செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
சூரத்: சாப்பிடுவதற்காக தனது நண்பரின் வீட்டுக்குப் போன நபர் அங்கு நண்பரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் ஓடிப் போய் விட்டார். நடிகை நமீதாவின் ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த நபரை போலீஸார் கைது செய்து விட்டனர். சூரத்தின் சர்தானா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரத் படேல். இவர் ஒரு வைரம் பாலிஷ் போடும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மகேந்திர கச்சாடியா என்பவரும் வேலை பார்த்தார். கச்சாடியா வேறு ஊரைச் சேர்ந்தவர். சூரத்தில் அவருக்கு யாரையும் தெரியாது. தனியாக தங்கியிருந்தார். அவருக்கு அந்த ஊர் சாப்பாடு ஒத்துவரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வந்தார். இதைப் பார்த்த படேல், உனக்கு சரியான சாப்பிட…
-
- 21 replies
- 4.6k views
-
-
வடக்கு ஆப்பிரிக்க நாடான பெனின் என்ற நாட்டில் ஒரு இளம்ஜோடி முதலிரவு அன்று ஒரே இரவில் 21 முறை செக்ஸ் உறவு வைத்த காரணத்தால் விவாகரத்து ஆகி பிரியும் நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall 16 வயது இளம்பெண்ணுக்கு 17 வயது Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திருமணத்தன்று பல கனவுகளுடன் முதலிரவு அறைக்கு சென்ற மணமகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணமகனுக்கு தீராத செக்ஸ் உணர்வு இருந்துள்ளது. ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, 21 முறை முதலிரவில் மணமகளுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளார். மணமகள் மறுத்த போதிலும் மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்ததால் அதிர்ச்சி…
-
- 55 replies
- 21.8k views
-
-
வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள். பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான். வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின்…
-
- 6 replies
- 2.5k views
-
-
உலகிலேயே விலை உயர்ந்த காபியின் விலை 150 டொலர்! [saturday, 2014-03-01 20:41:57] உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 150 டொலர் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதா…
-
- 3 replies
- 1.4k views
-
-
யப்பானிய முட்டைத்தோசை https://www.facebook.com/photo.php?v=277017805793923
-
- 0 replies
- 439 views
-
-
உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம். அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்…
-
- 1 reply
- 727 views
-
-
அரோரா போரியாலிஸ் என்ற வட துருவ ஒளி வெள்ளம் பிரிட்டனின் பல பகுதிகளில் பிரமிக்கத்தக்க ஒளி ஜாலங்களை வானில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்சிகள் - படத்தொகுப்பு ஸ்காட்லாந்தின் மற்றொரு பகுதியான கேய்த்னெஸ் பகுதியில் உள்ள விக் என்ற இடத்தில் காணப்பட்ட காட்சி இது. இது போன்ற ஒரு காட்சியை தான் இந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை என்கிறார் பிபிசியின் விண்வெளி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் மார்க் தாம்ஸன். சூரியனிடமிருந்து மின்சக்தியூட்டப்பட்ட துகள்கள் வெளியே தள்ளப்படும்போது இந்த காட்சி பூமியின் வடதுருவப் பகுதியின் அருகே காணக்கிடைக்கிறது என்கிறார் தாம்ஸன். இந்த காட்சி காணப்பட்ட இடம் நார்தம்பர்லாந்தின் கார்ப்ரிட்ஜ். நார்தம்பர்லாந்தின் போல்ம…
-
- 0 replies
- 749 views
-
-
அமெரிக்காவில் ஒரு தம்பதிக்குச் சொந்தமான நிலத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1400 தங்கக் காசுகள் புதையலாகக் கிடைத்துள்ளன. இவை ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்களது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் கீழே, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப்பெரிய அளவாகும். இந்த தங்க நாணயங்களின் உண்மைய…
-
- 2 replies
- 426 views
-
-
அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி கடற்கரையில் சுமார் 700 பேர் கொண்ட குழுவினர் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. 700 இற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இதில் பங்குபற்றினர். போட்டியாளர்கள் தமது ஆடைகளைக் களைந்து கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தினர். மக்கள் இயற்கையுடன் ஒன்றித்திருப்பதற்கும் தமது உடல்வடிவ குறைபாடுகள் தொடர்பான கவலைகளை விலகச்செய்வதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்hளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் முதல் தடவையாக இந்த நிர்வாண நீச்சல் நிகழ்வு சிட்னியில் நடைபெற்றபோது அதில் 700 பேர் பங்குபற்றியிருந்தனர். …
-
- 7 replies
- 1.7k views
-
-
நாயுடன் நடந்து சென்ற தம்பதி ஒன்று சுமார் 13 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நாணயங்களுடன் வீடு திரும்பிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோனியாவைச் சேர்ந்த ஜோன் மற்றும் மேரி என்ற தம்பதிகளே இவ்வாறு தங்கக் காசுகளுடன் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இவர்கள் தங்களை வெளியில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. வழக்கமாக நாயுடன் நடந்து செல்லும் வழியில் பழைய பேணி ஒன்று நிலத்தின் வெளியே தெரியுமாறு புதையுண்டுள்ளது. தொடர்ந்து அந்த பேணியை குச்சி ஒன்றினால் தோண்டி எடுத்துள்ளனர். அந்த ஒரு பேணியுடன் அங்கு புதையுண்டிருந்த மேலும் 7 பேணிகளை இத்தம்பதிகள் தோண்டி எடுத்துள்ளனர். இவற்றுள் 1400க்கும் அதிகமான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. இச்சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றத…
-
- 0 replies
- 375 views
-
-
இன்னும் 35 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் 1500 தீவுகள் கடலில் மூழ்கும்! – பருவநிலை மாற்றத்தால் காத்திருக்கும் ஆபத்து. [Wednesday, 2014-02-26 18:21:40] உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தோனேசியாவில் உள்ள சுமார் 1500க்கும் அதிகமான தீவுகள் 2050ம் ஆண்டில் இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியின் வெப்ப நிலை உயர்வு காரணமாக துருவ பகுதிகளில் உள்ள பனிப்படலங்கள் உருகத் தொடங்கியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இதன் விளைவாக கடல் மட்டம் உயர்வது, பருவநிலை மாறுபாடு, பருவமழை பொய்த்து போதல், கோடை காலங்களில் கடும் மழை பெய்தல் போன்ற பல்வேறு மாற்றங்களும் காணப்படும் என்றும் எச்…
-
- 0 replies
- 288 views
-
-
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் என வர்ணிக்கப்படும் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோகின் எல் சபோ கூஸ்மன் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வதான ஜோகின் கூஸ்மன் கடந்த 13 வருடங்களாக கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி வந்தவர். இதனால் ஏறுத்தாழ ஒரு மர்ம நபராக அவர் கருதப்பட்டார். அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஹெரோயின், கனபீஸ், கொக்கேய்ன் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஜோகின் கஸ்மன், பலநூறு கோடி டொலர்களை சம்பாதித்தவர். கூஸ்மன் தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையிலான மோதல்களால் மெக்ஸிகோ வீதிகளில் தலையற்ற மனித சடலங்கள் காணப்படுவது வழக…
-
- 0 replies
- 808 views
-
-
சிங்கத்தை 'சிறை'சுட்டாங்கையா...! சாலையில் நீங்கள் வாகனத்தில் பயணிக்கும்பொழுது உங்கள் வாகனத்திற்கு முன்னால் இப்படியொரு நிகழ்வு நடந்திருந்தால் எப்படி உணர்வீர்கள்? சிங்கத்தை வளர்த்து சொகுசு வாகனத்தில் செல்லப்பிராணியாக அழைத்துச் செல்வதை அவதானித்ததுண்டா? 'நிசான் அர்மதா' வாகனத்தில், துபை ஷேக் சையத் விரைவு சாலையில் ஒருவர் தான் அவதானித்த இந்த விநோத காட்சியை உங்கள் குழாயில் தரவேற்றம் செய்துள்ளார், பின் இருக்கையில் அமர்ந்துள்ள சிங்கம் இடப்பற்றாகுறையால் அவதிப்படுவதை நீங்களும் பாருங்கள்! http://youtu.be/VnHfD6p48jk இது சமந்தமாக 'கல்ஃப் நியூஸி'ல் நேற்று வந்த செய்தி இது... Dubai: Watch this incredible video of what appears to be a lion in the back of…
-
- 0 replies
- 514 views
-
-
ஒலிப்பதிவு கூடத்தை மூடுமாறு கோரி ரகளை செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் [saturday, 2014-02-08 09:53:47] இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (6-ம் தேதி) தனது 'ஃபேஸ் புக்' பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது: புதிய இசை ஆல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று 'எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்' என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட…
-
- 1 reply
- 472 views
-
-
மந்திர தந்திரத்தால் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தம்பகல்ல பிரதேசத்துக்கு வந்த புத்த பிக்கு ஒருவர் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து தம்பகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 39 வயதான திருமணமாகாத பெண்ணொருவரின் நோயைக் குணப்படுத்த சாந்தி பூஜை செய்யவென வந்த பிக்கு அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று மந்திரம் செய்யும் பாவனையில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் பிக்குவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய தம்பகல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=n…
-
- 8 replies
- 1.7k views
-
-
நம்பினால் நம்புங்கள் சில சமயத்தில் மிருகங்கள் மனிதர்களிடம் இல்லாத அன்பை மனிதகளுக்கு முன் உதாரணமாக வெளிக்காட்டும் இக்காணொளி உங்கள் தூக்கம் தொலைக்கும் காணொளியாக அமையும்.. இக்காணொளியில் விபத்துக்கு உள்ளாகும் 2 வயது சிறுமி சில மணித்தியாலங்களுக்குப் பின் உயிர் இழந்தார்.. அதைபோல் விபத்திற்கு உள்ளான நாய் உயிர் தப்பியது.. https://www.facebook.com/photo.php?v=275964355899268
-
- 1 reply
- 756 views
-
-
அவுஸ்ரேலியாவில் இரவோடு இரவாக திருடப்பட்ட 10 டன் எடைகொண்ட இராட்சத மாம்பழம்! [Monday, 2014-02-24 19:56:47] அவுஸ்ரேலிய மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள். ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள அவுஸ்ரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002-ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 10 டன் எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது. சுமார் ஒரு லட்சம் அவுஸ்ரேலிய டொலர் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக…
-
- 5 replies
- 671 views
-
-
கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கஹட்டகஸ்திகிலிய, குருகல்ஹின்ன தொல்பொருட்கலைத்திணைக்கள வளாகத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே இந்த தங்கச் செம்பு தென்பட்டுள்ளது. கிருஷாந்த சாமல் பிரேமதிலக்க என்ற மாணவனும், அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மாடுகளை அவிழ்ப்பதற்காகச் சென்ற போதே குறித்த மாணவன் இந்த தங்கச் செம்பை கண்டுள்ளான். அதனை கையில் எடுக்க அவன் முற்பட்ட போது அது சூரியன் உள்ள திசையை நோக்கி பறக்க ஆரம்பித்ததாகவும் அதன்போதே தன் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி மூலம் அதனைப் படம் பிடித்ததாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளான். http://tamil.dailymirror.lk…
-
- 0 replies
- 549 views
-
-
காதலர் தினத்தன்று யுவதியொருவரிடம் முத்தம் கேட்ட இளைஞன் ஒருவன் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் 1500 ரூபாவை தண்டமாக செலுத்தியுள்ளார். வெள்ளவத்தையைச்சேர்ந்த யுவதியொருவர் தனது நண்பர்களுடன் காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்திருந்த தெமட்டகொடையைச்சேர்ந்த இனந்தெரியாத இளைஞன், தனக்கு முத்தம் கொடுக்குமாறு யுவதியிடம் நேருக்கு நேர் கேட்டுள்ளார். இதுதொடர்பில் குறித்த யுவதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து தெமட்டக்கொடையைச்சேர்ந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் திலின கமகே 1500 ரூபாவையை தண்டமாக செலுத்துமாறு உத்தரவிட்ட…
-
- 0 replies
- 354 views
-
-
இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ! [Friday, 2014-02-21 14:13:40] பூமிக்கு அடுத்தப்படியாக மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அங்கு ஒரு வழி பயணமாக செல்ல சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ள நிலையில் இஸ்லாமிய ஃபட்வாவின் படி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக அனுப்ப 'மார்ஸ் ஒன்' என்னும் நிறுவனம் விண்ணப்பங்களை பெற்றுவந்தது. இந்த பயணத்திற்கு உலகெங்கும் உள்ள 2,00,000 மக்கள் ஆர்வமாக விண்ணப்பித்திருந்தனர். அதிக பணச்செலவில் மேற்கொள்ளப்படும் இந்த…
-
- 1 reply
- 911 views
-
-
தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில் கண்காட்சியொன்று நடைபெற்ற போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எழுந்த சப்தத்தால் கண்காட்சியிலிருந்த கிளியொன்று அச்சமுற்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. எலெக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஏழு வயதுக் கிளி பறவைக் கண்காட்சியில் பல சாகசங்களைச் செய்துள்ளது. தப்பிச் சென்ற கிளி 5 மாதங்களின் பின்னர் கிளியை சிறு வயதில் வளர்த்த கம்பளை தொலுவ பிரதேசத்…
-
- 0 replies
- 605 views
-
-
கடமைக்குச் சென்ற புதல்வியை அழைத்து வருவதற்காக ஜ-எல - யக்கடுவை வீதி ஒன்றில் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று காத்திருந்த அதிகாரியான அழகிய பெண்ணை பலாத்காரமாக காதலிக்க சொன்ன போது அந்தப் பெண் உதைத்ததால் அருகிலுள்ள வயலில் விழுந்து சேறு பூசிக் கொண்ட இளைஞரொருவரை அயலவர்கள் மடக்கிப் பிடித்து ஜா எல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஜா எல பொலிஸார் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான் ஏ.எம். எஸ். பீ. அமரசிங்க சந்தேக நபரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். ஜா -எல பண்டிகொட பொத்துகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். எச். சக்தன சம்பத் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். …
-
- 0 replies
- 570 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. எல்பிட்டிய, பிட்டிகலை, பொகுனுவலகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார். தினேஷா திலக் ஷி என்ற யுவதியே தனது வீட்டின் அறை ஒன்றில் சேலை ஒன்றினை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, தினேஷா திலக் ஷி என்ற குறித்த யுவதி எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தேயிலை தொலிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்துவந்துள்ளார். இதனிடையே பேஸ்…
-
- 0 replies
- 562 views
-
-
ஜப்பானில் அறிமுகப் படுத்தப் பட்ட புதிய வகை வீடியோ கேமான 'லவ் ப்ளஸ்' (Love Plus) இல் வரும் ரிங்கோ (Rinko) என்ற கதாபாத்திரம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இந்த ரிங்கோ வேறு யாருமல்ல. ஜப்பானின் பருவ வயது ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் (Virtual) கேர்ள் ஃபிரண்ட் ஆவாள். லவ் பிளஸ் எனும் பெயரில் ஜப்பானில் அறிமுகமாகியது ஒரு வீடியோ கேம். இது அங்குள்ள பருவ வயது ஆண்களை மிகவும் கவர்ந்து வருகின்றது. ஏனெனில் இந்த வீடியோ கேமின் மூலம் பருவ வயது ஆண்கள் தமது வயதை ஒத்த எதிர்ப் பால் இனத்தவருடன் எவ்வாறு நட்பை ஆரம்பிப்பது மற்றும் அதனை விருத்தி செய்வது போன்ற விடயங்களை சிமுலேசன் முறை மூலம் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பதே இதன் பிளஸ் பாயிண்ட். இந்த கேமில் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்…
-
- 0 replies
- 665 views
-
-
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் வளர்ந்து வரும் அடர்ந்த உரோமங்களால் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகிறார். இங்கிலாந்து நாட்டின் பெர்க்ஷையர் என்ற நகரில் வாழும் கர்னாம் கவுர் என்ற 23 வயது பெண்ணே பொலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது உடலில் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால் இவர் தனது சக பள்ளி மாணவர்களின கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் உரோமங்கள் வளர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளானா…
-
- 1 reply
- 550 views
-