தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
அதிமுக + பாஜக கூட்டணிக்குள் வருகிறார் சீமான்? நாம் தமிழர் வருகையால் யாருக்கு சாதகம்? பாதகம்? Shyamsundar IUpdated: Wednesday, April 16, 2025, 12:42 [IST] சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். 2. பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள். அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். இதனால் இவர்கள் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்வத…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
கடல் வழியே படகில் தப்ப முடியுமா? அடைபட்ட எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி தீவுக்குள் அமைந்துள்ள, சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், படகு மூலம் தப்ப முடியுமா என, ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்பாக்கத்தை அடுத்துள்ள கூவத்துார், 'கோல்டன் பே' விடுதி, கடலை ஒட்டிய உப்பங்கழி, முகத்துவாரத்தை ஒட்டி உள்ளது. இதில், 34 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு, அ.தி.மு.க.,வின், 100 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு அறைக்கு, மூன்று பேர் வீதம், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முதல் இரு நாட்களில், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வத்துடன் நடனம்ஆடிய காட்சிகள், கேமராக்களில் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ளதாக, கூறப்படு…
-
- 2 replies
- 457 views
-
-
காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள்: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சை ட்வீட்! புதுதில்லி: தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்தி…
-
- 1 reply
- 457 views
-
-
முருகன் தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனது தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முருகனின் அறையில் இருந்து 2 கைத்தொலைபேசிகள் ,சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகனை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மே 29ம் திகதி முருகனின் தாயார் இலங்கை செல்ல வேண்டியுள்ளதால் அதற்குள் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்தவழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் பார்வையாளர்க…
-
- 0 replies
- 457 views
-
-
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது நிரூபணம்.. கருவேல மரம் வெட்ட பிறப்பித்த தடையை.... நீக்கிய ஹைகோர்ட். தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வளந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடி நீர் வளம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவைட வேண்டும் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பொதுநல மனு: …
-
- 0 replies
- 457 views
-
-
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தியுள்ளார். அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வக…
-
- 0 replies
- 457 views
-
-
தென் மேற்கு பருவமழை: தமிழக ஆறுகளில் வெள்ளம் - கள நிலவரம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையிலிருந்து 16 …
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் மறுசீராய்வு சட்ட மசோதா 2019-ல் கொண்டுவந்த மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தன்னுடைய பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 1984-ல் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இதே மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீரில் சில பிரிவினையான சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகின்ற ஒரு சூழல் நிலவுகிறது, அதற்கு மத்திய அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், ஆளுநர் ஆட்சியை ஜம்மு-காஷ்மீரில் அமுல்படுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பியும், இந்தியாவுடன் ஜம்மு- காஷ்மீரை இணைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையாக மாநிலங்களவையில் எழுப்…
-
- 1 reply
- 457 views
- 1 follower
-
-
JV Breaks: 2ஜி - இலங்கை பிரச்னையில் தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி - வீடியோ காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி தான் இந்த வார வைரல். இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து கொள்ள முடியாது என கருணாநிதியும், 2ஜி ஊழல்கலை தி.மு.க தான் ஏற்படுத்தியது. அதனை தற்பொது நாங்கள் சுமக்கிறோம் என ஈ.வி,கே.எஸ் இளங்கோவனும் கூறியது அனைவரும் அறிந்ததே. இரண்டு ஊழலையும் மறைக்க தான் இந்த கூட்டணியா? தி.மு.க-வை விமர்சித்த குஷ்பு இப்போது என செய்வார்? காங்கிரஸ் கண்டிஷன் போடாதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன். இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன…
-
- 0 replies
- 457 views
-
-
மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை அரசு சார்ந்த பொறுப்புக்களுக்கு நியமிக்கக் கூடாது என்றும் அந்த நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்களது அசையும் சொத்து, அசையா சொத்து, தொழில் விபரம், பங்குகளின் விவரம், பணம் கையிருப்பு விவரம், நகைகள் கையிருப்பு விவரம் இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். http://4tamilmedia.com/n…
-
- 0 replies
- 457 views
-
-
மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேரை தவிர வேறு யாரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் கலக்கம் அடைந்துள்ளார். சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவால் முதல்- அமைச்சராக 2 முறை அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 3-வது முறையாகவும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் முதல்- அமைச்சர் ஆனார். ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செய…
-
- 0 replies
- 457 views
-
-
பட மூலாதாரம்,TAMILNADU FOREST DEPARTMENT படக்குறிப்பு,ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் (ஒவ்வொரு வருடமும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.) ‘காடுகளின் காவலன்’ என அழைக்கப்படும் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்தும், மனிதர்கள்- புலிகள் மோதல்களைத் தவிர்…
-
- 1 reply
- 457 views
- 1 follower
-
-
சிறைப்பிடிக்கப்பபட்ட 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல். பிரிவு: தமிழ் நாடு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த 13ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, ஏப்ரல் 11ஆம் தேதி வரை காவலி்ல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. இந்த …
-
- 0 replies
- 456 views
-
-
‘சசிகலா சிறை விவகாரத்தில் சென்னை அ.தி.மு.க. பிரமுகருக்குச் சிக்கல்!’ ஏ.சி, பிரிட்ஜ், இண்டக்ஷன் ஸ்டவ் சப்ளை செய்தது அம்பலம் #VikatanExclusive சென்னை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் கடை பெங்களூரில் உள்ளது. அங்கிருந்துதான் சசிகலா சிறை அறைக்கு குளிர்சாதன பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி.களுக…
-
- 0 replies
- 456 views
-
-
உலகளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நகரங்கள் பட்டியலை, சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது global prime sector எனப்படும் Candy GPS நிறுவனம். இந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்றே ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது. அது தலைநகரமான டெல்லி அல்லது இந்தியாவின் கேட்வே எனப்படும் மும்பை அல்லது தகவல் தொழில்நுட்பத்துறை நகரமான பெங்களூரு என நீங்கள் நினைத்திருந்தால் சரியான யூகமல்ல... தமிழகத்தின் கலாசார நுழைவாயில் என்றழைக்கப்படும் சென்னைதான் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரம். சென்னையில், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் காரணிகள் குறித்து Candy GPS வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்…
-
- 0 replies
- 456 views
-
-
பாரதிய ஜனதா மிகவும் ஆபத்தான கட்சி: திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சி விஷத்தன்மைக் கொண்ட பாம்பைப் போன்று ஆபத்தான கட்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சில…
-
- 0 replies
- 456 views
-
-
நாமக்கல்: `அதிமுக ஓட்டுக்கு பணம் தரலை!' -சாலை மறியல் செய்த மக்களால் போலீஸார் அதிர்ச்சி துரை.வேம்பையன் சாலை மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள் போலீஸார், மக்களிடம் சாலை மறியல் செய்வதற்கான காரணத்தை கேட்க, 'எங்க ஊர்க அதிமுக தரப்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்க. ஆனா, எங்களுக்கு கொடுக்காம, ஏமாற்றிவிட்டுட்டாங்க. எங்களுக்கும் பணம் கொடுக்கணும்' என்று சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பது சிதம்பர ரகசியமாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது, வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் வாங்குவதும் வெளிப்படையாக நடக்கிறது. அதையும் தாண்டி, 'எங்களுக…
-
- 0 replies
- 456 views
-
-
பெங்களூர்: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை உடனே தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணையின் முடிவில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா நியமித்துக் கொள்ள அனுமதித்தது. இந்த நிலையில் தம் மீதான வழக்கு விசாரணையை உடனடியாக தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக…
-
- 0 replies
- 456 views
-
-
கருணாநிதியின் வழியிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் – மு.க.ஸ்டாலின் கருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு எதுவுமே ஈடாகாது. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்றே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன். தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வா…
-
- 1 reply
- 456 views
-
-
விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வைகோ, "மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 12 ஆம் தேதி, நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலைய வளாகத்தில் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழையவும் இல்லை. விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வந்தவுடன், வாசலில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு நடந்து வந்துபோது, திரண்டிருந்த தொண்ட…
-
- 0 replies
- 456 views
-
-
மண்டபத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மகளை எரித்து கொன்ற வழக்கில் இலங்கை அகதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே ஊழியர் காளியம்மாள் 58. அவரது மகள் பிகாம் பட்டதாரி மணிமேகலை 34. இந்த இருவரது உடல்களும் முற்றிலும் கருகிய நிலையில் உள்புறமாக பூட்டிய குடியிருப்பில் டிசம்பர் 7ம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டது. காளியம்மாளின் மூத்த மகள் சண்முகபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருந்த கா…
-
- 1 reply
- 456 views
-
-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேறவுள்ள ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கூறி ட்விட் போட்டார். அதற்கு பதிலளித்து ஸ்டாலின் பதிவிடுள்ள ட்விட்டில் உள்ள வார்த்தைகளில் பல உள்ளரசியல் ஒளிந்திருக்கிறது. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியமைக்க இருக்கிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியாதபோதே மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன் போன்றோர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறினர். தொடர்ந்து பல்வேறு தேசியத் தலைவர்களும் வாழ்த்துகளைக் கூற ஒவ்வொருவருக்கும் பதில் அனுப்பிய ஸ்டாலின், அனைத்து ட்விட்டிலும் சமூக நீதி, மதச்சார்பின்மை, சம உரிமை, மாநில சுயாட்சி போன்ற…
-
- 1 reply
- 456 views
-
-
ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சென்னையில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவ மாணவர் உள்பட உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாணவிகளை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை சென்னையை அடுத்துள்ள ராமாவரத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகக் கூறப்பட…
-
- 1 reply
- 456 views
-
-
சசிகலாவுக்கு எதிரான அந்தக் குரல் உச்சநீதிமன்ற வழக்கறிஞருடையதா? சசிகலா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டும் ஆடியோ என சமூக வலைதளங்களில் ஒரு உரையாடல் பரவி வருகின்றது. அந்த ஆடியோவில், ஜெயலலிதாவின் பல கோடி சொத்துக்களை அபகரிப்பதற்காக சசிகலா முயல்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 'சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியே போ' என்கிறார். தேவைப்பட்டால் ஜெயலலிதா அ.தி.மு.க. என்று துவங்கி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவைக் கொண்டு கட்சி நடத்துவோம் என்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன…
-
- 0 replies
- 456 views
-
-
‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி வர்தா புயல் உருவாக்கிய பேரிடருக்கு இழப்பீடு கேட்டுப் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் சென்றதை, புயல் பாதிப்பின் தொனியோடுதான் கவனித்துக் கொண்டிருந்தார்கள் தமிழக அமைச்சர்கள் சிலர். 'முதலமைச்சராக அவர் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உற்சாகமாகிவிட்டார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைக் கடந்த 12-ம் தேதி புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது வர்தா புயல். 'சீரமைப்புப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்' என பிரதமர் மோடிக்குக் கடி…
-
- 0 replies
- 456 views
-