செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
-
அமெரிக்க அதிபர் மாளிகை எதிரே வைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 1964ம் ஆண்டு முதல் இங்கு செயற்கையான மரம் வைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. இதேபோல், நியூயார்க் நகரில் புகழ்பெற்ற ராக்கிபெல்லர் மையத்தில் (Rockefeller tree) உள்ள 77 அடி உயர கிறிஸ்துமஸ் மரமும் ஒளியூட்டப்பட்டது. https://www.polimernews.com/dnews/91502/50-ஆயிரம்-வண்ண-விளக்குகளால்ஜொலிக்கும்-கிறிஸ்துமஸ்மரம்
-
- 0 replies
- 466 views
-
-
கல்லாப்பெட்டியில் 'கை' வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்.! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இத…
-
- 7 replies
- 1.5k views
-
-
தொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைப்பு மேற்கொண்டு முறையிட்ட முதியவர் கைது! ஜப்பானில் இயங்கும் தொலைபேசி சேவை நிறுவனம் ஒன்றை 24,000 முறை அழைத்து முறைப்பாடுகளை மேற்கொண்ட 71 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகிடோஷி ஒகாடாமோ என்ற முதியவர் எட்டே நாட்களில் கே.டி.டி.ஐ என்னும் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை பல்லாயிரம் முறைக்கு மேலாக தொடர்பு கொண்டுள்ளார். இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தகவல் வௌியிட்டுள்ளது. ஒகாடாமோ, தான் குறித்த நிறுவனத்திடம் தவறாக செயற்படவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கே.டி.டி.ஐ என்ற …
-
- 0 replies
- 418 views
-
-
55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது 3 டிசம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLILBUB.COM Image captionஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லில் பாப் பூனையை 55 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்து வந்தனர். இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இ…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையே ஏற்படாது என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இந்நிலையில் ஓராண்டிற்கு கெடாமல் இருக்க கூடிய வகையில் புதிய ரக ஆப்பிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகத்திற்கு காஸ்மிக் கிரிஸ்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பறித்தது முதல் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று ஆராயாச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய ரக ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆப்பிளானது ஹனிகிரிஸ்ப் + எண்டர்ப்ரைஸ் ஆகியவற்றின் கலப்பினம். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது. ஹனிகிரிஸ்ப் ரகமானது நல்ல இனிப்பு சுவை மிக்கது. அது…
-
- 1 reply
- 378 views
-
-
நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு கிராமத்தில் விவசாய தொழில் தான் பிரதானம். இங்கு வசிக்கும் விவசாயிகள் காபி மற்றும் பாக்கு பயிரிட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக குரங்குகள் இருந்துள்ளன. அவர்கள் கஷ்டப்பட்டு பயிரிட்டால் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், வயல்களில் புகுந்து அவற்றை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். குரங்குகளின் அட்டகாசத்தை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்ற கவலையில் ஆழ்ந்தனர். பின்னர் தான் ஒரு யோசனை செய்தனர். அதன்பட…
-
- 0 replies
- 366 views
-
-
500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால் இந்தியாவே அதிர்ந்தது. அதிலிருந்துகூட ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். ஆனால், ஓர் அறிவிப்பு வந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியாது. அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா? 'இனி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை, பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து சாதாரண போன்களை வாங்கிக்கொள்ளுங்கள்!' என்று அரசு அதிரடியாக அறிவிக்கிறது. அது ஏன் அறிவிக்கப்போகிறது என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். அப்படி நடந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனைதான். என்னவெல்லாம் நடக்கும். வாட்ஸ்அப் குருப்களுக்கு ஒரு கும்பிடு! 24 மணி நேரமும் ஹாஸ்பிட்டல், ஏடிஎம் உள்ளிட்டவை செயல்படுகின்றனவோ இல்லையோ வாட்ஸ்அப் கு…
-
- 3 replies
- 554 views
-
-
கோஸ்டிச் சண்டை குழுச் சண்டை என்று சினிமாவில் நிறையப் பார்த்திருக்கிறோம். கதாநாயகன் எதிராளியையும் அவனது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்யும் வரை சினிமாவில் போலீஸ் வரவே வராது. ஆனால் நிஜத்தில் அது வேறு விதமாக இருக்கிறது. யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள Lidl என்கிற சூப்பர்மார்க்கெட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. Baseball bat, கோடாரி என்று பல ஆயுதங்களுடன் மோதல் நடந்திருக்கிறது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். பலருக்கு சில வீரவடுக்கள் மட்டுமே. சினிமாபோல் அல்லாமல் சண்டை நடக்கும் போதே போலீஸ் வந்துவிட சண்டையை அப்படியே விட்டு வி…
-
- 0 replies
- 471 views
-
-
இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் அதிவேகப் பாதைகள் இணைந்த பின்னர் அத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தூண்களின் மேல் விரியும் பாதை தொகுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் பிரதான நகரமான கொழும்பு நகரில் முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து முறைகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கொழும்பு நகரில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான போக்குவரத்து ஊடகம் குதிரை வண்டியாகும். அதன் பாவனை பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய ஒன்றாகவே காணப்பட்டது. இந்த வண்டிகளில் கட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சமூக மட்டத்தினருக்கும் மாறுபட்டுக் க…
-
- 1 reply
- 541 views
-
-
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல்கள் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 3.94 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. அந்நாட்டின்சாக்சனி மாகாணத்தின் தலைநகரான டிரஸ்டனில் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 25-ம் தேதி அதிகாலை அருங்காட்சியகத்தின் ஜன்னல்களை உடைத்து உள்நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேர், 18-ம் நூற்றாண்டை சேர்ந்த விலைமதிக்க முடியாத நகைகள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில், அருங்காட்சியக திருட்டு சம்பவம் குறித்து தகவல் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 3 கோடியே 94 லட்ச ரூபாய் சன்மா…
-
- 0 replies
- 266 views
-
-
உலகப்புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான பிரிட் காப்ரைட் என்பவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகப்புகழ் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் பிரிட் காப்ரைட்டும் அவரது நண்பரும் சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிரிட் காப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். https://www.polimernews.com/dnews/90823/புகழ்பெற்ற…
-
- 1 reply
- 437 views
-
-
அப்பொழுதெல்லாம் வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தால் விழுந்தடித்து எழுந்து வணக்கம் சொல்வோம். பாடசாலை வகுப்பறை மட்டுமல்ல வெளியே வீதியில் எங்கேயாவது ஆசிரியர்களைக் கண்டாலும் இந்த மரியாதை தொடரும். ஆசிரியர்கள் மேல் மரியாதை மட்டுமல்ல ஒருவித பயமும் சேர்ந்தே அன்று எங்களிடம் இருந்தது. இன்றைய காலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எங்கள் நாட்டில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனால் யேர்மனியில் அது பெரிய பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. சமீபத்தில் பேர்லினில் உள்ள Heinrich-Schliemann-Gymnasium பாடசாலை இருந்து வந்த கடிதம் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கழிப்பறை காகிதம், சவர்க்காரம் இரண்டையும் பாடசாலைக்கு வரும…
-
- 3 replies
- 946 views
-
-
தங்க நகை, ரொக்கப் பணம், கலை நிகழ்ச்சிக்கான நுளைவுச்சீட்டு, சுற்றுலாவுக்கான பயண ரிக்கெற் என்று பலவிதமான பரிசுப் பொருட்களை முன் வைத்து வானொலிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. ஆனால் இங்கே வித்தியாசமாக அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் “குழந்தை ஒன்றை வெல்லுங்கள்” என்று நிகழ்ச்சி ஒன்றை ஒரு வானொலி நடத்தியிருக்கிறது. இளம் அமெரிக்கத் தம்பதிகளான (Anthony) அந்தோணிக்கும் (Krista) கிறிஸ்டாவுக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தீராத ஆசை. ஆனால் அவர்களது அந்த விருப்பத்தை ஒரு செய்தி வந்து தகர்த்து விட்டது. 2017 ஆம் ஆண்டில் ஒரு மருத்துவச் சோதனையில் அந்தோணியின் விதையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இதனால் இயற்கையான முறையில் அவர்களால் குழந்தைகளைப் பெற ம…
-
- 1 reply
- 429 views
-
-
சாதாரண வீட்டின் பெறுமதியில் ஒரு தீவையே கொள்வனவு செய்யலாம் – எங்கே? நம் நாட்டில் சாதாரண வீடு ஒன்றின் பெறுமதியில் கனடாவில் குட்டித் தீவு ஒன்றையே கொள்வனவு செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சிறிய அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கான விலைகளே பல மில்லியன் டொலர் கணக்கில் உள்ளதுடன் வீட்டு வாடகையும் மிக அதிகமாகும். ஆனால் ஆடம்பர வீடு ஒன்றைக் கொள்வனவு செய்யும் விலைக்கு, கனடாவில் ஒரு தீவையே கொள்வனவு செய்துவிடலாம். நோவா ஸ்கோஷா (Nova Scotia) என்னும் மாநிலத்திலுள்ள தீவுகளின் விலை, 1,800 சதுர அடி வீட்டின் விலையை விடக் குறைவாகவுள்ளது. 1,800 சதுர அடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டின் விலை சுமார் 421,245 அமெரிக்க டொலர்களாகும். (560,290 கனேடிய டொலர்) அ…
-
- 2 replies
- 719 views
-
-
14,600 செம்மறியாடுகளுடன் கருங்கடலில் கவிழ்ந்த குயின் ஹின்ட் கப்பல்! ரொமேனிய கரையோரம், கருங்கடல் பகுதியில் 14,600 செம்மறியாடுகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துள்ளது. சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் Queen Hind என்ற குறித்த கப்பல் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்று இன்னும் அறியப்படவில்லை. கப்பலிலிருந்து சிரியாவைச் சேர்ந்த 20 பேரும், லெபனானைச் சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 32 செம்மறியாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. கப்பலின் சரக்கு கிடங்கில் உள்ள எஞ்சிய செம்மறியாடுகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கப்பலை நிலை நிறுத்தி அதனை மீண்டும் துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணிகள…
-
- 0 replies
- 268 views
-
-
லண்டனில் இயங்குவதற்கான உரிமத்தை ஊபெர் இழக்கிறது லண்டனில் இயங்கும் ஊபெர் ரக்ஸி சேவைக்கு புதிய உரிமம் வழங்கப்படாது என்று லண்டன் போக்குவரத்துத் துறை (TFL) தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் ஊபெர் நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் 2017 ஆம் ஆண்டில் ஊபெர் ரக்ஸி சேவை அதன் உரிமத்தை இழந்தது. எனினும் அதன் செயற்பாடுகளுக்கு 15 மாத கால நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த செப்ரெம்பர் மாதத்தில் மேலதிகமாக இரண்டு மாத கால நீடிப்பை ஊபெர் நிறுவனம் பெற்றிருந்தது. இந்தக்கால நீடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியானது. பல ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கிய ஊபெர் ரக்ஸி சேவை பல நாடுகளி…
-
- 0 replies
- 352 views
-
-
இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிய டயருடன் இருக்கும் முதலையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுலவாசி தீவின் தலைநகரான பலூவில் உள்ள ஆற்றில் சயாமிஸ் முதலைகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ ஒருவர் வீசியெறிந்த இருசக்கர வாகனத்தின் டயர் ஒன்று முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. உணவை வேட்டையாடி விழுங்கினாலும் அதன் தொண்டைப் பகுதியில் டயர் இறுக்கமாக இருப்பதால் முதலையால் உணவை சரிவர விழுங்க முடியாத நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட முதலை பட்டினியால் வாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கண்ட இந்தோனேஷிய வனத்துறை அதிகாரிகள் முதலையைப் பிடித்து டயரை அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் https://www.polimernews.com/dnews/90104/இருசக்கர-வ…
-
- 0 replies
- 431 views
-
-
98 வயதிலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்! 8 வயதிலும் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரான்ஸின் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் செனேய் ஒரு வைத்தியர். 1951ஆம் ஆண்டில் முதன்முதலாக மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், பரிஸ் புறநகர் பகுதியில் மருத்துவமனை திறந்து வாரத்துக்கு 2 நாட்கள் காலையில் சிகிச்சை அளித்து வருகிறார். பரிஸ் புறநகர் மக்களும், அவரிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 98 வயதிலும் மக்களுக்கு மருத்துவம் செய்து வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது. http://athavannews.com/98-வயதிலும்-மக்களுக்கு-மரு/
-
- 0 replies
- 338 views
-
-
பணத்தைக் கையாடல் செய்வதற்காக ஒரு பீட்ஸா விநியோகிஸ்தர் செய்யும் தந்திரத்தை மையப் படுத்தி பீட்ஸா என்றொரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இந்த வருடம் வெளிவந்த ஆடை என்னும் திரைப்படத்தில் தனக்கு உதவி பெறுவதற்காக அமலாபோல் பீட்ஸா வேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுப்பார். இப்படியான உத்திகளை சினிமாவில்தான் பார்க்கலாம் என்றில்லை. 23.11.2019இல் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. அமெரிக்காவில் Ohio நகரத்தில் ஒரு பெண் பீட்ஸாவைப் பயன்படுத்தி தன்னையும் தன் தாயையும் காப்பாற்றியிருக்கிறாள். அவளது தாயின் வாழ்க்கைத்துணைவன் அவளது தாயைத் தாக்கியிருக்கிறான். அதைப் பார்த்து மிகவும் பயந்து போய் அவள் உடனடியாக அவசர அழைப்பு 911க்குத் தொலைபேசி எடுத்துத் தனக்கு …
-
- 1 reply
- 834 views
-
-
ஐரோப்பிய அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொக்கிஷங்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பொருட்கள் 1550ம் ஆண்டில் இருந்து 1750ம் ஆண்டுவரை அரச குடும்பத்தினர் பயன்படுத்தியவை. இதில், உலகின் மிக பிரபலமான பச்சை வைரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓவியம் வரையப்பட்ட 15 அடி நீள பெஞ்ச், அச்சு இயந்திரம், அலகுசாதனப் பொருட்கள் பொன்ற 170-க்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/89982/ஐரோப்பிய-அரசகுடும்பத்தினர்பயன்படுத்தியபொக்க…
-
- 0 replies
- 240 views
-
-
சீனாவில் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள், பெய்ஜிங் நகர காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பணிக்கு சிறப்பாக உதவிய 2 நாய்களின் தோல் மாதிரியை சேகரித்து, அவற்றின் மூலம் க்ளோனிங் முறையால் 6 குட்டிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த அவற்றுக்கு சிறப்பு கவனம் கொடுத்து பராமரித்து, காவல்துறை அதிகாரி மா ஜின்லாய் என்பவர் பயிற்சி அளித்தார். அந்த 6 நாய்களும் பிஜிங் காவல்துறை பணியில் தற்போது சேர்க்கப்பட்டன. பிஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் முன்னிலையில் 6 நாய்களும் சேர்த்து கொள்ளப்பட்டன. https://www.polimernews.com/dnews/89976/க்ளோனிங்-முறையில்-உருவான-6நாய்கள்
-
- 0 replies
- 464 views
-
-
புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக …
-
- 16 replies
- 2k views
-
-
அமெரிக்க அரசியல் பல்வேறு சிக்கலுக்குள் உள்ளதாக நம்பலாம். அதிலும், அண்மையில் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தனது சகாக்களுடன் இணைந்து சமர்ப்பித்த அறிக்கை. அதில், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு அரசுகளை தனது அரசியல் எதிர்க்கட்சி சார்ந்தவர்களை விசாணைக்கு உள்படுத்துமாறு கேட்டதே. உலகின் ஒரு தேசப்பற்று கொண்ட இனமாக பார்க்ப்படும் இனமான அமெரிக்கர்களுக்கு இது அவமானமாக பார்க்கலாம். ஆனால், அமெரிக்க இன்றைய அதிபர் அவ்வாறான ஒருவராக தெரியவில்லை. காரணம், தனது ஊடக சந்திப்பிக்களில் தனது எதிரிகளுக்கு அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகின்றது. அதற்க்கு ஒரு சொல்லும் உள்ளது , இலத்தீன் சொல்லான Quid pro quo Quid pro quo ("something for something" in Latin)[2] is a Latin phrase use…
-
- 4 replies
- 612 views
-
-
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு தங்க நகைகளை தவிர்த்து, தக்காளியை அணிகலன்களாக அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் தனது திருமணத்திற்கு இளம் பெண் தங்க நகைகளுக்கு பதிலாக தலை, கழுத்து, கைகளில் தக்காளியை கோர்த்து நகைகளாக அணிந்துள்ளார். தனக்கு திருமண சீதனமாக 3 கூடை தக்காளி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மணப்பெண் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/89503/தங்கத்திற்கு-பதிலாகதக்காளியை-நகைகளாக-அணிந்தமணப்பெண் https://www.indiatoday…
-
- 0 replies
- 418 views
-