Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்க ஆயிரக்க கணக்கான ஜேர்மனியின் கால்பந்து ரசிகர்கள் பேர்லின் அரங்கிற்கு சோபாக்களுடன் வருகை தருகின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டியின் நேரலையினை உலக கிண்ண முதல் போட்டியில் இருந்து பேர்லின் அரங்கில் பெரிய திரையில் காண்பிக்கப்படுகிறது. இங்கு வரும் ரசிகர்கள் தமது வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்று சோபாக்களுடன் வருகை தர அரங்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியையும் காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சோபாக்களுடன் ஒன்று கூடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலுக்கும் குரோசியாவுக்கு இடையிலான போட்டியினை காண இவ்வரங்கில் சுமார் 12 ஆயிரம் பேர் ஒன்ற…

    • 0 replies
    • 538 views
  2. அமெரிக்காவின் மாநில அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்ற பின்னர் ஆபாச வீடியோவில் தோன்றியதால் தனது அந்தஸ்தை இழந்த யுவதி, தற்போது மீண்டும் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார். கிறிஸ்டி அல்தாயஸ் எனும் இந்த யுவதி, 2012 ஆம் ஆண்டு பதின்மர் பருவத்தினருக்கான மிஸ் கொலராடோ டீன் யூ.எஸ்.ஏ. மாநில அழகுராணி போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். ஆனால், கிறிஸ்டி அல்தாயஸ் தோன்றும் பாலியல் வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 18 வயது யுவதியாக இருந்தபோது இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் விமர்சனங்களையடுத்து, அழகுராணி போட்டியில் கிறிஸ்டி அல்தாயஸ் பெற்ற இரண்டாமிடம் கடந்த ஜனவரி மாதம் பறிக்கப்பட்டது. அத்துடன், மிஸ் யூ.எஸ்.ஏ. அழக…

  3. ஒரே வீட்டில் 31 டாக்டர்கள் - அசத்தும் ஜெய்ப்பூர் டாக்டர் குடும்பம்! ஜெய்பூர்: ஜெய்ப்பூரில் ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். ஆனால், உண்மையிலேயே வீனமிரிதா பாட்னி குடும்பத்தில் அவருடன் சேர்த்து 32 பேர் டாக்டர்கள். சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் 32 பேர். குடும்பம் முழுதும் டாக்டர்கள்: இவருடைய குடும்பத்தில் முக்கால்வாசிப் பேர் மருத்துவர்கள்தான். ஜெய்ப்பூரில் அவரது குடும்பத்தையே "ஜெய்ப்பூர் டாக்டர் பரிவார்" என்றுதான் அழைக்கின்றார்கள். இரண்டாம் தலைமுறை: அவருடைய மாமாக்கள், அத்தைகள், சித்திகள், ச…

  4. பெண்களின் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் இஸ்ரேலில் முதன் முறையாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தினை பிமென் குழு பரவலாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பிமென் குழுவின் இஸ்ரேல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பித்துள்ள பேஸ்புக் பக்கத்திற்கு முதல் தினமே 600 லைக்குள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற ஆண்களின் ஓரின அணிவகுப்பு கொண்டாத்தின்போதே இஸ்ரேல் பிமென் அமைப்பின் பெண்கள் சிலர் லொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பெண்களை ஒடுக்குவதனை நிறுத்துமாறு மேடையில் நின்று கோசமிட்டுள்ளனர். 'இஸ்ரேலில் டொப்லெஸ் எனும் விடயம…

    • 7 replies
    • 814 views
  5. உலகிலேயே உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் த கிங்டம் டவர் என்பதே. இந்தக் கட்டிடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது போதாதென்று இதற்கு மற்றொரு பெருமையும் சேரப்போகிறது. உலகிலேயே உயர்ந்து நின்றால் போதுமா உயரத்தையும் விரைவாக எட்ட வேண்டும் என்ற ஆசை வருமல்லவா? அதுதான் அடுத்த பெருமை. இங்கு அமையவிருக்கும் லிஃப்ட் உலகின் மிக வேகமானது என்கிறார்கள். இது வினாடிக்கு 32 அடி 10 மீட்டர் - உயரம் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த லிஃப்ட் ஃபின்லாந்து நாட்டில் தயாராகிறது. மின் தூக்கிகள் தயாரிப்பில் …

    • 0 replies
    • 572 views
  6. தென் சீன நகரான யுலினில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பை தவிர்க்கும் வகையில் கோடை கால நாய் இறைச்சி உண்ணும் கொண்டாட்டங்கள் முன்கூட்டியே இடம்பெற்றன. வருடத்தின் நீண்ட நாளை குறிக்கும் மேற்படி கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமையே இடம்பெற வேண்டியிருந்த போதும் இந்த விழாவையொட்டி இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கும் முகமாக முன்கூட்டியே அந்த விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவையொட்டி நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்கு மிருக உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82…

    • 0 replies
    • 566 views
  7. சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு- பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவு…

    • 10 replies
    • 3.2k views
  8. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிர்வாணமான பெண்ணொருவரின் சூரிய குளியல் காரணமாக பெரும் வாகன நெரிசலும் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. வீதியோரமாக உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் யன்னலூடாக சூரியக் குளியலில் இந்தப் பெண் ஈடுபட்டுள்ளார். ஓர் இளம் பெண் முழு நிர்வாணமாக இருப்பதை கண்ட வாகன சாரதிகள் தமது கவனத்தை திசை திருப்பியதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. வாகன சாரதிகள் அனைவரது கவனமும் இந்த நிர்வாணப் பெண் மீது இருந்ததால் வாகனங்கள் ஒவ்வொன்றும் மோதிக்கொண்டன. அதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. ஏன் வாகன நெரிசல் ஏற்பட்டது என்பதை அறிவதற்காக நிர்வாணமாகவே அந்தப் பெண் வெளியில் வந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக …

    • 8 replies
    • 2.3k views
  9. பாம்பு, நத்தை போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வித்தியாசமான மசாஜ் போன்று சீனாவில் நெருப்பினால் மசாஜ் செய்யப்படுகிறது. ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த நெருப்பு மசாஜ் மூலம் அவர்களது பாலுணர்வை அதிகரிக்க முடியும். இம்மசாஜ் சிகிச்சையானது பழங்கால சீனாவின் வயாகரா எனக் கூறப்படுகிறது. அக்கியூப்பஞ்சர் மற்றும் கப்பிங் சிகிச்சை முறைகள் போன்று நெருப்பு மசாஜும் சீனாவில் பழைமையான சிகிச்சை முறையாகும். தற்போது கிழக்கு சீனாவில் இச்சிகிச்சை முறை பிரபல்யமாகவுள்ளது. படத்தில் உள்ளது போன்று ஆண்களின் மர்ம உறுப்பில் மூலிகை கொண்ட நெருப்புடன் துவாய் ஒன்றால் மூடப்பட்டு சூடேற்றப்படும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் ஆண்களின் பாலுணர்வும் அதிகரிக்கும். அத்துடன் மூட்டுவலி மற்றும் மு…

    • 4 replies
    • 1.1k views
  10. ரம்புட்டான், மங்குஸ்தான் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு ஹெவலொக் டவுனில் ரம்புட்டான் கொள்வனில் ஈடுபட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார் பிரபல நடிகை பூஜா. ஹெவலொக் டவுனில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு முன்னால் விற்பனைக்காக வைத்திருந்த ரம்புட்டான் வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை நடிகை பூஜா ரம்புட்டான் கொள்வனவு செய்ததுடன் வியாபாரிகளுடன் இணைந்து ரம்புட்டன் வியாபார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த இடத்தில் ரம்புட்டான் தூரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கியுள்ளனர். பூஜாவின் விருப்பத்துக்குரிய பழம் தூரியன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (Clicked by : Sandesh Bandara)…

    • 7 replies
    • 1.2k views
  11. சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ,வயது 27, மற்றும் 23 வயதுடைய டாய் லெய் ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார். காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு வ…

  12. அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் கூடைபந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டும் வைபவத்தில் மாணவியொருவர் நிலைதடுமாறி விழப்போனதால் அவரை தாங்கிப்பிடிக்க ஜனாதிபதி ஒபாமா முற்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அமெக்கரிக்காவின் என்.சி.ஏ.ஏ. கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கெனக்டிகட் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியனாகினர். அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கிடையிலான கூடைபந்தாட்டப் போட்டிகளில் ஒரு வருடத்தில் ஒரே பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சம்பியனாகியமை இது இரண்டாவது தடவையாகும். இவ்வணிகளின் வீரர், வீராங்கனைகளை வெள்ளை மாளிகையில் பாராட்டு வைபவம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது.…

  13. சுவீடன், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் நெதர்லாந்தின் தலைவர் சுவீடனில் ஏரிக் கரையோரம் இடம்பெற்ற குறுகிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடொன்றில் பங்கேற்றனர். இந்த உச்சி மாநாட்டையடுத்து ஸ்டொக்ஹோம் நகரின் மேற்கே 120 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சுவீடன் பிரதமர் பிரட்றிக் ரெயின் பீல்டின் கோடை வாசஸ்தலத்திற்கு அண்மையிலுள்ள ஏரியில் சுவீடன் பிரதமரும் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மேர்கலும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் படகுச் சவாரியில் ஈடுபட்டனர். http://virakesari.lk/articles/2014/06/11/4%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%…

    • 0 replies
    • 471 views
  14. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வலேரி கெட்டோ, தான் பாலியல் வல்லுறவின் காரணமாகப் பிறந்த ஒரு பெண் எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான வலேரி பென்சில்வேனியா மாநில அழகுராணியாக அண்மையில் முடிசூடப்பட்டார். இவ்வருடத்துக்கான அமெரிக்க அழகுராணி (மிஸ் யூ.எஸ்.ஏ.) போட்டியில் பென்சில்வேனியா மாநிலம் சார்பாக அவர் பங்குபற்றினார். இந்நிலையில், பேட்டியொன்றின்போது தனது துயர வரலாறு குறித்து வலேரி கூறியுள்ளார். தனது கதை பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் கருதுகிறார். 'பாலியல் வல்லுறவினால் பிறந்த ஒருவளாக இருப்பதை, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையை, அவர் எப்போதாவது கண்டுபிடிக்கப்படுவாரா என்பதும் தெரியாத …

    • 6 replies
    • 867 views
  15. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவது மிக கடினம் என்று அனைவருக்கு தெரியும். அப்படியிருக்கு ஒரு ஈழத்து இசையமைப்பாளர் ஒருவர் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வர்ஷன் மற்றும் அனு நடிக்கும் ’காக்கா குருவி’ படத்தில் ஈழத்து இசையமைப்பாளர் சஜேஸ் கண்ணன் இசையமைக்கயிருக்கிறார்.ஒரு ஈழத்து இசையமைப்பாளர் கோலிவுட் வரை வந்து இசையமைப்பது ஈழத் திறமை சாலிகளுக்கு கிடைத்த கௌரவம். See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104855/#sthash.q37JztFY.dpuf

    • 0 replies
    • 489 views
  16. ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள் ஸ்கௌட் வில்லிஸ் தனியாக ஆரம்பித்த டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் இப்போது குழுவாக விரிவடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் புகைப்பட இணையத்தளத்தில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் தரவேற்றம் செய்ய முடியாது. இக்கொள்கையை எதிர்த்து கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் வீதியில் தனியாக டொப்லெஸ்ஸாக கடைக்குச் சென்று ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டார் 22 வயதான ஸ்கௌட் வில்லிஸ். பின்னர் அது குறித்த தகவல்களையும் படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டு பிறீ த நிப்பிள் எனும் ஹேஸ் டெக்குடன் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது இணையத்தில் பிரபல்யமடைந்தது. இச்செயலினால் தூண்டப்பட்ட சுமார் 20 பெண்கள் ஸ்கௌட் வில்லிஸின் நோக்கத்தையே மையப்பொருளாக வைத்து வொஷிங்டன் சதுக்க பூங்காவில் கடந்த …

  17. சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் கவர்ச்சியானவர் என்று பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது வில்லங்கமான பதிவுகளை போட்டு, சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில், "நடிகர் ரஜினிகாந்த்திடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை" என்று ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். ராம்கோபால்…

  18. கைவிடப்பட்ட 2ஆம் உலகப் போர் கால துறைமுகம் ஒன்றின் கடலிலுள்ள சிறிய பகுதியானது 22 பேர் வாழும் சுதந்திர நாடு என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். சீலேண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குட்டித் தீவின் பரப்பளவானது 5,290 சதுர அடிகள் மட்டுமே ஆகும். இரண்டு கோபுரங்களின் மீது இரும்பு தளத்தினூடாக இணைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பெலிக்ஸ்டோவ் நகரிலிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த குட்டி நாட்டினை அங்கு வசிக்கும் 22 பேரும் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரமைந்துவிட்டதாக 1967ஆம் ஆண்டிலிருந்த தாங்களாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் இதனை தனி ஒரு நாடாக எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை. இங்கு வாழ்பவர்கள் தமக்கான அரசரைத் தேர்வு செய்துள்ளதுடன் தங்களுக்கான நாணயம், …

  19. உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் அடுத்த வாரம் பிரேஸிலில் ஆரம்பமாவதை முன்னிட்டு பாகிஸ்தானின் சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்று மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக கிண்ண போட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கால்பந்துகள் 'போர்வார்ட் ஸ்போர்ட்ஸ்' எனும் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றமையே இதற்குக் காரணம். சர்வதேச தரவரிசையில் 159 ஆவது இடத்திலுள்ள பாகிஸ்தான் அணி, உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சியல்கொட் நகரில் நீண்டகாலமாக உலக தரம் வாய்ந்த கால்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு முதல் பீபா உலக கிண்ணப் போட்டிகளுக்கு சியல்கொட் நகரில் பந்துகள் தயாரிக்கப்படுகின்றன.இம்முறை பிரேஸிலில் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிராகு…

  20. பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பேர்கின் மனைவியான பிரஸில்லா சான், முதல் தடவையாக தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இளம் வயதிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகிவிட்ட மார்க் ஸூக்கர்பேர்குடனான திருமணம், தமது நாய், மற்றும் மார்க் ஸூக்கர்பேர்கின் அபிமான ஆடையான ஹுடி எனும் ஆடைகளின் சேகரிப்புகள் போன்ற பல விடயங்கள் குறித்து இப்பேட்டியில் பிரஸில்லா சான் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் வசதி குறைந்த பாடசாலைகளுக்காக தானும் ஸூக்கர்பேர்க்கும் 12 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 1563 கோடி ரூபா) நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அமெரிக்காவின் என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பிரஸில்லா சான் சீன, வியட்நாம் வம்சாவளி பெற்றோரின் மகள் எ…

  21. அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 50 மில்லியன் டொலர் மாபெரும் பரிசை வென்ற சீட்டைத் தொலைத்த ஜோடியொன்று அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை தேவாலய தரையில் ஒருவர் கண்டுபிடித்து ஒப்படைத்ததையடுத்து தமக்குரிய பரிசை பெற்றுக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை கனடாவில் இடம்பெற்றுள்ளது. நைஜீரிய வம்சாவளி இனத்தவர்களான ஹக்கீமும் அபியோலா நொஸிரும் கடந்த ஜனவரி 17 ஆம் திககி இடம்பெற்ற லொட்டோ மக்ஸ் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் மாபெரும் பரிசை வென்றிருந்தனர். எனினும், அந்த பரிசுக்குரிய சீட்டை அவர்கள் தொலைத்திருந்ததால் அவர்கள் அந்தப் பரிசை உரிமை கோர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் பல மாதம் கழித்து தேவாலயத்தில அந்த பரிசுச்சீட்டை கண்ட நபரொருவர் அதனை மேற்படி ஜோடியிடம் ஒப்படைத்ததையடுத்து திங்கட்கிழ…

  22. நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார். ரி…

  23. பீகாரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 4.5 லட்சம் ரூபாய் வரை உதவி தொகை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் அடலட்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் பரோ தேவி. இவருக்கு வயது 20. சில வருடங்களுக்கு முன் திருமணமான இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பரோ தேவியின் கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லை. கழிவறையை கட்டும்படி, பல முறை கணவரிடம் தெரிவித்தும் அவர்களது வீட்டில் யாரும் இதற்கு செவிசாய்க்காததால் கோபமடைந்த பரோ தேவி குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கு முன் அவரது தாய் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இது குறித்து அறிந்த சுலப் இன்டர்நேஷனல் எ…

  24. லண்டனில் குறுகிய காலத்தில் பெரும் வளர்சியடைந்த உணவு நிறுவனம் சென்னை தோசா ஆகும். பல கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் இந்த உணவகத்தில் பாரிய சுகாதாரக் கேடு இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோசையில் கரப்பான் பூச்சிகளின் எச்சங்கள் காணப்பட்டதோடு, சில உணவுகளில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தும் உள்ளது. இதேவேளை குறிப்பிட்ட இந்த உணவகத்தில் கரப்பான் பூச்சிகளின் ஆதிக்கம் பன்மடங்காகப் பெரிகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நிர்வாகிகள் தவறியும் விட்டார்கள். பல முறைப்பாடுகள் வெம்பிளி கவுன்சிலுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து சுகாதார அதிகாரிகள் வெம்பிளியில் உள்ள சென்னை தோசா உணவகத்திற்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார்கள். சுகாதார அதிகாரிகள் அங்கே நிற்கும் வேளையில் கூட, அவர்கள் …

  25. தன்னை துரத்தி வந்த நாய்களிடமிருந்து தப்புவதற்காக மின் கம்பமொன்றில் ஏறிய கரடியொன்று அந்தக் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. சஸ்கட்சிவான் பிராந்தியத்தில் ஷெல்புறூன் எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள மின் கம்பத்திலேயே அந்தக் கரடி உறங்கியுள்ளது. அந்தக் கரடியை மின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு பிராந்திய மின்சார ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. virakesari

    • 0 replies
    • 532 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.