Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்குபற்றினர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “பா.ஜ.க.வும், பா.ம.க.வும் அனைத்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன. பா.ஜ.க.விடமிருந்து அப்பாவி இந்துக்களையும், பா.ம.க.விடமிருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பி…

  2. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்..! நாம் தமிழர் கட்சி சார்பில், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டிய…

  3. தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமுலாக்கத்துறை முடக்கியது. இந்த சொத்து முடக்கம் குறித்து அமுலாக்கத்துறை இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பணமோசடி தடுப்பு சட்டம், 2002இன் கீழ் ஒலிம்பஸ் கிரனைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள்…

  4. மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது வழக்கு April 24, 2019 மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். . மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக தெரிவித்து நேற்றையதினம் சிறையில் உள்ள கைதிகள் சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தடுக்க சென்ற காவலர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனையடுத்து, சிறைத்துறை அளித்த முறைப்பாட்டினையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது…

  5. தேர்தல் எப்போது வந்தாலும் தயார்... தர்பார் ரஜினியின் தாறுமாறு பேச்சு..! திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டின் வெவ்வேறு தருணங்களில் அறிவித்தனர். இவர்களில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல், மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய ரஜினி, வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் பிஜேபியின் தேர்தல் அறிக்கையையும் வரவேற்றிருந்தார். இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு நடந்த சமயத்திலேய…

  6. ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதி – தலைவர்கள் கண்டனம் April 23, 2019 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதியளித்ததற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தின் ஒருகட்டமாக இதுவரை நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரு திட்டங்களுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு திட்டத்துக்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 27 இடங்களில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி கடந்த 14ஆம் திகதி அளிக்கப்பட்ட…

  7. இலங்கை குண்டு வெடிப்பு – தமிழக கடற்கரை – ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது April 22, 2019 இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து தீவிவாதிகள் பாக் ஜலச…

  8. சிறுவன் ஜீவசமாதி.. சாமியார், உதவியாளர் அதிரடி கைது.. பிரேத பரிசோதனைக்கு கலெக்டர் உத்தரவு. உயிரோடு இருக்கும் சிறுவனை ஜீவ ஜல சமாதி செய்யணும் என்று ஐடியா கொடுத்த மகா புத்திசாலியான சாமியார் பழனியை போலீசார் கைது செய்து கொத்தோடு அள்ளி கொண்டு போனார்கள். மேலும் இச்சம்பவத்தில் சிறுவனின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும், உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகில் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் தனநாராயணன். வயது 16. நன்றாக படிக்க கூடியவனாம். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 465 மார்க் எடுத்த…

  9. இலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி!- சீமான் இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் பல இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் சதியாகவே இருக்ககூடுமென சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சீமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமெனவும் பெரும்பாலான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வெளியாகிய தகவல்கள் மீள முடியாத துயரை தொடர்ந்து தருகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதி…

  10. ஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்! - பிரணாய் ராய் பேட்டி இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான பிரணாய் ராய் பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். ‘என்டிடிவி’யின் நிறுவனர்களில் ஒருவர். தோரப் ஆர்.சோபரிவாலாவுடன் இணைந்து பிரணாய் ராய் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக்‌ஷன்ஸ்’ புத்தகம் 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வாக இருக்கிறது. புத்தகத்தின் மிக சுவாரஸ்யமான பகுதி, தேர்தல் முடிவுகளை எப்படியெல்லாம் கணிக்கிறார்கள் என்பதுதான். மூத்த பத்திரிகையாளரான என…

    • 0 replies
    • 911 views
  11. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்ததாவது, “சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்படுவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது.” என்றார். முன்னதாக நீதிமன…

  12. வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து..! தேர்தல் ஆணையம் அதிரடி..! வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். நாளை மறுதினம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் நடவடிக்கையாக வேலூர் தொகுதி மக்களவை தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனும், வேட்…

    • 3 replies
    • 792 views
  13. தமிழக சட்டசபை இடைத் தேர்தல் Live: 18 தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவுமினி சட்டசபை தேர்தல் என வர்ணிக்கும் அளவுக்கு, இன்று ஒரே நாளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப் பதிவு லோக்சபா தேர்தலைப்போலவே காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் விவரம்: பூந்தமல்லி (தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), நிலக்கோட்டை (தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனி), ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), பரமக்குடி (தனி), சாத்தூர், விளாத்திகுளம் ஆகியவைதான் அந்த சட்டசபை தொகுதிகளாகும். இந்த தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான உட…

  14. மூக்கில் ரியூப்... வீல்சேர்... வாக்குச்சாவடியில் கருணாநிதியை நினைவுபடுத்திய க.அன்பழகனுக்கு என்னவாயிற்று..? 96 வயதில் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்து கருணாநிதியை நினைவு படுத்தி சென்றிருக்கிறார் அவரது நண்பரான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். ’என் 18 வயதில் துணைக்கு வந்த நண்பன்’ என்று கருணாநிதியால் சிலாகிக்கப்பட்டவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே சோர்வடைந்து விட்ட அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அடிக்கடி காய்ச்சல், சளித்தொல்லைகள் ஏற்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 28-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்…

  15. "இரவில் மின்சாரத்தை அணைத்தைவிட்டு, அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இது தேர்தல்தானா, ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா" என திருமாவளவன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திரும…

  16. மீண்டும் மோடி?: தமிழர்கள் மறக்க வேண்டிய விஷயங்கள்! சரா சுப்ரமணியம் எவ்வித அலையும் வீசாத 2019 மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்கப் போவோருக்கு உறுதுணை புரியக்கூடிய ‘நம்பர்’ தமிழகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதால், இம்முறை தமிழக வாக்காளர்களும் தேச அளவில் முன் எப்போதையும்விட கூடுதலாகவே கவனிக்கப்படுகின்றனர். 2014இல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய உத்தரப் பிரதேசத்தின் முடிவுகள் பேருதவி புரிந்தன. நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. இம்முறை அம்மாநிலத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. தேச அளவில் நிலவும் பொதுவான அதிரு…

  17. மக்களவை தேர்தல்: முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் வாக்களிப்பு #LIVE 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்…

  18. என் உயிருக்கு இனிப்பான நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கும் , என் உணர்வோடும் ,உயிரோடும் கலந்து விட்ட தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.. வணக்கம். நாளை நடைபெறவிருக்கின்ற இந்திய மக்களவை தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றின் பணிகளுக்காக நீங்கள் ஒவ்வொருவரும் உழைத்த உழைப்பு என்பது தமிழ் இன விடுதலைப் பக்கங்களில் மதிப்புமிக்க சொற்களால் விவரிக்க படவேண்டிய வியர்வை வரலாறு. எவ்விதமான பொருளாதார சாதிய பின்புலமுமின்றி .. இலட்சிய நெருப்பினை.. தன் ஆன்மாவில் சுமந்து, இனத்தின் வலி அறிந்து, நீண்டகாலமாக அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் துயர் இருட்டைப் போக்க வெயில் கொளுத்தும் வீதிகளில்.. வியர்வை மழையில…

  19. தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது 2,430 கோடி ரூபாய்! மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மினி சட்டமன்ற இடைத் தேர்தலும் நடப்பதால் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி இரண்டுக்குமான பரீட்சையாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல். வாக்குக்கு பணம் என்பது வெளிப்படையாக எல்லோராலும் கண்டிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் பெரும்பாலான கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே வைத்திருக்கின்றன. பொதுவாக மக்களவைத் தேர்தல் என்றால் ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் பத்து லட்சம் வாக்காளர்கள், சட்டமன்றத் தேர்தல் என்றால் அதிகபட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதுதான் தேர்தல் களக் கணக்கு. வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவு வரம்புகளை …

  20. டி.செல்வகுமார் மக்களிடம் நெருக்கமாகப் போயி ருப்பதால் இத்தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தனது தேர்தல் பிரச்சார அனுபவம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: பிரச்சாரக் களத்தில் மக்களிடம் எத்தகைய எழுச்சியைப் பார்த்தீர்கள்? எங்களது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்த இடங்களில் இளைஞர்கள், கட்சி சார்பற்ற மக்கள், நடுநிலையானவர்கள், பெண்கள் ஆகியோர் எழுச்சியுடன் வந்ததைக் காண முடிந்தது. மாற்றத்துக்கான அரசியல் எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. …

  21. படத்தின் காப்புரிமை ARUN SANKAR/Getty images வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியதுபோல் தூத்துக்குடியிலும் மக்களவைத் தேர்தலை நிறுத்தும் சதி நடைபெறுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த தொகுதியில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. …

  22. மதுராந்தகம் அருகே மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையால் நோய் பாதிப்பா?- ஆய்வு செய்யக் கோரி போராட்டம் April 17, 2019 மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும், இதற்கு அப்பகுதியில் இயங்கி வரும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து அப்பகுதி பெண்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூரில் கடந்த 9 ஆண்டுகளாக பயோ மெடிக்கல் கழிவுகளை அழிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு…

  23. நாளை மக்களவைத் தேர்தல் – பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது : April 17, 2019 தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 96 மக்களவைத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுக்காக மொத்தம் 269 பேர் போட்டியிடவுள்ள நிலையில் 5.99 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. பிரச்சாரப் பணிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.