தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு! சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத் தாக்குதல்களுக்கு சரதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கு முன்னரே இந்திய புலனாய்வு …
-
- 1 reply
- 582 views
-
-
நாம் தமிழர் - தேர்தல் 2019 தற்போது வரை 💪😍😍🔥🔥🔥 Arakkonam - 24495 Arani - 32151 Chennai Central - 30684 Chennai North - 49412 Chennai South - 34818 Chidambaram - 26049 Coimbatore - 58289 Cuddalore - 32785 Dharmapuri - 16769 Dindigul - 49741 Erode - 38849 Kallakurichi - 29806 Kancheepuram - 62390 Kanniyakumari - 13135 Karur - 32553 Krishnagiri - 27145 Madurai - 32178 Mayiladuthurai - 30721 Nagapattinam - 41361 Namakkal -38378 Perambalur - 52494 Pollachi - 31181 Ramanathapuram - 26762 Salem - 25376 Si…
-
- 161 replies
- 18.1k views
- 3 followers
-
-
தி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம் எம். காசிநாதன் / 2019 ஜூன் 10 திங்கட்கிழமை, மு.ப. 10:54 Comments - 0 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், மான்ய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஆரம்பிக்கும் நேரத்தில், அ.தி.மு.கவுக்குள் பூகம்பம் உருவாகி இருக்கிறது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பா.ஜ.க இந்தமுறை இல்லை. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற காரணத்தால், ‘அடையாள நிமித்தமாக’க் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஓர் அமைச்சர் பதவியை, மத்திய அமைச்சரவையில் வழங்க பா.ஜ.க முன் வந்தது. இந்த அடையாள அங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நளினியை முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல்!: நீதிமன்றம் கேள்வி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனிலுள்ள தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமனறத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, நேரில் முன்னிலையாகி வாதிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார். குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்…
-
- 0 replies
- 443 views
-
-
வணக்கம் உறவுகளே நடந்து முடிஞ்ச பாராள மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாய் தேர்தல் பணியில் ஈடு பட்டேன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகள் மற்றும் தங்கைகளுடன் / நீண்ட தூர நட பயணம் சுட்டு எரிக்கும் வெய்யில் , இதை எல்லாம் பெரிது படுத்தாம எங்கள் தேர்தல் பணி தொடர்ந்தது , துண்டறிக்கை மக்களுக்கு குடுத்து எமது சின்னம் விவசாயி என்று சொல்லி தேர்தல் பணிய தொடங்கினோம் , தமிழ் நாட்டு தேர்தல் பணி நினைக்குமா போல இல்லை பல இன்னல்கள் , துன்டறிக்கை குடுக்க போனா வேணாம் என்று சொல்லும் ஆட்களும் இருக்கினம் , மற்ற கட்சி காரங்கள் எங்களை கண்டா கோவத்தோட பார்ததும் உண்டு , அவர்களின் க…
-
- 46 replies
- 4.9k views
- 1 follower
-
-
நன்னடத்தை அடிப்படையில், சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக அரசுக்கு அம்மாநில சிறைத்துறை பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சசிகலா ஓராண்டுக்கு முன்பே, அல்லது இந்த ஆண்டு இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட…
-
- 0 replies
- 530 views
-
-
சேலம் எட்டு வழி வீதி திட்டம் ஏன்? முதல்வர் சேலம் சென்னை இடையேயான 8 வழி சாலை திட்டம் ஏன்? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் அரசு விழாவில் தெரிவித்ததாவது, “ உலக தரத்திற்கு ஏற்ப சாலைகளை ஏற்படுத்தவே எட்டு வழி சாலையை மத்திய அரசு அறிவித்தது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் சேலம் எட்டு வழி வீதி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். யாருடைய நிலத்தையும் பறித்து வீதி திட்டத்தை அரசு செயற்படுத்தாது. சேலம் எட்டு வழி சாலை திட்டம் பொதுமக்களின் நலனுக்காகத்தானே தவிர, தனி நபர் நலன்களுக்காக அல்ல. 8 வழி வீதி திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாதானப்படுத்தி அந்தத் திட்டம் செயற்படுத்தப்ப…
-
- 1 reply
- 739 views
-
-
ஜல்லிகட்டை தடை செய்யகோரி பீட்டா அமைப்பு மீண்டும் வலியுறுத்தல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்தி பீட்டா விலங்குகள் நல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஆய்வறிக்கையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகளும் உயிரிழந்தமையை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த போட்டிகளின் போது காளைகள் சுமார் 16 மணிநேரம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக உயிர்களுக்கு பாதுகாப்பற்ற இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை …
-
- 4 replies
- 994 views
- 1 follower
-
-
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன. மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்த…
-
- 0 replies
- 835 views
-
-
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குங்கள்... மு.க.ஸ்ராலின் அதிரடி..! மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்ராலின் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மு.க.ஸ்ராலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தயாநிதி மாறன், அன்பழகன், சுப்பிரமணியன் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்ராலின், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழிசை கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதை சுட்டிக்காட்டினார். மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந…
-
- 5 replies
- 749 views
-
-
ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநரே அரசியலமைப்பின் தலைவர், அவரே எந்ததொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு அதிகாரமுடையவர். அந்தவகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது. இத…
-
- 0 replies
- 657 views
-
-
நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள். நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத…
-
- 0 replies
- 845 views
-
-
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சை தத்தை எந்த அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்தார்களோ அதே விதிமுறையைப் பின்பற்றி பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என்று அவரது தாயார் அற்புதம் அம்மாள் கோரியுள்ளார். சஞ்சய் தத்தை முன்கூட்டி விடுதலை செய்ய மத்திய அரசு இசைவு தெரிவிக்காதபோதும், மாநில அரசு முன்வந்து முன்கூட்டியே அவரை விடுதலை செய்தது என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் தெரிவிக்கிறது என்கிறது பேரறிவாளன் தரப்பு. 1993ல் மும்பையில் நடந்த…
-
- 1 reply
- 724 views
-
-
முகிலன் உயிரோடு இருக்கிறாரா?- தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் ‘சூழலியல் போராளி முகிலன் உயிரோடு இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்த முகிலன், கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?’ என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றைச் ச…
-
- 0 replies
- 469 views
-
-
கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என அறிவிப்பு தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம் மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.கஸ்தூரி ரங்கன் குழு: மூன்றாவது மொழியாக இந்…
-
- 4 replies
- 853 views
-
-
இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசை முன்னோடியாக எடுத்துகொண்டு, நாங்கள் நிறைய இரத்தத்தை தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் என்றே பிரபாகரனும் போராடுவதற்கு வந்தாரெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, …
-
- 4 replies
- 1.5k views
-
-
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னையில் போராட்டம் June 2, 2019 சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, நேற்றையதினம் ; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிரேஸ்ட தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்னவென்பதைத் தெரிவிக்கும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பெப்ரவரி 15 ம்திகதி முதல் காணாமல் போயுள்ளார் முகிலன் காணாமல் போனது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் 17 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வ…
-
- 0 replies
- 789 views
-
-
மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பகல் 2:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “மரியாதைக்குரிய அன்பு நரேந்திர மோடி அவர்களே, மனமார்ந்த வாழ்த்துகள். சாதித்துவிட்டீர்கள்... இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” …
-
- 6 replies
- 1.3k views
- 2 followers
-
-
விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்! தனியன் தமிழக அரசியலில் கமலோ, சீமானோ விஜயகாந்த் அளவுக்குக்கூடச் செல்வாக்கில்லாதவர்கள் என்பதையே இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கின்றன. விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். அடுத்த ஓராண்டில் (2006) அவரது கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.4% வாக்குகளைப் பெறுகிறது. அடுத்து அவர் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 10.3%. இதற்கு மாறாக இந்தத் தேர்தலில் சீமான் கட்சி பெற்ற வாக்குகள் 3.87%. கமல்ஹாசன் கட்சி பெற்ற வாக்குகள் 3.78%. இதே தேர்தலில் “மற்ற” கட்சிகள் 4.94% வாங்கியிருக்கின்றன. NOTAவுக்கு 1.28% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. …
-
- 8 replies
- 1.9k views
- 1 follower
-
-
முன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் "டாக்டர்" கவிதா திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஒருவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடைபெறுவதாக எஸ்பிக்கு புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த கடை உரிமையாளர் கவிதாவிடம் (32) போலீஸார் விசாரித்தனர். அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் கருக்கலைப்பு செய்ய வந்ததாக கூறின…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ‘சிங்கம்’ இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் சூர்யா மிகவும் ஸ்ட்ரிக் ஆபீஸராகவும் ரவுடிகளைப் பிடிப்பதில் அதிரடியும் காட்டி வருவார். அவரின் சிங்கம் கேரக்டர் போலவே நிஜத்திலும் ஒரு போலீஸ் உள்ளார். அண்ணாமலை என்ற அவரை அவரின் ரசிகர்கள் ‘சிங்கம் அண்ணாமலை’ என்றே அழைத்து வருகின்றனர். தமிழகத்தின் கரூரை சொந்த ஊராகக் கொண்ட அண்ணாமலை 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தின் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து ரவுடிகள், சமூக விரோதிகளும் இவரது பெயரைக் கேட்டாலே அலறுவார்களாம். இதனால் கர்நாடகாவில் அண்ணாமலைக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், அவர் தற்போது தன் ஐ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்வெட்டுல எம்.பி... இப்ப மத்திய அமைச்சர்... ஓபிஎஸ் மகன் ஆதரவாளர்களின் அமர்க்களம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனும் தேனி எம் பி.யுமான ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே தேனி அருகே கோவில் ஒன்றில் வைக்கப்பட்ட கல்வெட்டில் ரவீந்தரநாத்குமார் எம்.பி. குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் விவாதப் பொருளானது.இதையடுத்து சர்ச்சைக்குரிய கல்வெட்டை அமைத்தவர் கைது செய்யப்பட்டார். தற்போது எம்.பி.யாக வென்றுவிட்ட ரவீந்தரநாத்குமார் மத்திய அமைச்சரவையில் இடம்பெற பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருக்கு இணை அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என அவரது ஆதரவாளர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைத் தாண்டி வந்தமைக்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் விடுவிக்கக்கோரி குறித்த மீனவர்களின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நாளை காலை சந்தித்து மனுவொன்றை கையளிக்க உள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் குறித்த படகு மூழ்கியது. இந்நிலையில் படகிலிருந்த நான்கு மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து கடந்த 180 நாட்களாக யாழ்பாணம் சிறையில் வைத்தனர். இதையடுத்து க…
-
- 0 replies
- 544 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் எனச் சமமாக வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சி, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பல தொகுதிகளில் 3, 4 இடங்களைப் பெற்றுள்ளனர் அக்கட்சியின் வேட்பாளர்கள். 2010ம் ஆண்டு கட்சி தொடங்கிய சீமான், 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றார். இந்த முறை இந்த விகிதம் உயரத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், தேர்தல் முடிவுகளால் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். சீமானிடம் பேசினோம். தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ``என்னத்த பார்க்கிறது... படித்த இளைஞர்களும் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தத் தேர்தலில் எங்களு…
-
- 1 reply
- 1.5k views
-