தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தமிழக மக்களுக்காக தேவையேற்பட்டால் அரசியலில் இணைவோம்: ரஜினி- கமல் தமிழக மக்களின் நலனுக்காக தேவையேற்பட்டால் இருவரும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்பட தயார் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘கமல் 60’ என்ற நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கி விட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்த…
-
- 0 replies
- 366 views
-
-
ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்திவருகின்றது. இந்த நவீன முறையின் நன்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு கோடை காலத்தில் தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை தவிர்க்க தமிழக அரசு நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க பொதுமக்களின் முயற்சிகள் ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது. …
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கை அதிபராகும் கோட்டாபய: வைகோ, ராமதாஸ், கொளத்தூர் மணி, ஜெயக்குமார் கூறுவது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று உள்ளதால் இலங்கைத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுவதாகத் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை…
-
- 0 replies
- 1k views
-
-
கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறி…
-
- 0 replies
- 791 views
-
-
''ரஜினி என்றதுமே, 'அவர் பி.ஜே.பி-யின் விசுவாசி' என்றுதான் பொதுவாகவே அனைவருக்கும் தோன்றும். அதற்கு ஏற்றாற்போலவே அவருடைய அறிக்கைகளும் அமைந்திருக்கும். சமீபத்தில்கூட 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி ரஜினியைக் குஷிப்படுத்தியது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற காரணங்களால், ரஜினி விஷயத்தில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது 'காவிக்கு' எதிர் நிலையில் இருப்பதுபோல் ரஜினி பேசவும், அதையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட இது ரஜினிக்கு எதிரான அவருடைய யுத்தம் என்றே சொல்லாம்'' என்கிறார்கள் தமிழக அரசியலை கவனிப்பவர்கள் கடந்த 8-ம் தேதியன்று கமல் அலுவலகத்தில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''தமிழகத்தில் …
-
- 3 replies
- 979 views
- 1 follower
-
-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவின் இறுதியில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேக் வெட்டி கொண்டாடினார். வரும் புத்தாண்டுக்குள், நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். திரையரங்குகளில், படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல், திரையில் படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்க…
-
- 0 replies
- 486 views
-
-
ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்! November 16, 2019 ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் இல்லாமல் இதில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். அண்மையில் 20 பேர் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றனர். இந்நிலையில் இந்த முகாம்களை உடனடியாக மூடிவிட்டு அப்பாவி ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் சிறப்பு முகாம்களை முற்று…
-
- 0 replies
- 535 views
-
-
உறவினர்களை சந்திக்க முருகனுக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவு கடந்த மாதத்தில் முருகன் அறையிலிருந்து அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறைவிதிகளை மீறியதால் முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சிறை சலுகைகள் இரத்துசெய்யப்பட்டு தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சிறைத்துறை வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாகக் கூறி முருகன் கடந்த மாதத்தில் 17 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவர்த்தை நடத்தியதால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். மீண்டும் தனிமைச் சிறையிலிருந்து தன்னை மாற்றக்கோரி சிறைதுறைக்கு மனு அளித்துவிட்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது உண்ணாவிரதம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இ…
-
- 0 replies
- 551 views
-
-
வழங்குகின்றோம். Image caption கோப்புப்படம் தினமணி - வந்தவாசியில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதி இருப்பதாகவும், அதுகுறித்த தகவல்களைச் சேகரிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி கூறியதன் பேரிலும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனை…
-
- 0 replies
- 625 views
-
-
காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி ஆரம்பம்! காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வள ஆணையரான மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரமாக செயற்படக்கூடிய நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டுமென தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது. மசூத் ஹுசைன் ஓய்வுபெற்ற பின் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஏ.கே.சின்ஹா, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருவார் எனக் கூறப்பட்டது. …
-
- 0 replies
- 337 views
-
-
சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஒருவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... இங்கே பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்வது, குடிநீர் கேட்டோ, அல்லது நிவாரண நிதி கேட்டோ அல்ல- நியாயமான காவல் ஆய்வாளர் ஒருவரை, தங்கள் பகுதியில் இருந்து பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் இந்த போராட்டம்..! தாயைக் கண்ட பிள்ளைகள் போல சாலையில் இருந்து எழுந்து சென்று அங்கு வந்த காவல் ஆய்வாளரின் காலில் விழவும், அவர்களை அந்த காவல் ஆய்வாளர் கைதூக்கிவி…
-
- 2 replies
- 712 views
-
-
சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கான ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரும் தமிழ்நாட்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்ராலினை சந்தித்ததாக மேலும் தெரிவித்தார். இதேவேளை 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப…
-
- 2 replies
- 768 views
-
-
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் – அகழ்வுப் பணி நிறைவு கூடங்குளத்தில் 5 மற்றும் 6ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான நிலம் அகழ்வுப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அணுஉலை கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடங்குளத்தில் தற்போது தலா 1,000 மெகாவொற்ஸ் மின் உற்பத்தி திறனுள்ள இரு அணுஉலைகள் மின் உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைத்து, அணு உலை பூங்காவாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 3 மற்றும் 4ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ரூ.39,747 கோடி செலவில், 2016ஆம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கியது. 2017ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 552 views
- 1 follower
-
-
இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார், பேரறிவாளன்.. 1 மாதம் பரோல்! மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார். பேரறிவாளனின் அப்பாவின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை காண வேண்டும் என்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.அவர் தனது தண்டனை காலத்தில் பெறும் இரண்டாவது பரோல் இது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 362 views
-
-
துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது! அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அரச முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிக்காகோ, ஹூஸ்டன், வொஷிங்றன் டி.சி. மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கவும், தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இன்ரநஷனல் பினான்ஸ் கோர்பிரேஷன் மற்றும் முக்கிய நிதி ந…
-
- 2 replies
- 647 views
-
-
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை : தி.மு.க தீர்மானம்! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க தி.மு.கவின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தின்போது, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க வேண்டும் எனவும் தி.மு.க பொதுக் குழுவில் திருநங்கைகளை சேர்ப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.கவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட…
-
- 0 replies
- 463 views
-
-
தமிழ்நாடு எப்படி உருவானது? மின்னம்பலம் விவேக் கணநாதன் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரிய மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது. இந்தியாவை பல்வேறு மொழி தேசிய இனங்கள் அடங்கிய கூட்டுநாடாக பார்க்கும் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலுவடைந்தது. மொழிவழி தேசிய இனங்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் 1921ம் ஆண்ட…
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் 40 விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்;ளது. திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டவர்களிற்கான சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு கைதிகளே தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களிற்கு தண்டனை காலம் முடிவடைந்ததால் தங்கள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளை கோரிவருகின்றனர். எனினும் அவர்களை சொந்த நாடுகளிற்கு அனுப்பிவைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். …
-
- 0 replies
- 599 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரால், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பகுதி பெல்ஜியம் என நீண்ட காலமாக அழைக்கப்படுகிறது. அந்த ஊரை பெல்ஜியம் என மக்கள் அழைத்தது ஏன்? அப்பகுதி மக்களுக்கு என்ன செய்தார் என விவரிக்கிறது இந்த செய்தி... திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு அருகே அமைந்துள்ள அந்த ஊரின் பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் பெயரை கொண்டுள்ளது அவ்வூர்.இந்த பகுதிக்கு ஏன் பெல்ஜியம் என்ற பெயர் வந்தது என விசாரித்தால், அப்பகுதியினர் சொல்லும் தகவல் நம்மை வியக்க வைக்கிறது... பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டொம்னிக் பியர், இரண்டாம் உலகப் போரினால் ஊனமுற்ற, …
-
- 1 reply
- 1.9k views
- 1 follower
-
-
சென்னை: சென்னையில் காற்றுமாசு அளவு தொடர்ந்து மிகவும் அதிகரித்து இருப்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அமபலமாகியுள்ளது. டெல்லியை விட சென்னையில் காலை 9.30 மணி அளவில் காற்றுமாசு அதிகரித்து இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காலையில் டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 254 ஆக இருந்தபோது சென்னையில் 264 வரை அதிகரித்திருந்தது. வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணாநகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 ஆக உள்ளது. மேலும் சென்னையில் வெள்ளிக்கிழமை வரை காற்றுமாசு அதிகரித்தே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கினால் சென்னையில் காற்றுமாசு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. சுவாசிக்க தக…
-
- 2 replies
- 740 views
-
-
நெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர். பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 3 replies
- 769 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளில் பரோல் மூலம் ஒரு நாள்கூட வெளியே வரவில்லை. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அதைக் கணக்கில்கொண்டு அவருக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க பேரறிவாளன் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்…
-
- 0 replies
- 400 views
-
-
திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி இரவிரவாக இடம்பெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தெரியாமல் தவறி விழுந்துள்ளான். இந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 27 அடியில் இருந்த சுஜித், 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று விட்டான். மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஒ…
-
- 52 replies
- 7.7k views
- 1 follower
-
-
திருவள்ளுவருக்கு சிலுவைய போடு, இல்ல குல்லா போடு, எனக்கு என்ன..?? அசால்டா பேசி அதிரவிட்ட கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்..!! திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். என்னைப் பொருத்தவரையில் அவருக்கு குல்லா போட்டாலும் சிலுவை போட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல புகைப்படம் வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்…
-
- 0 replies
- 770 views
-