தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
மகளுக்குத் திருமணம்: பரோல் கேட்கும் நளினி மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நளினி, அந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவரான நளினி கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நளினியின் மகள் ஆரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். ஆரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது தூக்கு த…
-
- 0 replies
- 560 views
-
-
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அரசு நட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது. இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம். முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அத…
-
- 0 replies
- 732 views
-
-
மரியாதையா பேசுங்கள்.. இல்லாட்டி காது சவ்வு கிழிந்துவிடும்.. ஸ்டாலினுக்கு முதல்வர் வார்னிங்! மரியாதை கொடுத்து பேசுங்கள். நான் திருப்பி பேசினால் உங்கள் காது சவ்வு கிழிந்து விடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்தார். திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டன்சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது முதல்வர் பேசுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுகிறார். தந்தையின் ஆதரவின் அடிப்படையில் அரசியலுக்கு கொல்லைப்புறமாக ஸ்டாலின் உள்ளே வந்தார்.ஆனால் நான் உழைத்து பதவிக்கு வந்தேன். சாதாரண தொண்டன் முதல்வரானால் அதை கேவலமாக பேசுவதா. மரியாதை…
-
- 1 reply
- 636 views
-
-
காசிமேடு கடல்: வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் மத்தியில் தத்தளிக்கும் மீனவர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர்பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காசிமேடு காலத்திற்கு ஏற்றவாரு மாறிவருகிறது. ஆனால், எங்கள் வாழ்வு அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள் காசிமேடு மீனவர்கள். மீன் சுமக்கும் கடல் காசிம…
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
விதம் விதமாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான்.. திடீர் உடல் நலக்குறைவு. நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூரலிகான். தினம் ஒரு வித்தியாசம்.. தினம் ஒரு தோற்றம்.. தினம் ஒரு யுக்தியில் பிரச்சாரம் செய்து தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் சென்று களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அப்போது முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே மிக முக்கியமான வேட்பாளராக இவர் தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்நிலையில், சர…
-
- 0 replies
- 588 views
-
-
மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் சீமான் போட்டியிடாமல், 40 தொகுதிகளுக்கும் தமிழர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான். அப்போது பேசிய அவர், ''தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலரா…
-
- 5 replies
- 848 views
-
-
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது. தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து. கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஸ்டர்லைட் , 7 தமிழர் விடுதலை பற்றி பேசாதீங்க !
-
- 0 replies
- 624 views
-
-
பிளாஸ்டிக்கிற்கு பதிலாக டாஸ்மாக்கை ஒழித்திருக்கலாம்" - பூ விற்கும் பெண்ணின் கோபம் அபர்ணா ராமமூர்த்திபிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR K "500 ரூபாய் தாள்கள் எல்லாம் இனி செல்லாது என்று அறிவித்த பிறகு, எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். அப்போது உணவுக்கு கூட வழியில்லாமல் …
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
ராஜீவ் காந்தி டில்லியில் தனது குண்டு துளைக்காத அங்கியை பிரபாகரனுக்குக் கொடுத்தார் - பண்ருட்டியின் நேர்காணலில் தகவல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன், தனது குண்டு துளைக்காத அங்கியையும் வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு, இலங்கை - இந்திய உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.இராமசந்திரன் 'நியூஸ…
-
- 0 replies
- 619 views
-
-
தேர்தலையொட்டி 4 நாட்கள் தமிழகமெங்கும் மதுபானக்கடைகள் மூடப்படும்… April 5, 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தகளையொட்டி நான்கு நாட்கள் தமிழகமெங்கும் மதுபானக்கடைகள் மூடப்படும் என மதுபான மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள், வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்கு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தமைக்கேற்ப நேற்றையதினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும், அதோடு இணைக்கப்பட்ட பார்களும் எதிர்வரும் வரும் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வா…
-
- 0 replies
- 361 views
-
-
ஆண் குழந்தைக்கு, ஜெயலலிதா என பெயர் சூட்டினார் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டி கூட்டத்தில் கலகலப்பு ஏற்படுத்தினார். லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று புதன்கிழமை திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக, கோபிச்செட்டிப்பாளையம் அருகே அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் – பிரியா எ…
-
- 1 reply
- 521 views
-
-
மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார். …
-
- 0 replies
- 618 views
-
-
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்சென்னை: தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே போதும், வாக்காளர்களான நம்மை, ஒரு திருடனை போல நடத்த ஆரம்பித்துவிடும் சில அரசியல் கட்சிகள். ஆம்.. திருட்டுக்குத்தான் நேரம், காலம் பார்த்து கன்னம் வைக்க வேண்டும். பொதுமக்களும் அப்படித்தான் பம்மி, பம்பி, இந்த கட்சிகளிடம் பணத்தை பெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் மோசமான கலாச்சாரம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக மிக அதிகம். "பணம் கொடுக்காவிட்டால் ஓட்டு போடமாட்டோம்.. அவனுக்கு கொடுத்துருக்கு, எனக்கு தரல.." இப்படியெல்லாம் அறச்சீற்றம் காட்டும் திருவாளர் பொதுஜனமும் பெருகிவிட்டனர். இவர்களையெல்லாம் திருப்திப்படுத்த மார்க்கெட் ரேட்டுக்கு தக்கபடி, பணப…
-
- 2 replies
- 869 views
-
-
துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு! திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மூன்று நாட்களாக நடந்த ரெய்டு நேற்று முடிவிற்கு வந்தது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.முதல்நாள் சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சோதனை நடந்தது. வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரி…
-
- 0 replies
- 511 views
-
-
மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை. தேர்தலில் பெண்களின் பங்களிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 49.7 கோடி. அதாவது 48 சதவீதம். ஆனால், மக்களவையில் அவர்களின் பங்கு 11.8 சதவீதம் (64/543) என்ற அளவிலும், மாநிலங்களவையில் அவர்கள் பங்கு 11 சதவீதம். அதாவது, 27 பெண் உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 476 views
-
-
சமூகத்தின் அடித்தட்டில் இருந்து, கடின உழைப்பின் மூலம் சரவணபவன் என்னும் நிறுவனத்தின் ஆரம்பித்து, இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பி பெரும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெற்றுத் தரும் வகையில் கட்டி அமைத்தவர் ராஜகோபால் அவர்கள். ஆனாலும், சில வெற்றியாளர்களுக்கு இருக்கும், பெண்ணாசை இவரையும் விடவில்லை. கிருத்திகா என்னும் வேலைக்கு வந்த திருமணமான பிராமணப்பெண்ணை முதலில் மடக்கி, அவரது, அப்பிராணி கணவர், கணேஷ் என்பவரை துரத்தி விட்டு, இரண்டாவது மனைவியாக வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது நிறுவனத்தில், வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் மகளான, மகள் வயது இளம் பெண, ஜீவஜோதி என்னும் பெண்ணின் மேல் ஆசை கொண்டார். இவர் மோகம் கொண்டிருந்ததை அறியாத அந்த பெண், தனது காதலரை மணந்…
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
தமிழகத்துக்கு அடுத்துவரும் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு – அமித் ஷா நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பா.ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் அடுத்த 5 ஆண்டுகளும் ஏழைகளுக்கான ஆட்சியாக மோடி அரசு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் ச…
-
- 0 replies
- 473 views
-
-
சென்னை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடற்கரையை குப்பையாக்கிய இளைஞர்கள்: காவலர் கொடுத்த நூதன தண்டனை, குவியும் பாராட்டு Published : 02 Apr 2019 17:04 IST Updated : 02 Apr 2019 17:04 IST மு.அப்துல் முத்தலீஃப் காவலர் எபேன், சுத்தம் செய்யும் இளைஞர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு குப்பைக்கூளமாக்கி, அசுத்தம் செய்த அலட்சிய இளைஞர்களை போன் செய்து வரவழைத்த காவலர் அவர்களை திருத்த கொடுத்த நூதன தண்டனையால் பாராட்டு குவிகிறது. பொதுவாக பொதுஇடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அது குழந்தை வளர்ப்பிலிருந்து கொண்டு வரப்படவேண்டிய ஒன்று.…
-
- 0 replies
- 758 views
- 1 follower
-
-
தென் சென்னையில் எனக்கே வெற்றி... சீரியஸாகப் பேசும் பவர் ஸ்ரார் சீனிவாசன்..! தென் சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சி (அ) பிரிவு சார்பில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் பவர் ஸ்ரார் சீனிவாசன். அவருக்கு அயர்ன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தென் சென்னைக்கு உட்பட்ட தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து பவர் ஸ்ரார் சீனிவாசன் பேட்டி அளித்திருக்கிறார். “நடிகர் கமல் கட்சியில் நான் ஏன் சேரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். கமல் கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டது. நான் சேர்ந்துள்ள இந்திய குடியரசுக் கட்சி 40 ஆண்டுகளாக உள்ள கட்சி. அந்தக் கட்சியின் மாநில துணை தலைவராக இருக்கிறேன். தேர்தலில் தென் சென்னை …
-
- 0 replies
- 859 views
-
-
துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகப பணம், அனைத்தும் 200 ரூபாய் கட்டுகள் 9 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: 'துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம்' திமுக பொருளா…
-
- 2 replies
- 671 views
- 1 follower
-
-
கோவை மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் - பொள்ளாச்சி விவகாரம் எதிரொலி? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செய…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionவேல்முருகன் 2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக…
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
என்னிடம் வசூலித்த ரூ.10 ஆயிரத்தில் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு மீதியை கொடுங்க: கமலுக்கு விருப்ப மனு அளித்த எஸ்.ஐ. கடிதம் Published : 31 Mar 2019 17:27 IST Updated : 31 Mar 2019 21:27 IST மு.அப்துல் முத்தலீஃப் ஓய்வு எஸ்.ஐ. புகழேந்தி, கமல் கோப்புப் படம் மக்கள் நீதிமய்யத்தில் விருப்பமனுக்காக கட்டிய பணத்தில் 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு மீதியை தாருங்கள் என நடிகர் கமல் ஹாசனுக்கு ஓய்வுப்பெற்ற உதவி ஆய்வாளர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அரசியல் நேர்மை, ஊழலில்லாத ஆட்சி, ஊழல் கட்சிகளுடன் கூட்டில்லை என அறிவித்துள்ளார். அவரது கட்சியில் ஆர்வத்துடன் இணைந்த ப…
-
- 0 replies
- 694 views
- 1 follower
-