செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
கோவை: தங்களது பெண் ரகசியக் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், மருதமலை கோவிலில் முறைப்படி திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தனர். ஆனால் வந்த இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்த அவர்கள், அவர் மிகவும் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணை வந்த காரிலேயே வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடுத்து காதல் தம்பதியை சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர். மனம் பார்த்து காதலித்த காலம் போய் விட்டது. இப்போதெல்லாம் பணம் பார்த்தும் இன்ன பிற தகுதிகளைப் பார்த்தும்தான் பலர் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், நிறம் கருப்பாக இருந்தாலும், வெள்ளையான மனசைப் பார்த்துக் காதலித்த பெண் இன்று பெற்றோர் ரூபத்தில் பெரும் சவாலை சமாளித்து மீண்டுள்ளார். தன் காதல் க…
-
- 11 replies
- 756 views
-
-
இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை. அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்ட…
-
- 0 replies
- 638 views
-
-
உலகின் மிகவும் வயதான மனிதராக சிறிலங்காவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது. உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, சிறிலங்காவைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும். இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரையடுத்து உலகின் அ…
-
- 0 replies
- 468 views
-
-
ஈழதேசம் இணையத்தை நிர்மூலமாக்க தீவிர சதி! விழித்து எழுந்தவுடன் கிடைப்பது அல்ல வெற்றி வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி என்பதை ஒவ்வொருதடவையும் நிரூபித்து இணையப்பணியாற்றிவரும் ஈழதேசம் இணையம் எட்டாவது முறையாக தொடர் சதிமுயற்சியில் தாக்குண்டுள்ளது. எட்டாவது முயற்சியிலாவது தமது இலக்கை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சதிகாரர்கள் தீவிரமாக இருப்பதை தற்போதைய நொடிப்பொழுது கூட தொடர்ந்துவரும் நாசவேலைகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ் மொழியானது இன்று எம்மவர்களது வேற்று மொழி மோகத்தினால் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அதில் இருந்து தடுத்து நிறுத்தி வளர்ச்சிப்பாதையில் தமிழ் மொழியை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முக்கிய இடத்தில் தமிழ் இணையங்கள் செயற்பட்டு வருகின…
-
- 1 reply
- 680 views
-
-
26,000 அடி உயரத்தில் பறந்த போது பலத்த சத்தம் கேட்டு விமானிகள் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்கள். விமானத்தின் மூக்கு பெரியளவில் நெளிந்துள்ளது. ஏலியன் விண்கலம் [ UFO ] தாக்கியதில் நெளிந்துள்ளதா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 26,000 அடி உயரத்தில் எந்தவொரு பறவையாலும் பறக்கு முடியாது.நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. (போதிய பராமரிப்பு இன்மையால் விமானத்தின் மூக்கு அமுக்க வித்தியாசம் காரணமாக உள் நெளியலாம் என்றும் சொல்லப்படுகின்றது) http://www.dailymail.co.uk/news/article-2339139/Was-bird-A-Plane-Or-UFO--Chinese-passenger-jet-hits-mysterious-object-26-000ft-lands-severely-dented-nose-cone.html?ito=feeds-newsxml
-
- 5 replies
- 1.8k views
-
-
ஹுங்கம ரன்னப் பகுதி கிராமமொன்றில் 15வயது சிறுவனுடன் தன்னின சேர்க்கையில் ஈடுபட்டிருந்த 59வயது குடும்பஸ்தர் உட்பட நால்வரை ஹுங்கம பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனை பிரதேச மக்கள் மீட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து சிறுவன் தகவலின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்களை அங்குணுகொலபெலஸ்ஸ நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவன் அம்பாந்தோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றான். பொலிஸார் விசாரணை தொடர்கின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5185
-
- 0 replies
- 470 views
-
-
பலா மரத்தில் வாழைப்பழம் முளைத்த அபூர்வம்... பெங்களூர்: போதிய நீர் இல்லாமல் வாழை மரத்திலேயே வாழைப்பழம் விளைவிக்க முடியாமல் நம் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கையில், கர்நாடகாவில் பலா மரத்தில் காய்த்த கனிகளுக்கு உள்ளே பலாச்சுளைகள் முளைத்திருக்கிறதாம். கர்நாடகாவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஹலனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தாசப்பாவின் தோட்டத்தில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. வெளியே முள்ளோடும், உள்ளே இனிப்பான சுளைகளோடும் காட்சியளிக்கும் பலாப்பழங்கள் மரத்தின் வெளியே ஒட்டிய படியே வளரும். ஆனால், தாசப்பா வீட்டுத் தோட்டத்திலுள்ள பலா மரத்தில் காணப்படும் ஒரு பலாப்பழம் அசப்பில் வாழைத்தாஅரை நினைவூட்டுவது போலவே உள்ளது. இது குறித்து பெங்களூரில் இயங்கி வரும் இந்த…
-
- 12 replies
- 3.3k views
-
-
பணம் பிரச்சினை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இருவர் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டை பிடித்துக்கொண்ட சம்பவம் ஒன்று பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பணப்பிரச்சினை காரணமாக முரண்பட்டுக்கொண்ட 52 வயதான அம்மாவும் அவருடைய 25 வயதான மகளுமே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து இவ்வாறு சண்டை பிடித்துக்கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டப்ளியு.ஏ.ஆர் கருணாரத்ன பெற்றோரின் பொறுப்புக்கள் என்ன? பிள்ளைகளின் பொறுப்புக்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்திகொண்டிருந்த போதே இருவரும் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர். அறிவுரையை கைவிட்ட பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 384 views
-
-
இந்த மேலைத்தேய நாட்டில் அதுவும் நாம் வாழும் கொவென்றியில் நாலு வயது சிறுவனை பட்டினி போட்டு, துன்புறுத்தி கொன்றார்கள் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. பாவம் அந்தசிறுவன் குப்பைதொட்டிகளில் மீதமிருந்த அப்பிளையும், மற்றப் பிள்ளைகள் வீசிய தயிரையும் எடுத்து உண்பானாம். அவனது பள்ளி ஆசிரியர்கள் இப்போது சொல்கிறார்கள் . Daniel Pelka murder case: Boy 'ate food from bins' Daniel Pelka was not mixing with other school children, according to his head teacher Continue reading the main story Related Stories Starved boy 'stole food at school' Parents 'deliberately starved son' A jury has been told that a four-year-old boy who was allegedly starved and murdered by his mo…
-
- 1 reply
- 741 views
-
-
ஆண் வாரிசு வேண்டும் என்று கூறி கணவர் அடித்துத் துன்புறுத்தியதில் வெறுத்துப் போன பெண்னொருவர், தனது 5 மகள்மார்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பிரேமா தேவி என்ற பெண்னே தனது, மகள்மார்களான சுதா (வயது 12), ரேகா (வயது 10), நிஷா (வயது 7), ரூபா (வயது 5), ஷிகா (வயது 2) ஆகியோருடன் தீக்குளித்தவராவார். பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, லக்னோவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது திவ்லி என்ற கிராமம். இங்கு தனது 5 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் பிரேமா தேவி. இவரின் கணவர் ஜெகதாம்பா பிரசாத் லோத். இவர் தனக்கு ஆண்வரிசு வேண்டும் எனக்கூறி பிரேமா தேவியை தொடர்ந்…
-
- 0 replies
- 521 views
-
-
செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அஅந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா(23) என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று அறுவை சிகிச்சை முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும், 1 பெண் செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அஅந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இ…
-
- 14 replies
- 1.2k views
-
-
திருவண்ணாமலை: விருப்மில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென அதிலிருந்து நைசாக இறங்கி சாலையில் போய்க் கொண்டிருந்த வேலூர் பஸ்சில் ஏறி தப்பினார். பைக்கில் உட்கார்ந்திருந்த மனைவி பஸ்சில் பயணித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கணவர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அண்ணாமலை.டெய்லராக இருக்கிறார். இவருக்கும் 22 வயதான மீனா என்பவருக்கும் திருமணம் நடத்தினர் இரு குடும்பத்தார். மீனாவுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை போலும். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி தனது பெரியம்மா மகள் வீட்டுக்கு விருந்துக்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கிளம்பினார் அண்ணாமலை. போளூர் டைவர்சன் சாலையில்…
-
- 0 replies
- 698 views
-
-
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடுவது, ஒரு சி.டியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு தொட்டப்பள்ளாபூர் அருகே நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக ரக்சன வேதிகே தலைவர்கள் மூலம், புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனமாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அனைத்து தொலைகாட்சி சேனலிலும் வெளியானதை அடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ள எஸ்.ஆர் ரேசார்டின் உரிமையாளர்கள், இச்சம்பவம் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்க…
-
- 3 replies
- 887 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்! இங்கிலாந்து நாட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஷாக்கான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில்தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறாராம்.. அதென்னங்க பாரம்பரியம் என்று கேட்டால் எங்கப்பா இப்படித்தான் செய்தார் என்கிறார் மைலீன் கலாஸ்... மைலீன் கலாஸின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் டீ போட்டு குடித்து சந்தோஷப்பட்டாராம்.. அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதுல எவ்ளோ சந்தோசம் இருக்கிறது தெ…
-
- 5 replies
- 812 views
-
-
பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட…
-
- 15 replies
- 1k views
-
-
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மறைந்த பிரபல நடிகர் தாராசிங் மகன் நடிகர் விண்டூ, இவர் கைது செய்யப்பட்டதையடுத்து பி.சி.சி.ஐ. தீலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் தேடப்பட்டு வருகிறார். சூதாட்டப் புகாரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது இந்த நிலையில் விண்டூ. வீரர்களுக்கு பிரபலமான மாடல் அழகிகள் மற்றும் இளம்பெண்களை சப்ளை செய்த தகவல், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த அழகிகளுக்கு ஒரு நாள் இரவுக்கு ரூ.1 லட்சம் வரை விண்டூ கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காட்ச…
-
- 31 replies
- 2.1k views
-
-
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு 'கிச்சுகிச்சுமூட்டி' அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது. மீன்பிடிப்பதற்காக சென்ற 65 வயதான மீனவர் ஒருவரே முதலையின் வாயில் சிக்கிக்கொண்டுள்ளார். அவருடைய கால்களை முதலை கௌவிக்கொண்டது. உடனடியாக கைகளை முதலையின் வயிற்றுக்கு கீழே கொண்டுபோன அவர் முதலையின் வயிற்றில் கிச்சுகிச்சுமூட்டியுள்ளார். கூச்சமடைந்த முதலை வாயை திறந்தவுடன் அதன்பிடியிலிருந்து தான் தப்பித்து கொண்டதாகவும் இந்த முறைமை தொடர்பில் தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாகவும் அந்த மீனவர் தெரிவித்துள்ளார். முதலையிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மந்திரம் செய்யப்பட்ட கற்களை அந்த களப்பிற்குள் போட்டுள்ளதாகவும் அந்த கற்கள…
-
- 13 replies
- 1.9k views
-
-
அமெரிக்க உணவு நிறுவனம், கோழி முட்டைக்கு பதிலாக, தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஹாம்டன் க்ரீக் புட்ஸ் நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் உதவியுடன், முட்டை தயாரித்து வருகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள், முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து, அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட…
-
- 2 replies
- 975 views
-
-
லண்டன்: மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. (ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம் இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளி…
-
- 0 replies
- 543 views
-
-
இது ஒரு உறுதிப்படுத்தப்படாத படம். இதனை இன்று பல முஸ்லிம் இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. அத்துடன் பல முஸ்லிம் நண்பர்களின் சமூக வலைத்தளங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. செய்தி திரட்டி, உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கான பகுதி என்பதால் இங்கு இணைக்கின்றேன்.
-
- 5 replies
- 607 views
-
-
விருத்தாசலம்: பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் முதல்வர் தனி பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். விருத்தாசம் அருகேயுள்ள மணவாளநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் கழியன். இவரது மகன் வேல்முருகன் ஒரு மாற்றுத்திறனாளியாவார். இவர் சமீபத்தில் முதல்வர் தனிப் பிரிவுக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் இரவில் பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த புகார் மனுவை முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகள் விருத்தாசலம் போலீசுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியுள்ளனர். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வந்த கடிததையடுத்து தற்போது வி…
-
- 2 replies
- 2.8k views
-
-
அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக …
-
- 4 replies
- 2.8k views
-
-
டோக்கியோ: வீட்டில் பேய் நடமாடுவதாக பீதி நிலவுவதாலேயே, பிரதமர் அவருக்கென ஒதுக்கப்பட்ட தனி வீட்டில் இன்னும் குடியேறாமல் இருக்கிறார் என கூறப்பட்ட வதந்தியை மறுத்துள்ளது ஜப்பான் அரசு. கடந்த 6 மாதக்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஷின்சோ அபே. அரசு சார்பில் இவருக்கு தனி வீடு ஒதுக்கப்பட்டும், இன்னும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக நிலவும் அச்சமே பிரதமர் அங்கு குடியேறாதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் 'பேய் நடமாடுவதாக பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டு…
-
- 0 replies
- 407 views
-
-
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம். நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம். http://www.usetamil.net/t34821-topic#axzz2UPPmmgPT
-
- 0 replies
- 564 views
-
-
வாஷிங்டன்: வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று செளதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்துள்ளார். செளதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சியை பயன்படுத்துவது அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சன்னி முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்கள் கற்பழிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் …
-
- 25 replies
- 3k views
-