Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைக்கு எதிராக ஐ நா வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை தமிழர்கள் திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும் என்று இப்போது மாணவர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர் . சிலர் திமுக வின் டெசோ அமைப்பு அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்கிறது அதனால் அதை ஆதரிப்பது தான் தமிழர்களுக்கு நல்லது என்று கூறி வருகின்றனர் . உண்மையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நாம் ஆதரித்தால் அது தமிழர்களுக்கு பெரும் தீங்காகத் தான் முடியும் . காரணம் அந்த தீர்மானத்தில் சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை என்று ஒன்று இல்லவே இல்லை . இலங்கையே தான் செய்த குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லித் தான் அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன. அதிலும் சர்வதேச அரசியல…

    • 1 reply
    • 468 views
  2. எப்படி இருந்த தே.மு.தி.க....? விஜயகாந்த் சறுக்கியது இப்படித்தான் ! தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது. அடுத்தடுத்த தோல்விகளுக்கு இடையேயும் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன்…

  3. 'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…

  4. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர் by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-720x450.jpg கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் திகதி 307 மையங்களில் தடுப்பூசி செலு…

  5. 'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா 'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேச…

  6. ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் இந்த சட்டமூலத்திற்கு மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன எனவும் சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களே இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளன எனவும் ஒப்புதல் அளித்த சட்டமூல வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு சட்டதிருத்த வரைவை அனுப்பும் எனவும்தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறி…

  7. அ.தி.மு.க கூட்டணியில் இந்தமுறை எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றன... எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., பிரேமலதா, அன்புமணி ஆகியோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்கிற விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர். பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்தோடு நிறைவடையவிருக்கிறது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. பிரதான கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தையும் தொடங்கிவிட்டன. ஆனால், …

  8. பூட்டி இருக்கும் ஜெயா.சமாதியில் ரகசிய பூஜை ஏன்? ஜெயலலிதா தோழி Geetha பகீர் பேட்டி ஜெயாவின் சொத்துக்களை அனுபவிப்பது யார்? ஈபீஎஸ், ஓபிஎஸ் துணிவு இருந்தால் என்னுடன் பேசுங்கள் பார்க்கலாம்.

    • 0 replies
    • 395 views
  9. ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை, வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை - திமுகவின் தேர்தல் வாக்குறுதி.! சென்னை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை போர்க்குற்ற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமான- நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும் ஈழத் த…

  10. பாஜகவின் 'பி' டீமா நான்?": இமமுக தலைவர் டாக்டர். ரா. அர்ஜுன மூர்த்தி

    • 0 replies
    • 338 views
  11. தேர்தல் திருவிழா இன்று நிறைவு: கடைசி நேரம் வரை தொடர்ந்த நாடகங்கள்! மின்னம்பலம் இவ்வளவு பரபரப்பான, கடுமையான, சவால்கள் நிறைந்த தேர்தலை என்று சொல்வதை விட, இவ்வளவு கேவலமான நாடகங்கள் நடந்த தேர்தலை தமிழகம் இதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணா–காமராசர், கருணாநிதி–எம்.ஜி.ஆர், கருணாநிதி–ஜெயலலிதா என்று துருவ அரசியலில் ஊறித்திளைத்த திராவிட பூமி தமிழகம். இந்தத் தேர்தலில் ஸ்டாலின்–எடப்பாடி பழனிசாமி என்ற இரண்டு புதுமுகங்களுக்கு எதிரான துருவ அரசியல் அறிமுகம் செய்யப்பட்டது. இருவருமே அரசியலிலும், அதிகாரத்திலும் அனுபவங்களைப் பெற்றவர்களாயினும், தனியாக தேர்தலை எதிர்கொண்டது முதல்முறையாக இப்போதுதான். இருவருக்குமான வேற்றுமைகளை விட பொது ஒற்றுமைகளும் பல உண்டு. …

  12. தமிழகத்தின்... எதிர்கட்சி தலைவராக, தெரிவு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு 65 தொகுதிகளில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவியது. இதற்கிடையில் புதிய சட்டமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெ…

  13. ’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் ! இடைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல் நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமு…

  14. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார் வேண்டுகோள் 109 Views கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நலத்திட்டத்தை இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிகரன் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான மிகச் சிறந்த திட்டமொன்றைத் தங்களுடைய தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாரா…

  15. விஜயபாஸ்கரை வளைத்த வணங்காமுடிகள்! - ஐ.டி சோதனை பின்னணி 1 நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வருகிறார்கள். இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக இருக்கிறார். "ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப் போகும் முன் தேடுதல் பணியில் மிகக் கவனமாக இருப்பார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில் ஆதாரங்கள் துல்லியமாகக் கிடைப்பதற்குக் காரணமே வருமான வரித்துறையின் இரண்டு அதிகாரிகள்தான்" என்கின்றனர் அதிகாரிகள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முன்வைத்து ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கடந்த டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி வளைக்கப…

  16. சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிப் பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முட்டுக்கட்டைகளைத் தகர்த்து லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வியூகம் வகுக்க சென்னையில் இன்று மாவட்டச் செயலர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை ஒவ்வொருவரும் ஒரு அணி! இதைத்தான் மே 19-ந் தேதி நடைபெற்ற திமுகவின் பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, கோஷ்டிப் பூசல்களால் திமுக செல்லரித்து வரும் நிலையில் இருக்கிறது. இதை வெட்கப்படாமல், வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த உண்மையை மறைத்துவிட்டு, ஒரு தலைவன் - நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்று சொன்னால், அது உசுப்பி விடுவதற்காக சொல்லப்படும்…

    • 2 replies
    • 392 views
  17. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு! தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோண்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டியது கட்டாயம். மாற்றுத்திறனாளிகள் எழ…

  18. கர்நாடக உள்துறையின் அனுமதியை தொடர்ந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார்? சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திக்க செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்…

  19. ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்| கோப்புப் படம். கிரானைட், மணல் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16-ம் தேதி) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவில்: "தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதி…

  20. ஈழத்த தமிழர்களுக்கு மாநில சுயாட்சியே தீர்வு - தா.பாண்டியன் விசேட செவ்வி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன் வீரகேசரி இணையத்தளத்திற்கு அளித்த விசேட செவ்வி வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வை…

  21. காவிரி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், ஜனவரி 20ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் கலைஞர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள், தமிழ் இன உணர்வாளர்களுக்கு அழைப்பு விடுத்து அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, வணக்கம். நலமே சூழ்க. தொன்மைத் தமிழ்நாட்டின் பன்னெடுங்கால வரலாற்றில் இரண்டு கடல் கோள்களால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், இதுவரை ஏற்படாத அபாயம் தமிழக வாழ்வாதாரங்களுக்குத் தற்போது நேர்ந்துள்ள நிலைமை, மிகுந்த கவலையையும், அச்சத்தையும் தருகின்றது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தஞ்சை தரணியையும் மேலும் பல பகுதிகளையு…

  22. தமிழ்நாடு நாள்’ விழா போட்டிகளில் கருணாநிதி புராணம் பாடச்சொல்வது ஏன்.. தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளி மாணவ – மாணவியருக்கு அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புராணம் பாடும் வகையில் உள்ளதால் கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நம் மாநிலத்துக்கு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று இருந்த பெயர் 1968 ஜூலை 18ல், ‘தமிழ்நாடு’ என அப்போதைய முதல்வர் அண்ணாதுரையால் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நாளை, தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழ்நாடு நாள் வருவதையொட்டி தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியை பள்ளிக் கல்வித் துறை ஆண்டுதோறும் நடத்துகிறது. இவை தமிழ்நாட்டின…

  23. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லெட்சுமி உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுவரை அவருக்கு கட்சி பதவி எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு நிச்சயம் மந்திரி பதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன் அறிவித்தார். இந்நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க குஷ்பு மட்டுமின்றி, விஜய தாரணி எம்.எல்.ஏ, ம…

  24. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலைப்பாடாமென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “22 வருடங்களாக நிலவிய ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.முக. செயற்பட்டது. மேலும் அந்த ஆலையை திறக்க கூடாதென்பதில் அ.தி.மு.க அரசு உறுதியாகவே இன்னும் உள்ளது. இதனால் தேசிய பச…

  25. கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் 'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.