Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. "தொட்டில்" புடவையில்... கழுத்து இறுகி, 11 வயது சிறுமி உயிரிழப்பு! கேகாலை – தெரணியகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 11 வயதான டில்மினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல்கட்டி விளையாடுவதை வழக்கமாக க…

  2. கேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம்; கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. பதிவு: ஜூன் 13, 2020 11:53 AM திருவனந்தபுரம் சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர். வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது. …

  3. கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிற…

  4. கேரள லாட்டரியில் தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யாரென்பது தெரியவில்லை. இந்தநிலையில் தமிழ்நாட்டில் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது, கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெ…

  5. நியூயோர்க் நகரிலுள்ள நூதனசாலையில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி - பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது 2016-09-20 10:11:02 உலகில் சில அரச குடும்­பத்­தினர் மற்றும் கோடீஸ்­வ­ரர்கள் சிலரின் மாளி­கை­களில் தங்­கத்­தி­லான கழி­வறைத் தொட்­டி கள் இருப்­ப­தாக கேள்­விப்­பட்­டுள்ளோம். சாதா­ரண மனி­தர்­ க­ளுக்கும் இத்­த­கைய தங்கக் கழி­வறைத் தொட்­டியை பயன்­ப­டுத்த வேண்டும் என கனவு இருந்தால், அக் ­க­னவை நன­வாக்­கு­வ­தற்கு அமெ­ரிக்க நூத­ன­சா­லை­யொன்று முன்­வந்­துள்­ளது. ஆம், நியூயோர்க் நக­ரி­லுள்ள குகென்னஹெய்ம் நூத­ன­சா­லையில் தங்­கத்­தினால் செய்­யப்­பட்ட கழி­வறைத் தொட்டி கடந்த வெள்­ளிக்­கிழமை முதல் பாவ­னை­…

  6. ( எம்.எப்.எம்.பஸீர்) நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முக…

  7. ஆவிக்கு சான்றிதழ் தர முடியுமா? அதிர்ந்தது சீன போலிஸ்! ஒருவருடைய சுய விவரங்களில், பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இதே பெயருடைய ஒரு குற்றவாளியின் விவரங்களை சேர்த்து சீன அதிகாரிகள் குழப்பியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பே சென் இறந்துவிட்டதாக வழங்கப்பட்ட தவறான அதிகாரப்பூர்வ ஆவணம் ஒருவரின் அடையாள எண்ணை, அதே மாதிரியான இன்னொருவரின் அடையாள எண்ணோடு சேர்த்து குழப்பி விடுகின்ற தவறுகளை ஒழித்துவிட, சீன அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சீன ஊடகங்களால் இனம் காணப்பட்டுள்ள 45 வயதான சென் என்பவர், குவாங்சோவில் புதிய வேலை பெறுவதற்கு குற்றப் பின்னணியில்லா சான்றிதழ் பெற காவல்துறையிடம் விண…

  8. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…

  9. மன்னாரில்... திருட்டு பழி சுமத்திய, 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்! மன்னார் – கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி…

  10. தமிழர் உணர்வாளர் பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை தமிழ்ககுலம் பதிப்பாலயம் விடுத்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.மணிக்கு சென்னை பிட்டி தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தலைமை தாங்குவார். அதன் முழு விபரம் வருமாறு, நாள் – 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் – மாலை 5 மணி இடம் – பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை – கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை – திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்…

  11. தனி நபரின் வீட்டிலிருந்து பாரிய இராணுவத் தாங்கி, பீரங்கி மீட்பு இரண்டாம் உலக யுத்த கால இரா­ணுவத் தாங்­கி­யொன்­றையும் பீரங்­கி­யொன்­றையும் தனி நபர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஜேர்­ம­னிய அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர். அரிய பொருட்­களை சேக­ரித்து ­வைக்கும் வழக்கம் கொண்ட 78 வய­தான நபர் ஒருவர் தனது வீடொன்றின் அடித்­த­ளத்தில் 45 தொன் எடை­யுள்ள இரா­ணுவத் தாங்கி, பாரிய பீரங்கி மற்றும் பல ஆயு­தங்­களை வைத்­தி­ருந்தார். கடந்த வாரம் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­யொன்­றின்­போது இவற்றை ஜேர்­ம­னிய அதி­கா­ரிகள் கைப்­பற்­றினர். பின்னர் இரா­ணுவ பொறி­யி­ய­லா­ளர்கள் அழைக்­கப்­பட்டு, அத்­தாங்­கியும் ஏனைய ஆயு­தங்­களும் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­டன. மேற்­படி நபரின் பெயர…

  12. 90 நாட்கள் விடுப்புக் கோரி மனு அளித்துள்ள நளினி 16 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, தனக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு கண்புரை, பல்வலி, இரத்தப் போக்கு போன்ற நோய்கள் இருப்பதாகவும். இதற்காக சித்த, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனக்கு 90 நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் கோரி உள்துறை அமைச்சிடம் மனு கையளித்துள்ளார். அத்துடன் இவற்றிற்காக தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/90-நாட்கள்-விடுப்புக்-கோரி/

  13. ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது! திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க துலாஸ் மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் …

  14. சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது. மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த) அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது. இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த …

  15. சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமைய கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாக 3 பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், குறித்த மூவருக்கும் திருணம் செய்துக்கொணடுத்து விட்டு தானும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார். எனினும் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த நபருடைய முதலாவது மனைவி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்திருந்தார். வழங்கு விசாரணைகளின் போது, தன்னுடைய முதல் மனைவிக்கு மாதாந்…

    • 3 replies
    • 336 views
  16. சேற்றில் சிக்கி மாணவன் உயிரிழப்பு December 5, 2020 நுணாவில் குளக்கட்டுக் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிாிழந்துள்ளாா். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான தேவராசா லக்சன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயர்தரம் கற்கும் குறித்த மாணவன், சக நண்பர்களுடன் இணைந்து குளம் ஒன்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. நிலைதடுமாறி குளத்தின் உள்ளே விழுந்த அவரை அருகில் நின்ற நண்பர்கள் முயற்சித்த போதும் அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டததனால் அவர்கள் கை வி…

  17. பிரான்ஸின் பாரிஸ் நகரில் பண்டைய தேவாலயமொன்றுக்கு அருகிலுள்ள தன்னியக்க இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற சுற்றுலா பயணியொருவரை சுற்றி வளைத்த திருடர்கள் குழுவொன்று அவரிடமிருந்து பணத்தை திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. பாரிஸ் நகரில் ரோபோ இனத்துவ குழுவை சேர்ந்த திருடர்கள் கொள்ளை மற்றும் வழிப்பறிகளில் ஈடுபடுவது வழமையாகவுள்ளது. நொட்ரே டேம் தேவாலயத்துக்கும் லாவ்றி அருங்காட்சியகத்துக்கும் இடையிலுள்ள தன்னியக்க பண இயந்திரத்தில் பணம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சுற்றுலா பயணியிடமிருந்தே திருடர்கள் பணத்தை களவாடிச் சென்றுள்ளனர். மேற்படி திருடர்களில் இள வயதினரும் பெண்களும் உள்ளடங்குகின்றனர். பாரிஸ் நகரின் மத்தியிலிர…

  18. சொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி – மீள்வதற்கு போராடிய தருணங்கள் (படங்கள்) பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது, போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர் தான் வளர்த்த ஹய்டே எனும் பூனையை ரொஸலிடம், விட்டுவிட்டு தனது வேலைக்காக இடமாறி சென்றதால் மிக நீண்டகாலமாக வீட்டிற்குள் மறைந்து வாழ்ந்த குறித்தப் பூனையின் உடலில் சுமார் இரண்டு கிலோகிராம் அளவில் முடி வளர்ந்துள்ளது. முடியானது சிக்கல் மிகுந்த பிடிகளாக இருந்ததால் அது வேறு ஒரு மிருகம் என எண்ணும் அளவில் பார்வைக்…

  19. ஒரு லீற்றர் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் ஒரு லீற்றர் பியரை பெற்றுக்கொள்ளலாம் என ஜேர்மனியிலுள்ள பிரபல உணவகம் ஒன்று பண்டமாற்று முறை திரும்பியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் 80சதவீதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளிக்கின்றது. இந்தநிலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜேர்மனியில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான ப…

  20. ஆப்பிள் ஐ போனை தூக்கிச் சென்ற குரங்கு..! (பழுலுல்லாஹ் பர்ஹான்) சுற்றுலா பயணி ஒருவரின் ஆப்பிள் ஐ போன் ஒன்றை குரங்கு ஒன்று தூக்கிச் சென்றுள்ள சம்பவம் பொலன்னறுவையில் பதிவாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது குரங்குகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் இதனால் பொலன்னறுவைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் அதிகம் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஏ.எம்.சப்ரி கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து சுற்றுலாச் சென்ற எங்களுடைய குடும்பம் பொலன்னறுவை கல் விகாரைக்கு முன்பாக அமை…

  21. நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என கூறியிருந்த, பிரபல கன்னட எழுத்தாளர், அனந்தமூர்த்திக்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அவர் மீண்டும் கொந்தளித்துள்ளார். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர், கன்னட எழுத்தாளர், யு.ஆர்.அனந்தமூர்த்தி. பெங்களூரில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக…

  22. எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்தது சரக்கு விமானம் – ஐவர் உயிரிழப்பு! உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான குறித்த விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தது. பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் உக்ரைன் நாட்டின் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், துருக்கியின் லிவில் விமான நிலையத்தை அடைய 1 கி.மீ தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றிலும் தீ…

  23. பாப்ரபரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை குணமடைந்த அதிசயம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.