செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7129 topics in this forum
-
மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 27,132 Views மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது. தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக வசித்த…
-
- 1 reply
- 961 views
-
-
"ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடிகாலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது! சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/கடற்கரையில்-அநாகரீகமான-ம/
-
- 0 replies
- 468 views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி சேகரிக்க வித்தியாசமான முறையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அமெரிக்க மொடல் அழகி கெய்லன் வாட் (Keylen Ward)என்ற 20 வயது மொடல் அழகி. ஐந்தே நாட்களுக்குள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பாதிக்கபட்ட மக்களுக்ககாக திரட்டி உள்ளார். உதவி நிறுவனத்திற்கு 10 டொலர்களுக்கு மேல் வழங்கும் நபருக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி வைப்பதாக உறுதியளித்து ஐந்து நாட்களுக்குள் ஒரு மில்லியன் டொலரை அந்த நிறுவனத்திற்கு திரட்டி கொடுத்துள்ளதோடு தான் உறுதியளித்தபடி உதவி செய்த நபர்களுக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி தனது உறுதி மொழியை காப்பாற்றியும் உள்ளார். https://www.20min.ch/people/international/story/Model-Ka…
-
- 1 reply
- 493 views
-
-
பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ. அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகள…
-
- 21 replies
- 2.7k views
- 1 follower
-
-
உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்! உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது. இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு,…
-
- 0 replies
- 768 views
-
-
படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அதி…
-
- 0 replies
- 498 views
-
-
கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. அதிர்ச்சி ஆன முதும்பா! கம்பாலா: சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்! உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் …
-
- 4 replies
- 2.1k views
-
-
டுபாயில் பணிபுரிய சென்ற இலங்கை இளைஞன், வீட்டு உரிமையாளரான 60 வயது பெண்மணியை காதல் வலையில் வீழ்த்தி, பெருந்தொகை நகைகளை சுருட்டிக் கொண்டு இலங்கை தப்பி வந்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்கொழும்ப பகுதியை சேர்ந்த 30 வயதான திருமணமாகாத இளைஞன் ஒருவர் டுபாய்க்கு பணிபுரிய சென்றுள்ளார். அங்கு, வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியுடன் காதல் வயப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி ஏற்கனவே திருமணமானவர். இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். மூதாட்டிக்கு தெரியாமல் அவரது மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை திருடிக் கொண்டு, இளைஞன் இலங்கை திரும்பியுள்ளார். இது தொடர்பான முறைப்…
-
- 0 replies
- 596 views
-
-
சீனாவில் தாழிறங்கிய வீதி: பிளவுக்குள் சிக்கிய பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழப்பு! சீனாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று திடீரென வீதி தாழிறங்கியமையால் ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 16பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஜைனிங் நகரில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பேருந்து, திடீரென ஒரு இடைவெளியில் குறித்த பேருந்து கவிழ்ந்து வெடித்தது. இதன்போது பேருந்தில் இருந்தவர்கள் குறித்த பிளவுக்குள் சிக்கிக்கொண்டனர். அருகிலிருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி தப்பியோடினர். இதுதொடர்பான காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது. எனினும், தீடிரென இந்த பிளவு ஏற்பட்டது …
-
- 0 replies
- 348 views
-
-
நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்: ஜப்பான் தொழிலதிபரின் வினோத அறிவிப்பு.! எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வரும் 2023ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முதன்முதலாக நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யசுகு மசாவா. 44 வயதாகும் இவர் சமீபத்தில் தனது காதலியான அயமே கொரிக்கி என்பவரை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். “ தனிமை மற்றும் வெறுமை என்னை மெல்ல ஆட்கொண்டு வருகிறது.“ என அந்த…
-
- 0 replies
- 526 views
-
-
தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது! உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேள்களை-கடத்த-முயற்சித்த/
-
- 0 replies
- 598 views
-
-
“ஒரு மோசமான படத்தை அவர் பார்த்திருக்க வேண்டும்” யேர்மனியப் பொலீஸ் சொல்கிறது யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள சினிமா அரங்கிற்கு 30 வயது இளைஞன் ஒருவர் தென்னிந்தியத் திரைப் (படமான தர்பார்)படம் பார்க்க புதன் கிழமை சென்றிருக்கிறார். படத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போக அவர் அப்படியே இருக்கையிலேயே உறங்கிப் போனார். பின்னர் இருக்கையில இருந்து சற்று வழுக்கி இருக்கைக்குள் அப்படியே ஆழ்ந்த நித்திரையாகிப் போனார். திரைப்படம் முடிந்து பார்வையாளர்கள் வெளியேற இவர் மட்டும் பூட்டப் பட்ட திரையரங்கில் தனியாக நித்திரையில் இருந்திருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கு விழித்துக் கொண்ட இளைஞர் நிலமையை உணர்ந்து பொலீஸுக்குத் தகவல் தர, அவர்கள் நடவடிக்கை எடுத்து அந்த இளைஞனை மீட்டு வீட்…
-
- 4 replies
- 693 views
-
-
யேர்மனியில் போதைப் பொருள் பாவனை இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக பேர்லின் நகரத்தின் சமூக நல ஆலோசகர் Gordon Lemm சமீபத்தில் எச்சரித்திருக்கிறார். கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவிகளே அதிகமாக போதைப் பொருள் பாவனையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 11 முதல் 14 வரையிலான சிறுமிகள் இதற்குள் அடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. பார்த்தாலே மனதைக் கவரும் வண்ணம் வண்ணமயமாக இருக்கும் Ecstasy போதை மாத்திரைகள் 1,50யூரோக்களுக்கு இப்பொழுது யேர்மனியில் இலகுவாக கிடைக்கிறது. இதனால் தங்கள் கைச் செலவுக்கு பெற்றோர்கள் தரும் சிறிய பணத்துக்குள்ளேயே பாடசாலை மாணவ, மாணவிகளால் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ள முடிகிறது. விருந்…
-
- 0 replies
- 247 views
-
-
யேர்மனியில் Ludwigshafen என்ற இடத்தில் நான்கு வயதுச் சிறுமி ஒருத்தி புதன்கிழமை (08.01.2020) ஊடகங்களில் கதாநாயகி ஆகியிருக்கிறாள். தனது தாய் திடீரென மயங்கி விழ, உடனடியாக 112 என்ற அவசரகால அழைப்பில் தொடர்பு கொண்டு தனது தாய்ககு உடனடியாக உதவி தேவை என்று அறிவித்திருக்கிறாள். நிலமையை உணர்ந்த காவல்துறை உடனடியாக அம்புலன்ஸை அவளது வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சிறுமியின் தாய் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிய மேலதிக சிகிச்சைக்காக அவளது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். தாயை அழைத்துச் சென்ற வாகனம் “ Tatü-Tata” என்ற ஒலியுடன் வைத்தியசாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஓட்டுனருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த நான்கு வயதுச் சிறுமிக்கு அது ஒரு பு…
-
- 2 replies
- 648 views
-
-
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம்பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். வேலை நாட்களை குறைப்பது மட்டுமின்றி, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றம் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல…
-
- 2 replies
- 949 views
-
-
2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 தனதாக்கியுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தனித்துவ படைப்பான இந்த ஒயின் பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிறந்த அஸ்ஸா திராட்சைகளை சேகரித்து அவற்றை பாதாள அறையில் 10 ஆண்டுகளாக நொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இந்த எசென்சியா ஒயினில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளதாக ராயல் டோகாஜி ஒயின் ஆலையின் பொது மேலாளர் சோல்டன் கோவாக்ஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த 1.5 லிட்டர் எசென்சியா ஒயின் பாட்டில்கள் 18ல் 11 விற்பனையாகிவிட்டதாகவும் மீதமுள்ள ஏழு பாட்டில்களை 2300ஆம் ஆண்டு காலாவதியாவதற்குள் விற்றுவிடுவோம் என்றும் அவ…
-
- 0 replies
- 511 views
-
-
இங்கிலாந்து நாட்டில் 44 வயதான பெண் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக டால்கம் பவுடரை சாப்பிட்டு வருகிறார். இவருக்கு இந்த வினோத பழக்கம் இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். லிசா ஆண்டர்சன் என்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டின் டெவோனைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக Talcum Powder-ஐ டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். முகத்திற்கு பூசும் பவுடரை தின்பதற்கு அடிமையான லிசா ஆண்டர்சன், அதற்காக இதுவரை எவ்வளவு பணத்தை செலவழித்துள்ளார் தெரியுமா? மயங்கி விடாதீர்கள். 15 வருடங்களாக சுமார் 8,000 பவுண்டு தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.50 லட்சம் ரூபாய். …
-
- 0 replies
- 545 views
-
-
ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் கீழே தள்ளிவிட்டு உடைத்தது. பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்க தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள், அதன் உரிமையாள…
-
- 0 replies
- 287 views
-
-
பிரித்தானியாவின் கொடிய வல்லுறவுக் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை 136 வல்லுறவுகள் உட்பட 159 பாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரெய்னார்ட் சீனகா என்பவர் இங்கிலாந்தின் மிக மோசமான வல்லுறவுக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 36 வயதான சீனாகா 48 ஆண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர். மன்செஸ்ரரில் உள்ள இரவு நேர விடுதிகளிலிருந்து ஆண்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சீனாகா அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கி அதன் பின்னர் அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களை பதிவு செய்த…
-
- 1 reply
- 462 views
-
-
கேகாலை, புளத்கொஹுபிட்டியவின் ஊடாகப் பல கிராமங்களுக்குப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலமொன்று, இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால், இரு முறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களாலேயே, இந்தப் பாலம் இரண்டு முறை திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யடியந்ததோட்டை தொகுதி அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ லால் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபையின் உறுப்பினர் அளவததுரே ரதன வங்ஷ தேரர் உள்ளிட்டோர் இவ்வீதியை வெள்ளிக்கிழமை (03) திறந்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று (04), முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீம், ஐ.தே.கட்சிய…
-
- 2 replies
- 488 views
-
-
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர். கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் …
-
- 1 reply
- 492 views
-
-
தி.மலை: அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம். இரு மனைவிகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரை…
-
- 8 replies
- 1.4k views
-
-
ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…
-
- 0 replies
- 280 views
-
-
ஆசிய நாடான ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், 276 கிலோ எடையுள்ள, டுனா வகை மீனை, 13 கோடி ரூபாய்க்கு, ஓட்டல் நடத்தி வரும், 'டுனா கிங்' என்றழைக்கப்படும், கியோஷி கிமுரா ஏலம் எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர் இவர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451177
-
- 0 replies
- 383 views
-