செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7128 topics in this forum
-
த.தே. மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.00 மணியளவில் கொடுக்கிளாயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரால் வழிமறிக்கப்பட்டு தள்ளிவிழுத்தி பனையின் கருக்கு மட்டையால் தாக்கியுள்ளதுடன் கல்லினாலும் தலையை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர். அருள்மதி எதிர்த்து போராடிய நிலையில் தலை தப்பி அவரது முகத்தின் நாடி பகுதியில் கல்லால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதல் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் …
-
- 0 replies
- 204 views
-
-
வீதியால் செல்வோரை... துரத்தி, துரத்தி... தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்! வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தி தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “குறித்த வீதியினை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். வீதி ஓரத்தில் காணப்படும் பனங்கூடல் மற்றும் எருக்கலை பற்றை காடுகளினுள், கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன கூடு கட்டியுள்ளன. …
-
- 5 replies
- 497 views
- 1 follower
-
-
முகப்புத்தகத்தில் அவமதித்ததால் வந்த வினை: கடத்தி சென்று சிலுவையில் அறையப்பட்ட இருவர் - சந்தேக நபர் தப்பியோட்டம்..! (செ.தேன்மொழி) முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள நிலையில் விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கண்டி - பலகொல்ல பகுதியில், நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகப்புத்தகம் ஊடாக தன்னை அவமதித்தமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொட…
-
- 7 replies
- 769 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். கரடிபோக்கு சந்தியிலிருந்து பெரியபரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் ஐந்தாம் வாய்க்கால் பகுதியிலேயே இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதுடன், கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 191 views
-
-
தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார். ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது. அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார். கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.…
-
- 5 replies
- 884 views
-
-
மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFRICAN NEWS AGENCY (ANA) தென் ஆப்ரிக்காவில் கோசியாமி தமரா சித்தோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரிய வந்துள்ளது. குவாடெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிதோல் சமீபத்தில் கர்ப்பமாகவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கதை எவ்வாறு …
-
- 0 replies
- 406 views
-
-
திஸ்ஸமகாராமய பகுதியில் சீன இராணுவமா? (எம்.மனோசித்ரா) திஸ்ஸமகாராமய வாவி அபிவிருத்தி திட்டம் சீன - இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ்வாறிருக்கையில் குறித்த வாவி தூய்மைப்படுத்தும் பணிகளில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடை அணிந்த சீனப்பிரஜைகள் சிலர் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. எனினும் இலங்கை குளங்களை சீனா அபிவிருத்தி செய்வது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நாம் அறியோம். எவ்வாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பது எமக்கு தெளிவாக தெரியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெ…
-
- 1 reply
- 319 views
-
-
வேள்விக்கு... கூடிய, 30 பேர் தனிமைப்படுத்தலில் – நிர்வாகிக்கு எதிராக வழக்கு! அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவதையடுத்து விறுமர் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அல்வாய் வடக்கு விருமார் கோயில் பொங்கல் மற்றும் வேள்வி நிகழ்வு 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளனர். சுகாதார பகுதியினரின் அனுமதிகள் எதுவும் பெறப்படாது இவ்வாறு அதிக அளவான எண்ணிக்கையில் பக்தர்களை ஒன்று கூட்டி கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏதுவான நிலையைத் தோற்றுவித்…
-
- 0 replies
- 209 views
-
-
இலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை இலங்கையில் சீன பிரசன்னம், இந்திய நலன்களுக்கும், பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல். அது குறித்து, உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும் இந்திய கடற்படை தளபதி அசோக் குமார் தெரிவித்துள்ளார். இந்திய டிவி ஒன்றின் உடனான பேட்டியின் போது, இதனை தெரிவித்தார். நாம் எந்த சவாலையும் முறியடிக்கக்கூடிய பலத்துடன் உள்ளதாகவும், சீனா, இலங்கையினுள் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதனை தாம் அறிவோம் என்றும் அது குறித்து மேலும் தெரிவிக்கையில், 10 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட, தாம் இப்பொது பெரும் பலத்துடன் இருப்பதாகவும், எவ்வித தீடீர் தாக்குதல்களையும் சமாளிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெ…
-
- 9 replies
- 984 views
-
-
அமெரிக்காவில்... அடுத்தடுத்து 15 வாகனங்கள், மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவத்துள்ளது. இதன்போது கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 சிறுவர்க…
-
- 0 replies
- 195 views
-
-
யோகா பயிற்சியில் பிரதமர் மஹிந்தவும் பாரியாரும் ! By கிருசாயிதன் ஏழாவது சர்வதேச யோகா தினம் இன்று (21.06.2021) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் கோகா பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள புகைப்படத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.இந்நிலையில், பிரதமரின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ சர்வதேச …
-
- 0 replies
- 272 views
-
-
விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!
-
- 4 replies
- 814 views
-
-
சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள் கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது. எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவே பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 3 வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் , எர…
-
- 1 reply
- 322 views
-
-
தலைமறைவாக இருக்கும் யூடியூபர் மதனின் மறுபக்கங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன. கைதான அவனின் மனைவி கிருத்திகா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் யூடியூபர் மதனின் ஆபாசப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதிலிருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. சென்னை புளியந்தோப்பு காவல் சரக சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் வழக…
-
- 2 replies
- 1k views
-
-
7 பழங்களை பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்…! மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்…! மத்திய பிரதேசத்தில் மாம்பழ தோட்டத்தில் விளைந்துள்ள 7 மாம்பழங்களை பாதுகாக்க நான்கு காவலர்கள் மற்றும் ஆறு நாய்களை காவலுக்கு வைத்துள்ளார் தோட்டத்துக்கு உரிமையாளர்.என்னாடா 7 மாம்பழத்துக்கு இவ்வளவு காவலா என வினோதமாக இருப்பதை நீங்கள் எண்ணலாம். அந்த தோட்டத்தில் விளையும் அரிய மாம்பழங்களின் விலையை நீங்கள் கேட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாம்பழ தோட்டம் வைத்து இருப்பவர்கள் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ர தம்பதிகள்.தங்களுடைய பழத்தோட்டத்தில் தெரியாமல் பயிரிட்ட மாம்பழ மரக்கன்றுகள் ஜப்பானின் மியாசாகி மாம்பழ…
-
- 0 replies
- 367 views
-
-
கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை மகாபாரதத்தில் குந்தி தேவி, தனது குழந்தையை கூடையில் வைத்து நதியில் மிதக்க விட்டுவிடுவார். நதியில் மிதந்து வரும் குழந்தையை வேறு ஒரு தம்பதி வளர்ப்பார்கள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் ஓடும் கங்கை நதியில் கரையோரம் படகில் குலுசவுத்ரி என்பவர் சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்தபடி வந்தது. உடனே அப்பகுதி மக்கள் மரப்பெட்டியை மீட்டு திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்குழந்தை பிறந்து 20 நாட்களே இருக்கும்.அ…
-
- 0 replies
- 374 views
-
-
இணையத்தளம் ஊடாக, மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2021/1223035
-
- 0 replies
- 234 views
-
-
மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன? மு.ஐயம்பெருமாள் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம் மும்பையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 390 பேருக்கு வழக்கமாக வரக்கூடிய எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாததால், போடப்பட்டது போலி தடுப்பூசியாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மும்பையில் இப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நிறுவன வளாகத்திலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். சில குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற தடுப…
-
- 0 replies
- 189 views
-
-
யாழில் நடமாடிய... போலி, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு... விளக்கமறியல்! பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் பொலிஸ் அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார். வீதித் தடை கடமையிலிருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போ…
-
- 0 replies
- 259 views
-
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
-
- 0 replies
- 393 views
-
-
யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ்.பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர். நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 214 views
-
-
எம்.எம்.சில்வெஸ்டர் மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தன…
-
- 7 replies
- 487 views
-
-
``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறைக்குள் மட்டுமே வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர், அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார்'' என்கிறார் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகள் ஓர் அறையில் வசித்த ஸஜிதா. `கில்லி' திரைப்படத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் கதாநாயகி திரிஷாவை விஜய் தனது வீட்டில் தங்க வைப்பது போன்ற காட்சி வரும். அதுபோல, காதலித்த பெண்ணை 10 ஆண்டுகள் தனது வீட்டின் ஓர் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர். வீட்டில் தாய் தந்தை உட்பட ஐந்து பேர் வசித்தும், 10 ஆண்டுகளாக அதே வீட்டின் ஓர் அறையில் தன் மகனுடன் ஒரு பெண் வாழ்ந்தது குறித்து அவர்கள் அறியாமல் இருந்தது ஆச்ச…
-
- 5 replies
- 1.1k views
-
-
பாலியல் இலஞ்சம் கோரிய பிரதேச செயலாளர்- புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை! செங்கலடி பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இருந்து வருகைதந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் பிரதேச செயலகத்திற்கு சேவை பெறச் சென்ற பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றமை மற்றும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ்மா அதிபர் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று கொழும்பில் இருந்து சென்…
-
- 0 replies
- 222 views
-
-
-
- 11 replies
- 1.2k views
-