வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை! 26 Jan, 2026 | 02:57 PM வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலர்களை எட்டியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
நடைமுறை வாழ்வில் தினமும் சந்திக்கும் Decoy Effect சில உதாரணம்கள் https://www.financialexpress.com/opinion/apples-using-decoy-effect-as-a-pricing-strategy-to-push-its-high-priced-offerings/1773988/
-
- 1 reply
- 468 views
-
-
'கிக்' எனப்படும் சேவை பொருளாதாரமும் எனது மக்களும் அமசோன் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் வியாபார வடிவமைப்பு - மாற்றி யோசி . அதாவது வழமையான முறையில் இல்லாமல் புதிதாக, மலிவாக மக்களுக்கு செய் என்பதே. முன்னர் மக்கள் ஒன்றில் முழு நேர வேலை இல்லை பகுதி நேர வேலை செய்தனர். இப்பொழுது அதிகளவில் பலரும் முழு நேர வேலையுடன் பகுதிநேர வேலையையும் செய்கின்றனர். இதையே ஆங்கிலத்தில் கிக் பொருளாதாரம் (GIG ECONOMY) என்கின்றனர். இது இன்று வேகமாக வளர்ந்து வருகின்றது. இத வளர்ச்சிற்கு காரணம் தொழில்நுட்பம், ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் செல்லிடத்தொலைபேசி. பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்ய கூறியதாக உள்ளது, ஊபர் ; ஏயர் பி என் பி போன்ற பகிரும் பொருளாதார வருமானம்; முகவலை போன்ற சமூக வலை…
-
- 5 replies
- 857 views
-
-
குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி! - டெஸ்லா அறிவிப்பு. உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய மின்சார வாகன சந்தையில் அதிகரிக்கும் போட்டியினால், டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், நிறுவனர் எலான் மஸ்க் என்பவரின் அரசியல் கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில், டெஸ்லாவின் வருவாய் 22.5 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துவிட்டது என்பது இதற்கான முக்கிய சான்றாகும். இதற்கு பதிலாக, டெஸ்லா நிறுவனம் தன…
-
- 0 replies
- 161 views
-
-
சில தினங்களுக்கு முன், கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த, சவுதி அரசின், சவுதி அராம்கோ நிறுவனம், அடுத்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக, ரஷ்யாவை மிரட்டியுள்ளது. பேச்சு தோல்வி: இதனால், சவுதி, ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கு, 'கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை' என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம். இதையடுத்து, சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவ…
-
- 0 replies
- 478 views
-
-
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து. பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் ஆளாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது…
-
- 0 replies
- 404 views
-
-
ஐரோப்பிய பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவுக்கு அனுமதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் 7.6 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் சட்டவிரோதமான முறையில் மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தி வந்தது. அதேபோன்று எயார் பஸ் ஏரோ நொட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்தும் எச்சரிக…
-
- 0 replies
- 320 views
-
-
தனக்கென ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த ஜாம்பவான் இன்று ஓய்வு பெறுகிறார்! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜாக் மா. இன்று ஆன்லைன் வணிக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கும் அலிபாபா நிறுவனத்தை 1999-ம் ஆண்டு 17 பேருடன் தொடங்கினார் இவர். அந்த 17 பேர் யார் தெரியுமா?...அனைவருமே இவரின் மாணவர்கள்தான். ஆம், இப்படி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உண்டாக்குவதற்குமுன் இவர் ஒரு ஆசிரியர். சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு மிகப்பெரியது. சீனாவில் பலரும் டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்யத் தொடங்கியது இவரால்தான். சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கிய இவரின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். இந…
-
- 0 replies
- 709 views
-
-
வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா? இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் சம்பாதிப்பு என்ற பெயரில் வெளிநாட்டிற்குச் சென்று தனக்குத் தானே தீங்கை விளைவித்துக் கொள்கின்றனர். அவ்வாறு அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய கட்டுரையே இதுவாகும். பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய தனியார் நிறுவனமோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. எனவே இளைஞர்கள் கட்டாயமாக வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போ…
-
- 30 replies
- 5.5k views
-
-
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தான பேச்சுவார்த்தையொன்று, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென்னுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கடந்த வாரம் சீனாவுக்கு உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்ட போதே, இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது, இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டள்ளது. அத்துடன், சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிப்பது, முக்க…
-
- 0 replies
- 380 views
-
-
Reuters: The rupee closed weaker on Tuesday, hovering near a seven-month closing low hit last week, as continued foreign fund outflows from government securities after a surprise rate cut last month weighed on the currency. http://www.ft.lk/front-page/Rupee-weakens-amid-fund-outflows-stocks-edge-up/44-685075 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை ரூபா 181.5619 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (02) ரூபா 181.0110 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் …
-
- 0 replies
- 1.6k views
-
-
பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்.. அதிர்ச்சி வைத்தியம் ரோக்கியோ: கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான யப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு யப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் யப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் யப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. இடத்தை…
-
- 13 replies
- 1.9k views
-
-
உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது? ஜூலை 13, 2021 –கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம் உலக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கையாளப்படும் பிரதான நாணயமாக ஐக்கிய அமெரிக்க டொலர் உள்ளது. அது தவிர உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் நிதி மற்றும் மூலதனப் பாய்ச்சல்களில் மிகப்பெரும் பகுதியும் டொலர்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சர்வதேச செலுத்தல்கள் மற்றும் பெறுகைகளில் பயன்படுத்தப்படும் ஐக்கிய அமெரிக்க டொலர் உலகின் பிரதான வன் நாணயமாக அல்லது கடினப் பணமாகப் (hard currency) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அமெரிக்க டொலரைத் தவிர யூரோ, ஜப்பானின் யென், பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் போன…
-
- 17 replies
- 2.3k views
-
-
740 ஏக்கரில் புதிய தொழிற்சாலை.. வியக்கவைக்கும் டெஸ்லா..! உலக ஆட்டோமொபைல் சந்தையை டெஸ்லாவிற்கு முன் டெஸ்லாவிற்குப் பின் எனப் பிரித்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். முழுமையாகப் பேட்டரியில் இயங்கும் கார், டிரைவர் இல்லாமல் இயங்கும் கார், அதிநவீன தொழில்நுட்பம், பல முன்னணி கார்களை விடவும் மிகவும் திறன் வாய்ந்த கார்கள் என டெஸ்லாவின் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் மேலாகச் சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கும் கார் என்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப கார்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 740 ஏக்கரில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா. எங்குத் த…
-
- 1 reply
- 751 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2024, 03:15 GMT “பணத்தை வீணாக செலவு செய்யாமல், வங்கியில் ஒரு கணக்கு துவங்கி அதில் போட்டுவை. எதிர்காலத்தில் நிச்சயம் உதவும்” முந்தைய தலைமுறைகளில், முதன் முதலாக வேலைக்குச் செல்லும் ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் பெரும்பாலான பெரியவர்கள் கூறிய நிதி சார்ந்த அறிவுரை இது. ஆனால், இப்போது பலருக்கும் கூறப்படும் அறிவுரை, “நல்ல பங்குகளாக பார்த்து வாங்கு. மாதாமாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் என்றால் நீண்ட கால முதலீடே சிறந்தது” என்பதாகும். கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில் நடைபெற்ற வங்கிகள், ந…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். டீக்கடை நடத்துவீர்களா?’’ என்று கேட்டுப் பாருங்கள். யாருமே அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். ‘அதெல்லாம் என் கனவுத் தொழில் அல்ல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், ஆன்லைன் மூலம் அட்டகாசமாக டீ விற்பனை செய்து, அமோகமாக சம்பாதித்து வருகின்றன நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். எல்லோரும் செய்யும் டீ விற்பனைதான், என்றாலும் கொஞ்சம் மாற்றி யோசித்ததன் மூலம் தங்களுக்கென ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். அந்த நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றிய அலசல். நூறு சதவிகிதம் ஆன்லைன் தேநீர்…
-
- 0 replies
- 549 views
-
-
ஸ்ரீ லங்கா @ 100 புதிய விண்ணப்பச் சுற்று ஆரம்பிப்பு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் அமைப்பினால் (USAID) ஆதரவளிக்கப்படும் தனியார் துறை தலைமையிலான வணிக மேம்பாட்டு தளமாகிய ஸ்ரீ லங்கா@100 ஆனது, வருமான வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கும், உள்ளக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தைகளை அணுகுவதற்கும் வணிக ஆலோசனைச் சேவைகளை எதிர்பார்க்கும் நடுத்தர சந்தை நிறுவனங்களுக்கான தனது மூன்றாவது சுற்று விண்ணப்பங்களை அறிவித்தது. 50 மில்லியன் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வருடாந்த வருமானத்துடன் இலங்கையில் ஒரு கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து நடுத்தர - சந்தை நிறுவனங்களும் தெரிவுக்கு தகுதியுடையவையாகும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதார…
-
- 0 replies
- 280 views
-
-
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில், அமெரிக்க மத்திய வங்கி, கடன் வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலைக்கு குறைத்துள்ளது. அமெரிக்காவில் 3 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கியின் அவசரக் கூட்டத்தில், கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பூஜ்யம் முதல் கால் சதவீதம் என்ற வரம்புக்குள் இருக்குமாறு கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க மத்திய வங்கி அவச…
-
- 0 replies
- 259 views
-
-
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல் தரும் தகவல்களின்படி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஈலான் மஸ்க் உள்ளார். புதிய டெஸ்லா பங்குகள் அமெரிக்கா முக்கியமான பங்குப்பட்டியலான S&P 500 பட்டியலிடப்பட்டு இருப்பது, மின்சார வாகன பங்குகளை வாங்குவதி ஓர் அலையை ஏற்படுத்தி உள்ளது இதன் காரணமாக எலான் முஸ்க்கின் …
-
- 0 replies
- 431 views
-
-
ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலரை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,300 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக டுவி…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்!! கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இருகால்களையும் போரில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் பாடசாலை புத்தக பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/story/15/மாற்றுத்-திறனாளியின்-கைவண்ணம்.html யுத்தத்தில் இரு கால்களையும் இழந்தாலும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் கிளிநொச்சி இளைஞரின் மகத்தான முயற்சி…..!! 3 இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடந்த கொடூர யுத்தத்தில் இறந்து போன லட்சக்கணக்கான உயிர்களை விட காயமடைந்த…
-
- 0 replies
- 616 views
-
-
இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா! பில்லியனர் எலோன் மஸ்க்கின் மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழையும் திட்டங்களை திங்களன்று (17) சுட்டிக்காட்டியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய சந்தை நுழைவுக்கான முக்கிய மைல்கல்லாகும். கடந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், அதையடுத்து பில்லியனர் எலோன் மஸ்க்குடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. டெஸ்லா தற்சமயம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் 13 பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் பாத்திரங்கள் மற்றும் பின்தள செயல்பாடுகள் இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. ஆட்சேர்ப்பு இயக்கம் முக்கிய பெருநக…
-
- 0 replies
- 234 views
-
-
வர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமானால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்று கொழும்பிலுள்ள சீனாத்தூதுவர் செங் சூவேயுவான் எச்சரிக்கை செய்திருக்கிறார். கொழும்பு சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் சீனத்தூதுவர் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கட்டுள்ள வர்த்தகப் போரில் சீனா அதன் சட்டபூர்வமானதும், நியாயபூர்வமானதுமான உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியாகக் கூறியிருப்பதைப் போன்று சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகத்தையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமத்துவமானதொரு அடிப்படையிலேயே கையாள வேண்டும் என…
-
- 0 replies
- 555 views
-
-
பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது சர்வதேச எல்லைகளின் திறப்பு மற்றும் தளர்த்தப்பட்ட கொவிட் நெறிமுறைகளினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் கணிசமான மீட்சியைக் கண்டது. அரசாங்கம் மற்றும் இராஜதந்திர பணிகளுக்கு உலகின் மிகப் பெரிய வெளிவாரி சேவை வழங்குனர் மற்றும் தொழில்நுட்ப சேவை நிபுணர்களாகவும் விளங்கும் VFS Global இற்கு இணங்க பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது. இது 2021ஆம் ஆண்டு சர்வதேச எல்லைகளின் திறப்புடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் இவ்விண்ணப்ப கோரிக்கைகள் மூன்று மடங்கு அதிகரிப்பை பதிவு…
-
- 0 replies
- 524 views
-
-
Black Friday... சீசனில், கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரிப்பு! கடந்த ஆண்டு ப்ளாக் ஃப்ரைடே சீசனில் கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 538 பவுண்டுகளை இழந்துள்ளதாகவும் ஒரு வங்கி அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்லேஸ் நிறுவனத்திற்கான ஒரு கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் அதாவது 59 சதவீதத்தினர் இந்த பண்டிகைக் காலத்தில் நல்ல டீல்களை எதிர்பார்க்கும் போது தங்கள் வழக்கமான நடத்தையை மாற்றிக்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 38 சதவீதத்தினர் நவம்பர் 26ஆம் திகதி ப்ளாக் ஃப்ரைடே விற்பனையில் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ப்ளாக் ஃப்ரைடே கடைகளில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் (18 சதவீதம்) …
-
- 0 replies
- 284 views
-