மற்றும் முதல் மனைவி சுனேத்ரா சாஸ்திரியுடன்! சுனேத்ராவுடனான 24 வருட திருமண வாழ்க்கை …
-
- 0 replies
- 851 views
-
-
நாய் கடிப்பது ஏன்? நாய்கள் மனிதர்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பிபிசி இந்தி குழு ㅤ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக நடக்கும் பாதையை நாய்க் கடிக்கு பயந்து மாற்றிக்கொண்ட அனுபவம் உண்டா உங்களுக்கு? அப்படியெனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நாய்க்கடிக்கான முதலுதவி குறித்தும் நாய்கள் ஏன் கடிக்கின்றன என்பது குறித்தும் எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. சரி தொடங்கலாமா? கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. நாய்க்கடியால…
-
- 2 replies
- 497 views
- 1 follower
-
-
கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு! மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய சிறு குளங்களிலும் முதலலைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும், மீனவர்களையும், குளத்தில் மேச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் தாக்கிவரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து கிராமத்திற்கு முதலை ஒன்று புகுந்துள்ளது…
-
- 0 replies
- 328 views
-
-
திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கனடா தொழிலதிபர் - ரூ1500 கோடி 'அம்போ'வான சோகம்.! இந்தியா வந்த கனடா நாட்டு தொழில் அதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். பண பரிவர்த்தனை குறித்த ரகசிய பாஸ்வேர்ட் எண் யாரிடமும் சொல்லாமலே இறந்து விட்டதால் சுமார் 1500 கோடி ரூபாய் அம்போ வாகிவிட்ட சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும், கம்பெனி நிர்வாகத்தினரும் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜெரால்டு காட்டன் என்பவர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் தனது மனைவியுடன் இந்தியா வந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட காட்டன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆதரவற்றோர் மையம் துவங்குவதற்கான பணிகளில் மும்முரமாக இருந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்…
-
- 2 replies
- 969 views
-
-
ஒவ்வொரு நாளும் புதுவாழ்க்கை வாழும் விசித்திர பெண் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டினா கார்ப்(Christina Corp) என்ற பெண்மணிக்கு, தனது வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாளில் நினைவுகூற முடியாது. ஏனெனில், இவருக்கு 17 வயது இருக்கும்போது ஏற்பட்ட கார் விபத்தில் இவரது மூளை சேதமடைந்தது, அதன் பின்னர் சுயநினைவிழந்து இருந்தார். அதன் பின்னர் குணமடைந்த அவரால், வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாள் நினைவுகூற இயலாது. ஒவ்வொரு நாளும் புதுநாட்களாகவே அவருக்கு இருந்துள்ளது. மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருந்த கிறிஸ்டினாவின் பெற்றோருக்கு, இன்பமூட்டும் சம்பவமாக, ஜோ சிவேனி(Joe Sweeney - Age 29) என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்டினாவை சந்தித்துள்ளார். நாளடை…
-
- 0 replies
- 252 views
-
-
க்ளைமாக்சில் வில்லன் துப்பாக்கியால் சுடும்போது கழுத்தில் போட்டிருக்கும் டாலரோ, பாக்கெட்டில் வைத்திருக்கும் பொருளோ ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுவதை பல தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனா இப்போ ஹீரோக்கள் எல்லாம் காஸ்ட்லியான ஐபோன் தானே பாக்கெட்ல வச்சிருக்காங்க, அதனால் எத்தனை ஐபோன் பாக்கெட்டில் இருந்தால் துப்பாக்கி தோட்டவிலிருந்து தப்பிக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த வீடியோ…. https://www.youtube.com/watch?v=DbVHe5A6rJs . - See more at: http://www.canadamirror.com/canada/45568.html#sthash.wA0fuakK.dpuf
-
- 0 replies
- 363 views
-
-
நம்மூரில் உள்ள சேவல்கள் சோளம், கம்பு, தட்டைப் பயிறு, போன்ற தானியங்களைத் தான் சாப்பிடுவதுண்டு. ஆனால் ஆந்திராவில் உள்ள சேவல் ஒன்று மட்டன் மட்டும் தான் சாப்பிடுகிறது. அதிலும் கூடவே மது இருந்தால் தான் மட்டனை லபக் செய்கிறது. இந்த வினோத சேவலின் சொந்தக்காரர் பெயர் சின்னசத்யம். இவர் கரீம் நகர் மாவட்டம் போத்கல் கிராமத்தில் கோழிக்கறி மற்றும் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது சேவலுக்கு தொடக்கத்தில் தானியம் கொடுத்துப் பார்த்தார் ஆனால் அது சாப்பிடவில்லை. அவரது கடையில் கீழே சிதறிக் கிடந்த மட்டனை மட்டும் விரும்பி சாப்பிட்டது. ஒரு நாள் சின்னசத்யம் தான் குடிப்பதற்காக ஒரு டம்ளரில் மது ஊற்றி வைத்திருந்தார். அதை சேவல் நன்றாக குடித் தது. இதைப் பார்த்ததும் சின்ன சத்யம் குஷி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தாயன் ஜயதிலகாவின் மறுவருகை பிரெஞ்சு நாட்டுக்கான இலங்கைத் தூதர் தாயன் ஜயதிலகா அவர்கள் தமிழ் விவாதச் சூழலில் (ஆங்கிலத்தின் வழி) பிரவேசித்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் செயல்பட்டுவரும் இரு ஆளுமைகளின் மேற்கோளுடன் அவர் விடுதலைப் புலிகளின் 'உயிர்க்கூறு (DNA)' பாசிசம்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார். ‘இனியொரு’ இணைய இதழில் கணேஷ் ஐயர் அவர்கள் எழுதி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்ற ஆண்டுகள் தொடரிலிருந்து ஒரு மேற்கோள், அகிலன் கதிர்காமருக்கு ராகவன் அவர்கள் கொடுத்த நேர்காணலில் இருந்து ஒரு மேற்கோள் என இரு மேற்கோள்களில் இருந்து இதனை அவர் நிறுவிக் காட்டுகிறார். ஐயரின் மேற்கோள் எதனைச் சொல்கிறது? சுபாஷ் சந்திர போஸ், வாஞ்சிநாதன், இட்லர் ஆகியோரின் கலவை பிரபாகரன் …
-
- 0 replies
- 516 views
-
-
விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்த அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். ஒரு வருடம் விண்வெளியில் இருந்த போது அமெரிக்க வீரர் கூடுதல் உயரமாக வளர்ந்தார். பூமி திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி, ரஷியாவின் மிக்கேல் கோர்னியென்கோ ஆகிய 2 பேரும் 340 நாட்கள் அதாவது ஒரு வருடம் விண்வெளியில் தங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 3–ந் தேதி சோயுஸ் விண்கலம் மூல…
-
- 0 replies
- 290 views
-
-
இவர் மிருகங்களை வளர்த்து வந்து இருக்கிறார். மிருகங்களில அளவுக்கு மிஞ்சி அன்பு வச்சு இருக்கிறார். மிருகங்களோட மிக நெருக்கமாக பழகினவேளையில குரங்கு ரெண்டு இவரத்தாக்கி.. மூக்கை துண்டாடிப்போட்டுகள்... அளவுக்கு மிஞ்சினால் எல்லாம் ஆபத்து. செல்லப்பிராணிகளாக இருந்தாலும் எல்லாம் அளவோட எச்சரிக்கையோட இருக்கிறது நல்லது.. இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்து இருக்கிது. இண்டைக்கு நான் நெட்டில வேற ஏதோ தேடல் செய்யேக்க இது சிக்குப்பட்டிது. மூலம்: http://www.thesun.co.uk/sol/homepage/news/article1364810.ece நன்றி!
-
- 1 reply
- 1.2k views
-
-
23 Sep, 2025 | 03:26 PM ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். காபூலிலிருந்து புறப்பட்ட கேஏஎம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகத் திரிந்த ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான். சிறுவன் ஒளிந்தி…
-
- 3 replies
- 528 views
- 1 follower
-