செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7095 topics in this forum
-
கனடாவில் வைரலாகியுள்ள முதியவரின் சலுகை! on: நவம்பர் 07, 2017 கனடாவில் வருடமொன்றிற்கு 30,000 முதல் 36,000டொலர்கள் வரையிலான சம்பளம் வேண்டுமா? நீங்கள் புகை பிடிக்காதவராக அமைதியை விரும்புபவராகவும் அமைதியாக இருப்பவரும் ஊனமுற்ற வயோதிபரை கவனித்து கொள்ள விரும்பினால் அதிஷ்டம் உங்களிற்கு. செய்ய வேண்டியது விறகு சேர்ப்பது உணவு தயாரிப்பது. எதிர்கால வாடகை பற்றிய கவலை கொள்ள வேண்டிதில்லை. நோவ ஸ்கோசிய கேப் பிரெட்டனில் ஒரு கிராம புறத்தில் மனிதனொருவர் தன்னுடன் வசிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த சலுகைகளை வழங்க முன்வந்துள்ளார். தன்னுடன் வசிக்க சரியான ஒருவரை தேட இணையத்தை தெரிந்தெடுத்துள்ளார். 75வயதுடைய ரெறொன் டொட் என்பவர் சக்கர நாற்காலியில் இரு…
-
- 0 replies
- 558 views
-
-
7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். …
-
- 0 replies
- 223 views
-
-
பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை. உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரா…
-
- 0 replies
- 231 views
-
-
மன்னார் கடலில் சிக்கிய விசித்திர மீனால் பரபரப்பு!! மன்னார் – வங்காலை பகுதி கடலில் விசித்திரமான பெரும் மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் நேற்று முன் தினம் பிடிக்கபட்டுள்ளது. சுறாவை ஒத்த தோற்றமுள்ள மீன் ஒன்றே மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர் என்று கூறப்படுகின்றது. அந்த மீனை கணக்கான மக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். http://newuthayan.com/story/44614.html
-
- 5 replies
- 1.3k views
-
-
வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்! பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது. மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும். இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது. டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் சீன தலைந…
-
- 0 replies
- 218 views
-
-
சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும் ட்ரம்ப்புக்கு நடுவிரலை தூக்கி காட்டிய 50 வயது பெண் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கத்தைய கலாச்சாரத்தில் நடுவிரலை தூக்கி காட்டுதல் என்பது அவமானத்தின் சின்னமாக கருதப்படுகின்றது. ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால் உடனே ஏதாவது ஒரு கெட்டவார்த்தையுடன் நடுவிரலை தூக்கி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கே நடுவிரலை தூக்கி காட்டியுள்ளார் ஒரு பெண். கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதி டிரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போத…
-
- 5 replies
- 4.1k views
-
-
எண்ணெய் தாங்கியுடன் வரிசையில் நின்ற நபர் – வைரலாகும் ஒளிப்படங்கள்!! நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன. http://newuthayan.com/story/44361.html
-
- 2 replies
- 492 views
-
-
சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசம்பர் 17ஆம் திகதி இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார். திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந…
-
- 0 replies
- 249 views
-
-
குடும்பப் பெண்ணை ஓட்டோவில் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது. சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 30 ஆம் திகதி மந்திகை மருத்துவமனையில் மனநோய்க்குச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தன்னை முதியவர் ஒருவர் ஓட்டோவில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று முதியவருக்கு எதிராகக் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.cineinbox.com
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள். FacebookTwitterPinterestEmailGmailViber இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும். அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள் இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர் http://newuthayan.com/story/43776.html
-
- 13 replies
- 1.4k views
-
-
மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்! படத்தின் காப்புரிமைKCNA VIA AFP பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார். விளம்பரம் புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனைகள் மீது தொடர் கொலைகளை செய்துவரும் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி பிராணி பிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வாசகர்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். சாண்டெல்லேயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த பூனைக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அதன் பெயர் ஸ்கூட்டர். சாண்டெல்லே கடைசியாக தன் பூனையை பார்த்தபோது, சமையலறையிலிருந்த நாற்காலி மீது அமர்ந்துகொண்ட…
-
- 2 replies
- 355 views
- 1 follower
-
-
தூவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு FacebookTwitterPinterestEmailGmailViber நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் இன்று காலை இடம்பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு வந்தமையினால் பேருந்துக்குள் இருந்த இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததையடுத்து அந்த நபர் தான் விரும்பியதனை போன்று வ…
-
- 20 replies
- 1.4k views
-
-
விண்ணில் பரவிய இறுதி ஆசை! மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார். எனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார். விண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற…
-
- 0 replies
- 280 views
-
-
மூன்று ஆண்களை காதல் நாடகமாடி ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார் தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒரு…
-
- 12 replies
- 580 views
-
-
மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட நாய் 100 நாட்களுக்குப் பின் மீட்பு ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய் கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்…
-
- 0 replies
- 247 views
-
-
வீட்டுக்குள் நுழைந்த சவரத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி! வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை. இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ…
-
- 1 reply
- 437 views
-
-
ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து! ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார். விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவு…
-
- 6 replies
- 652 views
-
-
சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்ச…
-
- 3 replies
- 413 views
-
-
சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் (கம்பளை நிருபர்) கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவ…
-
- 0 replies
- 165 views
-
-
ஜெர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார் ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார், அவரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள சல்ஸ்கிட்டர் பகுதியில் வசித்து வந்த 31 வயதாகும் இளைஞரின் வீட்டிற்கு தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கட்டணம் வந்துள்ளது. அவரது வீட்டில் ஒரு ஆண்டில் 7 மில்லியன் லிட்டர் (1.85 மில்லியன் கலோன்கள்) நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. சல்ஸ்கிட்டர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு சராசரியாக 44,000 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இவர் வீட்டில் 7 மில்லியன்…
-
- 2 replies
- 393 views
-
-
-
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…
-
- 3 replies
- 616 views
-
-
நீர்மூழ்கியில் பெண் அதிகாரிகளுடன் உல்லாசம்; இராணுவ உயரதிகாரி இடைநீக்கம்! இங்கிலாந்தின் கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில், இள நிலை பெண் அதிகாரி ஒருவருடன் பாலுறவில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அதிகாரியை பதவி விலகுமாறு சக வீரர்கள் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ‘எச்.எம்.எஸ். விஜிலன்ஸ்’ என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல், வட அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தபோது, கப்பலில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், தமது இள நிலை பெண் அதிகாரிகள் இருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தலைமையகத்துக்கு தகவல்கள் கிடைக்கப…
-
- 2 replies
- 313 views
-
-
விந்தணு தானம் - மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்! [Friday 2017-10-13 09:00] விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகிளவில் பெருகி வருகிறது. உலகெங்கிலும் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால், இரத்த தானம், தாய் பால் தானம் போல, விந்தணு தானமும் செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் விந்தை பணத்திற்கும் விற்கிறார்கள். பெண்கள் மத்தியில் எப்படி தாய் பால் சுரக்கவில்லை என்றால் தானம் பெறப்படுகிறதோ, அப்படி தான் ஆரோக்கியமான விந்து இல்லாதிருக்கும் ஆண்கள் விந்து தானம் பெற்று பிள்ளை பெறுகிறார்கள். இது சில நாடுகளில் சாதாரணமாகவும், சில நாடுகளில் மிகவும் விசித்திரமாகவும் காணப்படுகின்றன. இது சில …
-
- 3 replies
- 1.3k views
-