வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்…
-
-
- 698 replies
- 67.9k views
- 1 follower
-
-
சர்வதேச அளவில்... "ஜோன்சன்ஸ் பேபி பவுடர்" விற்பனையை, நிறுத்த தீர்மானம்! எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தற்போது பயன்படுத்தும் ‘டால்க்’ கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடர் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பன்னாட்டு நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான நுகர்வோர் புகார் தெரிவித்து வழக்கும் தொடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்த பவுடர…
-
- 0 replies
- 224 views
-
-
பெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார். 'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கை திருத்தணி பகுதியில் நாராயணபுரம் கிராமத்தில் பின்பற்றப்படுகிறது. தனக்கு வைக்கப்பட்ட பெயரின் காரணமாக பலரின் வினோதமான பார்வைகளையும், வியப்பான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார் மாணவி 'வேண்டாம்'. ''எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை என் பெயரை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. என் வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்த…
-
- 0 replies
- 488 views
-
-
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு (2.1 billion dollars) கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. ஃபிட்பிட் நிறுவனத்தின் கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும். ஏற்கெனவே இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வந்த கூகுள், ஃபாசில் (Fossil ) நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பத்தை 282 கோடி ரூபாய்க்கு அண்மையில் விலைக்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து, இச்சாதனை விற்பனையில் புகழ்பெற்ற ஃபிட்பிட் நிறுவனத்தை கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. வலைதளத்தில் இதுகுறித்த அறிவிப்பை கூகுளின் கிளை நிறுவனங்களில் ஒன்றான கூகுள் எஸ்விபி (Google SVP ) வெளியிட…
-
- 0 replies
- 358 views
-
-
டிஸ்னி நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்துகொண்டே வருகிறது. ஒரு தொழிலில் போட்டியே இல்லையென்றால், அதுவும் அது கலைத் துறையாக இருந்தால், அங்கே படைப்பாற்றல் குறையத்தானே செய்யும்?! Walt Disney Company எந்தவொரு வணிகமும் ஒரு தனி முதலாளியின் கையில் இருந்தால், அந்த வணிகம் சார்ந்த அத்தனை முடிவுகளும் அந்த முதலாளியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர் வைப்பதுதான் சட்டம், அவர் நிர்ணயம் செய்வதுதான் விலை, அவர் ஏற்படுத்துவதே அந்தப் பொருள் அல்லது சேவைக்கான தேவை என்றாகிவிடும். இன்றைய சூழலில் வணிகமயமாக்கப்படும் கலைகளுக்கும் இது பொருந்தும். குறிப்பாக, கோடிகள் புரளும் திரைத்துறைக்குப் பொருந்தும். கலைத்துறையில் தனி முதலாளியின் ஆதிக்…
-
- 0 replies
- 418 views
-
-
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை அமெரிக்க நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஐரோப்பிய பங்குச் சந்தையானது இன்று பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வோ, போலாந்து, போர்த்துக்கள், சிலோவாக்கியா, சுலோவீனியா, ஸ்பெய்ன், சுவிடம் மற்றும் சுவிட்…
-
- 0 replies
- 305 views
-
-
கொரோனா தாக்கமும் தொடக்கநிலை வணிகங்களும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 21 இலங்கை போன்றதொரு நாட்டில், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பமானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரவேற்கத்தக்க வகையிலும் பிரமிப்பைத் தரக்கூடியதாகவும் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் சிலிக்கன்வெளியை ஒத்தவகையில், இந்து சமூத்திரத்தில் இலங்கை தொடக்கநிலை வணிகங்களுக்கு ஒரு சாதகமான இடமாக உருப்பெற்று வந்துகொண்டிருக்கிறது. உண்மையில், கொரோனா தாக்கம் பல்வேறு வணிகங்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக மாறியிருக்கின்ற நிலையில், இந்த இடர்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டுகூட நிறைய தொடக்கநிலை வணிகங்கள், இலங்கையில் உருப்பெற்றதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஆனால், அவ்வாறு குறுங்காலத்தில் உ…
-
- 0 replies
- 542 views
-
-
வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை - கட்டுரை வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வேலைத்திட்டங்கள் அவசியம் 2018 ஆம் ஆண்டின் இரண் டாவது காலாண்டின் புள்ளி விப ரங்களின் பிரகாரம் 381,834 பேர் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் இளை ஞர்களே அதிகமாக இருக்கின் றனர். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் துக்கும் குறைவான தகுதியை கொண்ட வர்கள் 137,615 பேர் வேலை யற்றவர்களாக உள் ளனர். கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகைமையை கொண்டவர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை யின்றி இருப்பதாக புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் 30 வயதுக்கு மேற…
-
- 0 replies
- 329 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போத…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கையின் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை இலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இவ்வாறு மொபிடெல் அனுசரணை வழங்குகின்றது. இலங்கைக்கு இந்தப் போட்டியின் விறுவிறுப்பைக் கொண்டு வரும் வகையில், மொபிடெல் Esports பிரீமியர் லீக் போட்டித் தொடரில், நாட்டின் ஒன்பது மாகாணங்…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவால் ரஷ்யா-வை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..! 2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது. ரஷ்யா கற்ற பாடம் இதன் மூலம் ரஷ்யா மிகப்பெரிய பாடத்தைக் கற்ற நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கட்டாயம் பொருளாதாரம், வர்த்தகத் தடை உத்தரவுகளை வெள…
-
- 1 reply
- 482 views
-
-
கனடா மற்றும் சீனா வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்! கனடா மற்றும் சீன நாடுகள் தமக்கிடையில் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஆழமான வர்த்தக யுத்தத்தின் பின்னணியிலும் சீனாவும் கனடாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி மூலோபாய கலந்துரையாடலில் பங்கேற்ற கனடா மற்றும் சீன அதிகாரிகள் இந்த கருத்துகளை வௌியிட்டனர். சீனா தன்னிச்சைவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும் நோக்கில் கனடாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனாவின் மாநில கவுன்சிலர் வாங் யோங் தெரி…
-
- 0 replies
- 345 views
-
-
அதிகார வர்க்கத்தின் வரியின் பிடியில் பெண்கள் -அனுதினன் சுதந்திரநாதன் பட்ஜெட் மீதான விவாதத்தில், பெண் எம்.பிக்கள் மோதிக்கொண்ட சம்பவம், சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. பெண்கள் மீதான வரிகள் தொடர்பிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில், Pad Man என்று வர்ணிக்கப்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும், பலரும் விவாதித்தார்கள். எமது நாட்டில் வாழும் பெண்களின் Sanitary Napkin தொடர்பிலான நிலை என்ன? மாதாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினையைக் கூட, இந்த அரசாங்கமும் வணிகர்களும் வணிக மயமாக்கி, இலாபம் தேட முனைகின்றார்களா? பெண் அடிமைத்தனம் உடைப்போம் என்று பேசுபவர்கள், வணிகத்தில் பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்துவ…
-
- 0 replies
- 483 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளாக நிதி சுதந்திரம் மற்றும் ஓய்வு பெறுதல் (Financial Independence and Retire Early - FIRE) இயக்கம் பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில், 55-60 வயது என்பது பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. 40 - 45 வயதுக்குள் தேவையான பணத்தை சேமித்து நிதி சுதந்திரம் அடைவதும், பின்னர் வருமானத்திற்காக பணியைச் சார்ந்து இருக்காமல் சொந்த முதலீட்டின் மூலம் வாழ்க்கையை நட…
-
- 1 reply
- 437 views
- 1 follower
-
-
2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள். எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும். இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள். அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்…
-
-
- 16 replies
- 940 views
- 1 follower
-
-
வராக்கடன் வழங்கிய விவகாரத்தில் திவாலான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை விடியவிடிய சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று காலை அவரை அமலாக்கத்துறையினர் மும்பை அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ‘யெஸ்’ வங்கியும் ஒன்று. இந்த வங்கி குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி அடைந்தது. இதனால் பங்குசந்தையில் இதன் மதிப்பு அதிகரித்தது. பொதுமக்களும், வர்த்தகர்களும் ஏராளமான பணத்தை வங்கியில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக யெஸ் வங்கி ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை விட கடன்களை வாரி வழங்கியது. குறிப்பாக கடன் கொடுத்தால் வராது என்று தெரிந்தும் கோடிக்கணக்கில் கடன்களை கொடுத…
-
- 1 reply
- 275 views
-
-
கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள் -அனுதினன் சுதந்திரநாதன் இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள் ஒழிந்திக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் …
-
- 57 replies
- 7.7k views
-
-
இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது. அத்அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கேம்ஸ்டாப் (GameStop). இது வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகளும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெர…
-
- 8 replies
- 1.4k views
-
-
பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, `டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் மேலாளர்` வேலைக்குத் தேவை என அமேசான் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பிட்காயின் மதிப்பு கடந்த திங்கட்கிழமை நாணயத்திற்கு, 29 ஆயிரம் டாலர்களிலிருந்து 39 ஆயிரம் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதேரேம், டோஜ்காயின் போன்ற டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஊகங்கள் இருந்தபோதிலும், கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை. அமேசான…
-
- 1 reply
- 349 views
-
-
விவசாயிகள் எல்லாப் பயிரையும் ஒரே நேரத்தில் பயிர் செய்யும்போது, எந்தப் பயிர் தனக்கு நிலையான வருமானம் கொடுக்கிறதோ, அந்தப் பயிரை அதிகமாகப் பயிர் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி சிங்காரம் புதினா பயிர் செய்து அதிக வருமானம் ஈட்டி வருகிறார். காலை வேளையில் தோட்டத்தில் புதினா அறுவடையில் ஈடுபட்டிருந்த சிங்காரத்தைச் சந்தித்துப் பேசினோம். "எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. பாரம்பர்ய விவசாயக் குடும்பம்தான். எங்களுக்கு வேற தொழில் என எதுவும் கிடையாது. முன்னால தக்காளி, பீன்ஸ்னு பல காய்கறிகளைப் பயிர் செஞ்சேன். ஆனா, அதுல நல்ல வருமானம் கிடைக்கல. அப்புறமா என் நண்பர் கொடுத்த …
-
- 1 reply
- 1.5k views
-
-
நிதியியல் மோசடி தொடர்பில் அவதானமாக இருங்கள் அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலானது, மீண்டும் ஓர் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான முடக்கத்தினூடாக, நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்து, நாடு பழைய நிலையில் இயங்கிக்கொண்டிருந்தேபாது, மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை எதிர்பாராதது. அரசாங்கத்தினதும் பொதுமக்களதும் கவனயீனமே, இதற்கு முதன்மைக் காரணம் எனச்சொல்ல முடியும். இந்த நிலையில், நாடு தழுவிய பொது முடக்கத்தை நோக்கி, இலங்கை செல்வது தவிர்க்க முடியாத ஒன்றா எனும் எண்ணம் எல்லோரிடத்திலும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த சூழ்நிலை மிக மோசமான ஒன்று. காரணம், கடந்த காலத்தில் சுமார் மூன்று மாதங்களாக, நாம் அனுபவித்த முழுமையான பொது முடக்கம், நமது …
-
- 0 replies
- 493 views
-
-
Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள், மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம் உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க வருகிறது. நாடு முழுவதும் உள்ள Huawei சேவை மையங்கள், அது தனது உயர் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களையே எப்போதும் மையப்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகக் காணப்படுகின்றது. நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தை அது வரவேற்கும் விதமும், அதில் தனது வாடிக்கையாளர்களை கௌரவிப்பதும் அதன் சேவையின் சிறப்பின் மற்றொரு அடையாளமாகும். Huawei யின் பருவ கால கொண்டாட்டம், Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள் யாவும் தற்போது ஆரம்பமாகியுள்ளதோடு, முழு மூச்சுடன் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை…
-
- 0 replies
- 450 views
-
-
மிகவும் பின்தங்கிய பகுதியான ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள கிரமம் ஒன்று முழுவதும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கி வருகிறது. மொராக்கோவின் Id Mjahdi என்ற கிராமத்தில் மொத்தம் 32 சோலார் பேனல்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 8.32 கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள 20 வீடுகள் பயன்பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் முதல் முழு சூரிய சக்தியுடன் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது Id Mjahdi கிராமம். சோலார் பேனல் பயன்படுத்துவதற்கு முன் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியையும், அடுப்பெரிக்க விறகுகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்திய மதிப்பில் ரூபாய் 1.33…
-
- 1 reply
- 314 views
-
-
பில் கேட்ஸ் ரெஸ்யூம் பார்த்திருக்கீங்களா.. டிரெண்டாகும் போட்டோ.. அசந்துபோன நெட்டிசன்கள்..!! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பழைய ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களது ரெஸ்யூம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களது தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை குறிக்கும் ஒரு பிரதிபலிப்பாகவே ரெஸ்யூம் கருதப்படுகிறது. ரெஸ்யூம் இன்றைய நெருக்கடியான வேலைவாய்ப்பு துறையில் ரெஸ்யூம் என்பது ஒரு திறமையானவரை கண்டறிவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரெஸ்யூம் என்பது வெறும் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையை மாற்றும் ஒரு அங்கமாககூட இருக…
-
- 0 replies
- 469 views
-
-
SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-