பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
இந்த மேமாதம் 05ம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தேவை முன் எப்போதையும் விட இப்போது மிகமிக அவசியமானதாக தமிழ் மக்களால் வேண்டி நிற்கப்படுகின்றது. ஈழத் தமிழ்தேசியத்திற்கு மட்டும் இல்லாமல் முழுத்தமிழினத்தினதும் எழுச்சியின் வடிவமாக இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் விளங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று சிங்களப் பேரினவாதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு துடைத்து எறியப்பட்டுவிட்டது என்று வல்லாதிக்க சக்தியும் திரும்பதிரும்ப கூறிவந்து கொண்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது தேசிய அட…
-
- 0 replies
- 566 views
-
-
புனிதக்கொலைகளின் வரலாறு என்ற தலைப்பில் இரா.முருகவேள் எழுதிய கட்டுரையை யாழ் கள உறுப்பினர்களுக்காக பகிர்கிறேன் அவரது வலைப்பூ முகவரி (http://naathaarikala.../blog-post.html) . நரபலிகள் கேட்டவுடனேயே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சொல் மிகமிகத் தயக்கத்துடனேயே வரலாற்றாசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே பிற்காலச் சோழர் வரலாறும், பாண்டியர் வரலாறும் படிப்பவர்கள் அவற்றில் இருந்து வெள்ளமாகப் புறப்படும் வீரதீர பராக்கிரமங்கள் பற்றிய விவரக் குறிப்புகளில் நரபலிகளும், சதியும், நவகண்டமும் இருக்குமிடமே தெரியாமல் போய் விட்டதைத் தான் காண்பார்கள். இந்த வரிசையில் வராத கல்வெட்டறிஞர்களின் றிக்ஷீஷீயீமீவீஷீஸீணீறீவீனீ காரணமாகவே இவ்வளவு கவனத்துடன் மூடி மறைக்கப்பட்ட இவ்வி…
-
- 1 reply
- 5.2k views
-
-
அரிப்புக் கோட்டை ( அல்லிராணிக் கோட்டை ) . அரிப்புக் கோட்டை அல்லது அல்லிராணிக் கோட்டை , மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள " அரிப்பு " என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை . இதன் அமைவிடம் வரண்ட தரிசு நிலப்பகுதியாக அமைந்துள்ளது . இந்தக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது . 1658ல் ஒல்லாந்தர் இதனைக் கைப்பற்றித் இதைத் திருத்தி அமைத்தனர். அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும்,…
-
- 1 reply
- 906 views
-
-
" ஆண்டவர் " என்ற சொல் ஆன்மீகரீதியில் புனிதமானது . மாறாக அதே சொல் எமது இனத்தைப் பொறுத்தவரையில் பல ரணங்களையும் , ஆறாவடுக்களையும் விட்டுச் சென்றிருக்கின்றது . ஒரு தேசிய இனத்திற்கு அதன் விடுதலை வேட்கை எவ்வளவு அத்தியாவசியமானதோ அதேயளவு அந்த இனத்தின் பாரம்பரிய வரலாறும் அத்தியாவசியமாகின்றது . வரலாறுகள் தெரியாமல் நுனிப்புல் மேய்வது போல் குறுகியகண்ணோட்டத்தில் வரலாற்றைப் பார்த்து ஓர் இனம் அதற்கான விடுதலையை முன்னெடுக்குமனானால் , அது தற்கொலைக்கு ஒப்பானது என்பது என்னது தாழ்மையான அபிப்பிராயமாகும் . எம்மை ஆண்டவர்கள் ஆண்டது போதாதென்று " நீங்கள் யாவருமே எங்கள் அடிமைகள் " என்பதைத் தினமும் சொல்லாமல் சொல்கின்ற மௌனசாட்சிகளாகத் தங்கள் எச்சங்களை எமது பாரம்பரிய பூமியிலே விட்டு விட்டுச் சென்றுள்ள…
-
- 9 replies
- 1.7k views
-
-
வரலாறு சந்தித்த வழக்குக்கள்---- வழக்கறிஞ்சர் வைக்கோ அவர்கள் உரை.. அனைவரும் தவறாமல் கேட்க வேண்டிய ஒரு காணோளி ... வைக்கோ ஒரு கேசில் ஆஜாரானர் என்றால் எல்லாம் எதிரணி வழக்கறிஞ்சர் எல்லாம் பின்னங்கால் பிடறியில் தெறிச்சீ ஓடிவிடுவான்...நீதிபதியே ஒடி போய்விடுவார்...
-
- 0 replies
- 739 views
-
-
கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது. நடுத்தர அளவிலான களவழி …
-
- 0 replies
- 791 views
-
-
தஞ்சை பிரகதீஸ்வரர் பெரிய கோவிலையும் இன்னும் சுமார் 52 சிறிய பெரிய கோவில்களையும் கட்டிய இந்த மாமன்னர் இறையடி சேர்ந்த இடம் உடையனூர். அது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அவர் இறையடி சேர்ந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் மாத்திரம் இருக்கிறது. அதனுடைய அருகில் ஒரு மாட்டுத் தொழுவமும் நுளைவாயினில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு அடங்கிய மரப் பலகையும் இருக்கிறது. ஓரு முதியவர் தினமும் விளக்கேற்றி வழிபடுகிறார். இராஜ இராஜ சோழனின் கல்லறை பொலிவிழந்து காணப்படுகிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் கல்லறைகள் மிகவும் சிறப்பாகக் கர்நாடகத்தில் பேணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்தக் கல்லறைகளை பக்திபூர்வமாகத் தரிசிக்கிறார்கள். சோளவம்ச மாமன்னனின் நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டப்பட …
-
- 8 replies
- 5.8k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
வணக்கம் வாசகர்களே , மற்றும் கள உறவுகளே , வேரிப் பூவைப் பதியன் இடுவதன் மூலம் இந்தத் தொடரை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தப் பதிவின் பெருமைகள் எல்லாம் கடந்த நான்கு மாதங்களாக இந்த நந்தவனத்திலே உலாவிப் பூக்களின் வாசங்களையும் அவை சொல்லும் சிறிய தங்கள் வரலாறுகளையும் கேட்டு அனுபவித்த வாசகர்களுக்கும் , என்னை அன்புடன் ஊக்குவித்து , உரிமையுடன் சரி பிழைகளைப் பகிர்ந்த கள உறவுகளயுமே சாரும் . நான் இந்த நந்தவனத்தின் காவலாளி மட்டுமே . மீண்டும் ஓர் சுவாரசியமான தொடரில் சந்திக்கும் வரை......... நேசமுடன் கோமகன் . ***************************************************************************** வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) 95 . வேரி என்னும் சொல் …
-
- 3 replies
- 3k views
-
-
வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!!!! ஓர் குறுந்தொடர் மூலம் உங்களைத் தொடுகின்றேன் . எமது மூதாதையரது வாழ்வும் , வாழ்வியலும் இப்போது உள்ள இயந்திரத்தனங்கள் இல்லாது இயற்கையுடனேயே ஒட்டி இருந்தது . அதனாலேயே அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனேயும் , அளவற்ற மக்கட் செல்வங்களுடனும் வாழ்ந்து மறைந்தார்கள் . அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்ணுற்ற பூக்களுக்கு எப்படியெலாம் தெள்ளு தமிழில் பெயர்களைச்சூட்டி எமக்கு விட்டுப் போனார்கள் என்ற தேடலின் பயனாக வந்ததே இந்தக் குறுந்தொடர் . இத்தொடரில் பொருள் மயக்கங்கள் , தவறான புரிதல்களைத் தவிர்க்குமுகமாக , எனது அறிவுக்கு எட்டியவகையில் ஒவ்வொரு பூக்களுடன் அவைபற்றி சிறுகுறிப்புகள் விக்கிபீடியாவின் துணைகொண்டு வருங்காலங்களில் போட்டுவிடுகின்றேன் . உண்மையில் இந்தத்…
-
- 156 replies
- 50.6k views
-
-
தமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர் , பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்கள் பல கிடைத்துள்ளன. பொதுவாக நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் வகை, தரம் முதலியன மக்களின் உற்பத்தித் திறனையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டும். மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னனின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசர், தெய்வங்களின் உருவங்களும் பொற…
-
- 1 reply
- 4k views
-
-
கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை. காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர். செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழ…
-
- 4 replies
- 6.1k views
-
-
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத…
-
- 0 replies
- 4.6k views
-
-
‘பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா 13.4.2012 அன்று சென்னையில் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டு, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து. வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழினும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோவியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே, விழுமிய தலைமை ஏற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் ஆருயிர்ச் சகோதரர் காசி. ஆனந்தன் அவர்களே, தியாகத் தழும்புகளைப் பெற்ற, பொது உ…
-
- 0 replies
- 765 views
-
-
சோழர் காலத்தில் இந்தோனேசியாவில் கட்டப்பட்ட சைவ ஆலயத்தின் சிதைவுகள்
-
- 3 replies
- 910 views
-
-
தமிழனின் வரலாறு. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கத…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்குகிழக்கில் முதலில் அமைக்கப்பட்ட நூலகம் என்ற பெருமை திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்திற்கே சாரும். 177 வருடப் பழைம கொண்ட திருகோணமலைப் பொது நூலகம் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை விட 100 ஆண்டுகள் பழமையானது. திருகோணமலையின் பெருமைகளில் மிகமுக்கியமானது இது. அறிவை யாழப்பாணத்துக்கு மட்டும் சொந்தமாக்குபவர்களில் காதுகளில் ஓங்கி கத்த வேண்டிய உண்மையிது. திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் ( Trincomalee pettah library)என அழைக்கப்பட்ட இந்நூலகம் 1835ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1946ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இது பற்றி தகவல் திருகோணமலை நகராட்சி மன்ற பொன்விழா மலரில் படங்களுடன் உள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்…
-
- 1 reply
- 677 views
-
-
செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி : ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர். சேரர் : பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி கிமு 300-200 முதல் கிபி 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக்…
-
- 0 replies
- 10.2k views
-
-
பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் …
-
- 0 replies
- 4.5k views
-
-
800 வருடங்களுக்கு முன் வந்த English உங்களுக்கு பெரியது என்றல் 20,000 வருடங்களுக...்கு முன் வந்த எம் தமிழ் எங்களுக்கு மிக பெரியது.... -மு.சக்தி தாசன். தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9Mehr anzeigen எண் என்ற கருத்துரு தொன்ம காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்று தொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9 புதிய வழக்கின் படி தமிழ் எண்கள் மேலுள்ள 10 …
-
- 0 replies
- 796 views
-
-
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 -2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிந்துவெளி எழுத்துக்களை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த டாக்டர் ஆஸ்கோ பர்போலா (Asko parpola) மற்றும் திரு ஐராவதம் மகாதேவன் முதலான அறிஞர்கள் இது தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இதனை ஒரு ஊகமாக வெளியிடமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்க சான்றுகளில்லை. சிந்துவெளிக்குப் பிறகு இந்திய எழுத்துத் தடயங்களில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது.நால்வேதங்களும் உபநிடதங்களும் இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை எழுத்து வடிவம் பெறவில்லையோ என்று நினைக்கத்…
-
- 3 replies
- 3.1k views
-
-
மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… ! தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன் 30ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! 02.வல்வெட்டித்து…
-
- 1 reply
- 969 views
-
-
http://www.youtube.com/watch?v=sLmoGB69i3Y
-
- 2 replies
- 1.2k views
-
-
http://youtu.be/AwmRUSK4fNU
-
- 1 reply
- 821 views
-