தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்? "என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்." மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும், ''உபா' எனும் கறுப்புச்சட்டத்தினை நீக்கிடு' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் 8, 2018 அன்று சென்னை…
-
- 0 replies
- 1.3k views
-
-
தொழில் பெற்றுத் தருவதாக கூறி வெளிநாடு சென்ற தமிழர்களின் அவலம் நோர்வேயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி தமிழர்கள் 54 பேரிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தம் ஒருகோடியே 62 இலட்சம் ரூபாவை பெற்று அவர்களை மோசடிக்காரர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இராமநாதபுரம், சிவகங்கை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேருக்கு நோர்வே நாட்டில் இராணுவத்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த ஹரி, நாகர் கோயிலைச் சேர்ந்த முனியசாமி ஆகியோர் அவர்களிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் 1 கோடியே 62 இலட்சம் ரூபா வாங்கியுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இவர்கள் குறித்த 54 பேரையும் நோர்வேக்கு அனுப்பி வைக…
-
- 1 reply
- 1k views
-
-
ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி - விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நீங்க கர்பமாக இருக்கீங்க’ என்ற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்,‘ஸ்கேன் செஞ்சு பார்த்ததில்,'' உங்களுக்கு வயிற்றுல 3 குழந்தைகள் இருக்கு’ என மருத்துவர்கள் சொல்ல, தம்பதியர் துள்ளிக்குதித்து மகிழ்…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னை: பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவம் நிலையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். தமிழகமே தற்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது 7 தமிழர்கள் விடுதலை, மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் ஊழல் சம்பவங்கள்.அவசியம் இல்லை ஆனால் இந்த விவகாரத்தில், அமைச்சர் பதவி விலக வேண்டும், அல்லது தமிழக அரசே அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி கண்டன எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஆனாலும், "தற்போது ரெய்டுதான் நடந்துள்ளது? நீதிமன்றம்தானே ஒருவரை குற்றவாளியா என்பதை முடிவு செய்யும். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை அனைவரும் நிரபராதிகளே, அதுவரை அமைச்சரை ப…
-
- 0 replies
- 531 views
-
-
உணவும் உழவும் தமிழகத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்றப்போகும் சீமைக் கருவேல மரங்களை கூண்டோடு வேரறுத்து தமிழகத்தை வளமான விவசாய பூமியாக மாற்ற போராடுகிறார் வேலூர் அணைக்கும் கரங்கள் ப. சரவணன்.இவரின் களப்பணிகள் குறித்து சமீபத்தில் வேலூர் சதுப்பேரி என்கின்ற ஒரு கிராமத்தில் 100 நாள் விவசாயப் பணியிலிருந்த அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
தவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன், உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல; முழு நேர அரசியலில் இறங்கிவிட்டேன்: நடிகர் கார்த்திக் பேட்டி அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கே…
-
- 0 replies
- 583 views
-
-
பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம் இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. …
-
- 42 replies
- 5.2k views
-
-
நெதர்லாந்து விரைந்த வழக்கறிஞர் - சர்வதேச நீதிமன்றத்தை நாடும் நளினி! ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1991-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, 2014-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி …
-
- 0 replies
- 708 views
-
-
குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் - கோப்புப் படம் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித் …
-
- 4 replies
- 940 views
-
-
கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி மு.க.அழகிரி | கோப்புப் படம். சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார். இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை 1…
-
- 7 replies
- 2.4k views
-
-
'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது பகிர்க சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசோஃபியா இன்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர். …
-
- 18 replies
- 2.4k views
-
-
கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ஆர்.பி.உதயகுமார், மேட்டூர் அணை நிரம்பவே நிரம்பாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருப்பதால் தான் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றினாலும் நாங்கள் ஏற்போம். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதன் கண் திருஷ்டி தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது என்றார். மேலும் அவர் பேசுகையில், ஆளுங்கட்சியை முடக்கி மக்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதிமுகவின் சாதனைகளை மறைக்க சில…
-
- 0 replies
- 812 views
-
-
நீர்த்தேக்கங்களாக மாறும் கல்குவாரிகள்: தமிழக அரசு புதுத்திட்டம்! சனி, 1 செப்டம்பர் 2018 (18:07 IST) தமிழகம் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. பெரும்பாலும், தமிழகம் தண்ணீருக்காக மற்ற மாநிலங்கள் மற்றும் பருவ மழையை எதிர்நோக்கி இருக்கிறது. எனவே நீர் அதிக அளவு கிடைக்கும் நேரத்தில் அதை சேமித்து வைத்து வறட்சியின் போது பயன்படுத்திக்கொள்ள பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் வறட்சிக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கைவிடப்பட்ட 1,188 கல் குவாரிகளை நீர்த்தேக்கங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 15 முதல் 40 மீட்டர் வரை ஆழமுள்ள இந்த கைவிடப்பட்ட கல்குவாரிகள் தமிழகம் முழ…
-
- 0 replies
- 677 views
-
-
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3-வது நீதிபதி நீதிபதி சத்யநாராயணா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்- கோப்புப் படம் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3 வது நீதிபதி முன் கடந்த மாதம் 23-ல் தொடங்கிய இறுதி வாதம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் மூன்றாவது நீதிபதி. தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களும் செயல…
-
- 0 replies
- 343 views
-
-
பாஜகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் கருணாநிதி: சென்னையில் நடந்த நினைவேந்தலில் மத்திய அமைச்சர் கட்கரி பெருமிதம்; சமூகநீதியை காக்க வாழ்வை அர்ப்பணித்தவர் என குலாம்நபி ஆசாத் புகழாரம் தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத் சமூகநீதி, மதச்சார்பின்மையை காக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கருணாநிதி என தேசியத் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் தேசிய தலைவர் கள் பங்கேற்ற பு…
-
- 1 reply
- 871 views
-
-
திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். அதனையடுத்து அவர் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார். திமுக பொதுக்குழு கூடி ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்துக் கேட்டபோது, ''1,500 பேர் மட்டுமே கட்சியை உருவாக்கிவிட முடியாது. உண்ம…
-
- 1 reply
- 599 views
-
-
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதுரையில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள தாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் திமுக பொதுக்குழுவில், சமூகநீதிக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை எதிர்ப்போம் என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனால் திமுக- பாஜக கூட்டணி குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங் குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும். அண்ணா பிறந்தநாளை யொட்டி வரும் செப்.15-ம் தேதி ஈரோட்டில் மதிமுக மாநாடு நடைபெறுகிறது என்…
-
- 1 reply
- 421 views
-
-
சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொலிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளிலும், பேட்டிகளிலும் பேசியவைதான் சமீபமாக அதிகம் பகிரப்படுகின்றன.. சீமான் பேசியதில் சமீபத்திய வைரல்ஸ் இவை.. 'பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் உயிரோடு இருந்திருக்க மாட்டான்' ``நான் ஒருநாள் கோவிச்சுட்டு இருந்தேன். சிவாஜி ஐயா வந்தாரு. 'என்னடா ராஜா உன் பிரச்னை'ன்னு கேட்டாரு. 'என்ன எழுதிக் கொடுத்தாலும் கிழிச்சுப் போடுறாங்க'ன்னு சொன்னேன். 'உனக்கு என்ன தோணுதோ அதை என்கிட்டே சொல்லிடு. நான் 'டேக்'ல பேசி விட்டுடுறேன். பேசிட்டு ஓகேவா'ன்னு கேப்பாரு. 'நானும் ஓகே'ன்னு சொல்லுவேன்." ``நாற்பதாயிரம் டன் அரிசியைச் சுமந்து நடுக்கடலில் வந்துகொண்…
-
- 30 replies
- 3.6k views
-
-
கத்தி, வாள்களுடன் பேருந்துகளில் பயணிக்கும் தமிழ் மாணவர்கள்.! சென்னையிலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் நாயக மனோபாவத்துடன் தங்களுக்கென்று ஒரு குழு சேர்ந்துகொண்டு பிற மாணவர்களுடன் சண்டையிடுவதும், தாங்களே பெரியவர்கள் என்பதனை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வதும் வாடிக்கையான செயலாகிவருகிறது. மாணவர்களுக்குள் நடக்கும் மோதலில் சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பேருந்துகளில் வந்து பயணிகளையும் பயம் கொள்ள செய்கிறார்கள். சமீபத்தில் இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கல்லூரிகளும் இத்தகைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனபோதிலும் மாணவர்கள் சேட்டை அடங்கவில்லை. இன்றும் அரசு பஸ்…
-
- 0 replies
- 520 views
-
-
மதுரையில் வெறிச்சோடிய அழகிரி முகாம்: அமைதிப் பேரணி ஏற்பாடுகளில் சுணக்கம் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது மதுரையில் உள்ள தனது வீடு அருகே சிலருடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி.படம்: எஸ்.ஜேம்ஸ் சென்னையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மதுரையில் உள்ள மு.க.அழகிரியின் வீடு வெறிச் சோடிக் காணப்பட்டது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து வதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி அறிவித்துள்ளார். சென்னையில் திமுக தலைவ ராக மு.க…
-
- 8 replies
- 1.1k views
-
-
கமல்ஹாசன் கட்சி பாணியில் பெயர். திடீரென இயக்கம் தொடங்கிய விஷால்! மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால். நடிகர் விஷால், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலை முன்மொழிந்த 10 பேரில் சிலரது நம்பகத்தன்மை பற்றி எதிர்ப்பு கிளம்பியதால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், சுமதி, தீபன் இருவர் விஷாலை முன்மொழியவில்லை என திடீரென கூறிவிட்டனர். வேட்புமனுவில் உள்ள கையெழுத்து எங்களது கையெழ…
-
- 1 reply
- 666 views
-
-
தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி. திடீர் உடல்நல குறைவு காரணமாக, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளுக்கு 82 வயதாகிறது. சிறிது காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் கருணாநிதி கட்சியிலிருந்து ஒதுக்க ஆரம்பித்த காலத்திலேயே தயாளு அம்மாளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது. கருணாநிதி சென்னை, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் அவர் வீல் சேரில்தான் அழைத்து வரப்பட்டார். எனினும், ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது தயாளு அம்மாள் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பி…
-
- 0 replies
- 465 views
-
-
தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது! #LiveUpdates * திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதி, வாஜ்பாஜ், சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. * சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. * சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் மு.க.ஸ்டாலின். துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரும் அண்ணாஅறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர். * சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள தி.மு.க பொதுக்குழுவில் பங்கேற்க க.அன்பழகன் வருகை. * தி.மு.க பொதுக்குழு கூட்டத்…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமராவதி ஆற்றுப்படுகையை சுத்தம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது வழக்கு பதிவு. சென்னை: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உட்பட 13…
-
- 0 replies
- 251 views
-
-
பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தை இடத்தில் வைத்து பார்த்தேன் - லண்டனில் ராகுல் உருக்கம் 2018-08-26@ 00:55:31 லண்டன்: ‘‘பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய பிள்ளைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பேசினார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற லண்டன் பொருளாதார பள்ளியில் இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் ஒருபுறம் பாஜ.வும், மறுபுறம் அனைத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய கூட்டணியும்தான் இருக்கும். இதில், எந்த மாற்றமும் இல்…
-
- 6 replies
- 858 views
-