Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொலைபேசிகளை பாதுகாத்த கோயிலுக்கு 2 கோடி ரூபாய் வருமானம்! மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த 10 மாதங்களில், கையடக்கத் தொலைபேசி பாதுகாப்பு கட்டணம் மூலம் ஒரு கோடியே, 99 இலட்சத்து 10 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 கடைகள் எரிந்து நாசமானதுடன் கோயிலில் இருந்த பெருமளவான புறாக்களும் தீயில் கருகின. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் ஆட்சியாள…

    • 2 replies
    • 829 views
  2. சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? – சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனத்துயரத்தையும் அளிக்கிறது. சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீர்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டு…

  3. படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புப் படம் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தத…

  4. தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது. இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை …

    • 1 reply
    • 481 views
  5. சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ? கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது. பெருமளவு தண்…

  6. தூய்மையான தமிழகம்: மோடியிடமிருந்து விருது பெற்றார் வேலுமணி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதினைப் பெற்றார் நாட்டின் பல பகுதிகளில் ஓகஸ்ட் 17 முதல் செப்டெம்பர் ஐந்தாம் திகதி வரை 690 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்து 400 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்கள் உட்பட்ட 800 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தெரிவாகியது.…

  7. 23 JAN, 2025 | 02:17 PM சென்னை: 2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என சொன்னவர்கள். இப்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்காமல் இருப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம், நரேந்திர மோடி பிரதமரானால் ஒரு தமிழக மீனவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகமாட்டார்கள், மீனவர் நலன்களைப் பாதுகாக்க மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வகைவகையான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலோடு காணாமல் போன கச்சத்தீவி…

  8. மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" ------------------------------------------------------------------------------------------- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர். திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்…

  9. மறுபடியும் முதலிலிருந்தா? தேமுதிக தலைவர் விஜயகாந்த் | கோப்பு படம் சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கம் இப்போது இருந்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. கூட்டணி பேரங்களும் ஊகங்களும் நடந்துகொண்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சார்ந்த விவாதங்களின் மையமாக இருந்தார். கூட்டணி விஷயத்தில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. தேர்தல் முடிவை அவர் தீர்மானித்தவராக இருந்தார். இன்றும் அவரது முடிவு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் எனக் கணிசமானவர்களால் நம்பப்படுகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் அவரது கூட்டணிக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகளில் விஜயகாந்தின் முக்கியத்துவம் மாறிவிடவ…

  10. “விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்! Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST] அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். …

  11. படக்குறிப்பு, லண்டன் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளமும், அதை நெய்தவரும் மேடை ஏற்றப்பட்டனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ''அந்த மேடையில் கையில் கைத்தறி இராட்டை மாதிரியுடன் என்னை நடக்க வைத்து, வார்த்தைகளின்றி சைகைகளால் இவர்தான் அவற்றை நெய்தவர் என்று என்னை அறிமுகம் செய்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கரவொலி எழுப்பினர். அது எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அங்கீகாரமாக இருந்தது!'' லண்டனில் செப்டெம்பர் 21-ஆம் தேதி டிவான்ஷைர் சதுக்கத்தில் (Devonshire Square) நடந்த ஃபேஷன் ஷோவில் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜாவுடன், கைகளில் இரும்பு கைத்தறி இராட்டை மாதிரி வடிவ…

  12. இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு தூத்துக்குடி தூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குட…

  13. தமிழகத்தில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி! மின்னம்பலம் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. திருவிழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோயில்களில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. தற்போது திருவிழாக் காலம் என்பதால் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்பு உடையதாகவும்…

  14. தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்: பாகம் - 1. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகளின் தொகுப்பையும், விபரங்களையும் விரிவாக பார்க்கலாம். 1. ஒகேனக்கல் அருவி: இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிறது. தர்மபுரி இருந்து 47 கி.மீ., ஓசூரில் இருந்து 88 கி.மீ., சேலத்தில் இருந்து 85 கி.மீ., பெங்களூரில் இருந்து 146 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ., மைசூரில் இருந்த…

  15. தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் …

    • 0 replies
    • 696 views
  16. சீரற்ற ரத்த அழுத்தம்: ரஜினிகாந்த் அப்பல்லோவில் அனுமதி! மின்னம்பலம் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தது. எனினும் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திகொண்டார். அவர் சென்னை வந்து தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்…

    • 23 replies
    • 1.8k views
  17. கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக காங்கிரஸ் அரசு? பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான் காங்கிரசில் இணைந்த சித்தராமையா முதல்வரானது முதல் கட்சிக்குள் புகைச்சல்தான். முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கிளப்பி குழி பறித்த கதை மறக்கவில்லை என்பதால், சித்தராமையா மிகவும் மெத…

  18. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு மதுரை, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன. நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியில் பங்கேற்கும் மாடுகள் அனைத்திற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே காளைகள் வாடிவாசலில் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு பங்கேற்கும் மாடுகளின…

  19. சசிகலாவுக்கு 20 கேள்விகள்! பொதுச்செயலாளர் பேச்சு... சசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன? 1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்? 2. ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத…

  20. கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் சாதனை கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1121 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கும்பகோணம் சிறியமலர் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராமகோபாலன் பள்ளி அளவில் முதலிடமும், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் தமிழில் 177 மதிப்பெண்கள் உட்பட மொத்தம் 1121 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராமகோபாலன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டு மக்களுக்கு ஊழல் அற்ற நிர்வாகம் மூலம் சிறப்பான பணி செய்வதே தமது லட்சியம் என்கிறார் இராமகோபாலன். ht…

    • 0 replies
    • 363 views
  21. தமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வி.கே.சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி…

  22. 3 நாளில் தமிழக நிலைமை தெளிவாகும்: அட்டர்னி ஜெனரல் எதிர்பார்ப்பு புதுடில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழக அரசியல் சூழ்நிலை 2 அல்லது 3 நாளில் தெளிவாகும் என எதிர்பார்க்கிறேன். இதன் பின்னர் வழக்கமான முதல்வர் செயல்படுவார். இனிமேல், இரண்டு தரப்பும் சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத்தரவிடலாம். அல்லது ஒரு தரப்புக்கு போதிய பலம் உள்ளது என கவர்னர் கருதினால், அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத…

  23. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..? தமிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத…

  24. ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு: கொடி, நிர்வாகிகள் இன்று மாலை அறிவிப்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தார். இதையடுத்து, இப்பேரவையின் கொடி, நிர்வாகிகள் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு வரும்படி அ.தி.மு.க. தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர். தினமும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகர…

  25. ராஜீவ் கொலை- இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருப்பதாக கூறிவந்த சிபிஐ அதிகாரி ரகோத்தமனும் மரணம்! May 12, 2021 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்இ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 72 ஆவது வயதில் சென்னையில் காலமானார். ரகோத்தமன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தபோதுஇ அண்ணாமலை நியூஸ் என்ற வார இதழில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிபிஐயில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த அவர் தேசிய காவற்துறை அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி பெற்றார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியாற்றினார் மற்றும் ஊழல் தடுப்புஇ பொருள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.